< Єремія 11 >

1 Слово, що було до Єремії від Господа, кажучи:
யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே.
2 „Послухайте слів заповіту оцьо́го, і будете їх говорити юдеям і ме́шканцям Єрусалиму,
“இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கேட்டு அவைகளை யூதா நாட்டு மக்களுக்கும், எருசலேமில் குடியிருப்பவர்களுக்கும் சொல்.
3 і скажеш ти їм: Так говорить Господь, Бог Ізраїлів: Про́клята та люди́на, що не слухає слів заповіту цього́,
இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே என்று அவர்களுக்குச் சொல். ‘இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்குக் கீழ்படியாத மனிதன் சபிக்கப்பட்டவன்.
4 що його наказав був Я вашим батька́м того дня, коли їх виво́див із кра́ю єгипетського, із залізного го́рна, говорячи: Слухайтеся Мого голосу, і робіть усе те, що Я накажу́ вам, — і бу́дете ви народом Моїм, а Я бу́ду вам Богом,
நான் உங்கள் முற்பிதாக்களை இரும்புச் சூளையாகிய எகிப்திலிருந்து கொண்டுவந்தபோது, இந்த நிபந்தனைகளையே அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன். எனக்குக் கீழ்ப்படிந்து, நான் உங்களுக்குக் கட்டளையிடுகிற எல்லாவற்றையும் செய்யுங்கள். அப்பொழுது நீங்கள் என் மக்களாயிருப்பீர்கள்; நான் உங்கள் இறைவனாயிருப்பேன்.
5 щоб Я ви́повнив при́сягу ту, якою Я вашим батька́м присяга́в дати їм Край, що тече молоком, як сьогодні! А я відповів та сказав: Амі́нь, Господи!
அப்பொழுது பாலும் தேனும் நிரம்பி வழிகிற நாட்டை உங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுப்பதாக நான் ஆணையிட்ட உறுதிமொழியை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருந்தேன்.’ அந்நாட்டையே இன்று நீங்கள் உரிமையாக்கியிருக்கிறீர்கள்” என்றார். அதற்கு நான், “ஆமென் யெகோவாவே” என்றேன்.
6 І промовив до мене Госпо́дь: Виголо́шуй оці всі слова́ по юдейських міста́х та на вулицях Єрусалиму, говорячи: Слухайтесь слів заповіту цього́, і вико́нуйте їх!
அப்பொழுது யெகோவா என்னிடம், “நான் கூறும் இந்த வார்த்தைகள் எல்லாவற்றையும் யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் வீதிகளிலும் போய் பிரசித்தப்படுத்து. அதாவது இந்த உடன்படிக்கையின் நிபந்தனைகளைக் கவனித்துக் கேட்டு அவைகளைப் பின்பற்றுங்கள்.
7 Бо направду засвідчив Я вашим батька́м того дня, як виводив їх з кра́ю єгипетського, і до сьогодні Я пильно засві́дчую, кажучи: Слу́хайтеся Мого голосу!
நான் எகிப்திலிருந்து உங்கள் முற்பிதாக்களைக் கொண்டுவந்த நாளிலிருந்து இன்றுவரை எனக்குக் கீழ்ப்படியுங்கள் என்று திரும்பத்திரும்ப எச்சரித்திருந்தேன்.
8 Та не слухали й не прихиляли вони свого вуха, і кожен ходив за упе́ртістю злі́сного серця свого. І Я спровадив на них усі слова заповіту цього, що Я наказав був робити, вони ж не робили.
ஆனால் அவர்கள் அதற்குச் செவிகொடுக்கவுமில்லை; அதைக் கவனிக்கவுமில்லை. அதற்குப் பதிலாக தங்கள் பொல்லாத இருதயங்களின் பிடிவாதத்தின்படி நடந்தார்கள். அவர்கள் அதைக் கைக்கொள்ளாததினால், நான் அவர்களுக்குக் கைக்கொள்ளும்படி கட்டளையிட்டிருந்த இந்த உடன்படிக்கையின் சாபங்களை அவர்கள்மேல் வரப்பண்ணினேன்.”
9 І промовив до мене Господь: Зна́йдений бунт між юдеями та між мешка́нцями Єрусалиму!
