< மத்தேயு 28 >

1 ஓய்வுநாள் முடிந்து, வாரத்தின் முதலாம் நாள் பொழுதுவிடிந்தபோது, மகதலேனா மரியாளும் மற்ற மரியாளும் கல்லறையைப் பார்க்க வந்தார்கள்.
आरामेरे दिहाड़ेरे बाद हफतेरे पेइले दिहाड़े ट्लेकड़ोंते-ट्लेकड़ोंते मगदलीन ड्लंव्वेरी मरियम ते होरि मरियम ज़ैड़ी यीशुएरी लाश कब्री मां रख्खोरी थी, हेरने एई।
2 அப்பொழுது, பூமி மிகவும் அதிரும்படி, கர்த்தருடைய தூதன் வானத்திலிருந்து இறங்கிவந்து, வாசலிலிருந்த கல்லைப் புரட்டித் தள்ளி, அதின்மேல் உட்கார்ந்தான்.
ते हेरा अक बड़ो भुंज़ल अव, किजोकि परमेशरेरो अक स्वर्गदूत स्वर्गेरां ओरो थियो, ते तैस कब्री अगरां घोड़ उन्ढो बिछ़ोड़तां तैस पुड़ बिश्शी जेव।
3 அவனுடைய தோற்றம் மின்னல்போலவும், அவனுடைய உடை உறைந்த மழையைப்போல வெண்மையாகவும் இருந்தது.
तैसेरी शकल सूरत दिहाड़ेरी ज़ेरि रोड़ी थी, ते तैसेरां लिगड़ां हींवेरां ज़ेरां छ़ित्तां सुफैद थियां।
4 காவலாளர் அவனுக்குப் பயந்ததினால் திடுக்கிட்டுச் செத்தவர்கள்போலானார்கள்.
पेरहेदार डेरतां थर-थर कम्बने लग्गे ते ज़ेरे मुड़दे भोए।
5 தூதன் அந்தப் பெண்களைப் பார்த்து: நீங்கள் பயப்படாமலிருங்கள்; சிலுவையில் அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன்.
स्वर्गदूते कुआन्शन सेइं ज़ोवं, “डरा नन्ना, अवं ज़ानताईं कि तुस यीशुए तोपने लोरिथ, ज़ै क्रूसे पुड़ च़ाढ़ोरोए।
6 அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்த்தரை வைத்த இடத்தை வந்துபாருங்கள்;
तै इड़ी नईं बल्के ज़ेन्च़रे तैनी ज़ोरू थियूं, तै ज़ींतो भोरोए, एज्जा तै ठार हेरा, ज़ैड़ी प्रभु थियो।
7 சீக்கிரமாகப்போய், அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தார் என்று அவருடைய சீடர்களுக்குச் சொல்லுங்கள். அவர் உங்களுக்கு முன்னே கலிலேயாவிற்குப் போகிறார்; அங்கே அவரைக் காண்பீர்கள்; இதோ, உங்களுக்குச் சொன்னேன் என்றான்.
ते जल्दी गेइतां तैसेरे चेलन पतो देथ, कि तै मुड़दन मरां ज़ींतो भोरोए, ते तुसन करां पेइलो गलीले मां गाते, ते तुसेईं तै लहनोए हेरा मीं तुसन एन ज़ोरूए।”
8 அவர்கள் பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் கல்லறையைவிட்டுச் சீக்கிரமாகப் புறப்பட்டு, அவருடைய சீடர்களுக்கு அறிவிக்க ஓடினார்கள்.
तैखन तैना कुआन्शां डेरतां भी ते खुशी सेइं भी कब्री मरां बेइर एई, ते दौवड़ती-दौवड़ती जेई ताके चेलन पतो देन।
9 அவர்கள் அவருடைய சீடர்களுக்கு அறிவிக்கப் போகிறபோது, இயேசு தாமே அவர்களுக்கு எதிர்பட்டு: வாழ்க என்றார். அவர்கள் கிட்டவந்து, அவர் பாதங்களைத் தழுவி, அவரைப் பணிந்துகொண்டார்கள்.
तैखन यीशु तैन मैल्लो, ते तैनी ज़ोवं तुसन शान्ति मैल्ले, ते तैनेईं तैसेरे पाव बंते, ते तैस कां मथ्थो टेको।
10 ௧0 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: பயப்படாமலிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர்கள் கலிலேயாவிற்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள் என்றார்.
