< மத்தேயு 1 >

1 ஆபிரகாமின் மகனாகிய தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு:
ଇବ୍ରାହୀମଃ ସନ୍ତାନୋ ଦାଯୂଦ୍ ତସ୍ୟ ସନ୍ତାନୋ ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ତସ୍ୟ ପୂର୍ୱ୍ୱପୁରୁଷୱଂଶଶ୍ରେଣୀ|
2 ஆபிரகாம் ஈசாக்கைப் பெற்றான்; ஈசாக்கு யாக்கோபைப் பெற்றான்; யாக்கோபு யூதாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்;
ଇବ୍ରାହୀମଃ ପୁତ୍ର ଇସ୍ହାକ୍ ତସ୍ୟ ପୁତ୍ରୋ ଯାକୂବ୍ ତସ୍ୟ ପୁତ୍ରୋ ଯିହୂଦାସ୍ତସ୍ୟ ଭ୍ରାତରଶ୍ଚ|
3 யூதா பாரேசையும் சாராவையும் தாமாரினிடத்தில் பெற்றான்; பாரேஸ் எஸ்ரோமைப் பெற்றான்; எஸ்ரோம் ஆராமைப் பெற்றான்;
ତସ୍ମାଦ୍ ଯିହୂଦାତସ୍ତାମରୋ ଗର୍ଭେ ପେରସ୍ସେରହୌ ଜଜ୍ଞାତେ, ତସ୍ୟ ପେରସଃ ପୁତ୍ରୋ ହିଷ୍ରୋଣ୍ ତସ୍ୟ ପୁତ୍ରୋ ଽରାମ୍|
4 ஆராம் அம்மினதாபைப் பெற்றான்; அம்மினதாப் நகசோனைப் பெற்றான்; நகசோன் சல்மோனைப் பெற்றான்;
ତସ୍ୟ ପୁତ୍ରୋ ଽମ୍ମୀନାଦବ୍ ତସ୍ୟ ପୁତ୍ରୋ ନହଶୋନ୍ ତସ୍ୟ ପୁତ୍ରଃ ସଲ୍ମୋନ୍|
5 சல்மோன் போவாசை ராகாபினிடத்தில் பெற்றான்; போவாஸ் ஓபேத்தை ரூத்தினிடத்தில் பெற்றான்; ஓபேத் ஈசாயைப் பெற்றான்;
ତସ୍ମାଦ୍ ରାହବୋ ଗର୍ଭେ ବୋଯମ୍ ଜଜ୍ଞେ, ତସ୍ମାଦ୍ ରୂତୋ ଗର୍ଭେ ଓବେଦ୍ ଜଜ୍ଞେ, ତସ୍ୟ ପୁତ୍ରୋ ଯିଶଯଃ|
6 ஈசாய் தாவீது ராஜாவைப் பெற்றான்; தாவீது ராஜா உரியாவின் மனைவியாக இருந்தவளிடத்தில் சாலொமோனைப் பெற்றான்;
ତସ୍ୟ ପୁତ୍ରୋ ଦାଯୂଦ୍ ରାଜଃ ତସ୍ମାଦ୍ ମୃତୋରିଯସ୍ୟ ଜାଯାଯାଂ ସୁଲେମାନ୍ ଜଜ୍ଞେ|
7 சாலொமோன் ரெகொபெயாமைப் பெற்றான்; ரெகொபெயாம் அபியாவைப் பெற்றான்; அபியா ஆசாவைப் பெற்றான்;
ତସ୍ୟ ପୁତ୍ରୋ ରିହବିଯାମ୍, ତସ୍ୟ ପୁତ୍ରୋଽବିଯଃ, ତସ୍ୟ ପୁତ୍ର ଆସା: |
8 ஆசா யோசபாத்தைப் பெற்றான்; யோசபாத் யோராமைப் பெற்றான்; யோராம் உசியாவைப் பெற்றான்;
ତସ୍ୟ ସୁତୋ ଯିହୋଶାଫଟ୍ ତସ୍ୟ ସୁତୋ ଯିହୋରାମ ତସ୍ୟ ସୁତ ଉଷିଯଃ|
9 உசியா யோதாமைப் பெற்றான்; யோதாம் ஆகாஸைப் பெற்றான்; ஆகாஸ் எசேக்கியாவைப் பெற்றான்;
ତସ୍ୟ ସୁତୋ ଯୋଥମ୍ ତସ୍ୟ ସୁତ ଆହମ୍ ତସ୍ୟ ସୁତୋ ହିଷ୍କିଯଃ|
10 ௧0 எசேக்கியா மனாசேயைப் பெற்றான்; மனாசே ஆமோனைப் பெற்றான்; ஆமோன் யோசியாவைப் பெற்றான்;
ତସ୍ୟ ସୁତୋ ମିନଶିଃ, ତସ୍ୟ ସୁତ ଆମୋନ୍ ତସ୍ୟ ସୁତୋ ଯୋଶିଯଃ|
11 ௧௧ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போகும்காலத்தில், யோசியா எகொனியாவையும் அவனுடைய சகோதரர்களையும் பெற்றான்.
