< வெளிப்படுத்தின விசேஷம் 17 >

1 ஏழு கலசங்களையுடைய அந்த ஏழு தூதர்களில் ஒருவன் வந்து என்னோடு பேசி: நீ வா, திரளான தண்ணீர்கள்மேல் உட்கார்ந்திருக்கிற மகா வேசியோடு பூமியின் ராஜாக்கள் வேசித்தனம்பண்ணினார்களே, அவளுடைய வேசித்தனமாகிய மதுவால் பூமியின் மக்களும் வெறிகொண்டிருந்தார்களே;
ज़ैन सत स्वर्गदूतन कां तैना सत कटोरे थिये, तैन मरां एइतां एक्के मीं सेइं ज़ोवं, “इरां एई, अवं तीं तैस बड़े वेश्यारी सज़ा हिराताईं, ज़ै बड़े पैन्न पुड़ बिशोरीए।
2 அவளுக்கு வருகிற தண்டனையை உனக்குக் காண்பிப்பேன் என்று சொல்லி;
ज़ैस सेइं धेरतलरे राज़ेईं बदमाशी की, ते धेरतली पुड़ रानेबाले तैसेरे बदमैशरे शराबी सेइं मसत भोरे थिये।”
3 ஆவிக்குள் என்னை வனாந்திரத்திற்குக் கொண்டுபோனான். அப்பொழுது ஏழு தலைகளையும் பத்து கொம்புகளையும் உடையதும் அவதூறான பெயர்களால் நிறைந்ததுமான சிவப்பு நிறமுள்ள மிருகத்தின்மேல் ஒரு பெண் ஏறியிருப்பதைப் பார்த்தேன்.
तैखन आत्मा अवं अपने कैबू मां कियो ते स्वर्गदूते अवं सुनसान ठैरी मांजो नेव। तैड़ी मीं अक कुआन्श हैवाने पुड़ सुवार लाई, ज़ेसेरी सत क्रोड़ी ते दश शिंगाँ थियां, तैसेरे जान परमेशरेरी तुहीन केरनेरे नंव्वन सेइं ढकोरी थी।
4 அந்தப் பெண் இரத்தாம்பரமும் சிவப்பான ஆடையும் அணிந்து பொன்னினாலும் இரத்தினங்களினாலும் முத்துக்களினாலும் சிங்காரிக்கப்பட்டு, தன் வேசித்தனமாகிய அருவருப்புகளாலும் அசுத்தத்தாலும் நிறைந்த பொற்பாத்திரத்தைத் தன் கையிலே பிடித்திருந்தாள்.
तैस कुआन्शां बैंगनी ते लाल लिगड़ां लोरो थियां, ते सोन्नेरे ते कीमती मेनी ते मोतन सेइं सज़ोरी थी, ते तैसेरे हथ्थे मां अक सोन्नेरो कटोरो शराबी सेइं भेरतां थियो, ज़ै भिट्टे कम्मन ते बदमैशरे कम्मन हिराते।
5 மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கும் பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் பெயர் அவள் நெற்றியில் எழுதியிருந்தது.
ते तैसेरे कुपाए पुड़ इन नवं लिखोरू थियूं, “भेद-बड़ो बाबेल धेरतलरी वेश्यां ते भिट्टी चीज़ां केरि अम्मा।”
6 அந்தப் பெண் பரிசுத்தவான்களின் இரத்தத்தினாலும், இயேசுவினுடைய சாட்சிகளின் இரத்தத்தினாலும் வெறிகொண்டிருக்கிறதைப் பார்த்தேன்; அவளைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.
ते मीं तै कुआन्श परमेशरेरे लोकां केरो खून ते यीशुएरे गुवाहां केरो खून पीने सेइं मसत भोती लाई, ते अवं तैन लेइतां हैरान भोव।
7 அப்பொழுது, தூதனானவன் என்னைப் பார்த்து: ஏன் ஆச்சரியப்படுகிறாய்? இந்தப் பெண்ணுடைய இரகசியத்தையும், ஏழு தலைகளையும் பத்துக் கொம்புகளையுமுடையதாக இவளைச் சுமக்கிற மிருகத்தினுடைய இரகசியத்தையும் உனக்குச் சொல்லுகிறேன்.
तैने स्वर्गदूते मीं सेइं ज़ोवं; “तू किजो हैरान भोव? अवं तीं सेइं इस कुआन्शरो, ते तैस हैवानेरो भेद ज़ोताईं, ज़ैस पुड़ तै सुवारे, ते ज़ेसेरी सत क्रोड़ी ते दश शिनगन।
8 நீ பார்த்த மிருகம் முன்னே இருந்தது, இப்பொழுது இல்லை; அது பாதாளத்திலிருந்து ஏறி வந்து, நாசமடையப்போகிறது. உலகம் உண்டானதுமுதல் ஜீவபுத்தகத்தில் பெயர் எழுதப்படாத பூமியின் மக்களே, இருந்ததும், இல்லாமல்போனதும், இனி இருப்பதுமாக இருக்கிற மிருகத்தைப் பார்த்து ஆச்சரியப்படுவார்கள். (Abyssos g12)
ज़ै हैवान तीं लाव, ई पेइलो थियो, पन हुनी नईं रानो, ते अथाह कुण्डेरां निसेलो ते परमेशर तैस पूरे तरीके सेइं नाश केरेलो, ते ज़ैना लोक इस दुनियाई मां ज़ींने लोरेन ज़ैन केरां नंव्वां परमेशरे दुनिया बनाने करां पेइले ज़िन्दगरे किताबी मां नईं लिखोरां, तैना इस हैवान हेरतां हैरान भोले, ई हैवान पेइलो ज़ींतो थियो ते हुनी ज़ींतो नईं पन फिरी एज्जेलो। (Abyssos g12)
9 ஞானமுள்ள மனம் இதைப் புரிந்துகொள்ளும். அந்த ஏழு தலைகளும் அந்தப் பெண் உட்கார்ந்திருக்கிற ஏழு மலைகளாம்.
