< மத்தேயு 27 >

1 விடியற்காலமானபோது, எல்லாப் பிரதான ஆசாரியர்களும் மக்களின் மூப்பர்களும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைசெய்து,
さて,明け方になると,祭司長たちと民の長老たち全員は,イエスを死に渡そうとして相談した。
2 அவரைக் கட்டி, கொண்டுபோய், தேசாதிபதியாகிய பொந்தியுபிலாத்துவினிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள்.
そして彼を縛って連れ出し,総督ポンティウス・ピラトに引き渡した。
3 அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணதண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைப் பார்த்து, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசை பிரதான ஆசாரியர்களிடத்திற்கும் மூப்பர்களிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து:
その時,イエスを売り渡したユダは,イエスが罪に定められたのを見て後悔し,銀三十枚を祭司長たちと長老たちに返して
4 குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவம் செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்னுடைய பாடு என்றார்கள்.
言った,「わたしは罪のない血を売り渡して罪を犯した」。 しかし彼らは言った,「それが我々にどうしたのか。自分で始末しろ」。
5 அப்பொழுது, அவன் அந்த வெள்ளிக்காசை தேவாலயத்திலே தூக்கி எரிந்துவிட்டு, புறப்பட்டுப்போய், நான்றுகொண்டு செத்தான்.
彼はそれらの銀を聖所に投げ入れて立ち去った。出て行って,首をつって死んだ。
6 பிரதான ஆசாரியர்கள் அந்த வெள்ளிக்காசை எடுத்து: இது இரத்தத்தின் விலையென்பதால், காணிக்கைப்பெட்டியிலே இதைப் போடுவது நியாயமில்லையென்று சொல்லி,
祭司たちはそれらの銀を取って言った,「これらを宝物庫に入れることは許されない。血の代価だからだ」。
7 ஆலோசனை செய்தபின்பு, அந்நியர்களை அடக்கம் செய்வதற்குக் குயவனுடைய நிலத்தை அதினாலே வாங்கினார்கள்.
彼らは相談し,よそ人たちの埋葬のためにそれらで陶器師の畑を買った。
8 இதினிமித்தம் அந்த நிலம் இந்தநாள்வரை இரத்தநிலம் எனப்படுகிறது.
それで,この畑は今日に至るまで「血の畑」と呼ばれている。
9 இஸ்ரவேல் பிள்ளைகளால் மதிக்கப்பட்டவருக்குக் விலையாக முப்பது வெள்ளிக்காசை அவர்கள் எடுத்து,
その時,預言者エレミヤによって語られたことが果たされた。こう言われていた。 「彼らは銀三十枚を取った,値をつけられた者,イスラエルの子らのある者たちが値をつけた者の代価を。
10 ௧0 கர்த்தர் எனக்குக் கற்பித்தபடி குயவனுடைய நிலத்திற்காக அதைக் கொடுத்தார்கள் என்று எரேமியா தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது.
そして,陶器師の畑としてそれらを与えた。主がわたしに命じたとおりである」。
11 ௧௧ இயேசு தேசாதிபதிக்கு முன்பாக நின்றார்; தேசாதிபதி அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு இயேசு: நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
さて,イエスは総督の前に立った。そこで総督はイエスに尋ねて言った,「お前はユダヤ人の王なのか」。 イエスは彼に言った,「あなたがそう言っている」 。
12 ௧௨ பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் அவர்மேல் குற்றஞ்சாட்டும்போது, அவர் பதில் ஒன்றும் சொல்லவில்லை.
祭司長たちや長老たちから訴えられている時,彼は何も答えなかった。
13 ௧௩ அப்பொழுது, பிலாத்து அவரைப் பார்த்து: இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சுமத்துகிறார்களே, நீ அவைகளைக் கேட்கவில்லையா என்றான்.
ピラトは彼に言った,「彼らがお前に対してどれほど多くの事を証言しているか,お前は聞こえないのか」。
14 ௧௪ அவரோ ஒரு வார்த்தையும் பதில் சொல்லவில்லை; அதனால் தேசாதிபதி மிகவும் ஆச்சரியப்பட்டான்.
