< மத்தேயு 5 >

1 இயேசு திரளான மக்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.
အနန္တရံ သ ဇနနိဝဟံ နိရီက္ၐျ ဘူဓရောပရိ ဝြဇိတွာ သမုပဝိဝေၑ၊
2 அப்பொழுது அவர் அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
တဒါနီံ ၑိၐျေၐု တသျ သမီပမာဂတေၐု တေန တေဘျ ဧၐာ ကထာ ကထျာဉ္စကြေ၊
3 “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
အဘိမာနဟီနာ ဇနာ ဓနျား, ယတသ္တေ သွရ္ဂီယရာဇျမ် အဓိကရိၐျန္တိ၊
4 துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
ခိဒျမာနာ မနုဇာ ဓနျား, ယသ္မာတ် တေ သာန္တွနာံ ပြာပ္သန္တိ၊
5 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்வார்கள்.
နမြာ မာနဝါၑ္စ ဓနျား, ယသ္မာတ် တေ မေဒိနီမ် အဓိကရိၐျန္တိ၊
6 நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
ဓရ္မ္မာယ ဗုဘုက္ၐိတား တၖၐာရ္တ္တာၑ္စ မနုဇာ ဓနျား, ယသ္မာတ် တေ ပရိတရ္ပ္သျန္တိ၊
7 இரக்கமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம்பெறுவார்கள்.
ကၖပါလဝေါ မာနဝါ ဓနျား, ယသ္မာတ် တေ ကၖပါံ ပြာပ္သျန္တိ၊
8 இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
နိရ္မ္မလဟၖဒယာ မနုဇာၑ္စ ဓနျား, ယသ္မာတ် တ ဤၑ္စရံ ဒြက္ၐျန္တိ၊
9 சமாதானம் செய்கிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனுடைய பிள்ளைகள் எனப்படுவார்கள்.
မေလယိတာရော မာနဝါ ဓနျား, ယသ္မာတ် တ ဤၑ္စရသျ သန္တာနတွေန ဝိချာသျန္တိ၊
10 ௧0 நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.
ဓရ္မ္မကာရဏာတ် တာဍိတာ မနုဇာ ဓနျာ, ယသ္မာတ် သွရ္ဂီယရာဇျေ တေၐာမဓိကရော ဝိဒျတေ၊
11 ௧௧ “என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவிதமான தீமையான சொற்களையும் உங்கள்மேல் பொய்யாகச் சொல்வார்களானால் பாக்கியவான்களாக இருப்பீர்கள்;
ယဒါ မနုဇာ မမ နာမကၖတေ ယုၐ္မာန် နိန္ဒန္တိ တာဍယန္တိ မၖၐာ နာနာဒုရွွာကျာနိ ဝဒန္တိ စ, တဒါ ယုယံ ဓနျား၊
12 ௧௨ சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; உங்களுக்குமுன்பே வாழ்ந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே.
တဒါ အာနန္ဒတ, တထာ ဘၖၑံ ဟ္လာဒဓွဉ္စ, ယတး သွရ္ဂေ ဘူယာံသိ ဖလာနိ လပ္သျဓွေ; တေ ယုၐ္မာကံ ပုရာတနာန် ဘဝိၐျဒွါဒိနော'ပိ တာဒၖဂ် အတာဍယန်၊
13 ௧௩ நீங்கள் பூமிக்கு உப்பாக இருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனிதர்களால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது.
ယုယံ မေဒိနျာံ လဝဏရူပါး, ကိန္တု ယဒိ လဝဏသျ လဝဏတွမ် အပယာတိ, တရှိ တတ် ကေန ပြကာရေဏ သွာဒုယုက္တံ ဘဝိၐျတိ? တတ် ကသျာပိ ကာရျျသျာယောဂျတွာတ် ကေဝလံ ဗဟိး ပြက္ၐေပ္တုံ နရာဏာံ ပဒတလေန ဒလယိတုဉ္စ ယောဂျံ ဘဝတိ၊
14 ௧௪ நீங்கள் உலகத்திற்கு வெளிச்சமாக இருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்கமாட்டாது.
