< வெளிப்படுத்தின விசேஷம் 19 >

1 இவைகளுக்குப் பின்பு, பரலோகத்தில் திரளான மக்கள்கூட்டம் ஆரவாரத்தோடு சத்தமிடுகிறதைக் கேட்டேன். அவர்கள்: “அல்லேலூயா, இரட்சிப்பும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
ଇଦାଂ ପାଚେ ଆନ୍‌ ଇନାକା ୱେଚାଙ୍ଗ୍‌, ହେଦାଂ ସାର୍ଗେତ ବେସି ମାନାୟାର୍‌ ସବଦ୍‌ ଲାକେ ର ବେସି ସବଦ୍‌ ଇଦାଂ ଇନାକା ୱେଚାଙ୍ଗ୍‌, “ଇସ୍ୱର୍‌ତି ତର୍‌ଦ କେରାଟ୍‌ । ମା ଇସ୍ୱର୍‌ ମୁକ୍‌ଡ଼ାୟ୍‌କିନାକାନ୍‌, ଜାଜ୍‌ମାଲ୍‌, ଆରି ସାକ୍ତିନି ଆଦିକାରି ।
2 தன் வேசித்தனத்தினால் பூமியைக் கெடுத்த மகா வேசிக்கு அவர் நியாயத்தீர்ப்புக்கொடுத்து, தம்முடைய ஊழியக்காரர்களின் இரத்தத்திற்காக அவளிடத்தில் பழிவாங்கினாரே” என்றார்கள்.
ଇନେକିଦେଂକି, ତା ବିଚାର୍‌ ହାତ୍‌ପା ଆରି ନ୍ୟାୟ୍‌; ଇମ୍‌ଣି ବେସି ଦାରି ଜାର୍‌ ଦାରି ହୁକେ ପୁର୍ତିତିଂ ନାହାୟ୍‌ କିଜ଼ି ମାଚାତ୍‌, ହେୱାନ୍‌ ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଡାଣ୍ଡ୍‌ ହିଜ଼ି ଜାର୍‌ ଆଡ଼ିୟାର୍‌ ନେତେର୍‌ ହପ୍‌ଚି ହୁଜାନାକା ତାକେଣ୍ଡାଙ୍ଗ୍‌ ଅତାନ୍ନା ।
3 மறுபடியும் அவர்கள்: “அல்லேலூயா” என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள். அவளுடைய புகை என்றென்றைக்கும் எழும்புகிறது என்றார்கள். (aiōn g165)
ଆନ୍‌ ୱେଚାଙ୍ଗ୍‌, ହେୱାର୍‌ ଆରେ ଗାଜା କାଟ୍‌ତାଂ ଇନାରା, ଇସ୍ୱର୍‌ତି ତର୍‌ଦ କେର୍‌କଣ୍‌ କେରାଟ୍‌ । ହେ ଗାଜା ଗାଡ଼୍‌ତିଂ ନାସ୍‌ କିଜ଼ିମାନି ନାଣି କଦା ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ଜପି ନିଙ୍ଗ୍‌ଜି ମାନାତ୍‌ ।” (aiōn g165)
4 இருபத்துநான்கு மூப்பர்களும், நான்கு ஜீவன்களும் முகங்குப்புறவிழுந்து: ஆமென், அல்லேலூயா,” என்று சொல்லி, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கும் தேவனைத் தொழுதுகொண்டார்கள்.
ଗାଦିତକୁଚ୍‌ଚି ଇସ୍ୱର୍‌ତି ମୁମ୍‌ଦ କଡ଼େ ଚାରି ୨୪ ଜାଣ୍‌ ପ୍ରାଚିନାର୍‌ ଆରି ହେ ଚାରି ପସୁ ଡାଣ୍ଡ୍‌ହାଡ଼୍‌ ଆଜ଼ି ଇସ୍ୱର୍‌ତିଂ ପାର୍ତାନା କିତାର୍‌ । ହେୱାର୍‌ ଇଚାର୍‌, “ଆମେନ୍‌! ଇସ୍ୱର୍‌ତି ପାର୍ତାନା କିୟାଟ୍‌ ।”
5 மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரர்களே, அவருக்குப் பயப்படுகிற சிறியோர்களே பெரியோர்களே, நீங்கள் எல்லோரும் அவரைத் துதியுங்கள்” என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து வந்தது.