しかしイエスはそれ以上何一つ答えなかった。そのため総督は非常に驚いた。
15 ௧௫ காவல்செய்யப்பட்டவர்களில் எவனை விடுதலையாக்க வேண்டுமென்று மக்கள் கேட்டுக்கொள்ளுவார்களோ, அவனை அவர்களுக்காக விடுதலையாக்குவது பண்டிகைதோறும் தேசாதிபதிக்கு வழக்கமாக இருந்தது.
さて,総督は祭りの際に,群衆が彼に願い出る囚人を一人,彼らのために釈放するのを慣例としていた。
16 ௧௬ அப்பொழுது காவல்செய்யப்பட்டவர்களில் பரபாஸ் என்னப்பட்ட பேர்போன ஒருவன் இருந்தான்.
その時,彼らにはバラバと呼ばれる有名な囚人がいた。
17 ௧௭ பொறாமையினாலே அவரை ஒப்புக்கொடுத்தார்கள் என்று பிலாத்து அறிந்து,
それで,彼らが集まって来た時,ピラトは彼らに言った,「お前たちはだれを釈放して欲しいのか。バラバか,それともキリストと呼ばれるイエスか」。
18 ௧௮ அவர்கள் கூடியிருக்கும்போது, அவர்களைப் பார்த்து: எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்க வேண்டுமென்றிருக்கிறீர்கள்? பரபாசையோ? கிறிஸ்து எனப்படுகிற இயேசுவையோ? என்று கேட்டான்.
彼らがねたみのためにイエスを引き渡したことに気づいていたからである。
19 ௧௯ அவன் நியாயாசனத்தில் உட்கார்ந்திருக்கும்போது, அவனுடைய மனைவி அவனிடத்தில் ஆள் அனுப்பி: நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்; அவர்நிமித்தம் இன்றைக்கு கனவில் வெகு பாடுபட்டேன் என்று சொல்லச் சொன்னாள்.
彼が裁判の席に着いているとき,その妻が彼のもとに人を遣わして言った,「あの義人とかかわりを持たないでください。わたしはその人のために,今朝,夢の中でさんざん苦しめられたのです」。
20 ௨0 பரபாசை விட்டு விடக் கேட்டுக் கொள்ளவும், இயேசுவைக் கொலை செய்யவும் பிரதான ஆசாரியர்களும் மூப்பர்களும் மக்களைத் தூண்டிவிட்டார்கள்.
さて,祭司長たちや長老たちは,バラバを求めてイエスを滅ぼすよう群衆を説得した。
21 ௨௧ தேசாதிபதி மக்களைப் பார்த்து: இவ்விருவரில் எவனை நான் உங்களுக்கு விடுதலையாக்கவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்கள்: பரபாசை என்றார்கள்.
一方,総督は彼らに答えた,「お前たちは二人のうちのどちらを釈放して欲しいのか」。 彼らは言った,「バラバを!」
22 ௨௨ பிலாத்து அவர்களைப் பார்த்து: அப்படியானால், கிறிஸ்து என்னப்பட்ட இயேசுவை நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லோரும் சொன்னார்கள்.
ピラトは彼らに言った,「それでは,キリストと呼ばれるイエスはどうしたらよいのか」。 みんなは彼に言った,「はりつけにしろ!」
23 ௨௩ தேசாதிபதியோ: ஏன், என்ன பொல்லாப்புச் செய்தான் என்றான். அதற்கு அவர்கள்: அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று அதிகமதிகமாக சத்தமிட்டுச் சொன்னார்கள்.
しかし総督は言った,「なぜだ。彼がどんな悪事をしたというのか」。 しかし彼らは激しく叫んで言った,「はりつけにしろ!」
24 ௨௪ கலவரம் அதிகமாகிறதேயல்லாமல் தன் முயற்சியினாலே பலன் இல்லையென்று பிலாத்து பார்த்து, தண்ணீரை அள்ளி, மக்களுக்கு முன்பாக கைகளைக் கழுவி: இந்த நீதிமானுடைய இரத்தப்பழிக்கு நான் குற்றமற்றவன், நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்றான்.
そこでピラトは,手のつけようがなく,むしろ騒動になり始めたのを見て,水を取って群衆の前で両手を洗い,「わたしはこの義人の血について罪はない。自分たちで始末せよ」と言った。
25 ௨௫ அதற்கு மக்களெல்லோரும்: இவனுடைய இரத்தப்பழி எங்கள்மேலும் எங்களுடைய பிள்ளைகள்மேலும் இருப்பதாக என்று சொன்னார்கள்.
