< மத்தேயு 28 >

1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
ବିସ୍‌ରାମ୍‌ବାରର୍‌ ଆର୍‌କର୍‌ ଦିନେ, ରଇବାର୍‌ ସାକାଲେ ମଗ୍‌ଦଲିନି ମରିୟମ୍‌ ଆରି ବିନ୍‌ ମରିୟମ୍‌ ଜିସୁକେ ସଙ୍ଗଇରଇବା କବର୍‌ ଦେକ୍‌ବାର୍‌ ଗାଲାଇ ।
2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
ସେଡ୍‌କିବେଲେ ଅଟାତ୍‌ ଦର୍‌ତନି ଚୁଲ୍‌ବୁଲିଗାଲା । ଏଦେ ଦେକା! ମାପ୍‌ରୁର୍‌ ଗଟେକ୍‌ ସରଗ୍‌ ଦୁତ୍‌ ଉତ୍‌ରି ଆସି, କବର୍‌ ମୁଆଟେ ଡାବିରଇଲା ପାକ୍‌ନା ଡୁଲ୍‌ଗୁଡାଇଦେଇ ତାର୍‌ ଉପ୍‌ରେ ବସି ରଇଲା ।
3 அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
ତାର୍‌ ଗୁଲାଇ ଗାଗଡ୍‌ ବିଜ୍‌ଲି ପାରା ଜଟକ୍‌ତେରଇଲା ଆରି ସେ ପିନ୍ଦିରଇବାଟା ବରପ୍‌ ପାରା ଚିଟ୍‌ ଦବ୍‌ ରଇଲା ।
4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
ଜାଗୁଆଲ୍‌ମନ୍‌ ଦୁତ୍‌କେ ଦେକି ଡରି ତର୍‌ତରି ଗାଲାଇ ଆରି ମଲା ଲକର୍‌ପାରା ଅଇଗାଲାଇ ।
5 தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
ସରଗର୍‌ ଦୁତ୍‌ ମାଇଜିମନ୍‌କେ କଇଲା, “ଡରା ନାଇ । ମୁଇ ଜାନି, ତମେ କୁର୍‌ସେ ମରିରଇବା ଜିସୁକେ ଦେକ୍‌ବାର୍‌ ଆସିଆଚାସ୍‌ ।
6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்;
ସେ ଇତି ନାଇ । ସେ କଇଲା ଇସାବେ ଆରି ତରେକ୍‌ ଉଟି ଆଚେ । ଆସି ଦେକା, ଇତି ତାର୍‌ ମଲା ଗାଗଡ୍‌ ସଙ୍ଗଇରଇଲାଇ ।”
7 சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
“ତମେ ଦାପ୍‌ରେ ଜାଇ ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌କେ କୁଆ, ସେ ଆରି ତରେକ୍‌ ଜିବନ୍‌ ଅଇଆଚେ ଆରି ତମର୍‌ ଆଗେ ଆଗେ ଗାଲିଲି ଗାଲା ଆଚେ । ତମେ ତେଇ ତାକେ ଦେକ୍‌ସା । ମୁଇ ଜାଇଟା କଇଲି ମନେ ରକିରୁଆ ।”
8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
ଏ କାତାସୁନି ସେମନ୍‌ ଦାପ୍‌ରେ କବର୍‌ଦେଲା ଟାନେଅନି ସିସ୍‌ମନର୍‌ ଲଗେ ପାଲାଇଲାଇ । ଡରିକରି ରଇଲେ ମିସା, ତାକର୍‌ ମନେ ବେସି ସାର୍‌ଦା ଜାନିପାର୍‌ତେ ରଇଲାଇ ।
9 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
ସେଦାପ୍‌ରେ ଜିସୁ ସେମନ୍‌କେ ବେଟ୍‌ଅଇ କଇଲା, “ତମ୍‌କେ ସାନ୍ତି ମିଲ!” ସେମନ୍‌ ଜିସୁର୍‌ ଲଗେ ଜାଇ ତାର୍‌ ପାଦ୍‌ ଦାରି ଜୁଆର୍‌ କଲାଇ ।
10 ௧0 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
୧୦ଜିସୁ ସେମନ୍‌କେ କଇଲା, “ଡରା ନାଇ । ମର୍‌ ବାଇମନ୍‌କେ କୁଆ, ସେମନ୍‌ ଗାଲିଲି ଆସତ୍‌ । ତେଇ ସେମନ୍‌ ମକେ ଦେକ୍‌ବାଇ ।”
11 ௧௧ அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.
