< Soakas 4 >

1 Tulik nutik, kowos in porongo mwe luti lun papa tomowos. Arulana lohang nu kac, na ac fah oasr etauk lowos.
பிள்ளைகளே, தகப்பனின் அறிவுரைகளைக் கேளுங்கள்; கவனமாயிருந்து புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
2 Nga luti kowos ke inkanek wo. Nimet kowos pilesru.
நான் உங்களுக்கு நல்ல ஆலோசனையைத் தருகிறேன், எனவே நீங்கள் எனது போதனைகளைக் கைவிடாதிருங்கள்.
3 Ke nga srakna tulik srisrik, wen sefanna nutin papa ac nina,
நான் எனது தகப்பனுக்குச் செல்ல மகனாய், என் தாய்க்கு அருமையான ஒரே பிள்ளையாய் வளர்ந்து வந்தேன்.
4 papa el ac fahk, “Esamya ma nga fahk inge, ac nimet mulkunla. Oru in oana ke nga fahk uh, na kom fah moul.
அப்பொழுது என் தகப்பன் எனக்குப் போதித்துச் சொன்னதாவது: “நான் சொல்லும் வார்த்தைகளை உன் இருதயத்தில் வைத்துக்கொள்; நீ என் கட்டளைகளைக் கைக்கொள், அப்பொழுது நீ வாழ்வாய்.
5 Eis lalmwetmet ac liyaten! Nimet mulkunla ku pilesru ma nga fahk uh.
ஞானத்தையும் புரிந்துகொள்ளுதலையும் பெற்றுக்கொள்; எனது வார்த்தைகளை மறக்காமலும் அவற்றைவிட்டு விலகாமலும் இரு.
6 Nimet sisla lalmwetmet, na el ac loangekom. Lungse el, ac el fah liyekomyang wo.
நீ ஞானத்தை விட்டுவிடாதே, அது உன்னைப் பாதுகாக்கும்; அதை நேசி, அது உன்னை காத்துக்கொள்ளும்.
7 Ma se ma yohk sripa emeet nu sum pa in suk lalmwetmet. Kutena ma kom ac sifil suk saya, kom in suk etauk.
ஞானத்தைப் பெற்றுக்கொள்வதே ஞானத்தின் ஆரம்பம்; உன்னிடம் உள்ளதையெல்லாம் செலவழிக்க வேண்டியதானாலும் புரிந்துகொள்ளுதலைப் பெற்றுக்கொள்.
8 Lungse lalmwetmet, ac el ac fah oru kom in fulat. Apsilya ku, ac el ac fah oru in kaksakinyuk kom.
நீ அதை மதித்து நட, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதை அணைத்துக்கொள், அப்பொழுது அது உன்னைக் கனப்படுத்தும்.
9 El ac fah oana sie tefuro wolana nu fin sifom.”
அது உன் தலையில் அழகான மலர் முடியைச் சூட்டும், அது உனக்கு சிறப்புமிக்க மகுடத்தைக் கொடுக்கும்.”
10 Lohngyu, tulik nutik. Nunku akwoye ma nga fahk nu sum uh, na ac fah loes moul lom.
என் மகனே, கேள், நான் சொல்வதை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் வாழ்நாட்கள் நீடித்திருக்கும்.
11 Nga luti nu sum lalmwetmet ac ouiyen moul pwaye kom in fahsr kac.
நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி, நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன்.
12 Wangin ma ac kosrala inkanek lom kom fin fahsr in lalmwetmet, ac kom ac tia tukulkul ke pacl kom kasrusr.
நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது; நீ ஓடும்போது இடறி விழமாட்டாய்.
13 Esam ma kom luti uh pacl nukewa. Lutlut lom uh pa moul lom — liyaung akwoya.
அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே; அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு.
14 Nimet fahsr nu yen mwet koluk uh fahsr nu we. Nimet ukwe ouiyen moul lalos.
கொடியவர்களின் பாதையில் அடியெடுத்து வைக்காதே; தீய மனிதர்களின் வழியில் நீ நடக்காதே.
