< மத்தேயு 10 >

1 அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
ଅନନ୍ତରଂ ଯୀଶୁ ର୍ଦ୍ୱାଦଶଶିଷ୍ୟାନ୍ ଆହୂଯାମେଧ୍ୟଭୂତାନ୍ ତ୍ୟାଜଯିତୁଂ ସର୍ୱ୍ୱପ୍ରକାରରୋଗାନ୍ ପୀଡାଶ୍ଚ ଶମଯିତୁଂ ତେଭ୍ୟଃ ସାମର୍ଥ୍ୟମଦାତ୍|
2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
ତେଷାଂ ଦ୍ୱାଦଶପ୍ରେଷ୍ୟାଣାଂ ନାମାନ୍ୟେତାନି| ପ୍ରଥମଂ ଶିମୋନ୍ ଯଂ ପିତରଂ ୱଦନ୍ତି, ତତଃ ପରଂ ତସ୍ୟ ସହଜ ଆନ୍ଦ୍ରିଯଃ, ସିୱଦିଯସ୍ୟ ପୁତ୍ରୋ ଯାକୂବ୍
3 பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,
ତସ୍ୟ ସହଜୋ ଯୋହନ୍; ଫିଲିପ୍ ବର୍ଥଲମଯ୍ ଥୋମାଃ କରସଂଗ୍ରାହୀ ମଥିଃ, ଆଲ୍ଫେଯପୁତ୍ରୋ ଯାକୂବ୍,
4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
କିନାନୀଯଃ ଶିମୋନ୍, ଯ ଈଷ୍କରିଯୋତୀଯଯିହୂଦାଃ ଖ୍ରୀଷ୍ଟଂ ପରକରେଽର୍ପଯତ୍|
5 இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும்,
ଏତାନ୍ ଦ୍ୱାଦଶଶିଷ୍ୟାନ୍ ଯୀଶୁଃ ପ୍ରେଷଯନ୍ ଇତ୍ୟାଜ୍ଞାପଯତ୍, ଯୂଯମ୍ ଅନ୍ୟଦେଶୀଯାନାଂ ପଦୱୀଂ ଶେମିରୋଣୀଯାନାଂ କିମପି ନଗରଞ୍ଚ ନ ପ୍ରୱିଶ୍ୟେ
6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள்.
ଇସ୍ରାଯେଲ୍ଗୋତ୍ରସ୍ୟ ହାରିତା ଯେ ଯେ ମେଷାସ୍ତେଷାମେୱ ସମୀପଂ ଯାତ|
7 போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
ଗତ୍ୱା ଗତ୍ୱା ସ୍ୱର୍ଗସ୍ୟ ରାଜତ୍ୱଂ ସୱିଧମଭୱତ୍, ଏତାଂ କଥାଂ ପ୍ରଚାରଯତ|
8 வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.
ଆମଯଗ୍ରସ୍ତାନ୍ ସ୍ୱସ୍ଥାନ୍ କୁରୁତ, କୁଷ୍ଠିନଃ ପରିଷ୍କୁରୁତ, ମୃତଲୋକାନ୍ ଜୀୱଯତ, ଭୂତାନ୍ ତ୍ୟାଜଯତ, ୱିନା ମୂଲ୍ୟଂ ଯୂଯମ୍ ଅଲଭଧ୍ୱଂ ୱିନୈୱ ମୂଲ୍ୟଂ ୱିଶ୍ରାଣଯତ|
9 உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
କିନ୍ତୁ ସ୍ୱେଷାଂ କଟିବନ୍ଧେଷୁ ସ୍ୱର୍ଣରୂପ୍ୟତାମ୍ରାଣାଂ କିମପି ନ ଗୃହ୍ଲୀତ|
10 ௧0 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.