ହେ “ଏଚେକାଡ଼୍‌ଦ ଗାଦିତାଂ ର ସବଦ୍‌ ୱେନ୍ୟାତାତ୍‌ । ଏ ଇସ୍ୱର୍ତି ଆଡ଼ିୟାକାଦେର୍‌, ଏ ହେୱାନିଂ ପାଣ୍ଡ୍ରା ଆନାକାଦେର୍‌ ହାରୁ ଆରି ଗାଜା ମାନାୟାର୍‌, ହେୱାନ୍ତି ପାର୍ତାନା କିୟାଟ୍‌ ।”
6 அப்பொழுது திரளான மக்கள் போடும் ஆரவாரம்போலவும், பெரியவெள்ளத்தின் இரைச்சலைப்போலவும், பலத்த இடிமுழக்கம்போலவும், ஒரு சத்தம் உண்டாகி: அல்லேலூயா, சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் ராஜ்யபாரம்பண்ணுகிறார்.
ହେ ସମୁତ ଆନେଙ୍ଗ୍‌ ୱେଚାଙ୍ଗ୍‌, ହାମ୍‌ଦୁର୍‌ ଗାର୍ଜାନାକା ଆରି ବିଞ୍ଜିଇଡ଼୍‌ନାକା ଲାହାଂ ମାନାୟାର୍‌ ସବଦ୍‌ ଲାକେ କେଡ଼ାଜ଼ି ୱାନାତା । ମାନାୟାର୍‌ ଆରେ ପାର୍ତାନା କିଜ଼ି ଇନାରା । “ଇସ୍ୱର୍‌ତି ତର୍‌ଦ କେର୍‌କଣ୍‌ କେରାଟ୍‌, ଇନେକିଦେଂକି ମା ମାପ୍ରୁ ୱିଜ଼ୁତିଂ ସାକ୍ତିକାଟାକାନ୍‌ ଇସ୍ୱର୍‌, ହେୱାନ୍‌ କେବଲ୍‌ ମା ରାଜା ।
7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய திருமணம் வந்தது, அவருடைய மனைவி தன்னை ஆயத்தம்பண்ணினாள்” என்று சொல்லக்கேட்டேன்.
ୱାଡ, ଆସେଙ୍ଗ୍‌ ୱାରି ଆରି ସାର୍‌ଦା କିନାସ୍‌, ଆରି ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଜାଜ୍‌ମାଲ୍‌ ହିନାସ୍‌, ଇନେକିଦେଂକି ମେଣ୍ଡାହିମ୍‌ଣାତି ବିବାନି ସମୁ ଏକାୱାତାତ୍‌, ଆରେ ତା ଗାଡ଼୍‌ ଜାର୍‌ତିଂ ରଞ୍ଚାତ୍‌ନା ।”
8 சுத்தமும் பிரகாசமுமான மெல்லிய ஆடை அணிந்துகொள்ளும்படி அவளுக்கு தரப்பட்டது; அந்த மெல்லிய ஆடை பரிசுத்தவான்களுடைய நீதிகளே.
ତାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଡ଼ିଞ୍ଜିନି ଆରି ସକଟ୍‌ ହେନ୍ଦ୍ରା ଉସ୍‌ପିନି କାଜିଂ ହିତାର୍‌; ହେ କୱାଣ୍‌ ହେନ୍ଦ୍ରା ପୁଇପୁୟା ସାଦୁର୍‌ତି ଆନାତା ହେ କୱାଣ୍‌ ହେନ୍ଦ୍ରା ।
9 பின்னும், அவன் என்னைப் பார்த்து: “ஆட்டுக்குட்டியானவருடைய திருமணவிருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள்” என்று எழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்.
ହେ ଏଚେକାଡ଼୍‌ଦ ଦୁତ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଚାନ୍‌, “ଲେକିକିଜ଼ି ଇଟାଟ୍‌, ଇମ୍‌ଣାକାର୍‌ ମେଣ୍ଡାହିମ୍‌ଣାତି ବିବା ବଜିତ କୁକ୍ୟାତାକାର୍‌, ହେୱାର୍‌ ଦନ୍ୟ ।” ଆରେ ପା ହେୱାନ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଚାନ୍‌, “ଇଦାଂ ଇସ୍ୱର୍ତି ହାତ୍‌ପା ବଚନ୍‌ ।”
10 ௧0 அப்பொழுது அவனை வணங்கும்படி அவனுடைய பாதத்தில் விழுந்தேன். அவன் என்னைப் பார்த்து: இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் இயேசுவைக்குறித்துச் சாட்சியிட்ட உன் சகோதரர்களோடு நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள். இயேசுவைப்பற்றின சாட்சி தீர்க்கதரிசனத்தின் ஆவியாக இருக்கிறது என்றான்.