इन समझ़नेरे लेइ ज्ञानी मन ज़रूरीए, तैना सत पहाड़न, ज़ैन पुड़ तै कुआन्श राज़ केरतीए।
10 ௧0 அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை; வரும்போது அவன் கொஞ்சக்காலம் ஆட்சி செய்வான்.
ते तैना सत राज़े भी आन, पंच़ त मेरि जोरेन, ते अक हेजू ए; ते अक आखरी हेजू नईं ओरो, पन ज़ैखन तै एज्जेलो त थोड़े च़िरेरे लेइ राज़ केरेलो।
11 ௧௧ இருந்ததும், இப்பொழுது இல்லாததுமாகிய மிருகமே எட்டாவதாக வருகிறவனும், அந்த ஏழு இராஜாக்களில் ஒருவனும் நாசமடையப்போகிறவனுமாக இருக்கிறான்.
ते ज़ै हैवान पेइलो थियो, ते हुना नईं, तै एप्पू अठोवं राज़ोए; ते तैन सत्तन मरां पैदा भोव, ते आखरी मां तैस राज़े हमेशारी सज़ा मैलेली।
12 ௧௨ நீ பார்த்த பத்துக்கொம்புகளும், பத்து ராஜாக்களே; இவர்கள் இன்னும் ராஜ்யம் பெறவில்லை; இவர்கள் மிருகத்துடன் ஒருமணி நேரம்வரை ராஜாக்கள்போல அதிகாரம் பெற்றுக்கொள்ளுகிறார்கள்.
ते ज़ैना दश शिन्गाँ तीं पेइलां लां, तैना दश राज़ेन, ज़ैनेईं हेजू तगर राज़ शुरू नईं कियोरू। तैन दश राज़न हैवाने सेइं साथी राज़ केरनेरो अधिकार दित्तो जेव, पन तैन राज़ केरनेरे लेइ थोड़ो वक्त दित्तो।
13 ௧௩ இவர்கள் ஒரே மனதுடையவர்கள்; இவர்கள் தங்களுடைய வல்லமையையும் அதிகாரத்தையும் மிருகத்திற்குக் கொடுப்பார்கள்.
इना सब अक मन भोले, ते तैना अपनि-अपनि शक्ति ते अधिकार तैस हैवान देले।
14 ௧௪ இவர்கள் ஆட்டுக்குட்டியானவரோடு யுத்தம்பண்ணுவார்கள்; ஆட்டுக்குட்டியானவர் கர்த்தாதி கர்த்தரும் ராஜாதி ராஜாவுமாக இருக்கிறதினால் அவர்களை ஜெயிப்பார்; அவரோடு இருக்கிறவர்கள் அழைக்கப்பட்டவர்களும் தெரிந்துகொள்ளப்பட்டவர்களும் உண்மையுள்ளவர்களுமாக இருக்கிறார்கள் என்றான்.
इना गबड़े सेइं लड़ेले, ते गबड़ू तैन पुड़ ज़ींत हासिल केरेलू; किजोकि तै राज़ां केरो राज़ो ते प्रभुं केरो प्रभु आए। तैस पत्ती च़लने बाले तैना आन ज़ैना परमेशरे कुजोरेन ते च़ुनोरेन, ते ज़ैना तैस सेइं साथी ईमानदार आन।”
15 ௧௫ பின்னும் அந்த தூதன் என்னைப் பார்த்து: அந்த வேசி உட்கார்ந்திருக்கிற தண்ணீர்களைப் பார்த்தாயே; அவைகள் மக்களும், திரள்கூட்டமும், தேசங்களும், பல்வேறு மொழிகளைப் பேசுகிறவர்களுமே.
फिरी तैने स्वर्गदूते मीं सेइं ज़ोवं, “कि ज़ैन पानी तीं पेइलू लोरो थियूं, ज़ैस पुड़ तै वेश्या बिशोरी थी, ए दुनियारे सारे कौमन हिराती, ज़ैना बड़े मुलखन मरां ते भाषान मरां आन।
16 ௧௬ நீ மிருகத்தின்மேல் பார்த்த பத்துக்கொம்புகளைப் போன்றவர்கள் அந்த வேசியைப் பகைத்து, அவளைப் பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய சரீரத்தை நாசமாக்கி, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப்போடுவார்கள்.
तै वक्त एज्जेलो ज़ेइस हैवान दश राज़न सेइं ज़ैना तैस सेइं साथी आन, तैस वेश्याई सेइं बैर रखेले, तैना तैस पुड़ हमलो केरेले ते तैस नग्गी केरेले तैसेरू किछ मास खाले, ते बाकी फुकेले।
17 ௧௭ தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறும்வரையும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே மனதுடையவர்களாக இருந்து, தங்களுடைய ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்.
किजोकि परमेशर तैन केरे मन्न मां इन छ़डेलो, कि तैना तैसेरी मर्ज़ी पूरी केरेले; ते ज़ांतगर परमेशरेरू वचन पूरू न भोए, तांतगर अक मन भोइतां अपनू राज़ हैवाने देन।
18 ௧௮ நீ பார்த்த அந்தப் பெண் பூமியின் ராஜாக்கள்மேல் ராஜ்யபாரம் பண்ணுகிற மகா நகரமே என்றான்.
ते तै कुआन्श, ज़ै तीं लोरीए तैन बड्डू नगरे, ज़ैन धेरतलरे राज़न पुड़ राज़ केरते।”

< வெளிப்படுத்தின விசேஷம் 17 >