< Екклезіяст 9 >

1 Ото ж бо все це я до серця свого взяв, і бачило серце моє все оце, що праведні й мудрі та їхні учи́нки — у Божій руці, так само любов чи нена́висть: Люди́на не знає нічого, що є перед нею!
ஆகவே நான் இவை எல்லாவற்றையும் யோசித்துப் பார்த்தேன். அப்போது நீதிமான்களும், ஞானமுள்ளவர்களும், அவர்களின் செயல்களும் இறைவனின் கரங்களுக்குள்ளேயே இருக்கின்றன என்ற முடிவுக்கு வந்தேன். ஆனால் ஒரு மனிதனும், இந்த வாழ்க்கையில் இறைவனின் அன்போ வெறுப்போ தனக்காக எது காத்திருக்கிறது என்பதை அறியாதிருக்கிறான்.
2 Однакове всім випадає: праведному і безбожному, доброму й чистому та нечистому, і тому́, хто жертву прино́сить, і тому, хто жертви не приносить, як доброму, так і грішникові, тому, хто кляне́ться, як і тому, хто клятви боїться!
நீதியானவனும் கொடுமையானவனும், நல்லவனும் கெட்டவனும், சுத்தமுள்ளவனும் சுத்தமில்லாதவனும், பலி செலுத்துகிறவனும் பலி செலுத்தாதவனும். ஆகிய எல்லாருக்கும் ஒரு பொதுவான நியதியே உண்டு. நல்லவனுக்குப் போலவே பாவிக்கும் நிகழ்கிறது. சத்தியம் செய்கிறவனுக்குப் போலவே சத்தியங்களைச் செய்யப் பயப்படுகிறவனுக்கும் நிகழ்கிறது.
3 Оце зле у всім, що під сонцем тим ді́ється, — що одна́кове всім випада́є, і серце лю́дських синів повне зла, і за життя їхнього безу́мство в їхньому серці, а по то́му до мертвих відходять.
சூரியனுக்குக் கீழே எல்லாவற்றிலும் உள்ள தீமை இதுவே: எல்லோருக்கும் ஒரே நியதியே ஏற்படுகிறது. மனிதனுடைய இருதயங்கள் தீமையினால் நிறைந்திருக்கின்றன, அவர்கள் வாழும்போது அவர்களின் இருதயத்தில் பைத்தியக்காரத்தனம் இருக்கிறது; அதின்பின் இறந்துவிடுகிறார்கள்.
4 Хто знахо́диться поміж живих, той має надію, бо краще собаці живому, ніж ле́вові ме́ртвому!
உயிருள்ளவரை ஒருவனுக்கு நம்பிக்கை உண்டு; உயிரோடிருக்கும் நாய், செத்த சிங்கத்தைவிடச் சிறந்தது!
5 Бо знають живі, що помруть, а померлі нічо́го не знають, і заплати немає вже їм, — бо забута і пам'ять про них,
உயிரோடிருப்பவர்கள் தாங்கள் சாவோம் என அறிந்திருக்கிறார்கள், இறந்தவர்களோ ஒன்றும் அறியார்கள்; அவர்களுக்கு இனி எந்த பலனுமில்லை. அவர்களைப்பற்றிய நினைவும்கூட மறக்கப்பட்டிருக்கும்.
6 і їхнє коха́ння, і їхня нена́висть, та за́здрощі їхні загинули вже, і нема вже їм ча́стки навіки ні в чо́му, що під сонцем тим ді́ється!
அவர்களுடைய அன்பு, வெறுப்பு, பொறாமை ஆகியவையும்கூட எப்பொழுதோ மறைந்துவிட்டன; இனி ஒருபோதும் சூரியனுக்குக் கீழே நிகழும் எதிலும் அவர்கள் பங்குகொள்வதில்லை.
7 Тож іди, їж із радістю хліб свій, та з серцем веселим вино своє пий, коли Бог уподо́бав Собі твої вчинки!
நீ போய் உன் உணவை மகிழ்ச்சியுடன் சாப்பிடு, மகிழ்ச்சியான இருதயத்துடன் திராட்சை இரசத்தைக் குடி; ஏனெனில் இதை இறைவன் ஏற்கெனவே அங்கீகரித்திருக்கிறார்.
8 Нехай кожного ча́су одежа твоя буде біла, і нехай на твоїй голові не бракує оли́ви!
எப்பொழுதும் நல்ல உடைகளை உடுத்தியவனாகவும், உன் தலையில் நறுமணத்தைலம் பூசியவனாகவும் இரு.
9 Заживай життя з жінкою, яку ти кохаєш, по всі́ дні марно́ти твоєї, що Бог дав для тебе під сонцем на всі́ дні марно́ти твоєї, — бо оце твоя доля в житті та в твоєму труді́, що під сонцем ним тру́дишся ти!
