< மத்தேயு 18 >

1 அந்த நேரத்திலே சீடர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பரலோகராஜ்யத்தில் எவன் பெரியவனாக இருப்பான் என்று கேட்டார்கள்.
তদানীং শিষ্যা যীশোঃ সমীপমাগত্য পৃষ্টৱন্তঃ স্ৱৰ্গৰাজ্যে কঃ শ্ৰেষ্ঠঃ?
2 இயேசு ஒரு பிள்ளையைத் தம்மிடத்தில் அழைத்து, அதை அவர்கள் நடுவே நிறுத்தி:
ততো যীশুঃ ক্ষুদ্ৰমেকং বালকং স্ৱসমীপমানীয তেষাং মধ্যে নিধায জগাদ,
3 நீங்கள் மனந்திரும்பிப் பிள்ளைகளைப்போல மாறாவிட்டால், பரலோகராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
যুষ্মানহং সত্যং ব্ৰৱীমি, যূযং মনোৱিনিমযেন ক্ষুদ্ৰবালৱৎ ন সন্তঃ স্ৱৰ্গৰাজ্যং প্ৰৱেষ্টুং ন শক্নুথ|
4 ஆகவே, இந்தப் பிள்ளையைப்போலத் தன்னைத் தாழ்த்துகிறவன் எவனோ, அவனே பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான்.
যঃ কশ্চিদ্ এতস্য ক্ষুদ্ৰবালকস্য সমমাত্মানং নম্ৰীকৰোতি, সএৱ স্ৱৰ্গৰাজযে শ্ৰেষ্ঠঃ|
5 இப்படிப்பட்ட ஒரு பிள்ளையை என் நாமத்தினிமித்தம் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்.
যঃ কশ্চিদ্ এতাদৃশং ক্ষুদ্ৰবালকমেকং মম নাম্নি গৃহ্লাতি, স মামেৱ গৃহ্লাতি|
6 என்னிடத்தில் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலின் ஆழத்திலே அவனை அமிழ்த்துகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.
কিন্তু যো জনো মযি কৃতৱিশ্ৱাসানামেতেষাং ক্ষুদ্ৰপ্ৰাণিনাম্ একস্যাপি ৱিধ্নিং জনযতি, কণ্ঠবদ্ধপেষণীকস্য তস্য সাগৰাগাধজলে মজ্জনং শ্ৰেযঃ|
7 இடறல்களினிமித்தம் உலகத்திற்கு ஐயோ, இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனிதனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ!
ৱিঘ্নাৎ জগতঃ সন্তাপো ভৱিষ্যতি, ৱিঘ্নোঽৱশ্যং জনযিষ্যতে, কিন্তু যেন মনুজেন ৱিঘ্নো জনিষ্যতে তস্যৈৱ সন্তাপো ভৱিষ্যতি|
8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதை வெட்டி எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாக, அல்லது இரண்டு காலுடையவனாக நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைவிட, முடவனாக, அல்லது ஊனனாக, நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (aiōnios g166)
তস্মাৎ তৱ কৰশ্চৰণো ৱা যদি ৎৱাং বাধতে, তৰ্হি তং ছিত্ত্ৱা নিক্ষিপ, দ্ৱিকৰস্য দ্ৱিপদস্য ৱা তৱানপ্তৱহ্নৌ নিক্ষেপাৎ, খঞ্জস্য ৱা ছিন্নহস্তস্য তৱ জীৱনে প্ৰৱেশো ৱৰং| (aiōnios g166)
9 உன் கண் உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்துபோடு; இரண்டு கண்ணுடையவனாக எரிநரகத்தில் தள்ளப்படுவதைவிட, ஒற்றைக் கண்ணனாக நித்தியஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாக இருக்கும். (Geenna g1067)
অপৰং তৱ নেত্ৰং যদি ৎৱাং বাধতে, তৰ্হি তদপ্যুৎপাৱ্য নিক্ষিপ, দ্ৱিনেত্ৰস্য নৰকাগ্নৌ নিক্ষেপাৎ কাণস্য তৱ জীৱনে প্ৰৱেশো ৱৰং| (Geenna g1067)
10 ௧0 இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அற்பமாக எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள்; அவர்களுக்குரிய தேவதூதர்கள் பரலோகத்திலே என் பரமபிதாவின் சமுகத்தை எப்போதும் தரிசிக்கிறார்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
১০তস্মাদৱধদ্ধং, এতেষাং ক্ষুদ্ৰপ্ৰাণিনাম্ একমপি মা তুচ্ছীকুৰুত,
11 ௧௧ மனிதகுமாரன் இழந்துபோனதை இரட்சிக்க வந்தார்.
