< நியாயாதிபதிகள் 6 >

1 பின்னும் இஸ்ரவேல் மக்கள் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானதைச் செய்தார்கள்; அப்பொழுது யெகோவா அவர்களை ஏழு வருடங்கள் மீதியானியர்களின் கையில் ஒப்புக்கொடுத்தார்.
Копиий луй Исраел ау фэкут че ну плэчя Домнулуй, ши Домнул й-а дат ын мыниле луй Мадиан тимп де шапте ань.
2 மீதியானியர்களின் கை இஸ்ரவேலின்மேல் பெலமாக இருந்தபடியால், இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினால் தங்களுக்கு மலைகளிலுள்ள கெபிகளையும் குகைகளையும் பாதுகாப்பான இடங்களையும் அடைக்கலங்களாக்கிக்கொண்டார்கள்.
Мына луй Мадиан а фост путерникэ ымпотрива луй Исраел. Ка сэ скапе де Мадиан, копиий луй Исраел фуӂяу ын вэгэуниле мунцилор, ын пештерь ши пе стынчь ынтэрите.
3 இஸ்ரவேலர்கள் விதை விதைத்திருக்கும்போது, மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்குப்பகுதி மக்களும் அவர்களுக்கு எதிராக எழுந்து வந்து;
Дупэ че семэна Исраел, Мадиан се суя ку Амалек ши фиий Рэсэритулуй ши порняу ымпотрива луй.
4 அவர்களுக்கு எதிரே முகாமிட்டு, காசாவின் எல்லைவரை நிலத்தின் விளைச்சலைக் கெடுத்து, இஸ்ரவேலிலே ஆகாரத்தையும், ஆடுமாடுகள் கழுதைகளையும்கூட வைக்காமல் போவார்கள்.
Тэбэрау ын фаца луй, нимичяу роаделе цэрий пынэ спре Газа ши ну лэсау ын Исраел нич меринде, нич ой, нич бой, нич мэгарь.
5 அவர்கள் தங்களுடைய மிருகஜீவன்களோடும், தங்களுடைய கூடாரங்களோடும், வெட்டுக்கிளிகளைப்போல திரளாக வருவார்கள்; அவர்களும் அவர்களுடைய ஒட்டகங்களும் எண்ணமுடியாததாக இருக்கும்; இப்படியாக தேசத்தைக் கெடுத்துவிட அதிலே வருவார்கள்.
Кэч се суяу ымпреунэ ку турмеле ши кортуриле лор, сосяу ка о мулциме де лэкусте, ерау фэрэ нумэр, ей ши кэмилеле лор, ши веняу ын царэ ка с-о пустияскэ.
6 இப்படியாக மீதியானியர்களாலே இஸ்ரவேலர்கள் மிகவும் பெலவீனப்பட்டார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டார்கள்.
Исраел а ажунс фоарте ненорочит дин причина луй Мадиан, ши копиий луй Исраел ау стригат кэтре Домнул.
7 இஸ்ரவேல் மக்கள் மீதியானியர்களினாலே யெகோவாவை நோக்கி முறையிட்டபோது,
Кынд копиий луй Исраел ау стригат кэтре Домнул дин причина луй Мадиан,
8 யெகோவா ஒரு தீர்க்கதரிசியை அவர்களிடம் அனுப்பினார்; அவன் அவர்களை நோக்கி: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: நான் உங்களை எகிப்திலிருந்து வரவும், அடிமையாக இருந்த வீட்டிலிருந்து புறப்படவும் செய்து,
Домнул а тримис копиилор луй Исраел ун пророк. Ел ле-а зис: „Аша ворбеште Домнул Думнезеул луй Исраел: ‘Еу в-ам скос дин Еӂипт, Еу в-ам скос дин каса робией.
9 எகிப்தியர்கள் கைகளிலிருந்தும், உங்களை ஒடுக்கின எல்லோருடைய கைகளிலிருந்தும் உங்களை இரட்சித்து, அவர்களை உங்களுக்கு முன்பாகத் துரத்தி, அவர்கள் தேசத்தை உங்களுக்குக் கொடுத்து,
В-ам скэпат дин мына еӂиптенилор ши дин мына тутурор челор че вэ апэсау, й-ам изгонит динаинтя воастрэ ши в-ам дат воуэ цара лор.
10 ௧0 நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்றும், நீங்கள் குடியிருக்கும் அவர்கள் தேசத்திலுள்ள எமோரியர்களுடைய தெய்வங்களுக்குப் பயப்படாமல் இருங்கள் என்றும், உங்களுக்குச் சொன்னேன்; நீங்களோ என்னுடைய சொல்லைக் கேட்காமல் போனீர்கள் என்கிறார் என்று சொன்னான்.
