< மத்தேயு 1 >

1 ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு:
ඉබ්‍රාහීමඃ සන්තානෝ දායූද් තස්‍ය සන්තානෝ යීශුඛ්‍රීෂ්ටස්තස්‍ය පූර්ව්වපුරුෂවංශශ්‍රේණී|
2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;
ඉබ්‍රාහීමඃ පුත්‍ර ඉස්හාක් තස්‍ය පුත්‍රෝ යාකූබ් තස්‍ය පුත්‍රෝ යිහූදාස්තස්‍ය භ්‍රාතරශ්ච|
3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
තස්මාද් යිහූදාතස්තාමරෝ ගර්භේ පේරස්සේරහෞ ජඥාතේ, තස්‍ය පේරසඃ පුත්‍රෝ හිෂ්‍රෝණ් තස්‍ය පුත්‍රෝ (අ)රාම්|
4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
තස්‍ය පුත්‍රෝ (අ)ම්මීනාදබ් තස්‍ය පුත්‍රෝ නහශෝන් තස්‍ය පුත්‍රඃ සල්මෝන්|
5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
තස්මාද් රාහබෝ ගර්භේ බෝයම් ජඥේ, තස්මාද් රූතෝ ගර්භේ ඕබේද් ජඥේ, තස්‍ය පුත්‍රෝ යිශයඃ|
6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
තස්‍ය පුත්‍රෝ දායූද් රාජඃ තස්මාද් මෘතෝරියස්‍ය ජායායාං සුලේමාන් ජඥේ|
7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
තස්‍ය පුත්‍රෝ රිහබියාම්, තස්‍ය පුත්‍රෝ(අ)බියඃ, තස්‍ය පුත්‍ර ආසා: |
8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
තස්‍ය සුතෝ යිහෝශාඵට් තස්‍ය සුතෝ යිහෝරාම තස්‍ය සුත උෂියඃ|
9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
තස්‍ය සුතෝ යෝථම් තස්‍ය සුත ආහම් තස්‍ය සුතෝ හිෂ්කියඃ|
10 ௧0 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
තස්‍ය සුතෝ මිනශිඃ, තස්‍ය සුත ආමෝන් තස්‍ය සුතෝ යෝශියඃ|
11 ௧௧ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்.
බාබිල්නගරේ ප්‍රවසනාත් පූර්ව්වං ස යෝශියෝ යිඛනියං තස්‍ය භ්‍රාතෘංශ්ච ජනයාමාස|
12 ௧௨ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்;
තතෝ බාබිලි ප්‍රවසනකාලේ යිඛනියඃ ශල්තීයේලං ජනයාමාස, තස්‍ය සුතඃ සිරුබ්බාවිල්|
13 ௧௩ செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
තස්‍ය සුතෝ (අ)බෝහුද් තස්‍ය සුත ඉලීයාකීම් තස්‍ය සුතෝ(අ)සෝර්|
14 ௧௪ ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
අසෝරඃ සුතඃ සාදෝක් තස්‍ය සුත ආඛීම් තස්‍ය සුත ඉලීහූද්|
15 ௧௫ எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
තස්‍ය සුත ඉලියාසර් තස්‍ය සුතෝ මත්තන්|
16 ௧௬ யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
තස්‍ය සුතෝ යාකූබ් තස්‍ය සුතෝ යූෂඵ් තස්‍ය ජායා මරියම්; තස්‍ය ගර්භේ යීශුරජනි, තමේව ඛ්‍රීෂ්ටම් (අර්ථාද් අභිෂික්තං) වදන්ති|
17 ௧௭ இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும்.
ඉත්ථම් ඉබ්‍රාහීමෝ දායූදං යාවත් සාකල්‍යේන චතුර්දශපුරුෂාඃ; ආ දායූදඃ කාලාද් බාබිලි ප්‍රවසනකාලං යාවත් චතුර්දශපුරුෂා භවන්ති| බාබිලි ප්‍රවාසනකාලාත් ඛ්‍රීෂ්ටස්‍ය කාලං යාවත් චතුර්දශපුරුෂා භවන්ති|
18 ௧௮ இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
යීශුඛ්‍රීෂ්ටස්‍ය ජන්ම කථ්ථතේ| මරියම් නාමිකා කන්‍යා යූෂඵේ වාග්දත්තාසීත්, තදා තයෝඃ සඞ්ගමාත් ප්‍රාක් සා කන්‍යා පවිත්‍රේණාත්මනා ගර්භවතී බභූව|
19 ௧௯ அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான்.
තත්‍ර තස්‍යාඃ පති ර‍්‍යූෂඵ් සෞජන්‍යාත් තස්‍යාඃ කලඞ්ගං ප්‍රකාශයිතුම් අනිච්ඡන් ගෝපනේනේ තාං පාරිත්‍යක්තුං මනශ්චක්‍රේ|
20 ௨0 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.
ස තථෛව භාවයති, තදානීං පරමේශ්වරස්‍ය දූතඃ ස්වප්නේ තං දර්ශනං දත්ත්වා ව්‍යාජහාර, හේ දායූදඃ සන්තාන යූෂඵ් ත්වං නිජාං ජායාං මරියමම් ආදාතුං මා භෛෂීඃ|
21 ௨௧ அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான்.
යතස්තස්‍යා ගර්භඃ පවිත්‍රාදාත්මනෝ(අ)භවත්, සා ච පුත්‍රං ප්‍රසවිෂ්‍යතේ, තදා ත්වං තස්‍ය නාම යීශුම් (අර්ථාත් ත්‍රාතාරං) කරීෂ්‍යසේ, යස්මාත් ස නිජමනුජාන් තේෂාං කලුෂේභ්‍ය උද්ධරිෂ්‍යති|
22 ௨௨ தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
ඉත්ථං සති, පශ්‍ය ගර්භවතී කන්‍යා තනයං ප්‍රසවිෂ්‍යතේ| ඉම්මානූයේල් තදීයඤ්ච නාමධේයං භවිෂ්‍යති|| ඉම්මානූයේල් අස්මාකං සඞ්ගීශ්වරඉත්‍යර්ථඃ|
23 ௨௩ அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
ඉති යද් වචනං පුර්ව්වං භවිෂ්‍යද්වක්ත්‍රා ඊශ්වරඃ කථායාමාස, තත් තදානීං සිද්ධමභවත්|
24 ௨௪ யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
අනන්තරං යූෂඵ් නිද්‍රාතෝ ජාගරිත උත්ථාය පරමේශ්වරීයදූතස්‍ය නිදේශානුසාරේණ නිජාං ජායාං ජග්‍රාහ,
25 ௨௫ அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.
කින්තු යාවත් සා නිජං ප්‍රථමසුතං අ සුෂුවේ, තාවත් තාං නෝපාගච්ඡත්, තතඃ සුතස්‍ය නාම යීශුං චක්‍රේ|

< மத்தேயு 1 >