तैखन यीशुए तैन ज़ोवं, डरा न ते गाथ ते मेरे चेलन सेइं ज़ोथ कि गलीले मांजो गान, तैना मीं तैड़ी लाएले।
11 ௧௧ அவர்கள் போகும்போது, காவல்வீரர்களில் சிலர் நகரத்திற்குள்ளே வந்து. நடந்த யாவற்றையும் பிரதான ஆசாரியர்களுக்கு அறிவித்தார்கள்.
हेजू तैना कुआन्शां बत्तां थी कि ज़ैना चेलन खबर देने च़लोरी थी, त पेरहेदारन मरां किछ नगर मां जे ते प्रधान याजकन सेइं सारो बिस्तार शुनाव।
12 ௧௨ இவர்கள் மூப்பர்களோடு கூடிவந்து, ஆலோசனைசெய்து, வீரருக்கு வேண்டிய பணத்தைக் கொடுத்து:
ज़ैखन महायाजकेईं बुज़ुर्गन सेइं मिलतां मुशोरो कियो, ते तैनेईं ई फैसलो कियो कि सिपेहिन बड़े पेइंसे देन, कि तैना ई गल केन्ची सेइं न ज़ोन, कि कब्र केन्च़रे खाली भोइ।
13 ௧௩ நாங்கள் தூங்கும்போது, அவனுடைய சீடர்கள் இரவிலே வந்து, அவனைத் திருடிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொல்லுங்கள்.
तैनेईं पेहरेदारन एन ज़ोवं, कि तुस एन ज़ोइयथ, कि ज़ैखन अस राती झ़ुल्लोरे थिये त तैसेरे चेले आए ते तैनेईं तैसेरी लाश नी।
14 ௧௪ இது தேசாதிபதிக்கு தெரியவந்தால், நாங்கள் அவரை இணங்கவைத்து, உங்களைத் தப்புவிப்போம் என்றார்கள்.
अगर ए गल गुवर्नारे तगर पुज़ेली त अस तैस एप्पू समझ़ामेले त तुसन कोई परेशानी न भोली।
15 ௧௫ அவர்கள் பணத்தை வாங்கிக்கொண்டு, தங்களுக்குப் போதிக்கப்பட்டபடியே செய்தார்கள். இந்தப் பேச்சு யூதர்களுக்குள்ளே இந்தநாள்வரை பிரசித்தமாக இருக்கிறது.
ते सिपैहेईं पेइंसे नीए ते ज़ेन्च़रे तैनेईं ज़ोरू थियूं तेन्च़रे कमाव, ते अज़ तगर ए गल यहूदन मां मुशूरे।
16 ௧௬ பதினொரு சீடர்களும், கலிலேயாவிலே இயேசு தங்களுக்குக் குறித்திருந்த மலைக்குப் போனார்கள்.
11 चेले गलीले मां जे, ते तैस पहाड़े पुड़ अकोट्ठे भोए ज़ैड़ी गानेरे बारे मां यीशुए तैन ज़ोवरू थियूं।
17 ௧௭ அங்கே அவர்கள் அவரைப் பார்த்து, பணிந்துகொண்டார்கள்; சிலரோ சந்தேகப்பட்டார்கள்.
ज़ैखन तैनेईं यीशु लाव त तैस कां मथ्थो टेको, ते किछन हेजू भी शक थी, कि तै ज़ींतो वापस ओरोए।
18 ௧௮ அப்பொழுது இயேசு அருகில் வந்து, அவர்களைப் பார்த்து: பரலோகத்திலும் பூமியிலும் எல்லா அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
तैखन यीशु तैन केरे नेड़े एइतां ज़ोवं, “धेरतरो ते स्वर्गेरो सारो अधिकार मीं दित्तोरोए।
19 ௧௯ ஆகவே, நீங்கள் புறப்பட்டுப்போய், எல்லா தேசத்து மக்களையும் சீடராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
एल्हेरेलेइ तुस गाथ ते सैरी कौमां केरे लोकन चेले बनाथ, ते तैन बाजी, ते मट्ठेरे, ते पवित्र आत्मारे नंव्वे सेइं बपतिस्मो देथ।
20 ௨0 நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் செய்யுங்கள். இதோ, உலகத்தின் இறுதிவரை எல்லா நாட்களிலும் நான் உங்களோடுகூட இருக்கிறேன் என்றார். ஆமென். (aiōn g165)
ते तैन तैना सब हुक्म मन्ने शिखाला ज़ैना मीं तुसन दित्तोरेन, ते हेरा, अवं दुनियारे आखरी तगर हमेशा तुसन सेइं साथी आईं।” (aiōn g165)

< மத்தேயு 28 >