В-ам зис: «Еу сунт Домнул Думнезеул востру; сэ ну вэ темець де думнезеий аморицилор, ын а кэрор царэ локуиць.» Дар вой н-аць аскултат гласул Меу.’”
11 ௧௧ அதற்குப்பின்பு யெகோவாவுடைய தூதனானவர் வந்து, அபியேஸ்ரியனான யோவாசின் ஊராகிய ஒப்ராவிலிருக்கும் ஒரு கர்வாலிமரத்தின்கீழ் உட்கார்ந்தார்; அப்பொழுது அவனுடைய மகன் கிதியோன் கோதுமையை மீதியானியர்களின் கைக்குத் தப்புவிக்க, ஆலைக்கு அருகில் அதைப் போரடித்தான்.
Апой а венит Ынӂерул Домнулуй ши С-а ашезат суб стежарул дин Офра, каре ера ал луй Иоас, дин фамилия луй Абиезер. Гедеон, фиул сэу, бэтя грыу ын тяск, ка сэ-л аскундэ де Мадиан.
12 ௧௨ யெகோவாவுடைய தூதனானவர் அவனுக்குத் தரிசனமாகி: பெலசாலியே யெகோவா உன்னோடு இருக்கிறார் என்றார்.
Ынӂерул Домнулуй и С-а арэтат ши й-а зис: „Домнул есте ку тине, витязуле!”
13 ௧௩ அப்பொழுது கிதியோன் அவரை நோக்கி: ஆ என் ஆண்டவரே, யெகோவா எங்களோடு இருந்தால், இவைகளெல்லாம் எங்களுக்கு ஏன் சம்பவித்தது? யெகோவா எங்களை எகிப்திலிருந்து கொண்டுவரவில்லையா என்று எங்களுடைய பிதாக்கள் எங்களுக்கு விவரித்துச்சொன்ன அவருடைய அற்புதங்களெல்லாம் எங்கே? இப்பொழுது யெகோவா எங்களைக் கைவிட்டு, மீதியானியர்களின் கையில் எங்களை ஒப்புக்கொடுத்தாரே என்றான்.
Гедеон Й-а зис: „Рогу-те, домнул меу, дакэ Домнул есте ку ной, пентру че ни с-ау ынтымплат тоате ачесте лукрурь? Ши унде сунт тоате минуниле ачеля пе каре ни ле историсеск пэринций ноштри кынд спун: ‘Ну не-а скос оаре Домнул дин Еӂипт?’ Акум, Домнул не пэрэсеште ши не дэ ын мыниле луй Мадиан!”
14 ௧௪ அப்பொழுது யெகோவா அவனை நோக்கிப் பார்த்து: உனக்கு இருக்கிற இந்தப் பெலத்தோடு போ; நீ இஸ்ரவேலை மீதியானியர்களின் கைக்கு விலக்கிக் காப்பாற்றுவாய்; உன்னை அனுப்புகிறவர் நான் அல்லவா என்றார்.
Домнул С-а уйтат ла ел ши а зис: „Ду-те ку путеря ачаста пе каре о ай ши избэвеште пе Исраел дин мына луй Мадиан. Оаре ну те тримит Еу?”
15 ௧௫ அதற்கு அவன்: ஆ என்னுடைய ஆண்டவரே, நான் இஸ்ரவேலை எதினாலே காப்பாற்றுவேன்; இதோ, மனாசேயில் என்னுடைய குடும்பம் மிகவும் எளியது; என்னுடைய தகப்பன் வீட்டில் நான் எல்லோரிலும் சிறியவன் என்றான்.
Гедеон Й-а зис: „Рогу-те, домнул меу, ку че сэ избэвеск пе Исраел? Ятэ кэ фамилия мя есте чя май сэракэ дин Манасе ши еу сунт чел май мик дин каса татэлуй меу.”
16 ௧௬ அதற்குக் யெகோவா: நான் உன்னோடு இருப்பேன்; ஒரே மனிதனை முறியடிப்பதுபோல நீ மீதியானியர்களை முறியடிப்பாய் என்றார்.
Домнул й-а зис: „Еу вой фи ку тине ши вей бате пе Мадиан ка пе ун сингур ом.”
17 ௧௭ அப்பொழுது அவன்: உம்முடைய கண்களில் இப்பொழுதும் எனக்குத் தயை கிடைத்ததானால் என்னோடே பேசுகிறவர் தேவரீர்தான் என்று எனக்கு ஒரு அடையாளத்தைக் காண்பிக்கவேண்டும்.
