< மத்தேயு 25 >

1 அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும்.
ⲁ̅ⲧⲟⲧⲉ ⲥⲛⲁϣⲱⲡⲉ ⲉⲥⲧⲛⲧⲱⲛ ⲛϭⲓⲧⲙⲛⲧⲣⲣⲟ ⲛⲙⲡⲏⲩⲉ ⲉⲙⲏⲧⲉ ⲙⲡⲁⲣⲑⲉⲛⲟⲥ. ⲛⲁⲓ ⲛⲧⲁⲩϫⲓ ⲛⲛⲉⲩⲗⲁⲙⲡⲁⲥ ⲁⲩⲉⲓ ⲉⲃⲟⲗ ⲉⲧⲱⲙⲛⲧ ⲉⲡⲁⲧϣⲉⲗⲉⲉⲧ.
2 அவர்களில் ஐந்துபேர் புத்தியுள்ளவர்களும், ஐந்துபேர் புத்தியில்லாதவர்களுமாக இருந்தார்கள்.
ⲃ̅ϯ ⲇⲉ ⲉⲃⲟⲗ ⲛϩⲏⲧⲟⲩ ⲛⲛⲉϩⲉⲛⲥⲟϭ ⲛⲉ ⲁⲩⲱ ϯ ⲛⲛⲉϩⲉⲛⲥⲁⲃⲉ ⲛⲉ.
3 புத்தியில்லாதவர்கள் தங்களுடைய விளக்குகளை எடுத்துக்கொண்டுபோனார்கள், எண்ணெயையோ கூடக்கொண்டுபோகவில்லை.
ⲅ̅ⲛⲥⲟϭ ⲅⲁⲣ ⲁⲩϫⲓ ⲛⲛⲉⲩⲗⲁⲙⲡⲁⲥ ⲙⲡⲟⲩϫⲓⲛⲉϩ ⲛⲙⲙⲁⲩ.
4 புத்தியுள்ளவர்கள் தங்களுடைய விளக்குகளோடுகூடத் தங்களுடைய பாத்திரங்களில் எண்ணெயையும் கொண்டுபோனார்கள்.
ⲇ̅ⲛⲥⲁⲃⲏ ⲇⲉ ⲁⲩϫⲓⲛⲉϩ ϩⲛⲛⲉⲩϩⲛⲁⲁⲩ ⲙⲛⲛⲉⲩⲗⲁⲙⲡⲁⲥ.
5 மணவாளன் வரத் தாமதமானபோது, அவர்கள் எல்லோரும் தூக்கமயக்கமடைந்து தூங்கிவிட்டார்கள்.
ⲉ̅ⲛⲧⲉⲣⲉϥⲱⲥⲕ ⲇⲉ ⲛϭⲓⲡⲁⲧϣⲉⲗⲉⲉⲧ. ⲁⲩϫⲓⲣⲉⲕⲣⲓⲕⲉ ⲧⲏⲣⲟⲩ ⲁⲩⲱ ⲁⲩⲛⲕⲟⲧⲕ.
6 நடு இரவிலே: இதோ, மணவாளன் வருகிறார், அவருக்கு எதிர்கொண்டுபோகப் புறப்படுங்கள் என்கிற சத்தம் உண்டானது.
ⲋ̅ϩⲛⲧⲡⲁϣⲉ ⲇⲉ ⲛⲧⲉⲩϣⲏ ⲉⲓⲥⲟⲩⲥⲙⲉ ⲁⲥϣⲱⲡⲉ ϫⲉ ⲉⲓⲥⲡⲁⲧϣⲉⲗⲉⲉⲧ ⲁⲙⲏⲓⲧⲛ ⲉⲃⲟⲗ ⲉⲧⲱⲙⲛⲧ ⲉⲣⲟϥ.
7 அப்பொழுது, அந்தக் கன்னிகைகள் எல்லோரும் எழுந்திருந்து, தங்களுடைய விளக்குகளை ஆயத்தப்படுத்தினார்கள்.
ⲍ̅ⲧⲟⲧⲉ ⲁⲩⲧⲱⲟⲩⲛⲟⲩ ⲛϭⲓⲙⲡⲁⲣⲑⲉⲛⲟⲥ ⲧⲏⲣⲟⲩ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁⲩⲧⲥⲁⲛⲟ ⲛⲛⲉⲩⲗⲁⲙⲡⲁⲥ.