மேலும் யெகோவா என்னிடம், “யூதாவின் மக்கள் மத்தியிலும், எருசலேம் குடிகளின் மத்தியிலும் ஒரு சதித்திட்டம் உண்டாயிருக்கிறது.
10 Повернулись вони до гріхів своїх давніх батькі́в, що слухатися Моїх слів не хотіли, і пішли за бога́ми чужими, щоб їм служити. Дім Ізраїлів і дім Юдин зламали Мого заповіта, якого Я склав з їхніми батька́ми.
அவர்களோ, என் வார்த்தைகளைக் கேட்க மறுத்த தங்கள் முற்பிதாக்களின் பாவங்களுக்கே திரும்பியிருக்கிறார்கள். வேறு தெய்வங்களுக்குப் பணிசெய்ய அவைகளைப் பின்பற்றினார்கள். இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் நான் அவர்களுடைய முற்பிதாக்களுடன் செய்த உடன்படிக்கையை மீறிவிட்டார்கள்.
11 Тому так промовляє Госпо́дь: Ось Я лихо на них наведу́, що вийти із нього не змо́жуть, і кли́кати бу́дуть до Мене, але не почую Я їх!
ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: ‘அவர்கள் தப்பித்துக்கொள்ள முடியாத பேராபத்தை அவர்கள்மேல் கொண்டுவருவேன். அவர்கள் என்னை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், அவர்களுக்கு நான் செவிகொடுக்கமாட்டேன்.
12 І пі́дуть юдейські міста́ та єрусалимські мешканці, і бу́дуть кричати до богів, що їм ка́дять вони, але ті помогти́ — не помо́жуть їм за ча́су їхнього лиха!
அப்பொழுது யூதாவின் பட்டணங்களும், எருசலேமின் மக்களும் தாங்கள் தூபங்காட்டும் தெய்வங்களிடத்திற்குப் போய், அவைகளை நோக்கி அழுது கூப்பிடுவார்கள். ஆனால் பேராபத்து அவர்கள்மேல் வரும்போது, அந்த தெய்வங்கள் அவர்களுக்கு உதவி செய்யவேமாட்டாது.
13 Бо богів твоїх — за числом твоїх міст, Юдо, і за числом вулиць Єрусалиму наста́влено же́ртівників для Моло́ха, же́ртівників, щоб кади́ти Ваалові.
யூதாவே! உன் பட்டணங்களின் எண்ணிக்கையைப் போலவே உன் தெய்வங்களின் எண்ணிக்கையும் அதிகம். நீங்கள் அந்த வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்குத் தூபங்காட்டுவதற்கு அமைத்த மேடைகள், எருசலேமின் வீதிகளின் எண்ணிக்கையைப்போல் இருக்கின்றன.’
14 А ти не молися за цього наро́да, і блага́ння й молитви за них не здійма́й, бо Я не почую за ча́су того́, коли кли́кати будуть до Мене з-за лиха свого́!
“ஆகவே எரேமியாவே, நீ இந்த மக்களுக்காக மன்றாட வேண்டாம். அவர்களுக்காக நீ வேண்டுதலோ, விண்ணப்பமோ செய்யவேண்டாம். ஏனெனில், அவர்கள் தங்கள் துன்ப வேளையில் என்னை நோக்கிக் கூப்பிடும்போது நான் அவர்களுக்குச் செவிகொடுக்கமாட்டேன்.
15 По́що Моєму коханому в домі Моєму чинити злі за́міри? Чи то́всті куски́ і м'ясо посвя́тне відве́рнуть від тебе нещастя твоє? Тоді б ти радів!
“என் அன்புக்குரிய மக்கள் என் ஆலயத்திற்குள் ஏன் வந்திருக்கிறார்கள்? அவர்கள், அநேகருடன் தங்கள் தீய திட்டங்களைத் தீட்டுகிறார்களே! பலியிடப்பட்ட மாமிசம் தண்டனையிலிருந்து உங்களைத் தப்புவிக்குமோ? நீங்கள் உங்களது கொடுமையில் ஈடுபடும்போது மகிழ்ச்சியடைகிறீர்களோ!”
16 „Оли́вка зелена, гарна пло́дом хорошим“, — так кликнув Господь твоє йме́ння. Але з шумом великого вітру огонь запали́вся круг неї, і галу́зки її полама́ються!
