< மத்தேயு 28 >

1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
ବିସାଉଁଣିବାର୍‌ ସଃର୍ଲା ହଃଚେ, ରଃୟ୍‌ବାର୍‌ ବର୍‌ ସଃକାଳ୍ୟା ମଗ୍‌ଦଲିନି ମରିୟମ୍‌ ଆର୍‌ ବିନ୍ ମରିୟମ୍‌ ମଃସୁଣ୍‌ ଦଃକୁକେ ଗଃଳାୟ୍‌ ।
2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
ଆର୍‌ ସଃଡେବଃଳ୍‌ ଦଃର୍ତି ଲଃଦ୍‌ବଃଦ୍‌ଲି, ଆର୍‌ ଇସ୍ୱରାର୍‌ ଗଟେକ୍‌ ଦୁତ୍‌ ସଃର୍ଗେହୁଣି ଉତ୍ରି ଆସି ମଃସୁଣ୍‌ ବାଟେ ଡାହିରିଲା ଟେଳା ଗୁଚାୟ୍‌ ତାର୍‌ ଉହ୍ରେ ବଃସ୍‌ଲା ।
3 அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
ସେ ଦୁତାର୍‌ ରୁହ୍‌ ବିଜ୍‌ଲି ହର୍‌ ଆର୍‌ ତାର୍‌ ହିନ୍ଦିରିଲା ବଃସ୍ତର୍‌ କଃରାଟେଳା ହର୍‌ ଚିଟ୍‌ ଦବ୍‌ ରିଲି ।
4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
ଆରେକ୍‌ ଜାଗ୍‌ତା ଲକ୍‌ମଃନ୍ ଦୁତ୍‌କେ ଡିରିକଃରି ତଃର୍‌ତଃରି ମଃଲା ଲକାର୍‌ ହର୍‌ ଅୟଃଲାୟ୍‌ ।
5 தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
ମଃତର୍‌ ସଃର୍ଗ୍‌ ଦୁତ୍‌ ସେ ମାୟ୍‌ଜିମଃନ୍‌କେ କୟ୍‌ଲା, “ତୁମିମଃନ୍ ଡିରା ନାୟ୍‌, ବଃଲେକ୍‌ ତୁମିମଃନ୍ ଜେ କ୍ରୁସ୍‌ ଉହ୍ରେ ମଃଲା ଜିସୁକେ ଲଳୁଲାସ୍‌, ମୁଁୟ୍‌ ସେରି ଜାଣି ।
6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்;
ସେ ଇତି ନାୟ୍‌, ମଃତର୍‌ ସେ ଜଃନ୍‌କଃରି କୟ୍‌ରିଲା, ତଃନ୍‌କଃରି ସେ ଉଟି ଆଚେ, ଆସା ଜୁୟ୍‌ତି ତାର୍‌ ମଃଲା ଗଃଗାଳ୍‌ ସଃଙ୍ଗା ଜାୟ୍‌ରିଲି, ସେ ଟାଣ୍ ଦଃକା ।
7 சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
ବେଗି ଜାୟ୍‌ ତୁମିମଃନ୍ ତାର୍‌ ଚେଲାମଃନ୍‌କେ କଃଉଆ, ‘ଜିସୁ ମଃଲା ଲକ୍‌ମଃନାର୍‌ ବିତ୍ରେହୁଣି ଉଟି ଆଚେ, ଆରେକ୍‌ ଦଃକା ସେ ତୁମାର୍‌ ଆଗ୍‌ତୁ ଗାଲିଲି ରାଜିଏ ଜଃଉଁଲା, ସେତି ତାକ୍‌ ତୁମିମଃନ୍ ଦଃକାସ୍‌!’ ଦଃକା ମୁଁୟ୍‌ ତୁମିକେ ଜାୟ୍‌ରି କୟ୍‌ଲେ, ସେରି ହାସ୍ରା ନାୟ୍‌ ।”
8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
ଇ କଃତା ସୁଣି ସେ ମାୟ୍‌ଜିମଃନ୍ ବେସି ଡିର୍ଲାୟ୍‌, ଆର୍‌ ବଃଡେ ସଃର୍ଦା ଅୟ୍‌ ମଃସୁଣ୍‌ କାଲେ ହୁଣି ଦାପେ ଜାୟ୍‌କଃରି ଜିସୁର୍‌ ଚେଲାମଃନ୍‌କେ କଃବୁର୍‌ ଦେଉଁକେ ଦଃବୁଳ୍‌ଲାୟ୍‌ ।
9 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
ଆର୍‌ ଜିସୁ ସେଦାହ୍ରେ ସେମଃନ୍‌କେ ଦଃକାୟ୍‌ ଅୟ୍‌କଃରି କୟ୍‌ଲା, “ତୁମାର୍‌ ସୁସ୍ତା ଅଃଉଅ ।” ତଃବେ ସେମଃନ୍ ଜିସୁର୍‌ ଲଃଗେ ଆସି ତାର୍‌ ହାଦ୍‌ ଦଃରି ତାକ୍‌ ଜୁଆର୍‌ କଃଲାୟ୍‌ ।
10 ௧0 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
ସେତାକ୍‌ ଜିସୁ ସେମଃନ୍‌କେ କୟ୍‌ଲା, “ଡିରା ନାୟ୍‌, ତୁମିମଃନ୍ ଜାହା ଆର୍‌ ମର୍‌ ବାୟ୍‌ମଃନ୍‌କେ କଃଉଆ ସେମଃନ୍ ଗାଲିଲି ଜଃଉଅତ୍‌; ସେମଃନ୍ ମକ୍‌ ସେତି ଦଃକ୍‌ତି ।”
11 ௧௧ அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.