8 புத்தியில்லாதவர்கள் புத்தியுள்ளவர்களைப் பார்த்து: உங்களுடைய எண்ணெயில் எங்களுக்குக் கொஞ்சம் கொடுங்கள், எங்களுடைய விளக்குகள் அணைந்துபோகிறதே என்றார்கள்.
ⲏ̅ⲛⲥⲟϭ ⲇⲉ ⲡⲉϫⲁⲩ ⲛⲛⲥⲁⲃⲏ ϫⲉ ⲙⲁ ⲛⲁⲛ ⲉⲃⲟⲗ ϩⲙⲡⲉⲧⲛⲛⲉϩ. ϫⲉ ⲛⲉⲛⲗⲁⲙⲡⲁⲥ ⲛⲁϫⲉⲛⲁ.
9 புத்தியுள்ளவர்கள் மறுமொழியாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதுமானதாக இல்லாதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப்போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.
ⲑ̅ⲁⲩⲟⲩⲱϣⲃ ⲇⲉ ⲛϭⲓⲛⲥⲁⲃⲏ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲙⲏⲡⲟⲧⲉ ⲛϥⲧⲙⲣⲱϣⲉ ⲉⲣⲟⲛ ⲛⲙⲙⲏⲧⲛ. ⲃⲱⲕ ⲛⲧⲟϥ ⲛⲛⲁϩⲣⲛⲛⲉⲧϯ ⲉⲃⲟⲗ ⲛⲧⲉⲧⲛϣⲱⲡ ⲛⲏⲧⲛ.
10 ௧0 அப்படியே அவர்கள் வாங்கப்போனபோது மணவாளன் வந்துவிட்டார்; ஆயத்தமாக இருந்தவர்கள் அவரோடுகூடத் திருமணவீட்டிற்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.
ⲓ̅ⲉⲩⲛⲁⲃⲱⲕ ⲇⲉ ⲉϣⲱⲡ ⲁϥⲉⲓ ⲛϭⲓⲡⲁⲧϣⲉⲗⲉⲉⲧ. ⲁⲩⲱ ⲛⲉⲧⲥⲃⲧⲱⲧ ⲁⲩⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲛⲙⲙⲁϥ ⲉⲡⲙⲁ ⲛϣⲉⲗⲉⲉⲧ ⲁⲩϣⲧⲁⲙ ⲙⲡⲣⲟ.
11 ௧௧ பின்பு, மற்றக் கன்னிகைகளும் வந்து: ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டும் என்றார்கள்.
ⲓ̅ⲁ̅ⲙⲛⲛⲥⲱⲥ ⲇⲉ ⲁⲩⲉⲓ ⲛϭⲓⲡⲕⲉⲥⲉⲉⲡⲉ ⲙⲡⲁⲣⲑⲉⲛⲟⲥ. ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲁⲟⲩⲱⲛ ⲛⲁⲛ.
12 ௧௨ அதற்கு அவர்: உங்களை யாரென்று எனக்குத் தெரியாது என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲓ̅ⲃ̅ⲛⲧⲟϥ ⲇⲉ ⲁϥⲟⲩⲱϣⲃ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ϫⲉ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲛϯⲥⲟⲟⲩⲛ ⲙⲙⲱⲧⲛ ⲁⲛ.
13 ௧௩ மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.
ⲓ̅ⲅ̅ⲣⲟⲉⲓⲥ ϭⲉ ϫⲉ ⲛⲧⲉⲧⲛⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ⲙⲡⲉϩⲟⲟⲩ ⲟⲩⲧⲉ ⲧⲉⲩⲛⲟⲩ.
14 ௧௪ அன்றியும், பரலோகராஜ்யம் வெளிதேசத்திற்குப் பயணமாகப் போகிற ஒரு மனிதன், தன் வேலைக்காரர்களை அழைத்து, தன் சொத்துக்களை அவர்களிடத்தில் ஒப்புக்கொடுத்ததுபோல இருக்கிறது.
ⲓ̅ⲇ̅ⲛⲑⲉ ⲅⲁⲣ ⲛⲟⲩⲣⲱⲙⲉ ⲉϥⲛⲁⲁⲡⲟⲇⲏⲙⲉⲓ. ⲁϥⲙⲟⲩⲧⲉ ⲉⲛⲉϥϩⲙϩⲁⲗ ⲁϥϯ ⲛⲁⲩ ⲛⲛⲉϥϩⲩⲡⲁⲣⲭⲟⲛⲧⲁ ⲧⲏⲣⲟⲩ.