১১যতো যুষ্মানহং তথ্যং ব্ৰৱীমি, স্ৱৰ্গে তেষাং দূতা মম স্ৱৰ্গস্থস্য পিতুৰাস্যং নিত্যং পশ্যন্তি| এৱং যে যে হাৰিতাস্তান্ ৰক্ষিতুং মনুজপুত্ৰ আগচ্ছৎ|
12 ௧௨ உங்களுக்கு எப்படித் தோன்றுகிறது? ஒரு மனிதனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று காணாமற்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய் காணாமற்போனதைத் தேடாமலிருப்பானோ?
১২যূযমত্ৰ কিং ৱিৱিংগ্ঘ্ৱে? কস্যচিদ্ যদি শতং মেষাঃ সন্তি, তেষামেকো হাৰ্য্যতে চ, তৰ্হি স একোনশতং মেষান্ ৱিহায পৰ্ৱ্ৱতং গৎৱা তং হাৰিতমেকং কিং ন মৃগযতে?
13 ௧௩ அவன் அதைக் கண்டுபிடித்தால், காணாமல்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக்குறித்து மகிழ்ச்சியாக இருக்கிறதைவிட, அந்த ஒன்றைக்குறித்து அதிக மகிழ்ச்சியாக இருப்பான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
১৩যদি চ কদাচিৎ তন্মেষোদ্দেশং লমতে, তৰ্হি যুষ্মানহং সত্যং কথযামি, সোঽৱিপথগামিভ্য একোনশতমেষেভ্যোপি তদেকহেতোৰধিকম্ আহ্লাদতে|
14 ௧௪ இவ்விதமாக, இந்தச் சிறியவரில் ஒருவன்கூட, அழிந்துபோவது பரலோகத்திலிருக்கிற உங்களுடைய பிதாவின் விருப்பமல்ல.
১৪তদ্ৱদ্ এতেষাং ক্ষুদ্ৰপ্ৰাএনাম্ একোপি নশ্যতীতি যুষ্মাকং স্ৱৰ্গস্থপিতু ৰ্নাভিমতম্|
15 ௧௫ உன் சகோதரன் உனக்கு விரோதமாகக் குற்றம் செய்தால், அவனிடத்தில் போய், நீயும் அவனும் தனிமையாக இருக்கும்போது, அவன் குற்றத்தை அவனுக்கு உணர்த்து; அவன் உனக்குச் செவிகொடுத்தால், உன் சகோதரனை ஆதாயப்படுத்திக்கொண்டாய்.
১৫যদ্যপি তৱ ভ্ৰাতা ৎৱযি কিমপ্যপৰাধ্যতি, তৰ্হি গৎৱা যুৱযোৰ্দ্ৱযোঃ স্থিতযোস্তস্যাপৰাধং তং জ্ঞাপয| তত্ৰ স যদি তৱ ৱাক্যং শৃণোতি, তৰ্হি ৎৱং স্ৱভ্ৰাতৰং প্ৰাপ্তৱান্,
16 ௧௬ அவன் செவிகொடுக்காமற்போனால், இரண்டு மூன்று சாட்சிகளுடைய ஒப்புதல்களினாலே காரியங்களெல்லாம் உறுதிப்படும்படி இரண்டொருவரை உன்னுடனே அழைத்துக்கொண்டு போ.
১৬কিন্তু যদি ন শৃণোতি, তৰ্হি দ্ৱাভ্যাং ত্ৰিভি ৰ্ৱা সাক্ষীভিঃ সৰ্ৱ্ৱং ৱাক্যং যথা নিশ্চিতং জাযতে, তদৰ্থম্ একং দ্ৱৌ ৱা সাক্ষিণৌ গৃহীৎৱা যাহি|
17 ௧௭ அவர்களுக்கும் அவன் செவிகொடுக்காமற்போனால், அதை சபைக்குத் தெரியப்படுத்து; சபைக்கும் செவிகொடுக்காமற்போனால், அவன் உனக்கு வேறுமார்க்கத்தான்போலவும் வரி வசூலிப்பவனைப்போலவும் இருப்பானாக.
