< Єремія 29 >

1 А оце слова листа, якого пророк Єремія послав з Єрусалиму до за́лишку старши́х, і до священиків, і до пророків, і до всього народу, що його вигнав Навуходоносор з Єрусалиму до Вавилону, в неволю, —
நேபுகாத்நேச்சாரினால், எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்திச் செல்லப்பட்டவர்களுக்கு எரேமியா ஒரு கடிதம் எழுதினான்: அதை அவன் எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்களில் தப்பியிருந்த முதியோர், ஆசாரியர்கள், இறைவாக்கு உரைப்போர் ஆகியோருக்கும் மற்றும் எல்லா மக்களுக்கும் அனுப்பினான்.
2 по ви́ході царя Єхонії й матері царя та е́внухів, князів Юди та Єрусалиму, і майстрі́в та слю́сарів Єрусалиму, —
இக்கடிதம் எகொனியா அரசனும், தாய் அரசியும், அரச அதிகாரிகளும், யூதாவிலும் எருசலேமிலுமிருந்த தலைவர்களும், கைவினைஞரும், தொழில் வல்லுநர்களும், எருசலேமிலிருந்து நாடுகடத்தப்பட்டுப் போனபின்பு எழுதப்பட்டது.
3 через Ел'асу, Шафанового сина, та Ґемарію, сина Хілкійїного, яких послав Седекія, цар Юди, до Навуходоно́сора, царя вавилонського, до Вавилону, говорячи:
எரேமியா அக்கடிதத்தை சாப்பானின் மகன் எலெயாசாரிடமும், இல்க்கியாவின் மகன் கெமரியாவிடமும் ஒப்படைத்தான். அவர்களை யூதா அரசன் சிதேக்கியா, பாபிலோனிலுள்ள அரசன் நேபுகாத்நேச்சாரிடம் அனுப்பினான். அந்தக் கடிதத்தில்:
4 „Так говорить Господь Савао́т, Бог Ізраїлів, до всього вигна́ння в неволю, що Я вигнав з Єрусалиму до Вавилону:
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா, தான் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தி அனுப்பிய யாவருக்கும் சொல்வதாவது:
5 Будуйте доми, — і ося́дьте, і засадіть садки́, — і споживайте їхній плід!
“நீங்கள் வீடுகளைக் கட்டி, அவைகளில் வாழுங்கள். தோட்டங்களை நாட்டி அவைகளின் கனியைச் சாப்பிடுங்கள்.
6 Поберіть жіно́к, — і зродіть синів та дочо́к, і візьміть для ваших синів жіно́к, а свої до́чки віддайте людям, і нехай вони поро́дять синів та дочо́к, і помно́жтеся там, і не малійте!
நீங்கள் திருமணம் செய்து மகன்களையும், மகள்களையும் பெற்றெடுங்கள். உங்கள் மகன்களுக்கு மனைவிகளைத் தேடுங்கள். உங்கள் மகள்களைத் திருமணம் செய்து கொடுங்கள். அவர்களும் மகன்களையும், மகள்களையும் பெறட்டும். எண்ணிக்கையில் பெருகுங்கள்; குறைந்து போகாதிருங்கள்.
7 І дбайте про спо́кій міста, куди Я вас вигнав, і моліться за нього до Господа, бо в споко́ї його буде і ваш спо́кій.
நான் உங்களை நாடுகடத்தி அனுப்பிய பட்டணத்தின் சமாதானத்தையும், செழிப்பையும் தேடுங்கள். அதற்காக யெகோவாவிடம் மன்றாடுங்கள். ஏனெனில் பட்டணம் செழித்தால், நீங்களும் செழிப்பீர்கள்.”
8 Бо так промовляє Господь Савао́т, Бог Ізраїлів: Нехай не зво́дять вас ваші пророки, що серед вас, та ваші чарівники́, і не прислу́хуйтеся до ваших снів, що вам сня́ться.
ஆம், இஸ்ரயேலின் சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “உங்கள் மத்தியிலுள்ள இறைவாக்கினரும், குறிசொல்பவர்களும், உங்களை ஏமாற்ற விடவேண்டாம். கனவுகளைக் காணச்செய்கிற அவர்களுக்கு நீங்கள் செவிகொடாமலும் இருங்கள்.
9 Бо лжу вони вам пророкують Ім'я́м Моїм, — Я їх не посилав, говорить Господь.