15 ௧௫ அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக, ஒருவனிடத்தில் ஐந்து வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் இரண்டு வெள்ளிப்பணமும், ஒருவனிடத்தில் ஒரு வெள்ளிப்பணமுமாகக் கொடுத்து, உடனே பயணப்பட்டுப்போனான்.
ⲓ̅ⲉ̅ⲟⲩⲁ ⲙⲉⲛ ⲁϥϯ ⲛⲁϥ ⲛϯⲟⲩ ⲛϭⲓⲛϭⲱⲣ. ⲟⲩⲁ ⲇⲉ ⲁϥϯ ⲛⲁϥ ⲛⲥⲛⲁⲩ. ⲟⲩⲁ ⲇⲉ ⲁϥϯ ⲛⲁϥ ⲛⲟⲩⲁ. ⲡⲟⲩⲁ ⲡⲟⲩⲁ ⲕⲁⲧⲁⲧⲉϥϭⲟⲙ ⲁϥⲁⲡⲟⲇⲏⲙⲉⲓ.
16 ௧௬ ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன்போய், அவைகளைக்கொண்டு வியாபாரம் செய்து, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
ⲓ̅ⲋ̅ⲛⲧⲉⲩⲛⲟⲩ ⲇⲉ ⲁϥⲃⲱⲕ ⲛϭⲓⲡⲉⲛⲧⲁϥϫⲓ ⲙⲡϯⲟⲩ ⲛϭⲓⲛϭⲱⲣ ⲁϥⲣϩⲱⲃ ⲛϩⲏⲧⲟⲩ ⲁϥϯϩⲏⲩ ⲛⲕⲉϯⲟⲩ.
17 ௧௭ அப்படியே இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும், வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தான்.
ⲓ̅ⲍ̅ϩⲟⲙⲟⲓⲱⲥ ⲡⲁⲡⲉⲥⲛⲁⲩ ⲁϥϯϩⲏⲩ ⲛⲕⲉⲥⲛⲁⲩ.
18 ௧௮ ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவனோ, போய், நிலத்தைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்துவைத்தான்.
ⲓ̅ⲏ̅ⲡⲉⲛⲧⲁϥϫⲓ ⲇⲉ ⲙⲡⲟⲩⲁ ⲁϥⲃⲱⲕ ⲁϥϣⲓⲕⲉ ϩⲙⲡⲕⲁϩ ⲁϥⲧⲱⲙⲥ ⲙⲡϩⲁⲧ ⲙⲡⲉϥϫⲟⲉⲓⲥ.
19 ௧௯ அநேக நாட்களானபின்பு அந்த வேலைக்காரர்களுடைய எஜமான் திரும்பிவந்து, அவர்களிடத்தில் கணக்குக் கேட்டான்.
ⲓ̅ⲑ̅ⲙⲛⲛⲥⲁⲟⲩⲛⲟϭ ⲇⲉ ⲛⲟⲩⲟⲉⲓϣ ⲁϥⲉⲓ ⲛϭⲓⲡϫⲟⲉⲓⲥ ⲛⲛϩⲙϩⲁⲗ ⲉⲧⲙⲙⲁⲩ ⲁϥϥⲓⲱⲡ ⲛⲙⲙⲁⲩ.
20 ௨0 அப்பொழுது, ஐந்து வெள்ளிப்பணத்தை வாங்கினவன், வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைக் கொண்டுவந்து: ஆண்டவனே, ஐந்து வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு ஐந்து வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.
ⲕ̅ⲁϥϯⲡⲉϥⲟⲩⲟⲓ ⲉⲣⲟϥ ⲛϭⲓⲡⲉⲛⲧⲁϥϫⲓ ⲙⲡϯⲟⲩ ⲛϭⲓⲛϭⲱⲣ. ⲁϥⲉⲓⲛⲉ ⲛⲁϥ ⲛⲕⲉϯⲟⲩ ⲛϭⲓⲛϭⲱⲣ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ϯⲟⲩ ⲛϭⲓⲛϭⲱⲣ ⲛⲉⲛⲧⲁⲕⲧⲁⲁⲩ ⲛⲁⲓ ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ⲁⲓϫⲡⲟ ⲛⲕⲉϯⲟⲩ.