ယူယံ ဇဂတိ ဒီပ္တိရူပါး, ဘူဓရောပရိ သ္ထိတံ နဂရံ ဂုပ္တံ ဘဝိတုံ နဟိ ၑက္ၐျတိ၊
15 ௧௫ விளக்கைக் கொளுத்தி பாத்திரத்தினாலே மூடிவைக்காமல், விளக்குத்தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள அனைவருக்கும் வெளிச்சம் கொடுக்கும்.
အပရံ မနုဇား ပြဒီပါန် ပြဇွာလျ ဒြောဏာဓော န သ္ထာပယန္တိ, ကိန္တု ဒီပါဓာရောပရျျေဝ သ္ထာပယန္တိ, တေန တေ ဒီပါ ဂေဟသ္ထိတာန် သကလာန် ပြကာၑယန္တိ၊
16 ௧௬ இவ்விதமாக, மனிதர்கள் உங்களுடைய நற்செயல்களைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்களுடைய வெளிச்சம் அவர்களுக்கு முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.
ယေန မာနဝါ ယုၐ္မာကံ သတ္ကရ္မ္မာဏိ ဝိလောကျ ယုၐ္မာကံ သွရ္ဂသ္ထံ ပိတရံ ဓနျံ ဝဒန္တိ, တေၐာံ သမက္ၐံ ယုၐ္မာကံ ဒီပ္တိသ္တာဒၖက် ပြကာၑတာမ်၊
17 ௧௭ நியாயப்பிரமாணத்தையானாலும் தீர்க்கதரிசனங்களையானாலும் அழிக்கிறதற்கு வந்தேன் என்று நினைத்துக்கொள்ளாதேயுங்கள்; அழிக்கிறதற்கு இல்லை, நிறைவேற்றுவதற்கே வந்தேன்.
အဟံ ဝျဝသ္ထာံ ဘဝိၐျဒွါကျဉ္စ လောပ္တုမ် အာဂတဝါန်, ဣတ္ထံ မာနုဘဝတ, တေ ဒွေ လောပ္တုံ နာဂတဝါန်, ကိန္တု သဖလေ ကရ္တ္တုမ် အာဂတောသ္မိ၊
18 ௧௮ வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும், நியாயப்பிரமாணத்தில் உள்ளதெல்லாம் நிறைவேறும்வரை, அதில் ஒரு சிறு எழுத்தாவது, ஒரு எழுத்தின் உறுப்பாவது ஒழிந்துபோகாது என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
အပရံ ယုၐ္မာန် အဟံ တထျံ ဝဒါမိ ယာဝတ် ဝျောမမေဒိနျော ရ္ဓွံသော န ဘဝိၐျတိ, တာဝတ် သရွွသ္မိန် သဖလေ န ဇာတေ ဝျဝသ္ထာယာ ဧကာ မာတြာ ဗိန္ဒုရေကောပိ ဝါ န လောပ္သျတေ၊
19 ௧௯ ஆகவே, இந்தக் கட்டளைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாவது மீறி, அவ்விதமாக மனிதர்களுக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லோரையும்விட சிறியவன் எனப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் எனப்படுவான்.