୧୧ମାଇଜିମନ୍‌ ତେଇଅନି ଇଣ୍ଡିଜାଇତେ ରଇଲାଇ । ଜିବାବେଲେ ଜିସୁକେ କବର୍‌ ଦେଇ ରଇବାଟାନେ ଜାଗି ରଇଲା କେତେଟା ସନିଅମନ୍‌ ନଅରେ ବାଉଡି ଗାଲାଇ । ଜାଇକରି ମୁକିଅ ପୁଜାରିମନ୍‌କେ ଏ ସବୁ ଅଇଲାଟା ଜାନାଇଲାଇ ।
12 ௧௨ இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
୧୨ମୁକିଅ ପୁଜାରିମନ୍‌ ପାର୍‌ଚିନ୍‌ମନର୍‌ ସଙ୍ଗ୍‌ ମିସି କୁଟ୍‌ ପାଁଚ୍‌ଲାଇ । ସେମନ୍‌ ସନିଅମନ୍‌କେ ବେସି ଡାବୁ ଲାଁଚ୍‍ଦେଇ କଇଲାଇ,
13 ௧௩ நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
୧୩ତମେ କୁଆ “ଆମେ ରାତିଆ ସଇଦେଇ ରଇଲା ବେଲେ ତାର୍‌ ସିସ୍‌ମନ୍‌ ଆସି ତାର୍‌ ମଲା ଗାଗଡ୍‌ ଚରାଇ ଦାରିଗାଲାଇ ।
14 ௧௪ இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
୧୪ଜଦି ସାସନ୍‌କାରିଆ ଏ କାତା ନ ସୁନ୍‍ସି, ବଇଲେ ତମର୍‌ ଦସ୍‌ ନାଇ ବଲି ଆମେ ବୁଜାଇ ଦେବୁ । ଏ ବିସଇନେଇ ତମେ ଦାନ୍ଦା ଉଆନାଇ ।”
15 ௧௫ அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது.
୧୫ସନିଅମନ୍‌ ଡାବୁ ନେଇକରି, ସେମନ୍‌କେ କଇରଇଲା ଇସାବେ କାମ୍‌ କଲାଇ । ସେମନ୍‌ ସେବେଲେ ଜେନ୍ତି କଇରଇଲାଇ, ଜିଉଦିମନ୍‌ ଆଜିକେ ଜାକ ସେ କାତା ଜାନାଇଲାଇନି ।
16 ௧௬ பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
୧୬ଜିସୁ କଇବା ଇସାବେ ତାର୍‌ ଏଗାର୍‌ଟା ସିସ୍‌ମନ୍‌ ଗାଲିଲିର୍‌ ଗଟେକ୍‌ ଡଙ୍ଗର୍‌ ଉପ୍‌ରେ ଗାଲାଇ ।
17 ௧௭ அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
୧୭ଜିସୁକେ ଡଙ୍ଗର୍‌ ଉପ୍‌ରେ ଦେକି ସେମନ୍‌ ତାକେ ଜୁଆର୍‌ କଲାଇ । କେତେ ଲକ୍‌ ବିସ୍‌ବାସ୍‌ କରତ୍‌ ନାଇ ।
18 ௧௮ அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
୧୮ଜିସୁ ସେମନର୍‌ ଲଗେ ଜାଇ କଇଲା, “ସରଗ୍‌ ଆରି ମଚ୍‌ପୁରର୍‌ ସବୁ ଅଦିକାର୍‌ ମକେ ଦିଆଅଇଲା ଆଚେ ।
19 ௧௯ ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
୧୯ତେବେ ତମେ ଦେସ୍‌ମନ୍‌କେ ରଇବା ସବୁ ବାସାର୍‌ ଲକ୍‌ମନର୍‌ ଲଗେ ଜାଇ, ସେମନ୍‌କେ ମର୍‌ ସିସ୍‌ କରାଆ । ବାବା, ପଅ ଆରି ସୁକଲ୍‌ ଆତ୍‌ମାର୍‌ ନାଉଁଦାରି ସେମନ୍‌କେ ଡୁବନ୍‌ ଦିଆସ୍‌ ।
20 ௨0 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
୨୦ଆରି ମୁଇ ଜନ୍‌ ସବୁ ସିକିଆ ଦେଇଆଚି, ସେଟା ମାନା ବଲି ସିକାଆ । ଆରି ମନେ ରଅ, କାଲ୍‌ କାଲ୍‌ ଜୁଗ୍‌ ଜୁଗ୍‌ ମୁଇ ସବୁବେଲେ ତମର୍‌ ସଙ୍ଗ୍‌ ରଇବି ।” (aiōn g165)

< மத்தேயு 28 >