21 ௨௧ அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
ⲕ̅ⲁ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ⲛϭⲓⲡⲉϥϫⲟⲉⲓⲥ ϫⲉ ⲕⲁⲗⲱⲥ ⲡϩⲙϩⲁⲗ ⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ⲁⲩⲱ ⲙⲡⲓⲥⲧⲓⲥ. ⲉⲡⲉⲓⲇⲏ ⲛⲉⲕⲛϩⲟⲧ ⲛϩⲛⲕⲟⲩⲓ ϯⲛⲁⲕⲁⲑⲓⲥⲧⲁ ⲙⲙⲟⲕ ⲉϫⲛϩⲁϩ. ⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲣⲁϣⲉ ⲙⲡⲉⲕϫⲟⲉⲓⲥ.
22 ௨௨ இரண்டு வெள்ளிப்பணத்தை வாங்கினவனும் வந்து: ஆண்டவனே, இரண்டு வெள்ளிப்பணத்தை என்னிடத்தில் ஒப்புவித்தீரே; அவைகளைக்கொண்டு, இதோ, வேறு இரண்டு வெள்ளிப்பணத்தைச் சம்பாதித்தேன் என்றான்.
ⲕ̅ⲃ̅ⲁϥϯⲡⲉϥⲟⲩⲟⲓ ⲉⲣⲟϥ ⲛϭⲓⲡⲁⲡϭⲓⲛϭⲱⲣ ⲥⲛⲁⲩ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ϭⲓⲛϭⲱⲣ ⲥⲛⲁⲩ ⲛⲉⲛⲧⲁⲕⲧⲁⲁⲩ ⲛⲁⲓ ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ⲁⲓϯϩⲏⲩ ⲛⲕⲉⲥⲛⲁⲩ.
23 ௨௩ அவனுடைய எஜமான் அவனைப் பார்த்து: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள வேலைக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாக இருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.
ⲕ̅ⲅ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ ⲛϭⲓⲡⲉϥϫⲟⲉⲓⲥ ϫⲉ ⲕⲁⲗⲱⲥ ⲡϩⲙϩⲁⲗ ⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ⲁⲩⲱ ⲙⲡⲓⲥⲧⲟⲥ ⲉⲡⲉⲓⲇⲏ ⲛⲉⲕⲛϩⲟⲧ ⲛϩⲛⲕⲟⲩⲓ ϯⲛⲁⲕⲁⲑⲓⲥⲧⲁ ⲙⲙⲟⲕ ⲉϫⲛϩⲁϩ. ⲃⲱⲕ ⲉϩⲟⲩⲛ ⲉⲡⲣⲁϣⲉ ⲙⲡⲉⲕϫⲟⲉⲓⲥ.
24 ௨௪ ஒரு வெள்ளிப்பணத்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனிதன் என்று அறிவேன்.
ⲕ̅ⲇ̅ⲁϥϯ ⲙⲡⲉϥⲟⲩⲟⲓ ϩⲱⲱϥ ⲛϭⲓⲡⲉⲛⲧⲁϥϫⲓ ⲙⲡϭⲓⲛϭⲱⲣ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲁⲓⲉⲓⲙⲉ ϫⲉ ⲛⲧⲕⲟⲩⲣⲱⲙⲉ ⲛⲥⲕⲗⲏⲣⲟⲥ. ⲉⲕⲱϩⲥ ⲙⲡⲉⲧⲙⲡⲉⲕϫⲟϥ. ⲁⲩⲱ ⲉⲕⲥⲱⲟⲩϩ ⲉϩⲟⲩⲛ ⲙⲡⲙⲁ ⲉⲧⲙⲡⲉⲕϫⲱⲱⲣⲉ ⲉⲣⲟϥ.
25 ௨௫ ஆகவே, நான் பயந்துபோய், உமது வெள்ளிப்பணத்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.
ⲕ̅ⲉ̅ⲁⲓⲣϩⲟⲧⲉ ⲁⲓⲃⲱⲕ ⲁⲓϩⲱⲡ ⲙⲡⲉⲕϭⲓⲛϭⲱⲣ ϩⲙⲡⲕⲁϩ. ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ⲉⲓⲥϩⲏⲏⲧⲉ ⲉⲓⲥⲡⲉⲧⲉⲡⲱⲕ ⲡⲉ.