15 Fahsr liki ma koluk! Nimet apkuranyang nu kac! Kuhfla liki ac fahsrot ke inkanek lom.
அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே; அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல்.
16 Mwet koluk uh tia ku in motulla nwe ke na elos orala sie ma koluk. Elos ac ngetnget na elos fin tia orala mwe lokoalok nu sin mwet.
ஏனெனில் தீமைசெய்யும்வரை அவர்கள் உறங்கமாட்டார்கள்; யாரையாவது விழப்பண்ணும்வரை அவர்கள் நித்திரை செய்யமாட்டார்கள்.
17 Ma koluk ac sulallal uh oana mwe mongo ac mwe nim nu selos.
அவர்கள் கொடுமையின் உணவைச் சாப்பிட்டு, வன்முறையின் மதுவைக் குடிக்கிறார்கள்.
18 Inkanek lun mwet suwoswos uh oana takak lun faht uh, ma kais kutu kalmwelik nwe ke na lenelik.
நீதிமான்களின் பாதை நடுப்பகல் வரைக்கும் மேன்மேலும் பிரகாசிக்கிற சூரியப் பிரகாசத்தைப் போன்றது.
19 Inkanek lun mwet koluk uh lohsr matoltol. Elos ikori tuh elos tia ku in liye lah mea se oru elos ikori uh.
ஆனால் கொடியவர்களின் வழியோ காரிருளைப் போன்றது; அவர்கள் தங்களை இடறப்பண்ணுவது எது என்பதை அறியார்கள்.
20 Tulik nutik, lohng akwoya ma nga fahk uh.
என் மகனே, நான் சொல்வதைக் கவனி; நான் சொல்லும் வார்த்தைகளுக்குச் செவிகொடு.
21 Esam kas luk ac karinganang in tia wanginla liki kom.
அவற்றை உன் பார்வையிலிருந்து விலகவிடாதே, அவற்றை உன் இருதயத்திற்குள் வைத்துக்கொள்;
22 Kas inge ac sang moul ac ku lun mano nu sin kutena mwet su kalem kac.
அவற்றைக் கண்டுபிடிப்பவர்களுக்கு அவை வாழ்வாக இருக்கும்; அவை மனிதரின் முழு உடலுக்கும் நலனளிக்கும்.
23 Arulana karinganang nunak lom an — mweyen moul lom ac sikyak oana ma kom nunku.
எல்லாவற்றிற்கும் மேலாக, உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதிலிருந்து நீ செய்யும் எல்லாமே உனது வாழ்வின் ஊற்றாகப் புறப்பட்டு வரும்.
24 Nimet fahk kutena ma su tia pwaye, ac tia orekmakin kas kikiap ku kutena ouiya ma ac kiapu mwet uh.
வஞ்சகத்தை உன் வாயிலிருந்து அகற்று, சீர்கேடான பேச்சுக்களை உன் உதடுகளிலிருந்து தூரமாய் விலக்கு.
25 Ngetot suwohs nu meeto ke inse pulaik. Nimet ngetnget in tonong.
உன் கண்கள் நேராய் பார்க்கட்டும்; உனக்கு முன்பாக இருப்பதில் உன் பார்வையை செலுத்து.
26 Akola akwoye ma kom ac oru an, na ma nukewa kom oru ac ku in orekla wo.
உன் பாதங்களுக்கு ஒழுங்கான பாதைகளை அமைத்துக்கொள்; அப்பொழுது உன் வழிகளெல்லாம் உறுதியாயிருக்கும்.
27 Kaingkin ma koluk ac fahsr suwohs nu meeto. Nimet kuhfla liki inkanek pwaye.
நீ இடது பக்கமோ, வலதுபக்கமோ விலகாதே; உன் கால்களைத் தீமையிலிருந்து விலக்கிக்கொள்.

< Soakas 4 >