< நீதிமொழிகள் 30 >

1 யாக்கேயின் மகனாகிய ஆகூர் என்னும் ஆண்மகன் ஈத்தியேலுக்கு வசனித்து, ஈத்தியேலுக்கும் ஊகாலுக்கும் சொன்ன உபதேச வாக்கியங்கள்:
Төвәндикиләр Якәһниң оғли Агурға вәһий билән кәлгән сөзләрдур: Бу адәм Итийәлгә, йәни Итийәл билән Укалға мундақ сөзләрни дегән: —
2 மனிதர்கள் எல்லோரையும்விட நான் மூடன்; மனிதர்களுக்கேற்ற புத்தி எனக்கு இல்லை.
Мән дәрвәқә инсанлар арисидики әң надини, һайванға охшаштурмән; Мәндә инсан әқли йоқ.
3 நான் ஞானத்தைக் கற்கவும் இல்லை, பரிசுத்தரின் அறிவை அறிந்துகொள்ளவும் இல்லை.
Даналиқни һеч үгәнмидим; Әң Пак-Муқәддәс Болғучи һәққидиму саватим йоқтур.
4 வானத்திற்கு ஏறி இறங்கினவர் யார்? காற்றைத் தமது கைப்பிடிகளில் அடக்கினவர் யார்? தண்ணீர்களை துணியிலே கட்டினவர் யார்? பூமியின் எல்லைகளையெல்லாம் நிறுவியவர் யார்? அவருடைய பெயர் என்ன? அவருடைய மகனுடைய பெயர் என்ன? அதை அறிவாயோ?
Ким әршкә көтирилгән, яки әрштин чүшкән? Ким шамални қоллирида тутқан? Ким суларни Өз тониға йөгәп қойған? Ким йәр-зиминниң чегаралирини бәлгүлигән? Униң исми немә? Униң Оғлиниң исми немә? Биләмсән-йоқ?
5 தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்கிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.
Тәңриниң һәр бир сөзи синилип испатлинип кәлгәндур; У Өзигә таянғанларниң һәммисини қоғдайдиған қалқандур.
6 அவருடைய வசனங்களோடு ஒன்றையும் கூட்டாதே, கூட்டினால் அவர் உன்னைக் கடிந்துகொள்வார், நீ பொய்யனாவாய்.
Униң сөзлиригә һеч нәрсә қошма; Ундақ қилсаң, У сени әйипләйду, Сениң ялғанчилиғиң ашкарилиниду.
7 இரண்டு மனு உம்மிடத்தில் கேட்கிறேன்; நான் மரணமடையும்வரைக்கும் அவைகளை எனக்கு மறுக்காமல் தாரும்.
И [Худайим], Сәндин икки нәрсини тиләймән; Мән өлгичә буларни мәндин айимиғайсән: —
8 மாயையையும் பொய்வசனிப்பையும் எனக்குத் தூரப்படுத்தும்; தரித்திரத்தையும் செல்வத்தையும் எனக்குக் கொடுக்காமல் இருப்பீராக.
Сахтилиқ вә ялғанчилиқни мәндин жирақ қилғайсән; Мени гадайму қилмай, байму қилмай, бәлки еһтияҗимға лайиқла рисқ бәргәйсән.
9 நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, யெகோவா யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரமடைகிறதினால் திருடி, என்னுடைய தேவனுடைய நாமத்தை வீணாக கெடுக்காதபடிக்கும், என்னுடைய படியை எனக்கு அளந்து எனக்கு உணவளியும்.
Чүнки зиядә тоюп кәтсәм, Сәндин йенип: «Пәрвәрдигар дегән ким?» — дәп қелишим мүмкин. Яки гадай болуп қалсам, оғрилиқ қилип, Сән Худайимниң намиға дағ кәлтүрүшим мүмкин.
10 ௧0 எஜமானிடத்தில் அவனுடைய வேலைக்காரன்மேல் குற்றம் சுமத்தாதே; அவன் உன்னைச் சபிப்பான், நீ குற்றவாளியாகக் காணப்படுவாய்.