26 ௨௬ அவனுடைய எஜமான் மறுமொழியாக: பொல்லாதவனும் சோம்பலுமான வேலைக்காரனே, நான் விதைக்காத இடத்தில் அறுக்கிறவனென்றும் தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவனென்றும் அறிந்திருந்தாயே.
ⲕ̅ⲋ̅ⲁϥⲟⲩⲱϣⲃ ⲇⲉ ⲛϭⲓⲡⲉϥϫⲟⲉⲓⲥ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲁϥ ϫⲉ ⲡϩⲙϩⲁⲗ ⲙⲡⲟⲛⲏⲣⲟⲥ ⲁⲩⲱ ⲛⲣⲉϥϫⲛⲁⲁⲩ. ⲉϣϫⲉⲕⲥⲟⲟⲩⲛ ϫⲉ ϯⲱϩⲥ ⲙⲡⲙⲁ ⲉⲧⲙⲡⲉⲓϫⲟϥ. ⲁⲩⲱ ϯⲥⲱⲟⲩϩ ⲉϩⲟⲩⲛ ⲙⲡⲙⲁ ⲉⲧⲙⲡⲉⲓϫⲱⲱⲣⲉ ⲉⲣⲟϥ.
27 ௨௭ அப்படியானால், நீ என் பணத்தை வங்கியிலே போட்டுவைத்திருக்கலாமே; அப்பொழுது, நான் வந்து என்னுடையதை வட்டியோடு வாங்கிக்கொள்ளுவேனே, என்று சொல்லி,
ⲕ̅ⲍ̅ⲛⲉϣϣⲉ ϭⲉ ⲉⲣⲟⲕ ⲡⲉ ⲉⲛⲟⲩϫⲉ ⲙⲡⲁϩⲁⲧ ⲛⲛⲉⲧⲣⲁⲡⲉⲍⲓⲧⲏⲥ. ⲁⲛⲟⲕ ⲇⲉ ⲛⲉⲓⲛⲁⲉⲓ ⲛⲧⲁϫⲓ ⲙⲡⲉⲧⲉⲡⲱⲓ ⲡⲉ ⲙⲛⲧⲉϥⲙⲏⲥⲉ.
28 ௨௮ அவனிடத்திலிருக்கிற வெள்ளிப்பணத்தை எடுத்து, பத்து வெள்ளிப்பணத்தை உடையவனுக்குக் கொடுங்கள்.
ⲕ̅ⲏ̅ϥⲓ ϭⲉ ⲛⲧⲟⲟⲧϥ ⲙⲡϭⲓⲛϭⲱⲣ ⲛⲧⲉⲧⲛⲧⲁⲁϥ ⲙⲡⲉⲧⲉⲟⲩⲛⲧⲁϥ ⲙⲙⲁⲩ ⲙⲡⲙⲏⲧ ⲛϭⲓⲛϭⲱⲣ.
29 ௨௯ உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும், பரிபூரணமும் அடைவான்; இல்லாதவனிடத்திலிருந்து உள்ளதும் எடுத்துக்கொள்ளப்படும்.
ⲕ̅ⲑ̅ⲟⲩⲟⲛ ⲅⲁⲣ ⲛⲓⲙ ⲉⲧⲉⲟⲩⲛⲧⲁϥ ⲥⲉⲛⲁϯ ⲛⲁϥ ⲁⲩⲱ ⲛϥⲣϩⲟⲩⲟ. ⲡⲉⲧⲉⲙⲛⲧⲁϥ ⲇⲉ ⲡⲕⲉⲉⲧⲛⲧⲁϥ ⲥⲉⲛⲁϥⲓⲧϥ ⲛⲧⲟⲟⲧϥ.
30 ௩0 பிரயோஜனமில்லாத வேலைக்காரனாகிய இவனைப் புறம்பான இருளிலே தள்ளிப்போடுங்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றான்.
ⲗ̅ⲁⲩⲱ ⲡϩⲙϩⲁⲗ ⲛⲁⲧϣⲁⲩ ⲛⲧⲉⲧⲛⲛⲟⲩϫⲉ ⲙⲙⲟϥ ⲉⲃⲟⲗ ⲉⲡⲕⲁⲕⲉ ⲉⲧϩⲁⲃⲟⲗ ⲉϥⲛⲁϣⲱⲡⲉ ⲙⲙⲁⲩ ⲛϭⲓⲡⲣⲓⲙⲉ ⲁⲩⲱ ⲡϭⲁϩϭϩ ⲛⲛⲟⲃϩⲉ.