ଅନ୍ୟଚ୍ଚ ଯାତ୍ରାଯୈ ଚେଲସମ୍ପୁଟଂ ୱା ଦ୍ୱିତୀଯୱସନଂ ୱା ପାଦୁକେ ୱା ଯଷ୍ଟିଃ, ଏତାନ୍ ମା ଗୃହ୍ଲୀତ, ଯତଃ କାର୍ୟ୍ୟକୃତ୍ ଭର୍ତ୍ତୁଂ ଯୋଗ୍ୟୋ ଭୱତି|
11 ௧௧ எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
ଅପରଂ ଯୂଯଂ ଯତ୍ ପୁରଂ ଯଞ୍ଚ ଗ୍ରାମଂ ପ୍ରୱିଶଥ, ତତ୍ର ଯୋ ଜନୋ ଯୋଗ୍ୟପାତ୍ରଂ ତମୱଗତ୍ୟ ଯାନକାଲଂ ଯାୱତ୍ ତତ୍ର ତିଷ୍ଠତ|
12 ௧௨ ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
ଯଦା ଯୂଯଂ ତଦ୍ଗେହଂ ପ୍ରୱିଶଥ, ତଦା ତମାଶିଷଂ ୱଦତ|
13 ௧௩ அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
ଯଦି ସ ଯୋଗ୍ୟପାତ୍ରଂ ଭୱତି, ତର୍ହି ତତ୍କଲ୍ୟାଣଂ ତସ୍ମୈ ଭୱିଷ୍ୟତି, ନୋଚେତ୍ ସାଶୀର୍ୟୁଷ୍ମଭ୍ୟମେୱ ଭୱିଷ୍ୟତି|
14 ௧௪ எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
କିନ୍ତୁ ଯେ ଜନା ଯୁଷ୍ମାକମାତିଥ୍ୟଂ ନ ୱିଦଧତି ଯୁଷ୍ମାକଂ କଥାଞ୍ଚ ନ ଶୃଣ୍ୱନ୍ତି ତେଷାଂ ଗେହାତ୍ ପୁରାଦ୍ୱା ପ୍ରସ୍ଥାନକାଲେ ସ୍ୱପଦୂଲୀଃ ପାତଯତ|
15 ௧௫ நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ଯୁଷ୍ମାନହଂ ତଥ୍ୟଂ ୱଚ୍ମି ୱିଚାରଦିନେ ତତ୍ପୁରସ୍ୟ ଦଶାତଃ ସିଦୋମମୋରାପୁରଯୋର୍ଦଶା ସହ୍ୟତରା ଭୱିଷ୍ୟତି|
16 ௧௬ ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.
ପଶ୍ୟତ, ୱୃକଯୂଥମଧ୍ୟେ ମେଷଃ ଯଥାୱିସ୍ତଥା ଯୁଷ୍ମାନ ପ୍ରହିଣୋମି, ତସ୍ମାଦ୍ ଯୂଯମ୍ ଅହିରିୱ ସତର୍କାଃ କପୋତାଇୱାହିଂସକା ଭୱତ|
17 ௧௭ மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள்.
ନୃଭ୍ୟଃ ସାୱଧାନା ଭୱତ; ଯତସ୍ତୈ ର୍ୟୂଯଂ ରାଜସଂସଦି ସମର୍ପିଷ୍ୟଧ୍ୱେ ତେଷାଂ ଭଜନଗେହେ ପ୍ରହାରିଷ୍ୟଧ୍ୱେ|
18 ௧௮ அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
ଯୂଯଂ ମନ୍ନାମହେତୋଃ ଶାସ୍ତୃଣାଂ ରାଜ୍ଞାଞ୍ଚ ସମକ୍ଷଂ ତାନନ୍ୟଦେଶିନଶ୍ଚାଧି ସାକ୍ଷିତ୍ୱାର୍ଥମାନେଷ୍ୟଧ୍ୱେ|
19 ௧௯ அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
କିନ୍ତ୍ୱିତ୍ଥଂ ସମର୍ପିତା ଯୂଯଂ କଥଂ କିମୁତ୍ତରଂ ୱକ୍ଷ୍ୟଥ ତତ୍ର ମା ଚିନ୍ତଯତ, ଯତସ୍ତଦା ଯୁଷ୍ମାଭି ର୍ୟଦ୍ ୱକ୍ତୱ୍ୟଂ ତତ୍ ତଦ୍ଦଣ୍ଡେ ଯୁଷ୍ମନ୍ମନଃ ସୁ ସମୁପସ୍ଥାସ୍ୟତି|
