< Ісая 12 >

1 І ти скажеш дня того: Хвалю́ Тебе, Господи, бо Ти гні́вавсь на мене, та гнів Твій вщуха́є, й мене Ти пора́дуєш,
அந்த நாளிலே நீ: “யெகோவாவே உம்மைத் துதிப்பேன். என்னில் கோபமாயிருந்தபோதிலும், உமது கோபம் தணிந்து என்னைத் தேற்றியிருக்கிறீர்.
2 оце, — Бог спасі́ння моє! Безпечний я, і не боюсь, бо Госпо́дь, — Господь сила моя та мій спів, і спасі́нням для мене Він став!
நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு; நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன். யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்; அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய்.
3 І ви в радості бу́дете че́рпати воду з спасе́нних джере́л!
நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து மகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய்.
4 І скажете ви того дня: „Дя́куйте Господу, кличте Іме́ння Його́, сповісті́ть між наро́дів про вчинки Його, пригадайте, що Йме́ння Його превеличне!
அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது: “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்; அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள், அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள்.
5 Співайте для Господа, Він бо вели́чне вчинив, і хай це́ буде зна́не по ці́лій землі!
யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்; உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும்.
6 Радій та співай, ти мешка́нко Сіону, бо серед тебе Великий, — Святий Ізраїлів!
சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர் மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.”

< Ісая 12 >