31 ௩௧ அன்றியும் மனிதகுமாரன் தமது மகிமை பொருந்தினவராக அனைத்து பரிசுத்த தூதர்களோடுகூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார்.
ⲗ̅ⲁ̅ϩⲟⲧⲁⲛ ⲇⲉ ⲉϥϣⲁⲛⲉⲓ ⲛϭⲓⲡϣⲏⲣⲉ ⲙⲡⲣⲱⲙⲉ ϩⲣⲁⲓ ϩⲙⲡⲉϥⲉⲟⲟⲩ ⲙⲛⲛⲉϥⲁⲅⲅⲉⲗⲟⲥ ⲧⲏⲣⲟⲩ ⲛⲙⲙⲁϥ. ⲧⲟⲧⲉ ϥⲛⲁϩⲙⲟⲟⲥ ⲉϫⲙⲡⲉⲑⲣⲟⲛⲟⲥ ⲙⲡⲉϥⲉⲟⲟⲩ.
32 ௩௨ அப்பொழுது, எல்லா மக்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் தனித்தனியாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து,
ⲗ̅ⲃ̅ⲛⲥⲉⲥⲱⲟⲩϩ ⲉϩⲟⲩⲛ ⲙⲡⲉϥⲙⲧⲟ ⲉⲃⲟⲗ ⲛⲛϩⲉⲑⲛⲟⲥ ⲧⲏⲣⲟⲩ ⲛϥⲡⲱⲣϫ ⲙⲙⲟⲟⲩ ⲉⲃⲟⲗ ⲛⲛⲉⲩⲉⲣⲏⲩ ⲛⲑⲉ ⲛⲟⲩϣⲱⲥ ⲛϣⲁϥⲡⲱⲣϫ ⲛⲛⲉⲥⲟⲟⲩ ⲉⲃⲟⲗ ⲛⲛⲃⲁⲁⲙⲡⲉ.
33 ௩௩ செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
ⲗ̅ⲅ̅ⲛⲉⲥⲟⲟⲩ ⲙⲉⲛ ⲛϥⲧⲁϩⲟⲟⲩ ⲉⲣⲁⲧⲟⲩ ϩⲓⲟⲩⲛⲁⲙ ⲙⲙⲟϥ. ⲛⲃⲁⲁⲙⲡⲉ ⲇⲉ ϩⲓϩⲃⲟⲩⲣ ⲙⲙⲟϥ.
34 ௩௪ அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
ⲗ̅ⲇ̅ⲧⲟⲧⲉ ϥⲛⲁϫⲟⲟⲥ ⲛϭⲓⲡⲣⲣⲟ ⲛⲛⲉⲧϩⲓⲟⲩⲛⲁⲙ ⲙⲙⲟϥ. ϫⲉ ⲁⲙⲏⲓⲧⲛ ⲛⲉⲧⲥⲙⲁⲙⲁⲁⲧ ⲛⲧⲉⲡⲁⲉⲓⲱⲧ. ⲛⲧⲉⲧⲛⲕⲗⲏⲣⲟⲛⲟⲙⲉⲓ ⲛⲧⲙⲛⲧⲣⲣⲟ ⲛⲧⲁⲩⲥⲃⲧⲱⲧⲥ ⲛⲏⲧⲛ ϫⲓⲛⲉⲧⲕⲁⲧⲁⲃⲟⲗⲏ ⲙⲡⲕⲟⲥⲙⲟⲥ.
35 ௩௫ பசியாக இருந்தேன், எனக்கு உணவு கொடுத்தீர்கள்; தாகமாக இருந்தேன், என் தாகத்தைத் தனித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்;
ⲗ̅ⲉ̅ⲁⲓϩⲕⲟ ⲅⲁⲣ ⲁⲧⲉⲧⲛⲧⲙⲟⲓ. ⲁⲓⲉⲓⲃⲉ ⲁⲧⲉⲧⲛⲧⲥⲟⲓ. ⲛⲉⲓⲟ ⲛϣⲙⲙⲟ ⲡⲉ ⲁⲧⲉⲧⲛϣⲟⲡⲧ ⲉⲣⲱⲧⲛ.