அழகும், செழிப்பும், பழம் நிறைந்ததுமான ஒலிவமரம் என்று யெகோவா உங்களை அழைத்தார். ஆனால் இப்போது அவர் கடும்புயலின் இரைச்சலுடன் அதை நெருப்பினால் கொளுத்துவார். அதன் கொப்புகள் முறிக்கப்படும்.
17 А Господь Саваот, що тебе посадив, говорив був на тебе лихе за зло дому Ізраїля та дому Юди, що робили собі, щоб гніви́ти Мене, щоб кади́ти Ваа́лові.
உங்களை நாட்டிய சேனைகளின் யெகோவா பேராபத்தை உங்களுக்கு நியமித்திருக்கிறார். ஏனெனில், இஸ்ரயேல் குடும்பத்தாரும், யூதா குடும்பத்தாரும் தீமை செய்து, பாகாலுக்குத் தூபங்காட்டியதின் மூலம் எனக்குக் கோபமூட்டினார்கள்.
18 А Господь дав пізна́ти мені — й я пізнав, і тоді Ти вчинив, що побачив я їхні діла́.
யெகோவா எனக்கு வெளிப்படுத்தினதால், என் பகைவர்கள் எனக்கெதிராக சதி செய்ததை நான் அறிந்துகொண்டேன். அந்த வேளையில் அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை அவர் எனக்குக் காண்பித்தார்.
19 А я був, мов лагі́дна вівця́, що прова́дять її на зако́лення, і не знав, що на мене вони вимишля́ли заті́ї: „Пони́щмо це дерево з пло́дом його, і з кра́ю живих його ви́тнім, і йме́ння його не згадається більше!“
நானோ வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் ஒரு சாதுவான செம்மறியாட்டுக் குட்டியைப்போல் இருந்தேன். அவர்கள் எனக்கெதிராகச் சதித்திட்டம் தீட்டியிருந்ததை நான் அறியாதிருந்தேன். அவர்கள், “இந்த மரத்தையும் அதன் பழத்தையும் அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை வெட்டிவிடுவோம். அவனுடைய பெயர் இனி ஒருபோதும் நினைக்கப்படாதே போகட்டும்” என்று சொல்லியிருந்ததையும் நான் அறிந்திருக்கவில்லை.
20 Але, Господи Саваоте, Ти Суддя сраведливий, що досліджуєш ни́рки та серце, — хай над ними побачу я по́мсту Твою, бо справу свою я дові́рив Тобі!
சேனைகளின் யெகோவாவே, இருதயத்தையும், மனதையும் நீதியாய் நியாயம் தீர்த்து சோதித்தறிகிறவரே! அவர்கள்மேல் உமது பழிவாங்குதல் வருவதை நான் காணவேண்டும். ஏனெனில் என் வழக்கை நானே உம்மிடம் ஒப்புவித்துவிட்டேன்.
21 Тому так промовляє Господь на людей Анато́ту, що пошу́кують душу твою та говорять: „Не пророкуй Ім'я́м Господа, щоб не померти тобі від рук наших!“
ஆகவே உன் உயிரை வாங்கத்தேடும் ஆனதோத் மனிதரைப் பற்றி யெகோவா சொல்வது இதுவே: அவர்களோ, “யெகோவாவினுடைய பெயரில் இறைவாக்கு உரைக்காதே! அப்படிச் செய்தால் எங்கள் கைகளால் நீ சாவாய்” என்று சொல்கிறார்கள்.
22 Тому так промовляє Господь Савао́т: Ось Я навіщу́ їх: від меча юнаки́ повмирають, а сини їхні та їхні до́чки від голоду вмруть!
ஆகவே சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அவர்களை நான் தண்டிப்பேன். அவர்களுடைய வாலிபர்கள் வாளால் வெட்டுண்டு சாவார்கள். அவர்களுடைய மகன்களும், மகள்களும் பஞ்சத்தால் சாவார்கள்.
23 І оста́нку не буде по них, бо спрова́джу Я зло на людей Анато́ту у році наві́щення їх!
அவர்களுக்கு ஒருவரும் மீந்திருக்கமாட்டார்கள். ஏனெனில், நான் தண்டிக்கும் வருடத்தில், ஆனதோத் மனிதர்மேல் பேராபத்தைக் கொண்டுவருவேன்.”

< Єремія 11 >