< நீதிமொழிகள் 25 >

1 யூதாவின் ராஜாவாகிய எசேக்கியாவின் மனிதர்கள் பெயர்த்து எழுதின சாலொமோனுடைய நீதிமொழிகள்:
以下也是撒羅滿的箴言,由猶大王希則克雅的人所蒐集:
2 காரியத்தை மறைப்பது தேவனுக்கு மேன்மை; காரியத்தை ஆராய்வதோ ராஜாக்களுக்கு மேன்மை.
將事隱蔽,是天主的光榮;清察事實,是君王的光榮。
3 வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.
天有多高,地有多厚,王有何心,不可測量。
4 வெள்ளியிலிருந்து கழிவை நீக்கிவிடு, அப்பொழுது கொல்லனால் நல்ல பாத்திரம் வெளிப்படும்.
若將銀渣除去淨盡,銀匠必會造出銀器;
5 ராஜாவின் முன்னின்று துன்மார்க்கர்களை நீக்கிவிடு, அப்பொழுது அவனுடைய சிங்காசனம் நீதியினால் நிலைநிற்கும்.
若將君王前的惡人除掉,王座即可因正義而穩立。
6 ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே.
你在君王前不可炫耀,不可佔有權貴的座位;
7 உன் கண்கள் கண்ட பிரபுவின் சமுகத்தில் நீ தாழ்த்தப்படுவது நல்லதல்ல; அவன் உன்னைப் பார்த்து: மேலே வா என்று சொல்வதே உனக்கு மேன்மை.
因為人對你說「請上座! 」比在貴前受抑更好。
8 வழக்காடப் வேகமாகமாகப் போகாதே; முடிவிலே உன்னுடைய அயலான் உன்னை வெட்கப்படுத்தும்போது, நீ என்ன செய்யலாம் என்று திகைப்பாயே.
你眼若有所見,不可冒然訴訟;人若使你難堪,你將何以善後﹖
9 நீ உன்னுடைய அயலானுடனேமட்டும் உன்னுடைய வழக்கைக்குறித்து வழக்காடு, மற்றவனிடத்தில் இரகசியத்தை வெளிப்படுத்தாதே.
與你的近人,可自決爭端;他人的秘密,切不可洩漏;
10 ௧0 மற்றப்படி அதைக் கேட்கிறவன் உன்னை நிந்திப்பான்; உன்னுடைய அவமானம் உன்னைவிட்டு நீங்காது.
免得人聽見了而譏笑你,使你的聲譽一敗塗地。
11 ௧௧ ஏற்ற நேரத்தில் சொன்ன வார்த்தை வெள்ளித்தட்டில் வைக்கப்பட்ட பொற்பழங்களுக்குச் சமம்.
一句簡單話,若說得適當,有如銀盤中,放上金蘋果。
12 ௧௨ கேட்கிற காதுக்கு, ஞானமாகக் கடிந்துகொண்டு புத்திசொல்லுகிறவன், பொற்கடுக்கனுக்கும் தங்க மோதிரத்திற்கும் சமம்.
明智的勸戒,對受教的人,無異於金環,或純金美飾。
13 ௧௩ அறுவடைக்காலத்தில் உறைந்தமழையின் குளிர்ச்சி எப்படியிருக்கிறதோ, அப்படியே உண்மையான தூதுவனும் தன்னை அனுப்பினவனுக்கு இருப்பான்; அவன் தன்னுடைய எஜமான்களுடைய ஆத்துமாவைக் குளிரச்செய்வான்.
忠誠的使者,對遣他的人,有如秋收時,吹來的涼風,使他主人的心感到愉快。
14 ௧௪ கொடுப்பேன் என்று சொல்லியும் கொடுக்காமல் இருக்கிற வஞ்சகன் மழையில்லாத மேகங்களுக்கும் காற்றுக்கும் சமம்.
許諾而不實踐的人,只好似無雨的風雲。
15 ௧௫ நீண்ட பொறுமையினால் பிரபுவையும் சம்மதிக்கச்செய்யலாம்; இனிய நாவு எலும்பையும் நொறுக்கும்.
容忍可以折服公侯,柔語能以粉碎硬骨。
16 ௧௬ தேனைக் கண்டுபிடித்தால் அளவாகச் சாப்பிடு; அதிகமாக சாப்பிட்டால் வாந்திபண்ணுவாய்.
你找到蜂蜜,應按食量吃;怕吃的過多,反要吐出來。
17 ௧௭ உன்னுடைய அயலான் சலித்து உன்னை வெறுக்காதபடி, அடிக்கடி அவனுடைய வீட்டில் கால்வைக்காதே.
鄰舍的住家,你應少踏入;怕他討厭你,反而憎恨你。
18 ௧௮ பிறனுக்கு விரோதமாகப் பொய்சாட்சி சொல்லுகிற மனிதன் தண்டாயுதத்திற்கும் வாளிற்கும் கூர்மையான அம்பிற்கும் ஒப்பானவன்.
作假見證陷害鄰舍的人,無異是鐵鎚、刀劍和利箭。
19 ௧௯ ஆபத்துக்காலத்தில் துரோகியை நம்புவது உடைந்த பல்லுக்கும் மூட்டு விலகிய காலுக்கும் சமம்.
在患難之日,信賴無信用的人,有如信賴蛀壞的牙,脫節的腳。
20 ௨0 மனதுக்கமுள்ளவனுக்குப் பாடல்களைப் பாடுகிறவன், குளிர்காலத்தில் ஆடையை களைகிறவனைப்போலவும், வெடியுப்பின்மேல் ஊற்றிய காடியைப்போலவும் இருப்பான்.
對憂傷的心靈詠唱詩歌,無異在傷口處倒上酸醋。
21 ௨௧ உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், அவனுக்கு சாப்பிட உணவு கொடு; அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு.
若仇人餓了,你要給他吃;若是他渴了,應給他水喝:
22 ௨௨ அதினால் அவனை வெட்கப்படுத்துவாய்; யெகோவா உனக்குப் பலனளிப்பார்.
這是將火炭堆在他頭上,上主也必要因此還報你。
23 ௨௩ வடகாற்று மழையையும், புறங்கூறுகிற நாவு கோபமுகத்தையும் பிறப்பிக்கும்.
北風帶來時雨;讒言易惹怒容。
24 ௨௪ சண்டைக்காரியோடு ஒரு பெரிய வீட்டில் குடியிருப்பதைவிட, வீட்டின்மேல் ஒரு மூலையில் தங்குவதே நலம்.
寧願住在屋頂的一角,不願與吵婦同居一室。
25 ௨௫ தூரதேசத்திலிருந்து வரும் நற்செய்தி தாகம் மிகுந்த ஆத்துமாவுக்குக் கிடைக்கும் குளிர்ந்த தண்ணீருக்குச் சமம்.
來自遠方的喜信,無異口渴獲清泉。
26 ௨௬ துன்மார்க்கர்களுக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன நீரூற்றுக்கும் ஒப்பாகும்.
義人如在惡人面前失足,無異弄混的水泉,弄濁的水井。
27 ௨௭ தேனை அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல, தற்புகழை நாடுவதும் புகழல்ல.
吃蜂蜜過多,有損無益;過於求光榮,反而受累。
28 ௨௮ தன்னுடைய ஆவியை அடக்காத மனிதன் மதில் இடிந்த பாழான பட்டணம்போல இருக்கிறான்.
人若不控制自己的脾氣,就如一座無牆無防的城市。

< நீதிமொழிகள் 25 >