တသ္မာတ် ယော ဇန ဧတာသာမ် အာဇ္ဉာနာမ် အတိက္ၐုဒြာမ် ဧကာဇ္ဉာမပီ လံဃတေ မနုဇာံဉ္စ တထဲဝ ၑိက္ၐယတိ, သ သွရ္ဂီယရာဇျေ သရွွေဘျး က္ၐုဒြတွေန ဝိချာသျတေ, ကိန္တု ယော ဇနသ္တာံ ပါလယတိ, တထဲဝ ၑိက္ၐယတိ စ, သ သွရ္ဂီယရာဇျေ ပြဓာနတွေန ဝိချာသျတေ၊
20 ௨0 வேதபண்டிதர்கள் பரிசேயர்கள் என்பவர்களுடைய நீதியைவிட உங்களுடைய நீதி அதிகமாக இல்லாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
အပရံ ယုၐ္မာန် အဟံ ဝဒါမိ, အဓျာပကဖိရူၑိမာနဝါနာံ ဓရ္မ္မာနုၐ္ဌာနာတ် ယုၐ္မာကံ ဓရ္မ္မာနုၐ္ဌာနေ နောတ္တမေ ဇာတေ ယူယမ် ဤၑွရီယရာဇျံ ပြဝေၐ္ဋုံ န ၑက္ၐျထ၊
21 ௨௧ கொலை செய்யாதிருப்பாயாக என்பதும், கொலைசெய்கிறவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான் என்பதும், முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
အပရဉ္စ တွံ နရံ မာ ဝဓီး, ယသ္မာတ် ယော နရံ ဟန္တိ, သ ဝိစာရသဘာယာံ ဒဏ္ဍာရှော ဘဝိၐျတိ, ပူရွွကာလီနဇနေဘျ ဣတိ ကထိတမာသီတ်, ယုၐ္မာဘိရၑြာဝိ၊
22 ௨௨ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தன் சகோதரனை நியாயமில்லாமல் கோபித்துக்கொள்பவன் நியாயத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; தன் சகோதரனை வீணனென்று சொல்லுகிறவன் ஆலோசனைச் சங்கத்தீர்ப்பிற்கு உரியவனாக இருப்பான்; மூடனே என்று சொல்லுகிறவன் எரிநரகத்திற்கு உரியவனாக இருப்பான். (Geenna g1067)
ကိန္တွဟံ ယုၐ္မာန် ဝဒါမိ, ယး ကၑ္စိတ် ကာရဏံ ဝိနာ နိဇဘြာတြေ ကုပျတိ, သ ဝိစာရသဘာယာံ ဒဏ္ဍာရှော ဘဝိၐျတိ; ယး ကၑ္စိစ္စ သွီယသဟဇံ နိရ္ဗ္ဗောဓံ ဝဒတိ, သ မဟာသဘာယာံ ဒဏ္ဍာရှော ဘဝိၐျတိ; ပုနၑ္စ တွံ မူဎ ဣတိ ဝါကျံ ယဒိ ကၑ္စိတ် သွီယဘြာတရံ ဝက္တိ, တရှိ နရကာဂ္နော် သ ဒဏ္ဍာရှော ဘဝိၐျတိ၊ (Geenna g1067)
23 ௨௩ ஆகவே, நீ பலிபீடத்தில் உன் காணிக்கையைச் செலுத்த வந்து, உன்பேரில் உன் சகோதரனுக்குக் குறை உண்டென்று அங்கே நினைவுகூருவாயானால்,
အတော ဝေဒျား သမီပံ နိဇနဲဝေဒျေ သမာနီတေ'ပိ နိဇဘြာတရံ ပြတိ ကသ္မာစ္စိတ် ကာရဏာတ် တွံ ယဒိ ဒေါၐီ ဝိဒျသေ, တဒါနီံ တဝ တသျ သ္မၖတိ ရ္ဇာယတေ စ,
24 ௨௪ அங்கே பலிபீடத்தின்முன்பு உன் காணிக்கையை வைத்துவிட்டுப்போய், முதலில் உன் சகோதரனோடு ஒப்புரவாகி, பின்பு வந்து உன் காணிக்கையைச் செலுத்து.
တရှိ တသျာ ဝေဒျား သမီပေ နိဇနဲဝဲဒျံ နိဓာယ တဒဲဝ ဂတွာ ပူရွွံ တေန သာရ္ဒ္ဓံ မိလ, ပၑ္စာတ် အာဂတျ နိဇနဲဝေဒျံ နိဝေဒယ၊
25 ௨௫ எதிராளி உன்னை நியாயாதிபதியினிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நியாயாதிபதி உன்னைச் சேவகனிடத்தில் ஒப்புக்கொடுக்காமலும், நீ சிறைச்சாலையில் வைக்கப்படாமலும் இருக்கும்படியாக, நீ உன் எதிராளியோடு வழியில் இருக்கும்போதே சீக்கிரமாக அவனோடு சமாதானமாகு.