Гедеон Й-а зис: „Дакэ ам кэпэтат тречере ынаинтя Та, дэ-мь ун семн ка сэ-мь арэць кэ Ту ымь ворбешть.
18 ௧௮ நான் உம்மிடத்திற்கு என்னுடைய காணிக்கையைக் கொண்டுவந்து, உமக்கு முன்பாக வைக்கும் வரை, இந்த இடத்தை விட்டுப்போகாதிருப்பீராக என்றான்; அதற்கு அவர்: நீ திரும்பி வரும்வரை நான் இருப்பேன் என்றார்.
Ну Те депэрта де аич пынэ мэ вой ынтоарче ла Тине сэ-мь адук дарул ши сэ-л пун ынаинтя Та.” Ши Домнул а зис: „Вой рэмыне пынэ те вей ынтоарче.”
19 ௧௯ உடனே கிதியோன் உள்ளே போய், ஒரு வெள்ளாட்டுக்குட்டியையும் ஒரு மரக்கால் மாவிலே புளிப்பில்லாத அப்பங்களையும் ஆயத்தப்படுத்தி, இறைச்சியை ஒரு கூடையில் வைத்து, குழம்பை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அதை வெளியே கர்வாலி மரத்தின் கீழே இருக்கிற அவரிடம் கொண்டுவந்து வைத்தான்.
Гедеон а интрат ын касэ, а прегэтит ун ед ши а фэкут азиме динтр-о ефэ де фэинэ. А пус карня ынтр-ун кош ши зяма а турнат-о ынтр-о оалэ, ле-а адус суб стежар ши И ле-а пус ынаинте.
20 ௨0 அப்பொழுது தேவனுடைய தூதனானவர் அவனை நோக்கி: நீ இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எடுத்து, இந்தக் கற்பாறையின்மேல் வைத்து குழம்பை ஊற்று என்றார்; அவன் அப்படியே செய்தான்.
Ынӂерул луй Думнезеу й-а зис: „Я карня ши азимиле, пуне-ле пе стынка ачаста ши варсэ зяма.” Ши ел а фэкут аша.
21 ௨௧ அப்பொழுது யெகோவாவுடைய தூதன் தமது கையிலிருந்த கோலின் நுனியை நீட்டி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் தொட்டார்; அப்பொழுது அக்கினி கற்பாறையிலிருந்து எழும்பி, இறைச்சியையும் புளிப்பில்லாத அப்பங்களையும் எரித்துப்போட்டது; யெகோவாவின் தூதனோ. அவனுடைய கண்களுக்கு மறைந்துபோனார்.
Ынӂерул Домнулуй а ынтинс вырфул тоягулуй пе каре-л авя ын мынэ ши а атинс карня ши азимиле. Атунч, с-а ридикат дин стынкэ ун фок каре а мистуит карня ши азимиле. Ши Ынӂерул Домнулуй С-а фэкут невэзут динаинтя луй.
22 ௨௨ அப்பொழுது கிதியோன், அவர் யெகோவாவுடைய தூதன் என்று அறிந்து: ஐயோ, யெகோவாவாகிய ஆண்டவரே, நான் யெகோவாவுடைய தூதனை முகமுகமாக பார்த்தேனே என்றான்.
Гедеон, вэзынд кэ фусесе Ынӂерул Домнулуй, а зис: „Вай де мине, Стэпыне Доамне! Ам вэзут пе Ынӂерул Домнулуй фацэ-н фацэ.”
23 ௨௩ அதற்குக் யெகோவா: உனக்குச் சமாதானம்; பயப்படாதே, நீ சாவதில்லை என்று சொன்னார்.
Ши Домнул й-а зис: „Фий пе паче, ну те теме, кэч ну вей мури.”
24 ௨௪ அங்கே கிதியோன் யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பெயரிட்டான்; அது இந்த நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.
Гедеон а зидит аколо ун алтар Домнулуй ши й-а пус нумеле „Домнул пэчий”. Алтарул ачеста есте ши астэзь ла Офра, каре ера а фамилией луй Абиезер.
25 ௨௫ அன்று இரவிலே யெகோவா அவனை நோக்கி: நீ உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற காளைகளில் ஏழுவயதான இரண்டாம் காளையைக் கொண்டுபோய், உன்னுடைய தகப்பனுக்கு இருக்கிற பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகிலுள்ள தோப்பை வெட்டிப்போட்டு.