20 ௨0 பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
ଯସ୍ମାତ୍ ତଦା ଯୋ ୱକ୍ଷ୍ୟତି ସ ନ ଯୂଯଂ କିନ୍ତୁ ଯୁଷ୍ମାକମନ୍ତରସ୍ଥଃ ପିତ୍ରାତ୍ମା|
21 ௨௧ சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
ସହଜଃ ସହଜଂ ତାତଃ ସୁତଞ୍ଚ ମୃତୌ ସମର୍ପଯିଷ୍ୟତି, ଅପତ୍ୟାଗି ସ୍ୱସ୍ୱପିତ୍ରୋ ର୍ୱିପକ୍ଷୀଭୂଯ ତୌ ଘାତଯିଷ୍ୟନ୍ତି|
22 ௨௨ என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
ମନ୍ନମହେତୋଃ ସର୍ୱ୍ୱେ ଜନା ଯୁଷ୍ମାନ୍ ଋତୀଯିଷ୍ୟନ୍ତେ, କିନ୍ତୁ ଯଃ ଶେଷଂ ଯାୱଦ୍ ଧୈର୍ୟ୍ୟଂ ଘୃତ୍ୱା ସ୍ଥାସ୍ୟତି, ସ ତ୍ରାଯିଷ୍ୟତେ|
23 ௨௩ ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ତୈ ର୍ୟଦା ଯୂଯମେକପୁରେ ତାଡିଷ୍ୟଧ୍ୱେ, ତଦା ଯୂଯମନ୍ୟପୁରଂ ପଲାଯଧ୍ୱଂ ଯୁଷ୍ମାନହଂ ତଥ୍ୟଂ ୱଚ୍ମି ଯାୱନ୍ମନୁଜସୁତୋ ନୈତି ତାୱଦ୍ ଇସ୍ରାଯେଲ୍ଦେଶୀଯସର୍ୱ୍ୱନଗରଭ୍ରମଣଂ ସମାପଯିତୁଂ ନ ଶକ୍ଷ୍ୟଥ|
24 ௨௪ சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.
ଗୁରୋଃ ଶିଷ୍ୟୋ ନ ମହାନ୍, ପ୍ରଭୋର୍ଦାସୋ ନ ମହାନ୍|
25 ௨௫ சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
ଯଦି ଶିଷ୍ୟୋ ନିଜଗୁରୋ ର୍ଦାସଶ୍ଚ ସ୍ୱପ୍ରଭୋଃ ସମାନୋ ଭୱତି ତର୍ହି ତଦ୍ ଯଥେଷ୍ଟଂ| ଚେତ୍ତୈର୍ଗୃହପତିର୍ଭୂତରାଜ ଉଚ୍ୟତେ, ତର୍ହି ପରିୱାରାଃ କିଂ ତଥା ନ ୱକ୍ଷ୍ୟନ୍ତେ?
26 ௨௬ அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
କିନ୍ତୁ ତେଭ୍ୟୋ ଯୂଯଂ ମା ବିଭୀତ, ଯତୋ ଯନ୍ନ ପ୍ରକାଶିଷ୍ୟତେ, ତାଦୃକ୍ ଛାଦିତଂ କିମପି ନାସ୍ତି, ଯଚ୍ଚ ନ ୱ୍ୟଞ୍ଚିଷ୍ୟତେ, ତାଦୃଗ୍ ଗୁପ୍ତଂ କିମପି ନାସ୍ତି|
27 ௨௭ நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
ଯଦହଂ ଯୁଷ୍ମାନ୍ ତମସି ୱଚ୍ମି ତଦ୍ ଯୁଷ୍ମାଭିର୍ଦୀପ୍ତୌ କଥ୍ୟତାଂ; କର୍ଣାଭ୍ୟାଂ ଯତ୍ ଶ୍ରୂଯତେ ତଦ୍ ଗେହୋପରି ପ୍ରଚାର୍ୟ୍ୟତାଂ|
28 ௨௮ ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
ଯେ କାଯଂ ହନ୍ତୁଂ ଶକ୍ନୁୱନ୍ତି ନାତ୍ମାନଂ, ତେଭ୍ୟୋ ମା ଭୈଷ୍ଟ; ଯଃ କାଯାତ୍ମାନୌ ନିରଯେ ନାଶଯିତୁଂ, ଶକ୍ନୋତି, ତତୋ ବିଭୀତ| (Geenna g1067)
29 ௨௯ ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.