အနျဉ္စ ယာဝတ် ဝိဝါဒိနာ သာရ္ဒ္ဓံ ဝရ္တ္မနိ တိၐ္ဌသိ, တာဝတ် တေန သာရ္ဒ္ဓံ မေလနံ ကုရု; နော စေတ် ဝိဝါဒီ ဝိစာရယိတုး သမီပေ တွာံ သမရ္ပယတိ ဝိစာရယိတာ စ ရက္ၐိဏး သန္နိဓော် သမရ္ပယတိ တဒါ တွံ ကာရာယာံ ဗဓျေထား၊
26 ௨௬ இல்லாவிட்டால், நீ ஒரு காசும் குறைவில்லாமல் செலுத்தித்தீர்க்கும்வரைக்கும் சிறைச்சாலையிலிருந்து வெளியே வரமாட்டாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
တရှိ တွာမဟံ တထ္ထံ ဗြဝီမိ, ၑေၐကပရ္ဒကေ'ပိ န ပရိၑောဓိတေ တသ္မာတ် သ္ထာနာတ် ကဒါပိ ဗဟိရာဂန္တုံ န ၑက္ၐျသိ၊
27 ௨௭ விபசாரம் செய்யாதிருப்பாயாக என்பது முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
အပရံ တွံ မာ ဝျဘိစရ, ယဒေတဒ် ဝစနံ ပူရွွကာလီနလောကေဘျး ကထိတမာသီတ်, တဒ် ယူယံ ၑြုတဝန္တး;
28 ௨௮ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் தன் இருதயத்தில் அவளோடு விபசாரம் செய்துவிட்டான்.
ကိန္တွဟံ ယုၐ္မာန် ဝဒါမိ, ယဒိ ကၑ္စိတ် ကာမတး ကာဉ္စန ယောၐိတံ ပၑျတိ, တရှိ သ မနသာ တဒဲဝ ဝျဘိစရိတဝါန်၊
29 ௨௯ உன் வலது கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட, உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
တသ္မာတ် တဝ ဒက္ၐိဏံ နေတြံ ယဒိ တွာံ ဗာဓတေ, တရှိ တန္နေတြမ် ဥတ္ပာဋျ ဒူရေ နိက္ၐိပ, ယသ္မာတ် တဝ သရွွဝပုၐော နရကေ နိက္ၐေပါတ် တဝဲကာင်္ဂသျ နာၑော ဝရံ၊ (Geenna g1067)
30 ௩0 உன் வலது கை உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைவிட. உன் உறுப்புகளில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
ယဒွါ တဝ ဒက္ၐိဏး ကရော ယဒိ တွာံ ဗာဓတေ, တရှိ တံ ကရံ ဆိတ္တွာ ဒူရေ နိက္ၐိပ, ယတး သရွွဝပုၐော နရကေ နိက္ၐေပါတ် ဧကာင်္ဂသျ နာၑော ဝရံ၊ (Geenna g1067)
31 ௩௧ தன் மனைவியை விவாகரத்து செய்கிற எவனும், அவளுக்கு விடுதலைப்பத்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது.
ဥက္တမာသ္တေ, ယဒိ ကၑ္စိန် နိဇဇာယာံ ပရိတျက္တ္တုမ် ဣစ္ဆတိ, တရှိ သ တသျဲ တျာဂပတြံ ဒဒါတု၊
32 ௩௨ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தனக் காரணத்தினாலொழிய தன் மனைவியை விவாகரத்து செய்கிறவன், அவளை விபசாரம்செய்யத் தூண்டுகிறவனாக இருப்பான்; அப்படி விவாகரத்து செய்யப்பட்டவளைத் திருமணம் செய்கிறவனும் விபசாரம் செய்கிறவனாக இருப்பான்.
