< சங்கீதம் 29 >

1 தாவீதின் பாடல். தேவ பிள்ளைகளே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
En Salme af David. Giver HERREN, I Guds Sønner, giver HERREN Ære og Pris,
2 யெகோவாவுடைய பெயருக்கேற்ற மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே யெகோவாவை தொழுதுகொள்ளுங்கள்.
giver HERREN hans Navns Ære; tilbed HERREN i helligt Skrud!
3 யெகோவாவுடைய சத்தம் சமுத்திரங்கள் மேல் தொனிக்கிறது; மகிமையுள்ள தேவன் முழங்குகிறார்; யெகோவா திரளான தண்ணீர்களின்மேல் இருக்கிறார்.
HERRENS Røst er over Vandene, Ærens Gud lader Tordenen rulle, HERREN, over de vældige Vande!
4 யெகோவாவுடைய சத்தம் வல்லமையுள்ளது; யெகோவாவுடைய சத்தம் மகத்துவமுள்ளது.
HERRENS Røst med Vælde, HERRENS Røst i Højhed,
5 யெகோவாவுடைய சத்தம் கேதுருமரங்களை முறிக்கிறது; யெகோவா லீபனோனின் கேதுருமரங்களை முறிக்கிறார்.
HERRENS Røst, den splintrer Cedre, HERREN splintrer Libanons Cedre,
6 அவைகளைக் கன்றுக்குட்டிகளைப்போலவும், லீபனோனையும், சீரியோனையும் காண்டாமிருகக் குட்டிகளைப்போலவும் துள்ளச்செய்கிறார்.
faar Libanon til at springe som en Kalv og Sirjon som den vilde Okse!
7 யெகோவாவுடைய சத்தம் தீப்பிழம்புகளைப் பிளக்கும்.
HERRENS Røst udslynger Luer.
8 யெகோவாவுடைய சத்தம் வனாந்தரத்தை அதிரச்செய்யும்; யெகோவா காதேஸ் வனாந்தரத்தை அதிரச்செய்கிறார்.
HERRENS Røst faar Ørk til at skælve, HERREN faar Kadesj's Ørk til at skælve!
9 யெகோவாவுடைய சத்தம் பெண்மான்களை ஈனும்படி செய்து, காடுகளை வெளியாக்கும்; அவருடைய ஆலயத்திலுள்ள அனைவரும் யெகோவாவுக்கு மகிமை என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
HERRENS Røst faar Hind til at føde, og den gør lyst i Skoven. Alt i hans Helligdom raaber: »Ære!«
10 ௧0 யெகோவா பெருவெள்ளத்தின்மேல் அமர்ந்திருந்தார்; யெகோவா என்றென்றைக்கும் ராஜாவாக அமர்ந்திருக்கிறார்.
HERREN tog Sæde og sendte Vandfloden, HERREN tog Sæde som Konge for evigt.
11 ௧௧ யெகோவா தமது மக்களுக்குப் பெலன் கொடுப்பார்; யெகோவா தமது மக்களுக்குச் சமாதானம் அருளி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
HERREN give Kraft til sit Folk, HERREN velsigne sit Folk med Fred!

< சங்கீதம் 29 >