ଦ୍ୱୌ ଚଟକୌ କିମେକତାମ୍ରମୁଦ୍ରଯା ନ ୱିକ୍ରୀଯେତେ? ତଥାପି ଯୁଷ୍ମତ୍ତାତାନୁମତିଂ ୱିନା ତେଷାମେକୋପି ଭୁୱି ନ ପତତି|
30 ௩0 உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
ଯୁଷ୍ମଚ୍ଛିରସାଂ ସର୍ୱ୍ୱକଚା ଗଣିତାଂଃ ସନ୍ତି|
31 ௩௧ ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
ଅତୋ ମା ବିଭୀତ, ଯୂଯଂ ବହୁଚଟକେଭ୍ୟୋ ବହୁମୂଲ୍ୟାଃ|
32 ௩௨ மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன்.
ଯୋ ମନୁଜସାକ୍ଷାନ୍ମାମଙ୍ଗୀକୁରୁତେ ତମହଂ ସ୍ୱର୍ଗସ୍ଥତାତସାକ୍ଷାଦଙ୍ଗୀକରିଷ୍ୟେ|
33 ௩௩ மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
ପୃଥ୍ୱ୍ୟାମହଂ ଶାନ୍ତିଂ ଦାତୁମାଗତଇତି ମାନୁଭୱତ, ଶାନ୍ତିଂ ଦାତୁଂ ନ କିନ୍ତ୍ୱସିଂ|
34 ௩௪ பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன்.
ପିତୃମାତୃଶ୍ଚଶ୍ରୂଭିଃ ସାକଂ ସୁତସୁତାବଧୂ ର୍ୱିରୋଧଯିତୁଞ୍ଚାଗତେସ୍ମି|
35 ௩௫ எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
ତତଃ ସ୍ୱସ୍ୱପରିୱାରଏୱ ନୃଶତ୍ରୁ ର୍ଭୱିତା|
36 ௩௬ ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
ଯଃ ପିତରି ମାତରି ୱା ମତ୍ତୋଧିକଂ ପ୍ରୀଯତେ, ସ ନ ମଦର୍ହଃ;
37 ௩௭ தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
ଯଶ୍ଚ ସୁତେ ସୁତାଯାଂ ୱା ମତ୍ତୋଧିକଂ ପ୍ରୀଯତେ, ସେପି ନ ମଦର୍ହଃ|
38 ௩௮ தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
ଯଃ ସ୍ୱକ୍ରୁଶଂ ଗୃହ୍ଲନ୍ ମତ୍ପଶ୍ଚାନ୍ନୈତି, ସେପି ନ ମଦର୍ହଃ|
39 ௩௯ தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
ଯଃ ସ୍ୱପ୍ରାଣାନୱତି, ସ ତାନ୍ ହାରଯିଷ୍ୟତେ, ଯସ୍ତୁ ମତ୍କୃତେ ସ୍ୱପ୍ରାଣାନ୍ ହାରଯତି, ସ ତାନୱତି|
40 ௪0 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
ଯୋ ଯୁଷ୍ମାକମାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି, ସ ମମାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି, ଯଶ୍ଚ ମମାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି, ସ ମତ୍ପ୍ରେରକସ୍ୟାତିଥ୍ୟଂ ୱିଦଧାତି|
41 ௪௧ தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான்.
ଯୋ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦୀତି ଜ୍ଞାତ୍ୱା ତସ୍ୟାତିଥ୍ୟଂ ୱିଧତ୍ତେ, ସ ଭୱିଷ୍ୟଦ୍ୱାଦିନଃ ଫଲଂ ଲପ୍ସ୍ୟତେ, ଯଶ୍ଚ ଧାର୍ମ୍ମିକ ଇତି ୱିଦିତ୍ୱା ତସ୍ୟାତିଥ୍ୟଂ ୱିଧତ୍ତେ ସ ଧାର୍ମ୍ମିକମାନୱସ୍ୟ ଫଲଂ ପ୍ରାପ୍ସ୍ୟତି|
42 ௪௨ சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ଯଶ୍ଚ କଶ୍ଚିତ୍ ଏତେଷାଂ କ୍ଷୁଦ୍ରନରାଣାମ୍ ଯଂ କଞ୍ଚନୈକଂ ଶିଷ୍ୟ ଇତି ୱିଦିତ୍ୱା କଂସୈକଂ ଶୀତଲସଲିଲଂ ତସ୍ମୈ ଦତ୍ତେ, ଯୁଷ୍ମାନହଂ ତଥ୍ୟଂ ୱଦାମି, ସ କେନାପି ପ୍ରକାରେଣ ଫଲେନ ନ ୱଞ୍ଚିଷ୍ୟତେ|

< மத்தேயு 10 >