அவர்கள் என் பெயரில் உங்களுக்குப் பொய்களையே இறைவாக்காகக் கூறுகிறார்கள். நான் அவர்களை அனுப்பவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
10 Бо так промовляє Господь: По спо́вненні семидесяти́ літ Вавилону Я до вас завіта́ю, і справджу Своє добре слово про вас, щоб вернути вас до цього місця.
யெகோவா சொல்வதாவது: “பாபிலோனுக்கு எழுபது வருடங்கள் நிறைவேறிய பின்பு, நான் உங்களிடம் வந்து மீண்டும் உங்களை இந்த இடத்திற்குக் கொண்டுவருவேன் எனக்கூறிய, எனது நல்ல வார்த்தையை நிறைவேற்றுவேன்.
11 Бо Я знаю ті думки́, які ду́маю про вас, — говорить Господь, — думки́ споко́ю, а не на зло, щоб дати вам буду́чність та надію.
உங்களுக்காக நான் வைத்திருக்கும் என் திட்டங்களை நானே அறிவேன்.” அவைகள், “உங்களுக்குத் தீமை விளைவிக்கும் திட்டங்களல்ல, அவை உங்களுக்கு ஒரு செழிப்பான வாழ்வையும், நம்பிக்கையையும், நல்ல எதிர்காலத்தையும் கொடுக்கும் திட்டங்களே என்று யெகோவா அறிவிக்கிறார்.
12 І ви кли́катимете до Мене, і пі́дете, і будете молитися Мені, а Я буду прислухо́вуватися до вас.
அப்பொழுது நீங்கள் என்னை நோக்கிக் கூப்பிட்டு, என்னிடம் வந்து மன்றாடுவீர்கள். நான் உங்களுக்குச் செவிகொடுப்பேன்.
13 І будете шукати Мене, і зна́йдете, коли шука́тимете Мене всім своїм серцем.
நீங்கள் உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடும்பொழுது, நீங்கள் என்னைத் தேடிக் கண்டடைவீர்கள்.
14 І Я дамся вам знайти Себе, — говорить Господь, — і верну́ вас, і зберу́ вас зо всіх наро́дів та зо всіх місць, куди Я вигнав був вас, — говорить Господь, — верну́ вас до того місця, звідки вас Я був вигнав.
நீங்கள் என்னைக் கண்டுகொள்ளும்படி நான் செய்வேன்” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் உங்களைச் சிறையிருப்பிலிருந்து மீண்டும் கொண்டுவருவேன். நான் உங்களை நாடுகடத்திய எல்லா நாடுகளிலிருந்தும், எல்லா இடங்களிலிருந்தும் உங்களை ஒன்றுசேர்ப்பேன்; எங்கிருந்து நான் உங்களை நாடுகடத்தி அனுப்பினேனோ அந்த இடத்திற்கு உங்களைத் திரும்பவும் கொண்டுவருவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
15 Якщо ви кажете: Господь поста́вив нам пророків і в Вавилоні,
“யெகோவா எங்களுக்குப் பாபிலோனிலும் இறைவாக்கு உரைப்போரை எழுப்பியிருக்கிறார்” என்று நீங்கள் சொல்லலாம்.
16 то так говорить Господь до царя, що сидить на Давидовому троні, та до всьо́го наро́ду, що сидить у цьому місті, до ваших братів, що не вийшли з вами на вигна́ння:
ஆனால் யெகோவா கூறுவதாவது: தாவீதின் அரியணையிலிருக்கிற அரசனைக் குறித்தும், உங்களுடன் நாடுகடத்தப்படாமல் இந்த பட்டணத்திலேயே தங்கியிருக்கும் உங்கள் நாட்டினரான எல்லா மக்களைக் குறித்தும்
17 Так говорить Господь Саваот: Ось Я пошлю на вас меча, голод та морови́цю, і дам їх, як обри́дливі фіґи, яких не їдять через їхню непридатність.
சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “ஆம், நான் வாளையும், பஞ்சத்தையும், கொள்ளைநோயையும் அவர்களுக்கு விரோதமாக அனுப்புவேன்; அத்துடன் சாப்பிட முடியாத அளவுக்கு அழுகிப்போன கெட்ட அத்திப்பழங்களைப் போலவே அவர்களை ஆக்குவேன்.