民全体が答えた,「彼の血は,我々と我々の子孫の上にふりかかってもよい!」
26 ௨௬ அப்பொழுது, அவன் பரபாசை அவர்களுக்கு விடுதலையாக்கி, இயேசுவையோ சாட்டையினால் அடித்து, சிலுவையில் அறைவதற்கு ஒப்புக்கொடுத்தான்.
そこでピラトはバラバを釈放した。他方,イエスをむち打ってから,はりつけにするために引き渡した。
27 ௨௭ அப்பொழுது, தேசாதிபதியின் போர்வீரர்கள் இயேசுவைத் தேசாதிபதியின் அரண்மனையிலே கொண்டுபோய், போர்வீரர்களின் கூட்டம் முழுவதையும் அவரிடத்தில் கூடிவரச்செய்து,
総督の兵士たちはイエスをプラエトリウムの中に引いて行き,全部隊を彼のところに呼び集めた。
28 ௨௮ அவருடைய மேலாடைகளைக் கழற்றி, சிவப்பான மேலாடையை அவருக்கு உடுத்தி,
彼から衣をはいで,赤い衣を彼にまとわせた。
29 ௨௯ முள்ளுகளால் ஒரு கிரீடத்தைச் செய்து, அவர் தலையின்மேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்து, அவர் முன்பாக முழங்காற்படியிட்டு: யூதர்களுடைய ராஜாவே, வாழ்க என்று அவரைக் கேலிசெய்தபின்பு,
イバラの冠を編んで彼の頭に載せ,右手にアシを持たせた。そして彼の前にひざまずいて彼をなぶりものにして,「ユダヤ人の王様,万歳!」と言った。
30 ௩0 அவர்மேல் துப்பி, அந்தக் கோலை எடுத்து, அவரைத் தலையில் அடித்தார்கள்.
彼につばをかけ,アシを取り上げて彼の頭をたたいた。
31 ௩௧ அவரைக் கேலிசெய்தபின்பு, அவருக்கு உடுத்தின மேலாடையைக் கழற்றி, அவருடைய ஆடைகளை அவருக்கு உடுத்தி, அவரைச் சிலுவையில் அறையும்படி கொண்டுபோனார்கள்.
彼をなぶりものにした後,彼から衣を脱がせて,もとの衣を着せた。そして,彼をはりつけにするために引いて行った。
32 ௩௨ போகும்போது, சிரேனே ஊரானாகிய சீமோன் என்னப்பட்ட ஒரு மனிதனை அவர்கள் பார்த்து, அவருடைய சிலுவையைச் சுமக்கும்படி அவனைப் பலவந்தம் செய்தார்கள்.
出て行くと,シモンという名のキュレネ人を見つけたが,彼を一緒に来させて,イエスの十字架を運ばせた。
33 ௩௩ கபாலஸ்தலம் என்று அர்த்தங்கொள்ளும் கொல்கொதா என்னும் இடத்திற்கு அவர்கள் வந்தபோது,
「ゴルゴタ」,訳せば「どくろの場所」と呼ばれる場所にやって来た。
34 ௩௪ கசப்புக்கலந்த காடியை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவர் அதை ருசிபார்த்து, குடிக்க மனதில்லாதிருந்தார்.
彼らは胆汁を混ぜた酸いブドウ酒を与えた。彼は味を見ると飲もうとしなかった。
35 ௩௫ அவரை சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய ஆடைகளைப் பங்கிட்டுக் கொண்டார்கள். என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் சொல்லப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.
彼をはりつけにしてから,くじを引いて,互いにその外衣を分けた。
36 ௩௬ அவர்கள் அங்கே உட்கார்ந்து, அவரைக் காவல்காத்துக்கொண்டிருந்தார்கள்.
そして,そこに座って彼を見張っていた。
37 ௩௭ அன்றியும் அவர் அடைந்த தண்டனையின் காரணத்தைக் காண்பிக்கும்படியாக, இவன் யூதர்களுடைய ராஜாவாகிய இயேசு என்று எழுதி, அவர் தலைக்கு மேலாக வைத்தார்கள்.
彼の頭の上には,「これはユダヤ人の王イエス」と書いた罪状書きを掲げた。
38 ௩௮ அப்பொழுது, அவருடைய வலதுபக்கத்தில் ஒருவனும் அவருடைய இடதுபக்கத்தில் ஒருவனுமாக இரண்டு திருடர்கள் அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டார்கள்.