Ын ачеяшь ноапте, Домнул а зис луй Гедеон: „Я вицелул татэлуй тэу ши ун алт таур де шапте ань. Дэрымэ алтарул луй Баал, каре есте ал татэлуй тэу, ши тае парул ынкинат Астартеей, каре есте дясупра.
26 ௨௬ இந்தக் கற்பாறையின் உச்சியிலே சரியான ஒரு இடத்தில் உன் யெகோவாவுடைய யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அந்த இரண்டாம் காளையைக் கொண்டு வந்து, அதை நீ வெட்டிப்போட்ட தோப்பினுடைய கட்டை விறகுகளின் மேல் சர்வாங்க தகனமாகப் பலியிடவேண்டும் என்றார்.
Сэ зидешть апой ши сэ ынтокмешть пе вырфул ачестей стынчь ун алтар Домнулуй Думнезеулуй тэу. Сэ ей таурул ал дойля ши сэ адучь о ардере-де-тот ку лемнул дин стылпул идолулуй пе каре-л вей тэя.”
27 ௨௭ அப்பொழுது கிதியோன், தன்னுடைய வேலையாட்களில் பத்துப்பேரைச் சேர்த்து, யெகோவா தனக்குச் சொன்னபடியே செய்தான்; அவன் தன்னுடைய தகப்பன் குடும்பத்தாருக்கும் அந்த ஊர் மனிதர்களுக்கும் பயந்ததினாலே, அதைப் பகலிலே செய்யாமல், இரவிலே செய்தான்.
Гедеон а луат зече оамень динтре служиторий луй ши а фэкут че спусесе Домнул, дар, фииндкэ се темя де каса татэлуй сэу ши де оамений дин четате, а фэкут лукрул ачеста ноаптя, ну зиуа.
28 ௨௮ அந்த ஊர் மனிதர்கள் காலையில் எழுந்தபோது, இதோ, பாகாலின் பலிபீடம் தகர்க்கப்பட்டும், அதின் அருகிலியிருந்த தோப்பு வெட்டிப்போடப்பட்டும், கட்டப்பட்டிருந்த பலிபீடத்தின் மேல் அந்த இரண்டாம் காளை பலியிடப்பட்டு இருக்கிறதையும் அவர்கள் பார்த்து;
Кынд с-ау скулат оамений дин четате дис-де-диминяцэ, ятэ кэ алтарул луй Баал ера дэрымат, парул ынкинат идолулуй де дясупра луй ера тэят ши ал дойля таур ера адус ка ардере-де-тот пе алтарул каре фусесе зидит.
29 ௨௯ ஒருவரையொருவர் நோக்கி: இந்தக் காரியத்தைச் செய்தவன் யார் என்றார்கள்; கேட்டு விசாரிக்கிறபோது, யோவாசின் மகன் கிதியோன் இதைச் செய்தான் என்றார்கள்.
Ей шь-ау зис унул алтуя: „Чине а фэкут лукрул ачеста?” Ши ау ынтребат ши ау фэкут черчетэрь. Ли с-а спус: „Гедеон, фиул луй Иоас, а фэкут лукрул ачеста.”
30 ௩0 அப்பொழுது ஊர்க்காரர்கள் யோவாசை நோக்கி: உன் மகனை வெளியே கொண்டுவா; அவன் பாகாலின் பலிபீடத்தைத் தகர்த்து, அதின் அருகே இருந்த தோப்பை வெட்டிப்போட்டான், அவன் சாகவேண்டும் என்றார்கள்.
Атунч, оамений дин четате ау зис луй Иоас: „Скоате пе фиул тэу ка сэ моарэ, кэч а дэрымат алтарул луй Баал ши а тэят парул сфынт каре ера дясупра луй.”
31 ௩௧ யோவாஸ் தன்னை எதிர்த்து நிற்கிற அனைவரையும் பார்த்து: நீங்களா பாகாலுக்காக வாதாடுவீர்கள்? நீங்களா அதைக் காப்பாற்றுவீர்கள்? அதற்காக வாதாடுகிறவர்கள் இன்று காலையிலே சாகட்டும்; அது தேவனானால் தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால், அதுவே தனக்காக வாதாடட்டும் என்றான்.
Иоас а рэспунс тутурор челор че с-ау ынфэцишат ынаинтя луй: „Оаре датория воастрэ есте сэ апэраць пе Баал? Вой требуе сэ-й вениць ын ажутор? Орьчине ва луа апэраря луй Баал сэ моарэ пынэ диминяцэ. Дакэ Баал есте ун думнезеу, сэ-шь апере ел причина, фииндкэ й-ау дэрымат алтарул.”
