< நீதிமொழிகள் 16 >

1 மனதின் யோசனைகள் மனிதனுடையது; நாவின் பதில் யெகோவாவால் வரும்.
לאדם מערכי-לב ומיהוה מענה לשון
2 மனிதனுடைய வழிகளெல்லாம் அவனுடைய பார்வைக்குச் சுத்தமானவைகள்; யெகோவாவோ ஆவிகளை நிறுத்துப்பார்க்கிறார்.
כל-דרכי-איש זך בעיניו ותכן רוחות יהוה
3 உன்னுடைய செயல்களைக் யெகோவாவுக்கு ஒப்புவி; அப்பொழுது உன்னுடைய யோசனைகள் உறுதிப்படும்.
גל אל-יהוה מעשיך ויכנו מחשבתיך
4 யெகோவா எல்லாவற்றையும் தமக்கென்று படைத்தார்; தீங்குநாளுக்காகத் துன்மார்க்கனையும் உண்டாக்கினார்.
כל פעל יהוה למענהו וגם-רשע ליום רעה
5 மனமேட்டிமையுள்ளவன் எவனும் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; கையோடு கைகோர்த்தாலும் அவன் தண்டனைக்குத் தப்பமாட்டான்.
תועבת יהוה כל-גבה-לב יד ליד לא ינקה
6 கிருபையினாலும், சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; யெகோவாவுக்குப் பயப்படுகிறதினால் மனிதர்கள் தீமையைவிட்டு விலகுவார்கள்.
בחסד ואמת יכפר עון וביראת יהוה סור מרע
7 ஒருவனுடைய வழிகள் யெகோவாவுக்குப் பிரியமாக இருந்தால், அவனுடைய எதிரிகளும் சமாதானமாகும்படிச் செய்வார்.
ברצות יהוה דרכי-איש גם-אויביו ישלם אתו
8 அநியாயமாக வந்த அதிக வருமானத்தைவிட, நியாயமாக வந்த கொஞ்ச வருமானமே நல்லது.
טוב-מעט בצדקה-- מרב תבואות בלא משפט
9 மனிதனுடைய இருதயம் அவனுடைய வழியை யோசிக்கும்; அவனுடைய நடைகளை உறுதிப்படுத்துகிறவரோ யெகோவா.
לב אדם יחשב דרכו ויהוה יכין צעדו
10 ௧0 ராஜாவின் உதடுகளில் இனிய வார்த்தை பிறக்கும்; நியாயத்தில் அவனுடைய வாய் தவறாது.
קסם על-שפתי-מלך במשפט לא ימעל-פיו
11 ௧௧ நியாயமான நிறைகோலும் தராசும் யெகோவாவுடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல்.
פלס ומאזני משפט--ליהוה מעשהו כל-אבני-כיס
12 ௧௨ அநியாயம்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும்.
תועבת מלכים עשות רשע כי בצדקה יכון כסא
13 ௧௩ நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாகப் பேசுகிறவன்மேல் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
רצון מלכים שפתי-צדק ודבר ישרים יאהב
14 ௧௪ ராஜாவின் கோபம் மரணதூதர்களுக்குச் சமம்; ஞானமுள்ளவனோ அதை ஆற்றுவான்.
חמת-מלך מלאכי-מות ואיש חכם יכפרנה
15 ௧௫ ராஜாவின் முகக்களையில் வாழ்வு உண்டு; அவனுடைய தயவு பின்மாரிபெய்யும் மேகத்தைப்போல் இருக்கும்.
באור-פני-מלך חיים ורצונו כעב מלקוש
16 ௧௬ பொன்னைச் சம்பாதிப்பதைவிட ஞானத்தைச் சம்பாதிப்பது எவ்வளவு நல்லது! வெள்ளியை சம்பாதிப்பதைவிட புத்தியைச் சம்பாதிப்பது எவ்வளவு மேன்மை
קנה-חכמה--מה-טוב מחרוץ וקנות בינה נבחר מכסף
17 ௧௭ தீமையை விட்டு விலகுவதே செம்மையானவர்களுக்குச் சமனான பாதை; தன்னுடைய நடையைக் கவனித்திருக்கிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்.
מסלת ישרים סור מרע שמר נפשו נצר דרכו
18 ௧௮ அழிவுக்கு முன்னானது அகந்தை; விழுதலுக்கு முன்னானது மனமேட்டிமை.
לפני-שבר גאון ולפני כשלון גבה רוח
19 ௧௯ அகங்காரிகளோடு கொள்ளைப்பொருளைப் பங்கிடுவதைவிட, சிறுமையானவர்களோடு மனத்தாழ்மையாக இருப்பது நலம்.
טוב שפל-רוח את-עניים (ענוים) מחלק שלל את-גאים
20 ௨0 விவேகத்துடன் காரியத்தை நடப்பிக்கிறவன் நன்மை பெறுவான்; யெகோவாவை நம்புகிறவன் பாக்கியவான்.
משכיל על-דבר ימצא-טוב ובוטח ביהוה אשריו
21 ௨௧ இருதயத்தில் ஞானமுள்ளவன் விவேகி எனப்படுவான்; உதடுகளின் இனிமை கல்வியைப் பெருகச்செய்யும்.
לחכם-לב יקרא נבון ומתק שפתים יסיף לקח
22 ௨௨ புத்தி தன்னை உடையவர்களுக்கு ஜீவஊற்று; மதியீனர்களின் போதனை மதியீனமே.
מקור חיים שכל בעליו ומוסר אולים אולת
23 ௨௩ ஞானியின் இருதயம் அவனுடைய வாய்க்கு அறிவை ஊட்டும்; அவனுடைய உதடுகளுக்கு அது மேன்மேலும் கல்வியைக் கொடுக்கும்.
לב חכם ישכיל פיהו ועל-שפתיו יסיף לקח
24 ௨௪ இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு இன்பமும், எலும்புகளுக்கு மருந்தாகும்.
צוף-דבש אמרי-נעם מתוק לנפש ומרפא לעצם
25 ௨௫ மனிதனுக்குச் செம்மையாகத் தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
יש דרך ישר לפני-איש ואחריתה דרכי-מות
26 ௨௬ உழைக்கிறவன் தனக்காகவே உழைக்கிறான்; அவனுடைய வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
נפש עמל עמלה לו כי-אכף עליו פיהו
27 ௨௭ வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.
איש בליעל כרה רעה ועל-שפתיו (שפתו) כאש צרבת
28 ௨௮ மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் உயிர் நண்பனையும் பிரித்துவிடுகிறான்.
איש תהפכות ישלח מדון ונרגן מפריד אלוף
29 ௨௯ கொடுமையானவன் தன்னுடைய அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கச்செய்கிறான்.
איש חמס יפתה רעהו והוליכו בדרך לא-טוב
30 ௩0 அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.
עצה עיניו לחשב תהפכות קרץ שפתיו כלה רעה
31 ௩௧ நீதியின் வழியில் உண்டாகும் நரை முடியானது மகிமையான கிரீடம்.
עטרת תפארת שיבה בדרך צדקה תמצא
32 ௩௨ பலவானைவிட நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைவிட தன்னுடைய மனதை அடக்குகிறவன் உத்தமன்.
טוב ארך אפים מגבור ומשל ברוחו מלכד עיר
33 ௩௩ சீட்டு மடியிலே போடப்படும்; காரியத்தின் முடிவோ யெகோவாவால் வரும்.
בחיק יוטל את-הגורל ומיהוה כל-משפטו

< நீதிமொழிகள் 16 >