< சங்கீதம் 121 >

1 ஆரோகண பாடல். எனக்கு உதவி வரும் மலைகளுக்கு நேராக என்னுடைய கண்களை உயர்த்துகிறேன்.
שיר למעלות אשא עיני אל-ההרים-- מאין יבא עזרי
2 வானத்தையும் பூமியையும் உண்டாக்கின யெகோவாவிடத்திலிருந்து எனக்கு உதவி வரும்.
עזרי מעם יהוה-- עשה שמים וארץ
3 உன்னுடைய காலைத் தள்ளாடவிடமாட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கமாட்டார்.
אל-יתן למוט רגלך אל-ינום שמרך
4 இதோ, இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை.
הנה לא-ינום ולא יישן-- שומר ישראל
5 யெகோவா உன்னைக் காக்கிறவர்; யெகோவா உன்னுடைய வலது பக்கத்திலே உனக்கு நிழலாக இருக்கிறார்.
יהוה שמרך יהוה צלך על-יד ימינך
6 பகலிலே வெயிலோ, இரவிலே நிலவோ உன்னைச் சேதப்படுத்துவதில்லை.
יומם השמש לא-יככה וירח בלילה
7 யெகோவா உன்னை எல்லாத் தீங்குக்கும் விலக்கிக் காப்பார்; அவர் உன்னுடைய ஆத்துமாவைக் காப்பார்.
יהוה ישמרך מכל-רע ישמר את-נפשך
8 யெகோவா உன்னுடைய போக்கையும் உன்னுடைய வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றென்றும் காப்பார்.
יהוה ישמר-צאתך ובואך-- מעתה ועד-עולם

< சங்கீதம் 121 >