“ହେବେ ଆନ୍‌ ହେୱାନିଂ ଜୁୱାର୍‌ କିନି କାଜିଂ ତା ପାନା ତାରେନ୍‌ ଡାଣ୍ଡ୍‌ହାଡ଼୍‌ ମାଗ୍‌ତାଙ୍ଗ୍‌ । ହେବେ ହେୱାନ୍‌ ନାଙ୍ଗେଙ୍ଗ୍‌ ଇଞ୍ଚାନ୍‌, ଜାଗ୍ରତ୍‌, ଇଦାଂ କିମାଟ୍‌, ଆନ୍‌ ମିଦାଂ ଆରି ଜିସୁତି ସାକି ଜେ ମି ଟଣ୍ଡାର୍‌, ହେୱାର୍‌ତି ହାଙ୍ଗ୍‌ଦାକାନ୍‌; ଇସ୍ୱର୍‌ତିଂ ଜୁୱାର୍‌ କିୟାଟ୍‌ । ଜିସୁତି ବିସ୍ରେନି ସାକି ତ ସାରି ।”
11 ௧௧ பின்பு, பரலோகம் திறந்திருப்பதைப் பார்த்தேன்; இதோ, ஒரு வெள்ளைக்குதிரை காணப்பட்டது, அதின்மேல் ஏறியிருந்தவர் உண்மையும் சத்தியமும் உள்ளவர் என்று அழைக்கப்பட்டவர்; அவர் நீதியாக நியாயந்தீர்த்து யுத்தம்பண்ணுகிறார்.
ତା ପାଚେ ଆନେଙ୍ଗ୍‌ ସାର୍ଗେ ଜେୟାତାକା ହୁଡ଼୍‌ତାଂ, ଆରେ ହୁଡ଼ାଟ୍‌, ର ଡ଼ିଞ୍ଜିନି ଗଡ଼ା; ତା ଦୁମ୍‍ତାକାନ୍‌ତି ତର୍‌ ପାର୍ତି ଆରି ହାତ୍‌ପା ହେୱାନ୍‌ ନିୟାଁୟ୍‌ ଲାକେ ବିଚାର୍‌ ଆରି ହେୱାନ୍‌ ଦାର୍ମି ଜୁଜ୍‌ କିନାନ୍‌ ।
12 ௧௨ அவருடைய கண்கள் அக்கினிஜூவாலையைப்போலிருந்தன, அவருடைய தலையின்மேல் அநேக கிரீடங்கள் இருந்தன; அவருக்கேயன்றி வேறொருவருக்கும் தெரியாத ஒரு பெயரும் எழுதியிருந்தது.
ତା କାଣ୍‌କୁ ଗୁଦ୍‌ଗିନି ନାଣି ଲାକେ, ତା କାପ୍‌ଡ଼ାତାକେ ବେସି ମୁକୁଟ୍‌ ମାଚାତ୍‌ । ତା ଜପି ର ତର୍‌ ଲେକାଜ଼ି ମାଚାତ୍‌, ହେ ପୁନି ତର୍‌ ତାଙ୍ଗ୍‌ ପିସ୍‌ସି ବିନେନିକାନ୍‌ ଇନେର୍‌ ପୁନୁର୍‌ ।
13 ௧௩ இரத்தத்தில் தோய்க்கப்பட்ட ஆடையை அணிந்திருந்தார்; அவருடைய பெயர் தேவனுடைய வார்த்தை என்பதே.
ହେୱାନ୍‌ ନେତେର୍‌ତ ନୁସ୍ତି ହେନ୍ଦ୍ରା ଉସ୍‌ପାତାକାନ୍‌, ଆରେ ତା ତର୍‌ ଆଜ଼ି ମାଚାତ୍‌ ହେୱାନ୍‌ “ଇସ୍ୱର୍ତି ବଚନ୍‌” ଇଞ୍ଜି ଜାଣାଚିନା ।
14 ௧௪ பரலோகத்திலுள்ள படைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய ஆடை அணிந்தவர்களாக, வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.