ବାବିଲ୍ନଗରେ ପ୍ରୱସନାତ୍ ପୂର୍ୱ୍ୱଂ ସ ଯୋଶିଯୋ ଯିଖନିଯଂ ତସ୍ୟ ଭ୍ରାତୃଂଶ୍ଚ ଜନଯାମାସ|
12 ௧௨ பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப் போனபின்பு, எகொனியா சலாத்தியேலைப் பெற்றான்; சலாத்தியேல் செருபாபேலைப் பெற்றான்;
ତତୋ ବାବିଲି ପ୍ରୱସନକାଲେ ଯିଖନିଯଃ ଶଲ୍ତୀଯେଲଂ ଜନଯାମାସ, ତସ୍ୟ ସୁତଃ ସିରୁବ୍ବାୱିଲ୍|
13 ௧௩ செருபாபேல் அபியூதைப் பெற்றான்; அபியூத் எலியாக்கீமைப் பெற்றான்; எலியாக்கீம் ஆசோரைப் பெற்றான்;
ତସ୍ୟ ସୁତୋ ଽବୋହୁଦ୍ ତସ୍ୟ ସୁତ ଇଲୀଯାକୀମ୍ ତସ୍ୟ ସୁତୋଽସୋର୍|
14 ௧௪ ஆசோர் சாதோக்கைப் பெற்றான்; சாதோக்கு ஆகீமைப் பெற்றான்; ஆகீம் எலியூதைப் பெற்றான்;
ଅସୋରଃ ସୁତଃ ସାଦୋକ୍ ତସ୍ୟ ସୁତ ଆଖୀମ୍ ତସ୍ୟ ସୁତ ଇଲୀହୂଦ୍|
15 ௧௫ எலியூத் எலெயாசாரைப் பெற்றான்; எலெயாசார் மாத்தானைப் பெற்றான்; மாத்தான் யாக்கோபைப் பெற்றான்;
ତସ୍ୟ ସୁତ ଇଲିଯାସର୍ ତସ୍ୟ ସୁତୋ ମତ୍ତନ୍|
16 ௧௬ யாக்கோபு மரியாளுடைய புருஷனாகிய யோசேப்பைப் பெற்றான்; மரியாளிடத்தில் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
ତସ୍ୟ ସୁତୋ ଯାକୂବ୍ ତସ୍ୟ ସୁତୋ ଯୂଷଫ୍ ତସ୍ୟ ଜାଯା ମରିଯମ୍; ତସ୍ୟ ଗର୍ଭେ ଯୀଶୁରଜନି, ତମେୱ ଖ୍ରୀଷ୍ଟମ୍ (ଅର୍ଥାଦ୍ ଅଭିଷିକ୍ତଂ) ୱଦନ୍ତି|
17 ௧௭ இவ்விதமாக உண்டான தலைமுறைகளெல்லாம் ஆபிரகாம்முதல் தாவீதுவரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; தாவீதுமுதல் பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்வரைக்கும் பதினாலு தலைமுறைகளும்; பாபிலோனுக்குச் சிறைப்பட்டுப்போன காலம்முதல் கிறிஸ்துவரைக்கும் பதினான்கு தலைமுறைகளாகும்.
ଇତ୍ଥମ୍ ଇବ୍ରାହୀମୋ ଦାଯୂଦଂ ଯାୱତ୍ ସାକଲ୍ୟେନ ଚତୁର୍ଦଶପୁରୁଷାଃ; ଆ ଦାଯୂଦଃ କାଲାଦ୍ ବାବିଲି ପ୍ରୱସନକାଲଂ ଯାୱତ୍ ଚତୁର୍ଦଶପୁରୁଷା ଭୱନ୍ତି| ବାବିଲି ପ୍ରୱାସନକାଲାତ୍ ଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ କାଲଂ ଯାୱତ୍ ଚତୁର୍ଦଶପୁରୁଷା ଭୱନ୍ତି|
18 ௧௮ இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பின் விபரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கும்போது, அவர்கள் இணைவதற்குமுன்பே, அவள் பரிசுத்த ஆவியானவராலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது.
ଯୀଶୁଖ୍ରୀଷ୍ଟସ୍ୟ ଜନ୍ମ କଥ୍ଥତେ| ମରିଯମ୍ ନାମିକା କନ୍ୟା ଯୂଷଫେ ୱାଗ୍ଦତ୍ତାସୀତ୍, ତଦା ତଯୋଃ ସଙ୍ଗମାତ୍ ପ୍ରାକ୍ ସା କନ୍ୟା ପୱିତ୍ରେଣାତ୍ମନା ଗର୍ଭୱତୀ ବଭୂୱ|
19 ௧௯ அவள் கணவனாகிய யோசேப்பு நீதிமானாக இருந்து, அவளை அவமானப்படுத்த விருப்பமில்லாமல், இரகசியமாக அவளை விவாகரத்துசெய்ய யோசனையாக இருந்தான்.