それから,彼と共に二人の強盗をはりつけにし,一人はその右に,一人はその左に置いた。
39 ௩௯ அந்தவழியாக நடந்துபோகிறவர்கள் தங்களுடைய தலைகளைத் துலுக்கி:
通りかかった者たちは,頭を振りながら彼を冒とくして
40 ௪0 தேவாலயத்தை இடித்து, மூன்று நாட்களுக்குள்ளே கட்டுகிறவனே, உன்னைநீயே இரட்சித்துக்கொள்; நீ தேவனுடைய குமாரனானால் சிலுவையிலிருந்து இறங்கிவா என்று அவரைப் பழித்தார்கள்.
言った,「神殿を壊して三日で建てる者よ,自分を救ってみろ! 神の子なら,十字架から降りて来い!」
41 ௪௧ அப்படியே பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் மூப்பர்களும் கேலிசெய்து:
同じように,祭司長たちも律法学者たちやファリサイ人たちや長老たちと共に,あざけって言った,
42 ௪௨ மற்றவர்களை இரட்சித்தான்; தன்னைத்தான் இரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.
「ほかの者たちは救ったが,自分は救えないのだ。あれがイスラエルの王なら,今,十字架から降りて来てもらおう。そうしたら彼を信じよう。
43 ௪௩ தன்னைத் தேவனுடைய குமாரன் என்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாக இருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாக இருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.
彼は神に頼っている。神が彼をお望みなら,救い出してもらうがよい。『わたしは神の子だ』と言ったのだから」。
44 ௪௪ அவரோடுகூட சிலுவைகளில் அறையப்பட்டத் திருடர்களும் அந்தப்படியே அவரை நிந்தித்தார்கள்.
一緒にはりつけになっていた強盗たちも,同じように彼を非難した。
45 ௪௫ நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் மதியம் மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் அந்தகாரம் உண்டானது.
さて,第六時から闇が全土を覆い,第九時にまで及んだ。
46 ௪௬ மூன்று மணியளவில் இயேசு: ஏலீ! ஏலீ! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார்; அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம்.
第九時ごろ,イエスは大声で叫んで,「エリ,エリ,リマ,サバクタニ」 と言った。これは,「わたしの神,わたしの神,なぜわたしをお見捨てになったのですか」 という意味である。
47 ௪௭ அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இவன் எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.
そばに立っていた者たちの何人かは,それを聞いて,「この人はエリヤを呼んでいるのだ」と言った。
48 ௪௮ உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான்.
すぐに彼らのうちの一人が走って行き,海綿に酢をたっぷり含ませて,アシの先に付け,それを彼に飲まそうとした。
49 ௪௯ மற்றவர்களோ: பொறு, எலியா இவனை இரட்சிக்க வருவானோ, பார்ப்போம் என்றார்கள்.
残りの者たちは,「彼をそのままにしておけ。エリヤが彼を救いに来るかどうかを見よう」と言った。
50 ௫0 இயேசு, மறுபடியும் மகா சத்தமாகக் கூப்பிட்டு, ஆவியை விட்டார்.
イエスは再び大声で叫んで,自分の霊をゆだねた。
51 ௫௧ அப்பொழுது, தேவாலயத்தின் திரைத்துணி மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் இரண்டாகக் கிழிந்தது, பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது.
見よ,神殿の幕が上から下まで二つに裂けた。地が揺れ,岩々が割れた。
52 ௫௨ கல்லறைகளும் திறந்தது, மரித்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
幾つもの墓が開き,眠りについていた聖者たちの体が数多く起こされた。
53 ௫௩ அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
そして,イエスの復活ののちに墓から出て来て,聖都に入り,大勢の人に現われた。
54 ௫௪ நூறு போர்வீரர்களுக்குத் தலைவனும், அவனோடுகூட இயேசுவைக் காவல் காத்திருந்தவர்களும், பூமியதிர்ச்சியையும் நடந்த காரியங்களையும் பார்த்து, மிகவும் பயந்து: உண்மையாகவே இவர் தேவனுடைய குமாரன் என்றார்கள்.
