< மத்தேயு 28 >

1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
tataH paraM vizrAmavArasya zESE saptAhaprathamadinasya prabhOtE jAtE magdalInI mariyam anyamariyam ca zmazAnaM draSTumAgatA|
2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
tadA mahAn bhUkampO'bhavat; paramEzvarIyadUtaH svargAdavaruhya zmazAnadvArAt pASANamapasAryya taduparyyupavivEza|
3 அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
tadvadanaM vidyudvat tEjOmayaM vasanaM himazubhranjca|
4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
tadAnIM rakSiNastadbhayAt kampitA mRtavad babhUvaH|
5 தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
sa dUtO yOSitO jagAda, yUyaM mA bhaiSTa, kruzahatayIzuM mRgayadhvE tadahaM vEdmi|
6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்;
sO'tra nAsti, yathAvadat tathOtthitavAn; Etat prabhOH zayanasthAnaM pazyata|
7 சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
tUrNaM gatvA tacchiSyAn iti vadata, sa zmazAnAd udatiSThat, yuSmAkamagrE gAlIlaM yAsyati yUyaM tatra taM vIkSiSyadhvE, pazyatAhaM vArttAmimAM yuSmAnavAdiSaM|
8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
tatastA bhayAt mahAnandAnjca zmazAnAt tUrNaM bahirbhUya tacchiSyAn vArttAM vaktuM dhAvitavatyaH| kintu ziSyAn vArttAM vaktuM yAnti, tadA yIzu rdarzanaM dattvA tA jagAda,
9 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
yuSmAkaM kalyANaM bhUyAt, tatastA Agatya tatpAdayOH patitvA praNEmuH|
10 ௧0 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
yIzustA avAdIt, mA bibhIta, yUyaM gatvA mama bhrAtRn gAlIlaM yAtuM vadata, tatra tE mAM drakSyanti|
11 ௧௧ அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.
striyO gacchanti, tadA rakSiNAM kEcit puraM gatvA yadyad ghaTitaM tatsarvvaM pradhAnayAjakAn jnjApitavantaH|
12 ௧௨ இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
tE prAcInaiH samaM saMsadaM kRtvA mantrayantO bahumudrAH sEnAbhyO dattvAvadan,
13 ௧௩ நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
asmAsu nidritESu tacchiSyA yAminyAmAgatya taM hRtvAnayan, iti yUyaM pracArayata|
14 ௧௪ இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
yadyEtadadhipatEH zrOtragOcarIbhavEt, tarhi taM bOdhayitvA yuSmAnaviSyAmaH|
15 ௧௫ அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது.
tatastE mudrA gRhItvA zikSAnurUpaM karmma cakruH, yihUdIyAnAM madhyE tasyAdyApi kiMvadantI vidyatE|
16 ௧௬ பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
EkAdaza ziSyA yIzunirUpitAgAlIlasyAdriM gatvA
17 ௧௭ அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
tatra taM saMvIkSya praNEmuH, kintu kEcit sandigdhavantaH|
18 ௧௮ அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
yIzustESAM samIpamAgatya vyAhRtavAn, svargamEdinyOH sarvvAdhipatitvabhArO mayyarpita AstE|
19 ௧௯ ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
atO yUyaM prayAya sarvvadEzIyAn ziSyAn kRtvA pituH putrasya pavitrasyAtmanazca nAmnA tAnavagAhayata; ahaM yuSmAn yadyadAdizaM tadapi pAlayituM tAnupAdizata|
20 ௨0 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
pazyata, jagadantaM yAvat sadAhaM yuSmAbhiH sAkaM tiSThAmi| iti| (aiōn g165)

< மத்தேயு 28 >