ସାର୍ଗେନି ମେଲ୍ୟାର୍‍ ଡ଼ିଞ୍ଜିନି ଆରି ସକଟ୍‌ କୱାଣ୍‌ ହେନ୍ଦ୍ରା ଉସ୍‌ପିତି ଡ଼ିଞ୍ଜିନି ବାନି ଗଡ଼ାଙ୍ଗ୍‌ ଜପି ଦୁମ୍‌ଜି ତା ପାଚେ ହାଞ୍ଜେଙ୍ଗ୍‌ ଲାଗାତାର୍‌ ।
15 ௧௫ அந்நிய மக்களை வெட்டும்படிக்கு அவருடைய வாயிலிருந்து கூர்மையான வாள் புறப்படுகிறது; இரும்புக்கோலால் அவர்களை அரசாளுவார்; அவர் சர்வவல்லமையுள்ள தேவனுடைய கடுமையான கோபமாகிய மதுபான ஆலையை மிதிக்கிறார்.
ତା ୱାଇଦାଂ ଦାରାକାଣ୍ଡା ହତ୍‌ନାତ୍‌, ତା ହୁଦାଂ ହେୱାନ୍‌ ଜାତିରିଂ ଗାଅ କିନାନ୍‌; ହେୱାନ୍‌ ହେୱାରିଂ ଲୱା ବାଡ୍‌ଗାତାଂ ସାସନ୍‍ କିନାନ୍‌ ଆରେ ହେୱାନ୍‌ ନିଜେ ୱିଜ଼ୁ ସାକ୍ତିକାଟାକାନ୍‌ ଇସ୍ୱର୍ତି ଜବର୍‌ କାକ୍ରି ଲାକେ ଅଙ୍ଗୁର୍‌କୁଣ୍ଡି ଜାତା କଣ୍ଡି ୱିହ୍‌ନାନ୍‌ ।
16 ௧௬ ராஜாதி ராஜா, கர்த்தாதி கர்த்தா என்னும் நாமம் அவருடைய ஆடையின்மேலும் அவருடைய தொடையின்மேலும் எழுதப்பட்டிருந்தது.
ତା ହେନ୍ଦ୍ରାତ ତା କୁଟାତ ଇ ତର୍‌ ଲେକାତାତ୍‌ନା, “ରାଜାର୍‌ଜପି ରାଜା ଆରି ମାପ୍ରୁଜପି ମାପ୍ରୁ ।”
17 ௧௭ பின்பு ஒரு தேவதூதன் சூரியனில் நிற்பதைப் பார்த்தேன்; அவன் வானத்தின் நடுவில் பறக்கிற எல்லாப் பறவைகளையும் பார்த்து:
ତା ପାଚେ ଆନେଙ୍ଗ୍‌ ରୱାନ୍‌ ଦୁତ୍‌ତିଙ୍ଗ୍‌ ୱେଡ଼ା ବିତ୍ରେ ନିଲ୍‍ଚି ମାନାକା ହୁଡ଼୍‌ତାଂ; ହେୱାନ୍‌ ଆକାସ୍‌ତ ଉମ୍‌ନି ସବୁ ପଟିକାଙ୍ଗ୍‌ ଗାଜା କାଟ୍‌ତାଂ କୁକ୍‌ଚି ଇଚାର୍‌, “ୱାଡ ଇସ୍ୱର୍ତି ଗାଜା ବଜିତ ରୁଣ୍ଡା ଆଡ,
18 ௧௮ நீங்கள் ராஜாக்களின் மாம்சத்தையும், படைத் தளபதிகளின் மாம்சத்தையும், பலவான்களின் மாம்சத்தையும், குதிரைகளின் மாம்சத்தையும், அவைகளின்மேல் ஏறியிருக்கிறவர்களின் மாம்சத்தையும், சுதந்திரமானவர்கள், அடிமைகள், சிறியோர், பெரியோர், இவர்களுடைய மாம்சத்தையும் அழிக்கும்படிக்கு, தேவன் கொடுக்கும் விருந்துக்குக் கூடிவாருங்கள் என்று மிகுந்த சத்தமாகக் கூப்பிட்டான்.
