Preface
Read
+
Publisher
Nainoia, Inc.
PO Box 462, Bellefonte, PA 16823
(814) 470-8028
Nainoia Inc, Publisher
LinkedIn/NAINOIA-INC
Third Party Publisher Resources
Request Custom Formatted Verses
Please contact us below
Submit your proposed corrections
I understand that the Aionian Bible republishes public domain and Creative Commons Bible texts and that volunteers may be needed to present the original text accurately. I also understand that apocryphal text is removed and most variant verse numbering is mapped to the English standard. I have entered my corrections under the verse(s) below. Proposed corrections to the Tamil Bible, Genesis Chapter 5 https://www.AionianBible.org/Bibles/Tamil---Tamil-Bible/Genesis/5 1 ௧) ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனிதனை உருவாக்கின நாளிலே அவனை தேவசாயலாக உண்டாக்கினார். 2 ௨) அவர்களை ஆணும் பெண்ணுமாக உருவாக்கினார், அவர்களை ஆசீர்வதித்து, அவர்களை உருவாக்கின நாளிலே அவர்களுக்கு மனிதர்கள் என்று பெயரிட்டார். 3 ௩) ஆதாம் 130 வயதானபோது, தன் சாயலாகத் தன் உருவத்தைப்போல ஒரு மகனைப் பெற்றெடுத்து, அவனுக்கு சேத் என்று பெயரிட்டான். 4 ௪) ஆதாம் சேத்தைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 5 ௫) ஆதாம் உயிரோடிருந்த நாட்களெல்லாம் 930 வருடங்கள்; அவன் இறந்தான். 6 ௬) சேத் 105 வயதானபோது, ஏனோசைப் பெற்றெடுத்தான். 7 ௭) சேத் ஏனோசைப் பெற்றபின், 807 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 8 ௮) சேத்துடைய நாட்களெல்லாம் 912 வருடங்கள்; அவன் இறந்தான். 9 ௯) ஏனோஸ் 90 வயதானபோது, கேனானைப் பெற்றெடுத்தான். 10 ௧0) ஏனோஸ் கேனானைப் பெற்றபின்பு, 815 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 11 ௧௧) ஏனோசுடைய நாட்களெல்லாம் 905 வருடங்கள், அவன் இறந்தான். 12 ௧௨) கேனான் 70 வயதானபோது, மகலாலெயேலைப் பெற்றெடுத்தான். 13 ௧௩) கேனான் மகலாலெயேலைப் பெற்றபின், 840 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 14 ௧௪) கேனானுடைய நாட்களெல்லாம் 910 வருடங்கள்; அவன் இறந்தான். 15 ௧௫) மகலாலெயேல் 65 வயதானபோது, யாரேதைப் பெற்றெடுத்தான். 16 ௧௬) மகலாலெயேல் யாரேதைப் பெற்றபின், 830 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். 17 ௧௭) மகலாலெயேலுடைய நாட்களெல்லாம் 895 வருடங்கள்; அவன் இறந்தான். 18 ௧௮) யாரேத் 162 வயதானபோது, ஏனோக்கைப் பெற்றெடுத்தான். 19 ௧௯) யாரேத் ஏனோக்கைப் பெற்றபின், 800 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 20 ௨0) யாரேதுடைய நாட்களெல்லாம் 962 வருடங்கள்; அவன் இறந்தான். 21 ௨௧) ஏனோக்கு 65 வயதானபோது, மெத்தூசலாவைப் பெற்றெடுத்தான். 22 ௨௨) ஏனோக்கு மெத்தூசலாவைப் பெற்றபின், 300 வருடங்கள் தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். 23 ௨௩) ஏனோக்குடைய நாட்களெல்லாம் 365 வருடங்கள். 24 ௨௪) ஏனோக்கு தேவனோடு நெருங்கி உறவாடிக்கொண்டிருக்கும்போது, காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார். 25 ௨௫) மெத்தூசலா 187 வயதானபோது, லாமேக்கைப் பெற்றெடுத்தான். 26 ௨௬) மெத்தூசலா லாமேக்கைப் பெற்றபின், 782 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும் மகள்களையும் பெற்றெடுத்தான். 27 ௨௭) மெத்தூசலாவுடைய நாட்களெல்லாம் 969 வருடங்கள்; அவன் இறந்தான். 28 ௨௮) லாமேக்கு 182 வயதானபோது, ஒரு மகனைப் பெற்றெடுத்து, 29 ௨௯) “யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். 30 ௩0) லாமேக்கு நோவாவைப் பெற்றபின், 595 வருடங்கள் உயிரோடிருந்து, மகன்களையும், மகள்களையும் பெற்றெடுத்தான். 31 ௩௧) லாமேக்குடைய நாட்களெல்லாம் 777 வருடங்கள்; அவன் இறந்தான். 32 ௩௨) நோவா 500 வயதானபோது சேம், காம், யாப்பேத் என்பவர்களைப் பெற்றெடுத்தான். Additional comments?
Refresh Captcha
The world's first Holy Bible un-translation!