その時,百人隊長と,イエスを見張っていた者たちは,地震や起きた事柄を見て非常に恐れ,「本当にこの人は神の子だった」と言った。
55 ௫௫ மேலும், இயேசுவிற்கு பணிவிடைசெய்யும்படி கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த அநேக பெண்கள் அங்கே தூரத்திலே நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
そこでは大勢の女たちが遠くから見ていたが,それはガリラヤからイエスに仕えながら従っていた者たちであった。
56 ௫௬ அவர்களுக்குள்ளே மகதலேனா மரியாளும், யாக்கோபுக்கும், யோசேப்புக்கும் தாயாகிய மரியாளும், செபெதேயுவின் குமாரர்களுடைய தாயும் இருந்தார்கள்.
その中にはマリア・マグダレネ,ヤコブとヨセの母マリア,それにゼベダイの子らの母がいた。
57 ௫௭ மாலைநேரமானபோது, இயேசுவிற்குச் சீடனும் செல்வந்தனுமாகவும் இருந்த யோசேப்பு என்னும் பேருடைய அரிமத்தியா ஊரானாகிய ஒரு மனிதன் வந்து,
夕方になると,ヨセフという名で,アリマタヤ出身の富んだ人がやって来た。彼自身もイエスの弟子となっていた。
58 ௫௮ பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.
この人がピラトのところへ行き,イエスの体を渡してくれるよう願い出た。それでピラトは死体を与えるよう命じた。
59 ௫௯ யோசேப்பு அந்த சரீரத்தை எடுத்து, தூய்மையான மெல்லிய துப்பட்டியிலே சுற்றி,
ヨセフは死体を取り降ろして,きれいな亜麻布に包み,
60 ௬0 தான் கன்மலையில் வெட்டியிருந்த தன்னுடைய புதிய கல்லறையிலே அதை வைத்து, கல்லறையின் வாசலில் ஒரு பெரிய கல்லைப் புரட்டி வைத்துப்போனான்.
岩に切り掘ってあった自分の新しい墓に横たえた。墓の入り口に大きな石を転がしてから,去って行った。
61 ௬௧ அங்கே மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறைக்கு எதிராக உட்கார்ந்திருந்தார்கள்.
マリア・マグダレネともう一人のマリアは,墓に向かって座っていた。
62 ௬௨ ஆயத்தநாளுக்கு அடுத்த மறுநாளிலே பிரதான ஆசாரியர்களும் பரிசேயர்களும் பிலாத்துவினிடத்தில் கூடிவந்து:
さて,次の日,すなわち準備の日の翌日,祭司長たちとファリサイ人たちはピラトのもとに集まって
63 ௬௩ ஆண்டவனே, அந்த ஏமாற்றுக்காரன் உயிரோடிருக்கும்போது, மூன்று நாட்களுக்குப்பின்பு உயிரோடு எழுந்திருப்பேன் என்று சொன்னது எங்களுக்கு ஞாபகம் இருக்கிறது.
こう言った。「閣下,わたしたちは,あの詐欺師がまだ生きていたとき,『三日後にわたしは生き返るだろう』と言っていたのを思い出しました。
64 ௬௪ ஆகவே, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் தந்திரமாகக் கொண்டுபோய், மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தானென்று மக்களுக்குச் சொல்லாதபடிக்கும், முந்தின வஞ்சனையைவிட பிந்தின வஞ்சனை கொடிதாகாதபடிக்கும், நீர் மூன்று நாட்கள்வரை கல்லறையைப் பாதுகாக்கும்படி கட்டளையிடவேண்டும் என்றார்கள்.
ですから,三日目まで墓を警備するよう命じてください。そうでないと,夜中に弟子たちが来て彼を盗み出し,『彼は死んだ者たちの中から起こされた』などと民に告げるかも知れません。そうなれば,この最後の欺きは最初の欺きよりも悪いものになるでしょう」。
65 ௬௫ அதற்குப் பிலாத்து: உங்களுக்குக் காவல் வீரர்கள் உண்டே; போய், உங்களால் முடிந்தவரைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள் என்றான்.
ピラトは彼らに言った,「お前たちには警備兵がある。行って,できる限りの警備をするがよい」。
66 ௬௬ அவர்கள்போய்க் கல்லுக்கு முத்திரைபோட்டு, காவல்வைத்து, கல்லறையைப் பாதுகாத்தார்கள்.
そこで彼らは警備兵を連れて行き,石に封印をして,墓の警備をした。

< மத்தேயு 27 >