ကိန္တွဟံ ယုၐ္မာန် ဝျာဟရာမိ, ဝျဘိစာရဒေါၐေ န ဇာတေ ယဒိ ကၑ္စိန် နိဇဇာယာံ ပရိတျဇတိ, တရှိ သ တာံ ဝျဘိစာရယတိ; ယၑ္စ တာံ တျက္တာံ သ္တြိယံ ဝိဝဟတိ, သောပိ ဝျဘိစရတိ၊
33 ௩௩ அன்றியும், பொய்யாணையிடாமல், உன் ஆணைகளைக் கர்த்தர் முன்னிலையில் செலுத்துவாயாக என்று முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
ပုနၑ္စ တွံ မၖၐာ ၑပထမ် န ကုရွွန် ဤၑ္စရာယ နိဇၑပထံ ပါလယ, ပူရွွကာလီနလောကေဘျော ယဲၐာ ကထာ ကထိတာ, တာမပိ ယူယံ ၑြုတဝန္တး၊
34 ௩௪ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; எதையும் செய்வேன் என்று சத்தியம் செய்யவேண்டாம்; பரலோகத்தின்பேரில் சத்தியம் செய்யவேண்டாம், அது தேவனுடைய சிங்காசனம்.
ကိန္တွဟံ ယုၐ္မာန် ဝဒါမိ, ကမပိ ၑပထံ မာ ကာရ္ၐ္ဋ, အရ္ထတး သွရ္ဂနာမ္နာ န, ယတး သ ဤၑွရသျ သိံဟာသနံ;
35 ௩௫ பூமியின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது அவருடைய பாதபடி; எருசலேமின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அது மகாராஜாவினுடைய நகரம்.
ပၖထိဝျာ နာမ္နာပိ န, ယတး သာ တသျ ပါဒပီဌံ; ယိရူၑာလမော နာမ္နာပိ န, ယတး သာ မဟာရာဇသျ ပုရီ;
36 ௩௬ உன் தலையின்பேரிலும் சத்தியம் செய்யவேண்டாம், அதின் ஒரு முடியையாவது வெண்மையாக்கவும் கருமையாக்கவும் உன்னால் முடியாதே.
နိဇၑိရောနာမ္နာပိ န, ယသ္မာတ် တသျဲကံ ကစမပိ သိတမ် အသိတံ ဝါ ကရ္တ္တုံ တွယာ န ၑကျတေ၊
37 ௩௭ உள்ளதை உள்ளதென்றும், இல்லாததை இல்லையென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
အပရံ ယူယံ သံလာပသမယေ ကေဝလံ ဘဝတီတိ န ဘဝတီတိ စ ဝဒတ ယတ ဣတော'ဓိကံ ယတ် တတ် ပါပါတ္မနော ဇာယတေ၊
38 ௩௮ கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று, சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
အပရံ လောစနသျ ဝိနိမယေန လောစနံ ဒန္တသျ ဝိနိမယေန ဒန္တး ပူရွွက္တမိဒံ ဝစနဉ္စ ယုၐ္မာဘိရၑြူယတ၊
39 ௩௯ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு.
ကိန္တွဟံ ယုၐ္မာန် ဝဒါမိ ယူယံ ဟိံသကံ နရံ မာ ဝျာဃာတယတ၊ ကိန္တု ကေနစိတ် တဝ ဒက္ၐိဏကပေါလေ စပေဋာဃာတေ ကၖတေ တံ ပြတိ ဝါမံ ကပေါလဉ္စ ဝျာဃောဋယ၊
40 ௪0 உன்னோடு வழக்காடி உன் ஆடையை எடுத்துக்கொள்ளவேண்டுமென்று விரும்புகிறவனுக்கு உன் மேலாடையையும் கொடுத்துவிடு.
အပရံ ကေနစိတ် တွယာ သာရ္ဓ္ဒံ ဝိဝါဒံ ကၖတွာ တဝ ပရိဓေယဝသနေ ဇိဃၖတိတေ တသ္မာယုတ္တရီယဝသနမပိ ဒေဟိ၊
41 ௪௧ ஒருவன் உன்னை ஒரு மைல்தூரம் வரக் கட்டாயப்படுத்தினால், அவனோடுகூட இரண்டு மைல்தூரம் போ.