Ғоҗайининиң алдида униң қули үстидин шикайәт қилма, Болмиса у сени қарғап ләнәт қилиду, әйипкар болисән.
11 ௧௧ தங்களுடைய தகப்பனைச் சபித்தும், தங்களுடைய தாயை ஆசீர்வதிக்காமலும் இருக்கிற சந்ததியாரும் உண்டு.
Өз атисини қарғайдиған, Өз анисиға бәхит тилимәйдиған бир дәвир бар,
12 ௧௨ தாங்கள் அழுக்கு நீங்க கழுவப்படாமல் இருந்தும், தங்களுடைய பார்வைக்குச் சுத்தமாகத் தோன்றுகிற சந்ததியாரும் உண்டு.
Өзини пак чағлайдиған, әмәлийәттә мәйнәтчилигидин һеч жуюлмиған бир дәвир бар,
13 ௧௩ வேறொரு சந்ததியாரும் உண்டு; அவர்களுடைய கண்கள் எத்தனை மேட்டிமையும் அவர்களுடைய இமைகள் எத்தனை பெருமையுமானவைகள்.
Бир дәвир бар — аһ, кибирлигидин нәзири немидегән үстүн, Һакавурлуғидин һали немидегән чоң!
14 ௧௪ தேசத்தில் சிறுமையானவர்களையும் மனிதர்களில் எளிமையானவர்களையும் சாப்பிடுவதற்கு வாளுக்கு ஒப்பான பற்களையும் கத்திகளுக்கு ஒப்பான கடைவாய்ப்பற்களையும் உடைய சந்ததியாரும் உண்டு.
Униң аҗизлар вә йоқсулларни ялмап жутуветидиған чишлири қиличтәк, Езиқ чишлири пичақтәк болған бир дәвир бар!
15 ௧௫ கொடு, கொடு, என்கிற இரண்டு மகள்கள் அட்டைக்கு உண்டு. திருப்தி அடையாத மூன்று உண்டு, போதும் என்று சொல்லாத நான்கும் உண்டு.
Зүлүкниң икки қизи бар, улар һәрдайим: «Бәргин, бәргин» дәп товлишар. Һәргиз тоюнмайдиған үч нәрсә бар, һәргиз қанаәтләнмәйдиған төрт нәрсә бар, улар болсиму: —
16 ௧௬ அவையாவன: பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத நெருப்புமே. (Sheol h7585)
Гөр, туғмас хотунниң қарни, Суға тоюнмиған қурғақ Йәр. Вә һәргиз «болди, тойдум» демәйдиған оттин ибарәт. (Sheol h7585)
17 ௧௭ தகப்பனைப் பரியாசம்செய்து, தாயின் கட்டளையை அசட்டைசெய்கிற கண்ணை நதியின் காகங்கள் பிடுங்கும், கழுகின் குஞ்சுகள் சாப்பிடும்.
Атисини мәсқирә қилидиған, Анисини кәмситидиған көзни болса, Қарға-қузғунлар чоқулар, Бүркүтниң балилириму уни йәр.
18 ௧௮ எனக்கு மிகவும் ஆச்சரியமானவைகள் மூன்று உண்டு, என்னுடைய புத்திக்கு எட்டாதவைகள் நான்கும் உண்டு.
Мән үчүн интайин тилсимат үч нәрсә бар; Шундақ, мән чүшинәлмәйдиған төрт иш бар: —
19 ௧௯ அவையாவன: ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடிய மனிதனுடைய வழியுமே.
Бүркүтниң асмандики учуш йоли, Иланниң ташта беғирлап маңидиған йоли, Кеминиң деңиздики йоли вә жигитниң қизға ашиқ болуштики йолидур.
20 ௨0 அப்படியே விபசார பெண்ணுடைய வழியும் இருக்கிறது; அவள் சாப்பிட்டு, தன்னுடைய வாயைத் துடைத்து; நான் ஒரு பாவமும் செய்யவில்லை என்பாள்.