১৭তেন স যদি তযো ৰ্ৱাক্যং ন মান্যতে, তৰ্হি সমাজং তজ্জ্ঞাপয, কিন্তু যদি সমাজস্যাপি ৱাক্যং ন মান্যতে, তৰ্হি স তৱ সমীপে দেৱপূজকইৱ চণ্ডালইৱ চ ভৱিষ্যতি|
18 ௧௮ உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டுவீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும்; உலகத்திலே நீங்கள் எவைகளைக் கட்டவிழ்ப்பீர்களோ அவைகள் பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
১৮অহং যুষ্মান্ সত্যং ৱদামি, যুষ্মাভিঃ পৃথিৱ্যাং যদ্ বধ্যতে তৎ স্ৱৰ্গে ভংৎস্যতে; মেদিন্যাং যৎ ভোচ্যতে, স্ৱৰ্গেঽপি তৎ মোক্ষ্যতে|
19 ௧௯ அல்லாமலும், உங்களில் இரண்டுபேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப்போகிற எந்தக் காரியத்தைக்குறித்தாவது பூமியிலே ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்தில் இருக்கிற என் பிதாவினால் அது அவர்களுக்கு உண்டாகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
১৯পুনৰহং যুষ্মান্ ৱদামি, মেদিন্যাং যুষ্মাকং যদি দ্ৱাৱেকৱাক্যীভূয কিঞ্চিৎ প্ৰাৰ্থযেতে, তৰ্হি মম স্ৱৰ্গস্থপিত্ৰা তৎ তযোঃ কৃতে সম্পন্নং ভৱিষ্যতি|
20 ௨0 ஏனென்றால், இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன் என்றார்.
২০যতো যত্ৰ দ্ৱৌ ত্ৰযো ৱা মম নান্নি মিলন্তি, তত্ৰৈৱাহং তেষাং মধ্যেঽস্মি|
21 ௨௧ அப்பொழுது, பேதுரு அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாகக் குற்றம் செய்துவந்தால், நான் எத்தனைமுறை மன்னிக்கவேண்டும்? ஏழுமுறை மட்டுமோ என்று கேட்டான்.
২১তদানীং পিতৰস্তৎসমীপমাগত্য কথিতৱান্ হে প্ৰভো, মম ভ্ৰাতা মম যদ্যপৰাধ্যতি, তৰ্হি তং কতিকৃৎৱঃ ক্ষমিষ্যে?
22 ௨௨ அதற்கு இயேசு: ஏழுமுறை மாத்திரமல்ல, ஏழெழுபதுமுறைமட்டும் என்று உனக்குச் சொல்லுகிறேன்.
২২কিং সপ্তকৃৎৱঃ? যীশুস্তং জগাদ, ৎৱাং কেৱলং সপ্তকৃৎৱো যাৱৎ ন ৱদামি, কিন্তু সপ্তত্যা গুণিতং সপ্তকৃৎৱো যাৱৎ|
23 ௨௩ எப்படியென்றால், பரலோகராஜ்யம் தன் வேலைக்காரர்களிடத்தில் கணக்குப்பார்க்கவேண்டுமென்றிருந்த ஒரு ராஜாவிற்கு ஒப்பாக இருக்கிறது.
২৩অপৰং নিজদাসৈঃ সহ জিগণযিষুঃ কশ্চিদ্ ৰাজেৱ স্ৱৰ্গৰাজযং|
24 ௨௪ அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
২৪আৰব্ধে তস্মিন্ গণনে সাৰ্দ্ধসহস্ৰমুদ্ৰাপূৰিতানাং দশসহস্ৰপুটকানাম্ একোঽঘমৰ্ণস্তৎসমক্ষমানাযি|
25 ௨௫ கடனைத்தீர்க்க அவனால் முடியாதபடியால், அவனுடைய எஜமான் அவனையும் அவனுடைய மனைவியையும் பிள்ளைகளையும், அவனுக்கு இருந்த எல்லாவற்றையும் விற்று, கடனைத்தீர்க்கும்படிக் கட்டளையிட்டான்.
২৫তস্য পৰিশোধনায দ্ৰৱ্যাভাৱাৎ পৰিশোধনাৰ্থং স তদীযভাৰ্য্যাপুত্ৰাদিসৰ্ৱ্ৱস্ৱঞ্চ ৱিক্ৰীযতামিতি তৎপ্ৰভুৰাদিদেশ|
26 ௨௬ அப்பொழுது, அந்த வேலைக்காரன் காலில் விழுந்து வணங்கி: எஜமானனே! என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத்தீர்க்கிறேன் என்றான்.
২৬তেন স দাসস্তস্য পাদযোঃ পতন্ প্ৰণম্য কথিতৱান্, হে প্ৰভো ভৱতা ঘৈৰ্য্যে কৃতে মযা সৰ্ৱ্ৱং পৰিশোধিষ্যতে|
27 ௨௭ அந்த வேலைக்காரனுடைய எஜமான் மனமிரங்கி, அவனை விடுதலைசெய்து, கடனையும் அவனுக்கு மன்னித்துவிட்டான்.