18 І буду гнатися за ними мече́м, голодом та морови́цею, і дам їх на по́страх для всіх зе́мних царств, на прокля́ття, і на остовпі́ння, і на посміхо́вище, і на га́ньбу серед усіх наро́дів, куди Я їх був повиганя́в,
நான் அவர்களைப் பிடிப்பதற்கு வாளுடனும், பஞ்சத்துடனும், கொள்ளைநோயுடனும் பின்தொடர்வேன். அவர்களை பூமியின் எல்லா அரசுகளுக்கும் அருவருப்பாகும்படி செய்வேன். மேலும் நான் அவர்களைத் துரத்துகிற எல்லா நாடுகளின் மத்தியிலும் அவர்களை சாபத்திற்கும், பயங்கரத்திற்கும், பழிக்கும், நிந்தைக்கும் உள்ளாக்குவேன்.
19 за те, що не слу́халися слів Моїх, — говорить Господь, — що посилав Я до них рабів Моїх пророків, рано та пізно, та не слухали ви, говорить Господь.
ஏனெனில் அவர்கள் என் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார். “நான் என் ஊழியக்காரர்களான இறைவாக்கினர்மூலம் திரும்பத்திரும்ப அவர்களுக்கு அனுப்பிய வார்த்தைகளுக்கு அவர்கள் செவிகொடுக்கவில்லை. நாடுகடத்தப்பட்டவர்களாகிய நீங்களுங்கூட, அதற்குச் செவிகொடுக்கவில்லை” என்று யெகோவா அறிவிக்கிறார்.
20 А ви, все вигна́ння, що послав Я з Єрусалиму до Вавилону, послухайте слова Господнього:
ஆகையால் எருசலேமிலிருந்து பாபிலோனுக்கு என்னால் நாடுகடத்தப்பட்ட நீங்கள் எல்லோரும், யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
21 Так говорить Господь Савао́т, Бог Ізраїлів, про Ахава, сина Колаїного, і про Седекію, сина Маасеїного, що неправду пророкують вам Моїм Ім'я́м: Ось Я віддам їх у руку Навуходоносора, царя вавилонського, і він повбиває їх на ваших оча́х!
கோலாயாவின் மகன் ஆகாபைக் குறித்தும், மாசெயாவின் மகன் சிதேக்கியாவைக் குறித்தும் இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “இவர்கள் என் பெயரில் உங்களுக்குப் பொய்களை இறைவாக்காகச் சொல்கிறார்கள். நான் அவர்களைப் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாரிடம் ஒப்புக்கொடுப்பேன். அவன் அவர்களை உங்கள் கண்களுக்கு முன்பாகக் கொன்றுபோடுவான்.
22 І ві́зьметься від них прокля́ття для всього Юдиного вигна́ння, що в Вавилоні, говорячи: Нехай учи́нить тебе Господь, як Седекію та як Ахава, яких вавилонський цар пік на огні,
இந்தப் பயங்கர செயலின் நிமித்தம் யூதாவிலிருந்து நாடுகடத்தப்பட்டு, பாபிலோனில் வசிப்போர், ‘பாபிலோன் அரசன் நெருப்பிலே சுட்டெரித்த சிதேக்கியாவைப்போலவும், ஆகாபைப்போலவும் யெகோவா உங்களை நடத்தட்டும்’ என்று சாபமான வார்த்தையாகச் சொல்வார்கள்.
23 за те, що вони зробили огиду в Ізраїлі, і пере́люб чинили з жінка́ми своїх ближніх, і говорили ложне слово Ім'я́м Моїм, чого Я не звелів їм, а Я ві́даю це, і Я сві́док цьому, говорить Господь.
ஏனெனில் இந்த மனிதர் இஸ்ரயேலில் மோசமான காரியங்களைச் செய்திருக்கிறார்கள்; தங்கள் அயலவரின் மனைவியருடன் விபசாரம் செய்திருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் செய்யும்படி சொல்லாதவற்றை, என் பெயரினால் பொய்களாகப் பேசியிருக்கிறார்கள். நான் அதை அறிவேன். அதற்கு நானே சாட்சி” என்று யெகோவா அறிவிக்கிறார்.