36 ௩௬ ஆடை இல்லாதிருந்தேன், எனக்கு ஆடை கொடுத்தீர்கள்; வியாதியாக இருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; சிறைப்பட்டிருந்தேன், என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்.
ⲗ̅ⲋ̅ⲛⲉⲓⲕⲏ ⲕⲁϩⲏⲩ ⲁⲧⲉⲧⲛϯ ϩⲓⲱⲱⲧ. ⲛⲉⲓϣⲱⲛⲉ ⲁⲧⲉⲧⲛϭⲙⲡⲁϣⲓⲛⲉ. ⲛⲉⲓϩⲙⲡⲉϣⲧⲉⲕⲟ ⲡⲉ ⲁⲧⲉⲧⲛⲉⲓ ϣⲁⲣⲟⲓ.
37 ௩௭ அப்பொழுது, நீதிமான்கள் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்கு உணவு கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக் கண்டு உம்முடைய தாகத்தைத் தணித்தோம்?
ⲗ̅ⲍ̅ⲧⲟⲧⲉ ⲥⲉⲛⲁⲟⲩⲱϣⲃ ⲛⲁϥ ⲛϭⲓⲛⲇⲓⲕⲁⲓⲟⲥ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲛⲧⲁⲛⲛⲁⲩ ⲉⲣⲟⲕ ⲧⲛⲁⲩ ⲉⲕϩⲕⲁⲉⲓⲧ ⲁⲛⲧⲙⲙⲟⲕ. ⲏ ⲉⲕⲟⲃⲉ ⲁⲛⲧⲥⲟⲕ.
38 ௩௮ எப்பொழுது உம்மை அந்நியராகக் கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை ஆடையில்லாதவராகக் கண்டு உமக்கு ஆடை கொடுத்தோம்?
ⲗ̅ⲏ̅ⲛⲧⲁⲛⲛⲁⲩ ⲇⲉ ⲉⲣⲟⲕ ⲧⲛⲁⲩ ⲉⲕⲟ ⲛϣⲙⲙⲟ ⲁⲛϣⲟⲡⲕ ⲉⲣⲟⲛ. ⲏ ⲉⲕⲕⲏ ⲕⲁϩⲏⲩ ⲁⲛϯ ϩⲓⲱⲱⲕ.
39 ௩௯ எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் சிறையிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
ⲗ̅ⲑ̅ⲛⲧⲁⲛⲛⲁⲩ ⲇⲉ ⲉⲣⲟⲕ ⲧⲛⲁⲩ ⲉⲕϣⲱⲛⲉ. ⲏ ⲉⲕϩⲙⲡⲉϣⲧⲉⲕⲟ ⲁⲛⲉⲓ ϣⲁⲣⲟⲕ.
40 ௪0 அதற்கு ராஜா மறுமொழியாக: மிகவும் எளியவராகிய என் சகோதரர்களான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
ⲙ̅ϥⲛⲁⲟⲩⲱϣⲃ ⲇⲉ ⲛϭⲓⲡⲣⲣⲟ ⲛϥϫⲟⲟⲥ ⲛⲁⲩ ϫⲉ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ. ϫⲉ ⲉⲫⲟⲥⲟⲛ ⲁⲧⲉⲧⲛⲁⲁⲥ ⲛⲟⲩⲁ ⲛⲛⲉⲓⲥⲛⲏⲩ ⲉⲧⲥⲟⲃⲕ ⲛⲧⲁⲧⲉⲧⲛⲁⲁⲥ ⲛⲁⲓ.
41 ௪௧ அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும், அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம் செய்யப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். (aiōnios g166)
ⲙ̅ⲁ̅ⲧⲟⲧⲉ ϥⲛⲁⲟⲩⲱϣⲃ ⲛϥϫⲟⲟⲥ ⲛⲛⲕⲟⲟⲩⲉ ⲉⲧϩⲓϩⲃⲟⲩⲣ ⲙⲙⲟϥ. ϫⲉ ⲥⲁϩⲉⲧⲏⲩⲧⲛ ⲉⲃⲟⲗ ⲙⲙⲟⲓ ⲛⲉⲧⲥϩⲟⲩⲟⲣⲧ ⲉⲧⲥⲁⲧⲉ ⲛϣⲁⲉⲛⲉϩ ⲛⲧⲁⲩⲥⲃⲧⲱⲧⲥ ⲙⲡⲇⲓⲁⲃⲟⲗⲟⲥ ⲙⲛⲛⲉϥⲁⲅⲅⲉⲗⲟⲥ. (aiōnios g166)
42 ௪௨ பசியாக இருந்தேன், நீங்கள் எனக்கு ஆகாரம் கொடுக்கவில்லை; தாகமாக இருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தணிக்கவில்லை;
ⲙ̅ⲃ̅ⲁⲓϩⲕⲟ ⲅⲁⲣ ⲙⲡⲉⲧⲛⲧⲙⲟⲓ. ⲁⲓⲉⲓⲃⲉ ⲙⲡⲉⲧⲛⲧⲥⲟⲓ.