Зинахор хотунниң йолиму шундақтур; У бир немини йәп болуп ағзини сүртивәткән кишидәк: «Мән һеч қандақ яманлиқни қилмидим!» — дәйду.
21 ௨௧ மூன்றினால் பூமி சஞ்சலப்படுகிறது, நான்கையும் அது தாங்கமுடியாது.
Йәр-зимин үч нәрсә астида беарам болар; У көтирәлмәйдиған төрт иш бар: —
22 ௨௨ அரசாளுகிற அடிமைக்காகவும், உணவால் திருப்தியான மூடனுக்காகவும்,
Падиша болған қул, Тамаққа тойған һамақәт,
23 ௨௩ பகைக்கப்படக்கூடியவளாக இருந்தும், கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட பெண்ணுக்காகவும், தன்னுடைய எஜமானிக்குப் பதிலாக மனைவியாகும் அடிமைப் பெண்ணுக்காகவுமே.
Нәпрәткә патқан, әргә тәккән хотун, Өз ханиминиң орнини басқан дедәк.
24 ௨௪ பூமியில் சிறியவைகளாக இருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்கு உண்டு.
Йәр йүзидә тени кичик, лекин интайин әқиллиқ төрт хил җанивар бар: —
25 ௨௫ அவையாவன: சிறிய உயிரினமாக இருந்தும், கோடைக்காலத்திலே தங்களுடைய உணவைச் சம்பாதிக்கிற எறும்பும்,
Чөмүлиләр күчлүк хәлиқ болмисиму, бирақ язда озуқ тәйярливелишни билиду;
26 ௨௬ பெலமில்லாத உயிரினமாக இருந்தும், தங்களுடைய வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுயல்களும்,
Суғурлар өзи аҗиз бир қовм болсиму, хада ташларниң арисиға уга салиду;
27 ௨௭ ராஜா இல்லாமல் இருந்தும், கூட்டம் கூட்டமாகப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
Чекәткиләрниң падишаси болмисиму, лекин қатар тизилип рәтлик маңиду;
28 ௨௮ தன்னுடைய கைகளினால் வலையைப்பின்னி, அரசர்கள் அரண்மனைகளில் இருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
Кәсләнчүкни қол билән тутувалғили болиду, Лекин хан ордилирида яшайду.
29 ௨௯ விநோதமாக அடிவைத்து நடக்கிறவைகள் மூன்று உண்டு; விநோத நடையுள்ளவைகள் நான்கும் உண்டு.
Қәдәмлири һәйвәтлик үч җанивар бар, Кишигә зоқ берип маңидиған төрт нәрсә бар: —
30 ௩0 அவையாவன: மிருகங்களில் பெலமுள்ளதும் ஒன்றுக்கும் பின்வாங்காததுமாகிய சிங்கமும்,
Һайванатлар ичидә әң күчлүк, һеч немидин қорқмас шир,
31 ௩௧ பெருமையாய் நடக்கிற சேவலும், வெள்ளாட்டுக் கடாவும், ஒருவரும் எதிர்க்க முடியாத ராஜாவுமே.
Зилва бәйгә ити, Текә, Вә пухралири қоллайдиған падишадур.
32 ௩௨ நீ மேட்டிமையானதினால் பைத்திமாக நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாக இருந்தால், கையினால் வாயை மூடு.
Әгәр сән ахмақлиқ қилип өзүңни бәк жуқури орунға қоювалған болсаң, Вә яки тәлвә бир ойда болған болсаң, Қолуң билән ағзиңни юм!
33 ௩௩ பாலைக் கடைதல் வெண்ணையைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
Кала сүти қочулса сериқ май чиқар; Бириниң бурни миҗилса, қан чиқар; Адавәт қозғап интиқам ойлиса җедәл-маҗира чиқар.

< நீதிமொழிகள் 30 >