24 А до Шемаї нехеламітянина скажеш, говорячи:
நீ நெகெலாமியனான செமாயாவுக்குச் சொல்லவேண்டியதாவது:
25 Так говорить Господь Саваот, Бог Ізраїлів, ка́жучи: За те, що ти своїм ім'я́м посилав листи до всього наро́ду, що в Єрусалимі, і до священика Цефанії, Маасеїного сина, і до всіх священиків, говорячи:
“இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: நீ எருசலேமிலுள்ள எல்லா மக்களுக்கும் உன் பெயரில் கடிதங்களை அனுப்பியிருக்கிறாய். ஆசாரியன் மாசெயாவின் மகனுமாகிய செப்பனியாவுக்கும், மற்ற எல்லா ஆசாரியருக்குங்கூட அவைகளை அனுப்பியிருக்கிறாய். நீ செப்பனியாவுக்கு எழுதியிருந்ததாவது:
26 Господь тебе дав за священика замість священика Єгояди, щоб бути нагля́дачем у Господньому домі для кожного чоловіка, що божеві́льний і що вдає пророка, і даси його до в'язни́ці, а на шию кайда́ни надінеш.
‘யெகோவாவின் ஆலயத்தில் பொறுப்பாயிருக்கும்படி, யோய்தாவுக்குப் பதிலாக யெகோவா உன்னை ஆசாரியனாக நியமித்திருக்கிறார்; இறைவாக்கினனைப்போல் நடிக்கும் எந்தவொரு பைத்தியக்காரனையும் நீ கால் விலங்குகளிலும், கழுத்து விலங்குகளிலும் போடவேண்டுமே.
27 А тепер, чому́ ти не скартав Єремію з Анатоту, що вдає з себе пророка?
அப்படியானால் உங்கள் மத்தியில் தன்னை இறைவாக்கினனாய் காட்டிக்கொள்ளும், ஆனதோத் ஊரைச்சேர்ந்த எரேமியாவை ஏன் கண்டிக்காமல் விட்டிருக்கிறாய்?
28 Бо він послав до нас, до Вавилону, говорячи: Довге воно, вигна́ння! Будуйте доми, — і осядьте, і засадіть садки́, — і споживайте їхній плід!“
இந்த எரேமியாவோ பாபிலோனில் இருக்கும் நமக்கு, உங்கள் சிறையிருப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். அதுவரை வீடுகளைக் கட்டிக் குடியிருங்கள். தோட்டங்களை நாட்டி அதன் பலனைச் சாப்பிடுங்கள்’ என்று சொல்லியிருக்கிறானே” என்பதே அந்தக் கடிதம்.
29 І священик Цефанія прочитав цього листа вголос пророкові Єремії.
ஆசாரியனாகிய செப்பனியா இறைவாக்கினன் எரேமியாவுக்கு அந்தக் கடிதத்தை வாசித்துக் காட்டினான்.
30 І було слово Господнє до Єремії, говорячи:
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எரேமியாவுக்கு வந்தது:
31 „Пошли всьому вигна́нню, говорячи: Так говорить Господь про нехеламітянина Шемаю: За те, що вам пророкував Шемая, хоч Я не посилав його, і зробив, щоб ви наді́ялись на неправду,
“நாடுகடத்தப்பட்ட யாவருக்கும் நீ இந்தச் செய்தியை அனுப்பு. நெகெலாமியனான செமாயாவைப் பற்றி யெகோவா கூறுவது இதுவே: நான் செமாயாவை அனுப்பாதபோதும் அவன் இறைவாக்கு கூறி நீங்கள் பொய்யை நம்பும்படி செய்திருக்கிறான்.
32 тому́ так промовляє Господь: Ось Я покараю нехеламітянина Шемаю та насіння його: не буде в нього ніко́го, хто сидів би серед цього наро́ду, і не побачить він добра, яке Я зроблю́ для наро́ду Свого́, говорить Господь, бо про відсту́пство від Господа говорив він!“
ஆகவே, யெகோவா கூறுவது இதுவே: நான் நெகெலாமியனான செமாயாவையும் அவனுடைய சந்ததிகளையும் நிச்சயம் தண்டிப்பேன். அவன் எனக்கு விரோதமாகக் கலகத்தைப் பிரசிங்கித்தபடியால், இந்த மக்கள் மத்தியில் அவனுக்கென ஒருவரும் மீந்திருக்கமாட்டார்கள். நான் என் மக்களுக்குச் செய்யப்போகும் நன்மைகளையும் அவன் காணமாட்டான்” என்று யெகோவா அறிவிக்கிறார்.

< Єремія 29 >