< மத்தேயு 9 >

1 அப்பொழுது, அவர் படகில் ஏறி, இக்கரையில் உள்ள தம்முடைய பட்டணத்திற்கு வந்தார்.
I ušavši u laðu prijeðe i doðe u svoj grad.
2 அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு பக்கவாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
I gle, donesoše mu uzeta koji ležaše na odru. I vidjevši Isus vjeru njihovu reèe uzetome: ne boj se, sinko, opraštaju ti se grijesi tvoji.
3 அப்பொழுது, வேதபண்டிதர்களில் சிலர்: இவன் தேவனை அவமதித்துப் பேசுகிறான் என்று தங்களுடைய உள்ளத்தில் சொல்லிக்கொண்டார்கள்.
I gle, neki od književnika rekoše u sebi: ovaj huli na Boga.
4 இயேசு அவர்கள் நினைவுகளை அறிந்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் பொல்லாதவைகளைச் சிந்திக்கிறதென்ன?
I videæi Isus pomisli njihove reèe: zašto zlo mislite u srcima svojijem?
5 உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?
Jer šta je lakše reæi: opraštaju ti se grijesi; ili reæi: ustani i hodi?
6 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்றார்.
Ali da znate da vlast ima sin èovjeèij na zemlji opraštati grijehe tada reèe uzetome): ustani, uzmi odar svoj i idi doma.
7 உடனே அவன் எழுந்து, தன் வீட்டிற்குப்போனான்.
I ustavši otide doma.
8 மக்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, மனிதர்களுக்கு இப்படிப்பட்ட அதிகாரத்தைக் கொடுத்தவராகிய தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
A ljudi videæi èudiše se, i hvališe Boga, koji je dao vlast takovu ljudima.
9 இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகும்போது, வரிவசூல் மையத்தில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனிதனைக் கண்டு: எனக்குப் பின்னே வா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.
I odlazeæi Isus odande vidje èovjeka gdje sjedi na carini, po imenu Mateja, i reèe mu: hajde za mnom. I ustavši otide za njim.
10 ௧0 பின்பு அவர் வீட்டிலே உணவுப் பந்தியிருக்கும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் வந்து, இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
I kad jeðaše u kuæi, gle, mnogi carinici i grješnici doðoše i jeðahu s Isusom i s uèenicima njegovijem.
11 ௧௧ பரிசேயர்கள் அதைக் கண்டு, அவருடைய சீடர்களைப் பார்த்து: உங்களுடைய போதகர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உணவு சாப்பிடுகிறது ஏன் என்று கேட்டார்கள்.
I vidjevši to fariseji govorahu uèenicima njegovijem: zašto s carinicima i grješnicima uèitelj vaš jede i pije?
12 ௧௨ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமுள்ளவர்களுக்கு வேண்டியதில்லை.
A Isus èuvši to reèe im: ne trebaju zdravi ljekara nego bolesni.
13 ௧௩ பலியையல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன் என்பதின் கருத்து இன்னதென்று போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
Nego idite i nauèite se šta znaèi: milosti hoæu, a ne priloga. Jer ja nijesam došao da zovem pravednike no grješnike na pokajanje.
14 ௧௪ அப்பொழுது, யோவானுடைய சீடர்கள் அவரிடம் வந்து: நாங்களும் பரிசேயர்களும் அநேகமுறை உபவாசிக்கிறோமே; உம்முடைய சீடர்கள் உபவாசிக்காமல் இருக்கிறது ஏன் என்று கேட்டார்கள்.
Tada pristupiše k njemu uèenici Jovanovi govoreæi: zašto mi i fariseji postimo mnogo, a uèenici tvoji ne poste?
15 ௧௫ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் துயரப்படுவார்களா? மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அப்பொழுது உபவாசிப்பார்கள்.
A Isus reèe im: eda li mogu svatovi plakati dok je s njima ženik? Nego æe doæi vrijeme kad æe se oteti od njih ženik, i onda æe postiti.
16 ௧௬ ஒருவனும் புதிய துணியை பழைய ஆடையோடு இணைக்கமாட்டான்; இணைத்தால், அதினோடு இணைத்த பழைய ஆடையை அது அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
Jer niko ne meæe nove zakrpe na staru haljinu; jer æe zakrpa odadrijeti od haljine, i gora æe rupa biti.
17 ௧௭ புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றிவைக்கிறதும் இல்லை; ஊற்றிவைத்தால், தோல் பைகள் கிழிந்துபோகும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றிவைப்பார்கள், அப்பொழுது இரண்டும் பத்திரப்பட்டிருக்கும் என்றார்.
Niti se ljeva vino novo u mjehove stare; inaèe mjehovi prodru se i vino se prolije, i mjehovi propadnu. Nego se ljeva vino novo u mjehove nove, i oboje se saèuva.
18 ௧௮ அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கும்போது, தலைவன் ஒருவன் வந்து அவரை வணங்கி: என் மகள் இப்பொழுதுதான் இறந்துபோனாள்; ஆனாலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.
Dok on tako govoraše njima, gle, knez nekakav doðe i klanjaše mu se govoreæi: kæi moja sad umrije; nego doði i metni na nju ruku svoju, i oživljeæe.
19 ௧௯ இயேசு எழுந்து, தம்முடைய சீடர்களோடுகூட அவன் பின்னே போனார்.
I ustavši Isus za njim poðe i uèenici njegovi.
