< நீதிமொழிகள் 9 >

1 ஞானம் தன்னுடைய வீட்டைக் கட்டி, தன்னுடைய செதுக்கப்பட்ட ஏழு தூண்களையும் அமைத்து,
חכמות בנתה ביתה חצבה עמודיה שבעה
2 தன்னுடைய கொழுத்த மிருகங்களை அடித்து, திராட்சைரசத்தை ஊற்றிவைத்து, தன்னுடைய உணவுப்பந்தியை ஆயத்தப்படுத்தி,
טבחה טבחה מסכה יינה אף ערכה שלחנה
3 தன்னுடைய பணிவிடைக்காரிகளை அனுப்பி, பட்டணத்தின் உயர்ந்த மேடைகளின்மேல் நின்று கூப்பிட்டு,
שלחה נערתיה תקרא-- על-גפי מרמי קרת
4 புத்தியீனனை நோக்கி: எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும்.
מי-פתי יסר הנה חסר-לב אמרה לו
5 நீங்கள் வந்து என்னுடைய அப்பத்தைச் சாப்பிட்டு, நான் ஊற்றிய திராட்சைரசத்தைக் குடியுங்கள்.
לכו לחמו בלחמי ושתו ביין מסכתי
6 பேதமையைவிட்டு விலகுங்கள், அப்பொழுது பிழைத்திருப்பீர்கள்; புத்தியின் வழியிலே நடவுங்கள் என்று சொல்லுகிறது.
עזבו פתאים וחיו ואשרו בדרך בינה
7 பரியாசக்காரனைக் கண்டிக்கிறவன் அவமானமடைகிறான்; துன்மார்க்கனைக் கண்டிக்கிறவன் தன்னைக் கறைப்படுத்திக்கொள்ளுகிறான்.
יסר לץ--לקח לו קלון ומוכיח לרשע מומו
8 பரியாசக்காரனைக் கடிந்துகொள்ளாதே, அவன் உன்னைப் பகைப்பான்; ஞானமுள்ளவனைக் கடிந்துகொள், அவன் உன்னை நேசிப்பான்.
אל-תוכח לץ פן-ישנאך הוכח לחכם ויאהבך
9 ஞானமுள்ளவனுக்குப் போதி, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம் செய், அவன் அறிவில் விருத்தியடைவான்.
תן לחכם ויחכם-עוד הודע לצדיק ויוסף לקח
10 ௧0 யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்த தேவனின் அறிவே அறிவு.
תחלת חכמה יראת יהוה ודעת קדשים בינה
11 ௧௧ என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.
כי-בי ירבו ימיך ויוסיפו לך שנות חיים
12 ௧௨ நீ ஞானியானால் உனக்கென்று ஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதின் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
אם-חכמת חכמת לך ולצת לבדך תשא
13 ௧௩ மதியற்ற பெண் வாயாடியும் ஒன்றுமறியாத மூடத்தனம் உள்ளவளுமாக இருக்கிறாள்.
אשת כסילות המיה פתיות ובל-ידעה מה
14 ௧௪ அவள் தன்னுடைய வீட்டுவாசற்படியிலும் பட்டணத்தின் மேடைகளிலும் இருக்கைபோட்டு உட்கார்ந்து,
וישבה לפתח ביתה-- על-כסא מרמי קרת
15 ௧௫ தங்களுடைய வழிகளை நோக்கி நேரே போகும் வழிப்போக்கர்களைப் பார்த்து:
לקרא לעברי-דרך המישרים ארחותם
16 ௧௬ எவன் பேதையோ அவன் இந்த இடத்திற்கு வரட்டும் என்றும்,
מי-פתי יסר הנה וחסר-לב ואמרה לו
17 ௧௭ மதியீனனை நோக்கி: திருட்டுத்தண்ணீர் தித்திக்கும், மறைவான இடத்தில் சாப்பிடும் அப்பம் இன்பமாக இருக்கும் என்றும் சொல்லிக் கூப்பிடுகிறாள்.
מים-גנובים ימתקו ולחם סתרים ינעם
18 ௧௮ இருப்பினும் இறந்தவர்கள் அந்த இடத்தில் உண்டென்றும், அவளுடைய விருந்தாளிகள் நரக பாதாளங்களில் கிடக்கிறார்களென்றும் அவன் அறியமாட்டான். (Sheol h7585)
ולא-ידע כי-רפאים שם בעמקי שאול קראיה (Sheol h7585)

< நீதிமொழிகள் 9 >