சூரியனுக்குக் கீழே, இறைவன் உனக்குக் கொடுத்திருக்கும் இந்த அர்த்தமற்ற வாழ்வில், உன் அர்த்தமற்ற நாட்களில், நீ அன்பாய் இருக்கும் உன் மனைவியுடன் வாழ்க்கையை மகிழ்ச்சியாய் அனுபவி. உன் வாழ்க்கையிலும், உன் கடும் உழைப்பிலும் சூரியனுக்குக் கீழே உன் பங்கு இதுவே.
10 Все, що всилі чинити рука твоя, теє роби, бо немає в шео́лі, куди ти йде́ш, ні роботи, ні ро́здуму, ані знання́, ані мудрости! (Sheol h7585)
செய்யும்படி உன் கைக்குக் கிடைக்கும் எதையும் உன் முழுப்பெலத்துடனும் செய்து முடி; ஏனெனில் நீ போகப்போகும் பாதாளத்தில் வேலையோ, திட்டமிடுதலோ, அறிவோ, ஞானமோ எதுவுமில்லை. (Sheol h7585)
11 Зно́ву я бачив під сонцем, що біг не у ско́рих, і бій не в хоро́брих, а хліб не в премудрих, і не в розумних багатство, ні ласка — у знавців, — а від ча́су й наго́ди залежні вони!
சூரியனுக்குக் கீழே இன்னும் ஒன்றையும் நான் கண்டேன்: ஓட்டப் பந்தயத்தில் வேகமாய் ஓடுகிறவரே வெற்றி பெறுவார் என்றில்லை, பலசாலியே யுத்தத்தில் வெற்றி பெறுவார் என்றில்லை; ஞானமுள்ளவர்களுக்கு உணவு கிடைக்கும் என்பதில்லை, புத்தியுள்ளவர்களுக்குச் செல்வம் கிடைக்கும் என்பதில்லை, கல்விமான்களுக்குத் தயவு கிடைக்கும் என்பதில்லை; ஆனால் சரியான நேரமும் வாய்ப்பும் இவை எல்லாவற்றையும் தீர்மானிக்கின்றன.
12 Бо ча́су свого люди́на не знає, мов риби, поло́влені в па́губну сітку, і мов пта́хи, захо́плені в сі́льце, — так хапа́ються лю́дські сини за час лиха, коли воно на́гло спадає, на них!
அத்துடன் ஒரு மனிதனும் துக்கவேளை எப்பொழுது வருமென்று அறியாதிருக்கிறான்: மீன்கள் கொடிய வலையில் பிடிபடுகின்றன, பறவைகள் கண்ணியில் அகப்படுகின்றன, அதுபோலவே மனிதர்களும் தீமையான காலங்களில் அகப்படுகின்றார்கள்; அவை அவர்கள்மேல் எதிர்பாராதவிதமாய் வருகின்றன.
13 Також оцю мудрість я бачив під сонцем, і велика для мене здавалась вона:
சூரியனுக்குக் கீழே என் உள்ளத்தை வெகுவாய்த் தொட்ட ஞானத்தின் உதாரணத்தையும் நான் கண்டேன்.
14 Було мале місто, і було в ньому мало людей. І раз прийшов цар великий до нього, й його оточи́в, і побудува́в проти нього велику обло́гу.
ஒருகாலத்தில் ஒரு சிறிய நகரம் இருந்தது. அங்கு சிறுதொகை மக்களே இருந்தனர். ஒரு வலிமையான அரசன் அதற்கு எதிராக வந்து அதைச் சுற்றிவளைத்து அதற்கு எதிராக அரண்களைக் கட்டினான்.
15 Але в ньому знайшлася люди́на убога, та мудра, і вона врятувала те місто своєю премудрістю, — та пізніше ніхто не згадав про цю вбогу люди́ну!
அந்த நகரத்தில் ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் இருந்தான், அவன் தன் ஞானத்தினால் அந்த நகரத்தை விடுவித்தான். ஆனால் யாருமே அந்த ஏழை மனிதனை நினைவில்கொள்ளவில்லை.
16 І я говорив: Краща мудрість за силу; одна́ко пого́рджується мудрість бідного, і не слухаються його слів!
ஆகவே வலிமையைவிட ஞானமே சிறந்ததாய் இருந்தாலும், ஏழையின் ஞானமோ உதாசீனம் செய்யப்படும். அவனுடைய வார்த்தைகளும் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை என்றும் நான் அறிந்தேன்.
17 Слова мудрих, почуті в споко́ї, кращі від крику володаря поміж безглу́здими.
மூடர்களை ஆளுகிறவனின் உரத்த சத்தத்தைப் பார்க்கிலும், ஞானமுள்ளவர்களின் அமைதியான வார்த்தைகளை அதிகமாய் கவனத்தில் கொள்ளவேண்டும்.
18 Мудрість краща від зброї військо́вої, але один грішник погубить багато добра́.
போராயுதங்களைப் பார்க்கிலும் ஞானமே சிறந்தது. ஆனாலும் ஒரு பாவி அநேக நன்மைகளை அழித்துப் போடுவான்.

< Екклезіяст 9 >