ယဒိ ကၑ္စိတ် တွာံ ကြောၑမေကံ နယနာရ္ထံ အနျာယတော ဓရတိ, တဒါ တေန သာရ္ဓ္ဒံ ကြောၑဒွယံ ယာဟိ၊
42 ௪௨ உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு, உன்னிடத்தில் கடன் வாங்க விரும்புகிறவனுக்கு முகங்கோணாதே.
ယၑ္စ မာနဝသ္တွာံ ယာစတေ, တသ္မဲ ဒေဟိ, ယဒိ ကၑ္စိတ် တုဘျံ ဓာရယိတုမ် ဣစ္ဆတိ, တရှိ တံ ပြတိ ပရာံမုခေါ မာ ဘူး၊
43 ௪௩ உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
နိဇသမီပဝသိနိ ပြေမ ကုရု, ကိန္တု ၑတြုံ ပြတိ ဒွေၐံ ကုရု, ယဒေတတ် ပုရောက္တံ ဝစနံ ဧတဒပိ ယူယံ ၑြုတဝန္တး၊
44 ௪௪ நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; உங்களுடைய சத்துருக்களை நேசியுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள்.
ကိန္တွဟံ ယုၐ္မာန် ဝဒါမိ, ယူယံ ရိပုဝွပိ ပြေမ ကုရုတ, ယေ စ ယုၐ္မာန် ၑပန္တေ, တာန, အာၑိၐံ ဝဒတ, ယေ စ ယုၐ္မာန် ၒတီယန္တေ, တေၐာံ မင်္ဂလံ ကုရုတ, ယေ စ ယုၐ္မာန် နိန္ဒန္တိ, တာဍယန္တိ စ, တေၐာံ ကၖတေ ပြာရ္ထယဓွံ၊
45 ௪௫ இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவிற்குப் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் தீயவர்கள்மேலும் நல்லவர்கள்மேலும் தமது சூரியனை உதிக்கச்செய்து, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.
တတြ ယး သတာမသတာဉ္စောပရိ ပြဘာကရမ် ဥဒါယယတိ, တထာ ဓာရ္မ္မိကာနာမဓာရ္မ္မိကာနာဉ္စောပရိ နီရံ ဝရ္ၐယတိ တာဒၖၑော ယော ယုၐ္မာကံ သွရ္ဂသ္ထး ပိတာ, ယူယံ တသျဲဝ သန္တာနာ ဘဝိၐျထ၊
46 ௪௬ உங்களை நேசிக்கிறவர்களையே நீங்கள் நேசிப்பீர்களானால், உங்களுக்குப் பலன் என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
ယေ ယုၐ္မာသု ပြေမ ကုရွွန္တိ, ယူယံ ယဒိ ကေဝလံ တေဝွေဝ ပြေမ ကုရုထ, တရှိ ယုၐ္မာကံ ကိံ ဖလံ ဘဝိၐျတိ? စဏ္ဍာလာ အပိ တာဒၖၑံ ကိံ န ကုရွွန္တိ?
47 ௪௭ உங்களுடைய சகோதரர்களைமட்டும் வாழ்த்துவீர்களானால், நீங்கள் விசேஷித்துச் செய்கிறது என்ன? வரி வசூலிப்பவர்களும் அப்படியே செய்கிறார்கள் அல்லவா?
အပရံ ယူယံ ယဒိ ကေဝလံ သွီယဘြာတၖတွေန နမတ, တရှိ ကိံ မဟတ် ကရ္မ္မ ကုရုထ? စဏ္ဍာလာ အပိ တာဒၖၑံ ကိံ န ကုရွွန္တိ?
48 ௪௮ ஆகவே, பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதா பூரண சற்குணராக இருக்கிறதுபோல, நீங்களும் பூரண சற்குணராக இருக்கக்கடவீர்கள்.
တသ္မာတ် ယုၐ္မာကံ သွရ္ဂသ္ထး ပိတာ ယထာ ပူရ္ဏော ဘဝတိ, ယူယမပိ တာဒၖၑာ ဘဝတ၊

< மத்தேயு 5 >