32 ௩௨ தன்னுடைய பலிபீடத்தைத் தகர்த்ததினால் பாகால் அவனோடு வாதாடட்டும் என்று சொல்லி, அந்த நாளிலே அவனுக்கு யெருபாகால் என்று பெயர் சூட்டப்பட்டது.
Ын зиуа ачея ау пус луй Гедеон нумеле Иерубаал, кэч ау зис: „Апере-се Баал ымпотрива луй, фииндкэ й-а дэрымат алтарул.”
33 ௩௩ மீதியானியர்களும் அமலேக்கியர்களும் கிழக்கு பகுதியை சேர்ந்த மக்கள் எல்லோரும் ஒன்றாக கூடி, ஆற்றைக் கடந்துவந்து, யெஸ்ரயேல் பள்ளத்தாக்கில் முகாமிட்டார்கள்.
Тот Мадианул, Амалек ши фиий Рэсэритулуй с-ау стрынс ымпреунэ, ау трекут Йорданул ши ау тэбэрыт ын валя Изреел.
34 ௩௪ அப்பொழுது யெகோவாவுடைய ஆவியானவர் கிதியோன்மேல் இறங்கினார்; அவன் எக்காளம் ஊதி, அபியேஸ்ரியர்களைக் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து,
Гедеон а фост ымбрэкат ку Духул Домнулуй; а сунат дин трымбицэ ши Абиезер а фост кемат ка сэ мяргэ дупэ ел.
35 ௩௫ மனாசே நாடெங்கும் தூதுவர்களை அனுப்பி, அவர்களையும் கூப்பிட்டு, தனக்குப் பின்செல்லும்படி செய்து, ஆசேர், செபுலோன், நப்தலி நாடுகளிலும் ஆட்களை அனுப்பினான்; அவர்களும் அவனுக்கு எதிர்கொண்டு வந்தார்கள்.
А тримис соль ын тот Манасе, каре, де асеменя, а фост кемат сэ мяргэ дупэ ел. А тримис соль ын Ашер, ын Забулон ши ын Нефтали, каре с-ау суит сэ ле ясэ ынаинте.
36 ௩௬ அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: தேவரீர் சொன்னபடி என்னுடைய கையினாலே இஸ்ரவேலை காப்பாற்றவேண்டுமானால்,
Гедеон а зис луй Думнезеу: „Дакэ врей сэ избэвешть пе Исраел прин мына мя, кум ай спус,
37 ௩௭ இதோ, நான் முடியுள்ள ஒரு தோலை கதிரடிக்கும் களத்திலே போடுகிறேன்; பனி தோலின்மேல் மட்டும் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்பொழுது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என்னுடைய கையினால் காப்பாற்றுவீர் என்று அதினாலே அறிவேன் என்றான்.
ятэ, вой пуне ун вал де лынэ ын арие; дакэ нумай лына ва фи акоперитэ де роуэ, ши тот пэмынтул ва рэмыне ускат, вой куноаште кэ вей избэви пе Исраел прин мына мя, кум ай спус.”
38 ௩௮ அப்படியே ஆனது. அவன் மறுநாள் காலையில் எழுந்து, தோலைக் கசக்கி, அதிலிருந்த பனிநீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான்.
Ши аша с-а ынтымплат. Ын зиуа урмэтоаре, ел с-а скулат дис-де-диминяцэ, а сторс лына ши а скос роуа дин еа, каре а дат ун пахар плин ку апэ.
39 ௩௯ அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி: நான் இன்னும் ஒரு முறை மட்டும் பேசுகிறேன், உமது கோபம் என்மேல் வராமல் இருப்பதாக; தோலினாலே நான் இன்னும் ஒரே முறை மட்டும் சோதனைசெய்கிறேன்; தோல் மட்டும் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான்.
Гедеон а зис луй Думнезеу: „Сэ ну Те апринзь де мыние ымпотрива мя ши ну вой май ворби декыт де дата ачаста. Аш вря нумай сэ май фак о ынчеркаре ку лына: нумай лына сэ рэмынэ ускатэ, ши тот пэмынтул сэ се акопере ку роуэ.”
40 ௪0 அப்படியே தேவன் அன்று இரவு செய்தார்; தோல்மட்டும் காய்ந்திருந்து, பூமியெங்கும் பனி பெய்திருந்தது.
Ши Думнезеу а фэкут аша ын ноаптя ачея. Нумай лына а рэмас ускатэ, ши тот пэмынтул с-а акоперит ку роуэ.

< நியாயாதிபதிகள் 6 >