< நீதிமொழிகள் 19 >

1 மாறுபாடான உதடுகளுள்ள மூடனைவிட, உத்தமனாக நடக்கிற தரித்திரனே சிறப்பானவன்.
窮而行為正直,勝於富而唇舌欺詐。
2 ஆத்துமா அறிவில்லாமல் இருப்பது நல்லதல்ல; கால் துரிதமானவன் தப்பி நடக்கிறான்.
熱誠無謀,誠不可取;步伐匆忙,難免失足。
3 மனிதனுடைய மதியீனம் அவனுடைய வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவனுடைய மனம் யெகோவாவுக்கு விரோதமாக எரிச்சலடையும்.
人因愚蠢自毀前途;他的心反遷怒上主。
4 செல்வம் அநேக நண்பர்களைச் சேர்க்கும்; தரித்திரனோ தன்னுடைய நண்பனாலும் பிரிந்துபோவான்.
財富招來許多朋友,窮人卻為親朋所棄。
5 பொய்ச்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பான்; பொய்களைப் பேசுகிறவனும் தப்புவதில்லை.
作假見證的人,難免受罰;撒播謊言的人,勢必難逃。
6 பிரபுவின் தயவை அநேகர் வருந்திக் கேட்பார்கள்; கொடைகொடுக்கிறவனுக்கு எவனும் நண்பன்.
大方的人,人人奉承;好施的人,人都諂媚。
7 தரித்திரனை அவனுடைய சகோதரர்கள் எல்லோரும் பகைக்கிறார்களே, எத்தனை அதிகமாக அவனுடைய நண்பர்கள் அவனுக்குத் தூரமாவார்கள்; அவர்களுடைய வார்த்தைகளை அவன் நாடுகிறான், அவைகளோ வெறும் வார்த்தைகளே.
人窮兄弟恨,朋友更遠離;誰追求空言,是捕風捉影。
8 ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவை நேசிக்கிறான்; புத்தியைக் காக்கிறவன் நன்மையடைவான்.
獲得明哲的,必愛惜自己;珍惜明智的,必覓得幸福。
9 பொய்சாட்சிக்காரன் தண்டனைக்குத் தப்பமாட்டான்; பொய்களைப் பேசுகிறவன் நாசமடைவான்.
作假見證的人,難免受罰;撒播謊言的人,自趨滅亡。
10 ௧0 மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமையானவனுக்கு எவ்வளவும் தகாது.
安逸的生活,不適於愚人;奴隸管君主,更是不相宜。
11 ௧௧ மனிதனுடைய விவேகம் அவனுடைய கோபத்தை அடக்கும்; குற்றத்தை மன்னிப்பது அவனுக்கு மகிமை.
明智的人,緩於發怒,寬恕愆尤,引以為榮。
12 ௧௨ ராஜாவின் கோபம் சிங்கத்தின் கெர்ச்சிப்புக்குச் சமானம்; அவனுடைய தயவு புல்லின்மேல் பெய்யும் பனிபோல இருக்கும்.
君主的盛怒,有如獅子的怒吼;君王的恩惠,有如草上的朝露。
13 ௧௩ மூடனாகிய மகன் தன்னுடைய தகப்பனுக்கு மிகுந்த துக்கம்; மனைவியின் சண்டைகள் ஓயாமல் ஒழுகும் நீர்.
愚昧的兒子,是父親的災禍;吵鬧的女人,有如屋頂漏水。
14 ௧௪ வீடும் செல்வமும் பெற்றோர்கள் வைக்கும் சொத்து; புத்தியுள்ள மனைவியோ யெகோவா அருளும் ஈவு.
房屋與錢財,是父母的遺產;賢明的妻子,是上主的恩賜。
15 ௧௫ சோம்பல் தூங்கிவிழச்செய்யும்; அசதியானவன் பட்டினியாக இருப்பான்.
懶慢怠惰,使人沉睡;閒蕩的人,必要挨餓。
16 ௧௬ கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
恪守上主誡命的,可保全生命;輕視上主道路的,必自趨喪亡。
17 ௧௭ ஏழைக்கு இரங்குகிறவன் யெகோவாவுக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
向窮人施捨,是借貸於上主;對他的功德,上主必要報答。
18 ௧௮ நம்பிக்கையிருக்கும்வரை உன்னுடைய மகனைத் தண்டி; ஆனாலும் அவனைக் கொல்ல உன்னுடைய ஆத்துமாவில் தீர்மானிக்காதே.
尚有希望時,應懲罰兒子;但不可存心置他於死地。
19 ௧௯ கடுங்கோபி தண்டனைக்குள்ளாவான்; நீ அவனைத் தப்புவித்தால் திரும்பவும் தப்புவிக்கவேண்டியதாக வரும்.
易怒的人,應當受罰:你越寬容,使他越乖戾。
20 ௨0 உன்னுடைய முடிவுகாலத்தில் நீ ஞானமுள்ளவனாக இருக்கும்படி, ஆலோசனையைக்கேட்டு, புத்திமதியை ஏற்றுக்கொள்.
你應聽取勸告,接受教訓,使你今後成個明智的人。
21 ௨௧ மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும்.
人在心中儘可策劃多端,實現的卻是上主的計劃。
22 ௨௨ நன்மைசெய்ய மனிதன் கொண்டிருக்கும் ஆசையே தயவு; பொய்யனைவிட தரித்திரன் சிறப்பானவன்.
慷慨為人有利,窮漢勝過騙子。
23 ௨௩ யெகோவாவுக்குப் பயப்படுதல் வாழ்க்கைக்கு ஏதுவானது; அதை அடைந்தவன் திருப்தியடைந்து நிலைத்திருப்பான்; தீமை அவனை அணுகாது.
敬畏上主,使人得生命,滿懷敬畏,必無殃無禍。
24 ௨௪ சோம்பேறி தன்னுடைய கையை பாத்திரத்திலே வைத்து, அதைத் திரும்பத் தன்னுடைய வாய்க்குகூட கொண்டுபோகாமல் இருக்கிறான்.
懶惰人伸手到食盤,卻懶於送回到口邊。
25 ௨௫ பரியாசக்காரனை அடி, அப்பொழுது பேதை எச்சரிக்கப்படுவான்; புத்திமானைக் கடிந்துகொள், அவன் அறிவுள்ளவனாவான்.
你若杖責輕狂人,幼稚者將變明智;你只譴責明智者,他即更明瞭義理。
26 ௨௬ தன்னுடைய தகப்பனைக் கொள்ளையடித்து, தன்னுடைய தாயைத் துரத்திவிடுகிறவன், வெட்கத்தையும், அவமானத்தையும் உண்டாக்குகிற மகன்.
苛待父親,迫走母親的,實是卑賤可恥的兒子。
27 ௨௭ என் மகனே, அறிவைத் தரும் வார்த்தைகளைவிட்டு விலகச்செய்யும் போதகங்களை நீ கேட்காதே.
我兒,你停止聽取教訓,就是遠離智慧的訓言。
28 ௨௮ அநியாய சாட்சிக்காரன் நியாயத்தை சபிக்கிறான்; துன்மார்க்கர்களுடைய வாய் அக்கிரமத்தை விழுங்கும்.
邪曲的見證,戲笑公義;惡人們的嘴,吞食不義。
29 ௨௯ பரியாசக்காரர்களுக்குத் தண்டனைகளும், மூடர்களுடைய முதுகுக்கு அடிகளும் ஆயத்தமாக இருக்கிறது.
體刑是為輕狂人而設,鞭笞是為愚人背而備。

< நீதிமொழிகள் 19 >