43 ௪௩ அந்நியனாக இருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; ஆடையில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு ஆடை கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாகவும் சிறையில் அடைக்கப்பட்டவனாகவும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லை என்பார்.
ⲙ̅ⲅ̅ⲛⲉⲓⲟ ⲛϣⲙⲙⲟ ⲙⲡⲉⲧⲛϣⲟⲡⲧ ⲉⲣⲱⲧⲛ. ⲛⲉⲓⲕⲏ ⲕⲁϩⲏⲩ ⲙⲡⲉⲧⲛϯ ϩⲓⲱⲱⲧ. ⲛⲉⲓϣⲱⲛⲉ ⲁⲩⲱ ⲉⲓϩⲙⲡⲉϣⲧⲉⲕⲟ. ⲙⲡⲉⲧⲛϭⲙⲡⲁϣⲓⲛⲉ.
44 ௪௪ அப்பொழுது, அவர்களும் அவருக்கு மறுமொழியாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், ஆடையில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், சிறையில் அடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
ⲙ̅ⲇ̅ⲧⲟⲧⲉ ⲥⲉⲛⲁⲟⲩⲱϣⲃ ϩⲱⲟⲩ ⲟⲛ ⲉⲩϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ⲡϫⲟⲉⲓⲥ ⲛⲧⲁⲛⲛⲁⲩ ⲉⲣⲟⲕ ⲧⲛⲁⲩ ⲉⲕϩⲕⲁⲉⲓⲧ. ⲏ ⲉⲕⲟⲃⲉ. ⲏ ⲉⲕⲟ ⲛϣⲙⲙⲟ. ⲏ ⲉⲕⲕⲏ ⲕⲁϩⲏⲩ. ⲏ ⲉⲕϣⲱⲛⲉ. ⲏ ⲉⲕϩⲙⲡⲉϣⲧⲉⲕⲟ ⲙⲡⲉⲛⲇⲓⲁⲕⲟⲛⲉⲓ ⲛⲁⲕ.
45 ௪௫ அப்பொழுது, அவர் அவர்களுக்கு மறுமொழியாக: மிகவும் எளியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
ⲙ̅ⲉ̅ⲧⲟⲧⲉ ϥⲛⲁⲟⲩⲱϣⲃ ⲛⲁⲩ ⲉϥϫⲱ ⲙⲙⲟⲥ. ϫⲉ ϩⲁⲙⲏⲛ ϯϫⲱ ⲙⲙⲟⲥ ⲛⲏⲧⲛ ϫⲉ ⲉⲫⲟⲥⲟⲛ ⲙⲡⲉⲧⲛⲁⲁⲥ ⲛⲟⲩⲁ ⲛⲛⲉⲓⲕⲟⲩⲓ ⲁⲛⲟⲕ ⲡⲉⲧⲙⲡⲉⲧⲛⲁⲁⲥ ⲛⲁⲓ.
46 ௪௬ அந்தப்படி, இவர்கள் நித்திய தண்டனையை அடையவும், நீதிமான்களோ நித்தியஜீவனை அடைவார்கள் என்றார். (aiōnios g166)
ⲙ̅ⲋ̅ⲛⲁⲓ ⲙⲉⲛ ⲥⲉⲛⲁⲃⲱⲕ ⲉⲩⲕⲟⲗⲁⲥⲓⲥ ⲛϣⲁⲉⲛⲉϩ ⲛⲇⲓⲕⲁⲓⲟⲥ ⲇⲉ ⲛⲧⲟⲟⲩ ⲉⲩⲱⲛϩ ϣⲁⲉⲛⲉϩ. (aiōnios g166)

< மத்தேயு 25 >