ଇନେସ୍‌ ଏପେଙ୍ଗ୍‌ ରାଜାର୍‌ତି, ମେଲ୍ୟାମୁଡ଼୍‌ଦାକାନ୍‍, ବାପୁକାଟାକାର୍‌ତି, ଗଡ଼ା ଆରି ଗଡ଼ାଦୁମ୍‍ତାକାର୍ତି, ଜାର୍‌ତାରେନ୍‌ ଆରି ଲକାର୍‍ ତାରେନ୍, ଆଡ଼ିୟା ହାରୁ ଆରି ଗାଜା ୱିଜ଼ାର୍‌ ମାନାୟାର୍‌ତି ଜେୟ୍‌ ତିନାଟ୍‌ ।
19 ௧௯ பின்பு, மிருகமும் பூமியின் ராஜாக்களும் அவர்களுடைய படைகளும், குதிரையின்மேல் ஏறியிருக்கிறவரோடும் அவருடைய படைகளோடும் யுத்தம்பண்ணுவதற்கு வருவதைப் பார்த்தேன்.
ତା ପାଚେ ଆନେଙ୍ଗ୍‌ ପସୁତିଂ ଆରି ପୁର୍ତିନି ରାଜାରିଂ ଆରି ହେୱାର୍‌ତି ମେଲ୍ୟାର୍‌ତିଂ କି ହେ ଗଡ଼ାଦୁମ୍‍ତାକାର୍‌ ଆରି ତା ମେଲ୍ୟାର୍ତି ଲାହାଙ୍ଗ୍‌ ଜୁଜ୍‌ କିନି କାଜିଂ ରୁଣ୍ଡା ଆଜ଼ି ମାନାକା ହୁଡ଼୍‌ତାଂ ।
20 ௨0 அப்பொழுது மிருகம் பிடிக்கப்பட்டது; மிருகத்தின் முன்பாக அற்புதங்கள் செய்த கள்ளத்தீர்க்கதரிசியும் பிடிக்கப்பட்டான். தன்னுடைய அற்புதங்கள் மூலமாக மிருகத்தின் முத்திரையை அணிந்தவர்களையும் அதின் உருவத்தை வணங்கினவர்களையும் ஏமாற்றினவன் இவனே; இருவரும் கந்தகம் எரிகிற அக்கினிக்கடலிலே உயிரோடு தள்ளப்பட்டார்கள். (Limnē Pyr g3041 g4442)
ହେବେଣ୍ଡାଂ ହେ ପସୁ ଦାରାପଡ଼ା ଆତାତ୍‌, ଆରେ ଇମ୍‌ଣି ଚାକ୍ରାୟ୍‌ ବେଣ୍‌ବାକ୍‌ଣାୟ୍‌କିନାକାନ୍‌ ତା ମୁମ୍‌ଦ କାବାଆନି କାମାୟ୍‌ ସବୁ କିଜ଼ି ତା ହୁଦାଂ ପସୁନି ଚିନ୍‌ ଇଡ଼ିୟାତି ମାନାୟାରିଂ ଆରି ତା ପୁତ୍‌ଡ଼ା ପୁଜାକିନାକାରିଂ ବାଣାୟ୍‌ କିଜ଼ି ମାଚାତ୍, ହେୱାନ୍‌ ପା ତା ଲାହାଙ୍ଗ୍‌ ଦାରାପଡ଼ା ଆତାତ୍‌; ହେୱାର୍‌ ହାରି ଜିତିତାଂ ଅବସ୍ତାତ ଗନ୍ଦକ୍‌ ଆହ୍‌ନି ହାମ୍‌ଦୁର୍‌ତ ତୁହ୍ୟାତାର୍‌ । (Limnē Pyr g3041 g4442)
21 ௨௧ மற்றவர்கள் குதிரையின்மேல் ஏறினவருடைய வாயிலிருந்து புறப்படுகிற வாளினால் கொல்லப்பட்டார்கள்; அவர்களுடைய மாம்சத்தினால் பறவைகள் யாவும் திருப்தியடைந்தன.
ଆରେ ହେୱାର୍‌ତି ମେଲ୍ୟାର୍‌ ଗଡ଼ାଦୁମ୍‍ତାକାନ୍‍ ୱେଇଦିଂ ହନାକା କାଣ୍ଡା ହୁକେ ହାତାର୍; ଆକାସ୍‌ନି ପଟିଂ ମାନ୍‌ ଇଚା ହେୱାର୍‌ତି ଜେଇ ତିନ୍‌ଜି ହାଚିକ୍‌ ।

< வெளிப்படுத்தின விசேஷம் 19 >