20 ௨0 அப்பொழுது, பன்னிரண்டு வருடங்களாக இரத்தப்போக்கினாலே கஷ்டப்படும் ஒரு பெண்:
I gle, žena koja je dvanaest godina bolovala od teèenja krvi pristupi sastrag i dohvati mu se skuta od haljine njegove.
21 ௨௧ நான் அவருடைய ஆடையையாவது தொட்டால் சுகமாவேன் என்று தன் உள்ளத்தில் எண்ணிக்கொண்டு, அவர் பின்னாலே வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்.
Jer govoraše u sebi: samo ako se dotaknem haljine njegove, ozdraviæu.
22 ௨௨ இயேசு திரும்பி, அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார். அந்தநேரத்திலேயே அந்தப் பெண் சுகமானாள்.
A Isus obazrevši se i vidjevši je reèe: ne boj se, kæeri; vjera tvoja pomogla ti je. I ozdravi žena od toga èasa.
23 ௨௩ இயேசுவானவர் அந்தத் தலைவனுடைய வீட்டிற்கு வந்து, சங்கு ஊதுகிறவர்களையும், ஒப்பாரி வைக்கிற மக்களையும் கண்டு:
I došavši Isus u dom knežev i vidjevši sviraèe i ljude zabunjene
24 ௨௪ விலகுங்கள், இந்த சிறுபெண் இறக்கவில்லை, தூங்கிக்கொண்டிருக்கிறாள் என்றார். அதற்காக அவரைப் பார்த்து ஏளனம் செய்தார்கள்.
Reèe im: otstupite, jer djevojka nije umrla, nego spava. I potsmijevahu mu se.
25 ௨௫ மக்கள் வெளியே அனுப்பப்பட்டப்பின்பு, அவர் உள்ளே பிரவேசித்து, அந்தச் சிறுபெண்ணின் கையைப் பிடித்தார்; உடனே அவள் எழுந்திருந்தாள்.
A kad istjera ljude, uðe, i uhvati je za ruku, i usta djevojka.
26 ௨௬ இந்தச் செய்தி அந்த நாடெங்கும் பிரசித்தமானது.
I otide glas ovaj po svoj zemlji onoj.
27 ௨௭ இயேசு அந்த இடத்தைவிட்டுப் போகும்போது, இரண்டு குருடர்கள் அவருக்குப் பின்னேசென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள்.
A kad je Isus odlazio odande, za njim iðahu dva slijepca vièuæi i govoreæi: pomiluj nas, sine Davidov!
28 ௨௮ அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர்கள் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களைப் பார்த்து: இதைச்செய்ய எனக்கு வல்லமை உண்டு என்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம் ஆண்டவரே! என்றார்கள்.
A kad doðe u kuæu, pristupiše k njemu slijepci, i reèe im Isus: vjerujete li da mogu to uèiniti? A oni mu rekoše: da, Gospode.
29 ௨௯ அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்களுடைய விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார்.
Tada dohvati se oèiju njihovijeh govoreæi: po vjeri vašoj neka vam bude.
30 ௩0 உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
I otvoriše im se oèi. I zaprijeti im Isus govoreæi: gledajte da niko ne dozna.
31 ௩௧ அவர்களோ புறப்பட்டு, அந்த நாடெங்கும் அவருடைய புகழைப் பிரசித்தப்படுத்தினார்கள்.
A oni izišavši razglasiše ga po svoj zemlji onoj.
32 ௩௨ அவர்கள் புறப்பட்டுப்போகும்போது, பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனிதனை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
Kad oni pak iziðu, gle, dovedoše k njemu èovjeka nijema i bijesna.
33 ௩௩ பிசாசு துரத்தப்பட்டப்பின்பு ஊமையன் பேசினான். மக்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருபோதும் காணப்படவில்லை என்றார்கள்.
I pošto izgna ðavola, progovori nijemi. I divljaše se narod govoreæi: nigda se toga nije vidjelo u Izrailju.
34 ௩௪ பரிசேயர்களோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள்.
A fariseji govorahu: pomoæu kneza ðavolskog izgoni ðavole.
35 ௩௫ பின்பு, இயேசு எல்லாப் பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கித்து, மக்களுக்கு உண்டாயிருந்த எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கி, அவர்களைச் சுகமாக்கினார்.
I prohoðaše Isus po svijem gradovima i selima uèeæi po zbornicama njihovijem i propovijedajuæi jevanðelje o carstvu, i iscjeljujuæi svaku bolest i svaku nemoæ po ljudima.
36 ௩௬ அவர் திரளான மக்களைக் கண்டபொழுது, அவர்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப்போல சோர்ந்துபோனவர்களும் திக்கற்றவர்களுமாக இருந்தபடியால், அவர்கள்மேல் மனதுருகி,
A gledajuæi ljude sažali mu se, jer bijahu smeteni i rasijani kao ovce bez pastira.
37 ௩௭ தம்முடைய சீடர்களைப் பார்த்து: அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞ்சம்;
Tada reèe uèenicima svojijem: žetve je mnogo, a poslenika malo.
38 ௩௮ ஆதலால், அறுப்புக்கு எஜமான் தமது வேலையாட்களை அனுப்பும்படி அவரை வேண்டிக்கொள்ளுங்கள் என்றார்.
Molite se dakle gospodaru od žetve da izvede poslenike na žetvu svoju.

< மத்தேயு 9 >