ତତ୍ର ତସ୍ୟାଃ ପତି ର୍ୟୂଷଫ୍ ସୌଜନ୍ୟାତ୍ ତସ୍ୟାଃ କଲଙ୍ଗଂ ପ୍ରକାଶଯିତୁମ୍ ଅନିଚ୍ଛନ୍ ଗୋପନେନେ ତାଂ ପାରିତ୍ୟକ୍ତୁଂ ମନଶ୍ଚକ୍ରେ|
20 ௨0 அவன் இப்படி நினைத்துக்கொண்டு இருக்கும்போது, கர்த்தருடைய தூதன் கனவில் அவனுக்குக் காணப்பட்டு: “தாவீதின் குமாரனாகிய யோசேப்பே, உன் மனைவியாகிய மரியாளைச் சேர்த்துக்கொள்ள பயப்படாதே; அவளிடத்தில் கருவுற்றிருக்கிறது பரிசுத்த ஆவியானவரால் உண்டானது.
ସ ତଥୈୱ ଭାୱଯତି, ତଦାନୀଂ ପରମେଶ୍ୱରସ୍ୟ ଦୂତଃ ସ୍ୱପ୍ନେ ତଂ ଦର୍ଶନଂ ଦତ୍ତ୍ୱା ୱ୍ୟାଜହାର, ହେ ଦାଯୂଦଃ ସନ୍ତାନ ଯୂଷଫ୍ ତ୍ୱଂ ନିଜାଂ ଜାଯାଂ ମରିଯମମ୍ ଆଦାତୁଂ ମା ଭୈଷୀଃ|
21 ௨௧ அவள் ஒரு மகனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக; ஏனென்றால், அவர் தமது மக்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்” என்றான்.
ଯତସ୍ତସ୍ୟା ଗର୍ଭଃ ପୱିତ୍ରାଦାତ୍ମନୋଽଭୱତ୍, ସା ଚ ପୁତ୍ରଂ ପ୍ରସୱିଷ୍ୟତେ, ତଦା ତ୍ୱଂ ତସ୍ୟ ନାମ ଯୀଶୁମ୍ (ଅର୍ଥାତ୍ ତ୍ରାତାରଂ) କରୀଷ୍ୟସେ, ଯସ୍ମାତ୍ ସ ନିଜମନୁଜାନ୍ ତେଷାଂ କଲୁଷେଭ୍ୟ ଉଦ୍ଧରିଷ୍ୟତି|
22 ௨௨ தீர்க்கதரிசியின் மூலமாகக் கர்த்தராலே உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இதெல்லாம் நடந்தது.
ଇତ୍ଥଂ ସତି, ପଶ୍ୟ ଗର୍ଭୱତୀ କନ୍ୟା ତନଯଂ ପ୍ରସୱିଷ୍ୟତେ| ଇମ୍ମାନୂଯେଲ୍ ତଦୀଯଞ୍ଚ ନାମଧେଯଂ ଭୱିଷ୍ୟତି|| ଇମ୍ମାନୂଯେଲ୍ ଅସ୍ମାକଂ ସଙ୍ଗୀଶ୍ୱରଇତ୍ୟର୍ଥଃ|
23 ௨௩ அவன்: “இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பெயரிடுவார்கள்” என்று சொன்னான். இம்மானுவேல் என்பதற்கு தேவன் நம்மோடு இருக்கிறார் என்று அர்த்தம்.
ଇତି ଯଦ୍ ୱଚନଂ ପୁର୍ୱ୍ୱଂ ଭୱିଷ୍ୟଦ୍ୱକ୍ତ୍ରା ଈଶ୍ୱରଃ କଥାଯାମାସ, ତତ୍ ତଦାନୀଂ ସିଦ୍ଧମଭୱତ୍|
24 ௨௪ யோசேப்பு தூக்கம் தெளிந்து எழுந்து, கர்த்தருடைய தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே தன் மனைவியைச் சேர்த்துக்கொண்டு;
ଅନନ୍ତରଂ ଯୂଷଫ୍ ନିଦ୍ରାତୋ ଜାଗରିତ ଉତ୍ଥାଯ ପରମେଶ୍ୱରୀଯଦୂତସ୍ୟ ନିଦେଶାନୁସାରେଣ ନିଜାଂ ଜାଯାଂ ଜଗ୍ରାହ,
25 ௨௫ அவள் தன் முதற்பேறான மகனைப் பெற்றெடுக்கும் வரை அவளோடு இணையாமலிருந்து, அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.
କିନ୍ତୁ ଯାୱତ୍ ସା ନିଜଂ ପ୍ରଥମସୁତଂ ଅ ସୁଷୁୱେ, ତାୱତ୍ ତାଂ ନୋପାଗଚ୍ଛତ୍, ତତଃ ସୁତସ୍ୟ ନାମ ଯୀଶୁଂ ଚକ୍ରେ|

< மத்தேயு 1 >