২৭তদানীং দাসস্য প্ৰভুঃ সকৰুণঃ সন্ সকলৰ্ণং ক্ষমিৎৱা তং তত্যাজ|
28 ௨௮ அப்படியிருக்க, அந்த வேலைக்காரன் புறப்பட்டுப்போகும்போது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகள் கடன்பட்டிருந்தவனாகிய தன்னுடைய உடன்வேலைக்காரர்களில் ஒருவனைப் பார்த்து, அவனைப் பிடித்து, கழுத்தை நெரித்து: நீ வாங்கின கடனை எனக்குக் கொடுத்துத் தீர்க்கவேண்டும் என்றான்.
২৮কিন্তু তস্মিন্ দাসে বহি ৰ্যাতে, তস্য শতং মুদ্ৰাচতুৰ্থাংশান্ যো ধাৰযতি, তং সহদাসং দৃষ্দ্ৱা তস্য কণ্ঠং নিষ্পীড্য গদিতৱান্, মম যৎ প্ৰাপ্যং তৎ পৰিশোধয|
29 ௨௯ அப்பொழுது அவனுடைய உடன்வேலைக்காரன் அவன் காலிலே விழுந்து: என்னிடத்தில் பொறுமையாக இரும், எல்லாவற்றையும் உமக்குக் கொடுத்துத் தீர்க்கிறேன் என்று, அவனை வேண்டிக்கொண்டான்.
২৯তদা তস্য সহদাসস্তৎপাদযোঃ পতিৎৱা ৱিনীয বভাষে, ৎৱযা ধৈৰ্য্যে কৃতে মযা সৰ্ৱ্ৱং পৰিশোধিষ্যতে|
30 ௩0 அவனோ சம்மதிக்காமல், போய், அவன் வாங்கின கடனைக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் அவனைச் சிறைச்சாலையில் வைத்தான்.
৩০তথাপি স তৎ নাঙগীকৃত্য যাৱৎ সৰ্ৱ্ৱমৃণং ন পৰিশোধিতৱান্ তাৱৎ তং কাৰাযাং স্থাপযামাস|
31 ௩௧ நடந்ததை அவனுடைய உடன்வேலைக்காரர்கள் பார்த்து, மிகவும் துக்கப்பட்டு, எஜமானிடத்தில் வந்து, நடந்ததையெல்லாம் அறிவித்தார்கள்.
৩১তদা তস্য সহদাসাস্তস্যৈতাদৃগ্ আচৰণং ৱিলোক্য প্ৰভোঃ সমীপং গৎৱা সৰ্ৱ্ৱং ৱৃত্তান্তং নিৱেদযামাসুঃ|
32 ௩௨ அப்பொழுது அவனுடைய எஜமான் அவனை அழைப்பித்து: பொல்லாத வேலைக்காரனே, நீ என்னை வேண்டிக்கொண்டபடியினால் அந்தக் கடன் முழுவதையும் உனக்கு மன்னித்துவிட்டேன்.
৩২তদা তস্য প্ৰভুস্তমাহূয জগাদ, ৰে দুষ্ট দাস, ৎৱযা মৎসন্নিধৌ প্ৰাৰ্থিতে মযা তৱ সৰ্ৱ্ৱমৃণং ত্যক্তং;
33 ௩௩ நான் உனக்கு இரங்கினதுபோல, நீயும் உன் உடன்வேலைக்காரனுக்கு இரங்கவேண்டாமோ என்று சொல்லி,
৩৩যথা চাহং ৎৱযি কৰুণাং কৃতৱান্, তথৈৱ ৎৱৎসহদাসে কৰুণাকৰণং কিং তৱ নোচিতং?
34 ௩௪ அவனுடைய எஜமான் கோபமடைந்து, அவன் வாங்கின கடனையெல்லாம் தனக்குக் கொடுத்துத்தீர்க்கும்வரைக்கும் தண்டிக்கிறவர்களிடத்தில் அவனை ஒப்புக்கொடுத்தான்.
৩৪ইতি কথযিৎৱা তস্য প্ৰভুঃ ক্ৰুদ্ধ্যন্ নিজপ্ৰাপ্যং যাৱৎ স ন পৰিশোধিতৱান্, তাৱৎ প্ৰহাৰকানাং কৰেষু তং সমৰ্পিতৱান্|
35 ௩௫ நீங்களும் அவனவன் தன்தன் சகோதரன் செய்த தப்பிதங்களை மனப்பூர்வமாக மன்னிக்காமற்போனால், என் பரமபிதாவும் உங்களுக்கு இப்படியே செய்வார் என்றார்.
৩৫যদি যূযং স্ৱান্তঃকৰণৈঃ স্ৱস্ৱসহজানাম্ অপৰাধান্ ন ক্ষমধ্ৱে, তৰ্হি মম স্ৱৰ্গস্যঃ পিতাপি যুষ্মান্ প্ৰতীত্থং কৰিষ্যতি|

< மத்தேயு 18 >