ସେ ମାୟ୍‌ଜିମଃନ୍ ଜିସୁର୍‌ ଚେଲାମଃନ୍‌କେ କବୁର୍‌ କଃଉଁକେ ଜାତା ବଃଳ୍‌, ମଃସୁଣ୍‌ ଜାଗ୍‌ତା ଲକ୍‌ମଃନାର୍‌ ବିତ୍ରେ କଃତେକ୍‌ ସଃଇନ୍‌ମଃନ୍ ଜିରୁସାଲମ୍‌ ଗଃଳେ ଜାୟ୍‌ ସେ ସଃବୁ ଗଃଟ୍‍ଣାର୍‌ କଃତାମଃନ୍‌ ବଃଡ୍ ଜାଜକ୍‌ ମଃନ୍‌କେ ଜାଣାୟ୍‌ଲାୟ୍‌ ।
12 ௧௨ இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
ଜାଜକ୍‌ମଃନ୍ ପାରାଚିନ୍‌ମଃନାର୍‌ ସଃଙ୍ଗ୍ ମିସିକଃରି ଗୁସ୍ଟୁ କଃଲାୟ୍‌ ଆର୍‌ ସେମଃନ୍ ସଃଇନ୍‌ମଃନ୍‌କେ ବୁତେକ୍‌ ଟଃକା ଦଃୟ୍‌ କୟ୍‌ଲାୟ୍‌,
13 ௧௩ நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
“ତୁମିମଃନ୍ କଃଉଆ ଅଃମିମଃନ୍‌ ସଃବୁ ନିଦୟ୍‌ ରିଲାବଃଳ୍‌ ତାର୍‌ ଚେଲାମଃନ୍ ରାତି ଆସିକଃରି ଜିସୁର୍‌ ମଃଲା ମଃଳ୍‌କେ ଚରିକଃରି ନିଲାୟ୍‌ ।
14 ௧௪ இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
ଆର୍‌ ଜଦି ଇ କଃତା ଗର୍ନର୍‌ ସୁଣେଦ୍‌, ତଃବେ ଅଃମିମଃନ୍‌ ତାକ୍‌ ବୁଜାୟ୍‌ କଃଉନ୍ଦ୍ ଜେ, ତୁମିମଃନାର୍‌ କାୟ୍‌ ଦଃସ୍‌ ନାୟ୍‌, ତୁମିମଃନ୍ ଚିତା କଃରାନାୟ୍‌ ।”
15 ௧௫ அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது.
ସେତାକ୍‌ ସଃଇନ୍‌ମଃନ୍ ଟଃକା ନଃୟ୍‌, ସେମଃନ୍‌କେ ଜଃନ୍‌କଃରି କଃଉଆ ଅୟ୍‌ରିଲି ସେନ୍ କଃଲାୟ୍‌ । ଇତାକ୍‌ ଇ କଃତା ଜିଉଦିମଃନାର୍‌ ବିତ୍ରେ ଉର୍ଜିଅୟ୍‌ ଆଜି ହଃତେକ୍‌ ହେଁ ସେ କଃତା ଆଚେ ।
16 ௧௬ பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
ଜିସୁର୍‌ ଏଗାର୍‌ଗଟ୍‌ ଚେଲା ଗାଲିଲି ଜାୟ୍‌, ଜିସୁ ଜୁୟ୍‌ ଡଙ୍ଗ୍ରେ ଜଃଉଁକେ କୟ୍‌ରିଲା, ସେ ଡଙ୍ଗ୍ରେ ଗଃଲାୟ୍‌ ।
17 ௧௭ அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
ଆର୍‌ ସେମଃନ୍ ସେତି ଜିସୁକେ ଦଃକି ଜୁଆର୍‌ କଃଲାୟ୍‌, ମଃତର୍‌ କେ କେ ସଃତ୍‌ ନଃକେଲାୟ୍‌;
18 ௧௮ அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ଆରେକ୍‌ ଜିସୁ ସେମଃନାର୍‌ ଚଃମେ ଆସି କଃତା ଅୟ୍‌ କୟ୍‌ଲା, “ସଃର୍ଗ୍‌ ଆର୍‌ ହୁର୍ତିବିର୍‌ ସଃବୁ ଅଃଦିକାର୍‌ ମକେ ଦିଆ ଅୟ୍‌ଆଚେ ।
19 ௧௯ ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
ତଃବେ ତୁମିମଃନ୍ ଜାୟ୍‌ ସଃବୁ ବାସାର୍‌ ରିଲା ଲକ୍‌ମଃନ୍‌କେ ଉବା, ହଅ ଆର୍‌ ପବିତ୍ର ଆତ୍ମାର୍‌ ନାଉଁଏ ବାପ୍ତିସମ୍‌ ଦଃୟ୍‌, ସେମଃନ୍‌କେ ଚେଲା କଃରା ।
20 ௨0 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
ଆର୍‌ ମୁଁୟ୍‌ ତୁମିମଃନ୍‌କେ ଜୁୟ୍‌ ଜୁୟ୍‌ ଆଡର୍‌ ଦଃୟ୍‌ ଆଚି ସେରି ସଃବୁ ମାନୁକ୍‌ ସିକାଉଆ, ଆରେକ୍‌ ମଃନେ ରଃକା ଜୁଗ୍ ସେସ୍‌ ଅଃଉତା ହଃତେକ୍‌ ସଃବୁବଃଳ୍‌ ମୁଁୟ୍‌ ତୁମିମଃନାର୍‌ ସଃଙ୍ଗେ ସଃଙ୍ଗେ ଆଚି ।” (aiōn g165)

< மத்தேயு 28 >