< சங்கீதம் 121 >

1 ஆரோகண பாடல். எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
都もうでの歌 わたしは山にむかって目をあげる。わが助けは、どこから来るであろうか。
2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
わが助けは、天と地を造られた主から来る。
3 உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.
主はあなたの足の動かされるのをゆるされない。あなたを守る者はまどろむことがない。
4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
見よ、イスラエルを守る者はまどろむこともなく、眠ることもない。
5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
主はあなたを守る者、主はあなたの右の手をおおう陰である。
6 பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
昼は太陽があなたを撃つことなく、夜は月があなたを撃つことはない。
7 யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.
主はあなたを守って、すべての災を免れさせ、またあなたの命を守られる。
8 யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
主は今からとこしえに至るまで、あなたの出ると入るとを守られるであろう。

< சங்கீதம் 121 >