< மத்தேயு 15 >

1 அப்பொழுது, எருசலேமிலிருந்து வந்த வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் இயேசுவினிடத்தில் வந்து:
અપરં યિરૂશાલમ્નગરીયાઃ કતિપયા અધ્યાપકાઃ ફિરૂશિનશ્ચ યીશોઃ સમીપમાગત્ય કથયામાસુઃ,
2 உம்முடைய சீடர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை ஏன் மீறி நடக்கிறார்கள்? கைகழுவாமல் சாப்பிடுகிறார்களே! என்றார்கள்.
તવ શિષ્યાઃ કિમર્થમ્ અપ્રક્ષાલિતકરૈ ર્ભક્ષિત્વા પરમ્પરાગતં પ્રાચીનાનાં વ્યવહારં લઙ્વન્તે?
3 அவர்களுக்கு அவர் மறுமொழியாக: நீங்கள் உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை ஏன் மீறி நடக்கிறீர்கள்?
તતો યીશુઃ પ્રત્યુવાચ, યૂયં પરમ્પરાગતાચારેણ કુત ઈશ્વરાજ્ઞાં લઙ્વધ્વે|
4 உன் தகப்பனையும் உன் தாயையும் மதித்து நடப்பாயாக என்றும்; தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், தேவன் கட்டளை கொடுத்திருக்கிறாரே.
ઈશ્વર ઇત્યાજ્ઞાપયત્, ત્વં નિજપિતરૌ સંમન્યેથાઃ, યેન ચ નિજપિતરૌ નિન્દ્યેતે, સ નિશ્ચિતં મ્રિયેત;
5 நீங்களோ, எவனாவது தகப்பனையாவது தாயையாவது பார்த்து உனக்கு நான் செய்யவேண்டிய உதவி எதுவோ, அதை தேவனுக்குக் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லி, தன் தகப்பனையாவது தன் தாயையாவது மதிக்காமற்போனாலும், அவனுடைய கடமை முடிந்ததென்று போதித்து,
કિન્તુ યૂયં વદથ, યઃ સ્વજનકં સ્વજનનીં વા વાક્યમિદં વદતિ, યુવાં મત્તો યલ્લભેથે, તત્ ન્યવિદ્યત,
6 உங்களுடைய பாரம்பரியத்தினாலே தேவனுடைய கட்டளையை அவமாக்கிவருகிறீர்கள்.
સ નિજપિતરૌ પુન ર્ન સંમંસ્યતે| ઇત્થં યૂયં પરમ્પરાગતેન સ્વેષામાચારેણેશ્વરીયાજ્ઞાં લુમ્પથ|
7 மாயக்காரர்களே, உங்களைக்குறித்து:
રે કપટિનઃ સર્વ્વે યિશયિયો યુષ્માનધિ ભવિષ્યદ્વચનાન્યેતાનિ સમ્યગ્ ઉક્તવાન્|
8 இந்த மக்கள் தங்களுடைய உதட்டளவில் என்னிடத்தில் சேர்ந்து, தங்களுடைய உதடுகளினால் என்னை மதிக்கிறார்கள்; அவர்கள் இருதயமோ என்னைவிட்டு தூரமாக விலகியிருக்கிறது;
વદનૈ ર્મનુજા એતે સમાયાન્તિ મદન્તિકં| તથાધરૈ ર્મદીયઞ્ચ માનં કુર્વ્વન્તિ તે નરાઃ|
9 மனிதர்களுடைய கட்டளைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாக எனக்கு ஆராதனை செய்கிறார்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி நன்றாகச் சொல்லியிருக்கிறான் என்றார்.”
કિન્તુ તેષાં મનો મત્તો વિદૂરએવ તિષ્ઠતિ| શિક્ષયન્તો વિધીન્ ન્રાજ્ઞા ભજન્તે માં મુધૈવ તે|
10 ௧0 பின்பு அவர் மக்களை வரவழைத்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் கேட்டு உணருங்கள்.
તતો યીશુ ર્લોકાન્ આહૂય પ્રોક્તવાન્, યૂયં શ્રુત્વા બુધ્યધ્બં|
11 ௧௧ வாய்க்குள்ளே போகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது, வாயிலிருந்து புறப்படுகிறதே மனிதனைத் தீட்டுப்படுத்தும்என்றார்.
યન્મુખં પ્રવિશતિ, તત્ મનુજમ્ અમેધ્યં ન કરોતિ, કિન્તુ યદાસ્યાત્ નિર્ગચ્છતિ, તદેવ માનુષમમેધ્યી કરોતી|
12 ௧௨ அப்பொழுது, அவருடைய சீடர்கள் அவரிடத்தில் வந்து: பரிசேயர்கள் இந்த வசனத்தைக்கேட்டு இடறலடைந்தார்கள் என்று அறிவீரா என்றார்கள்.
તદાનીં શિષ્યા આગત્ય તસ્મૈ કથયાઞ્ચક્રુઃ, એતાં કથાં શ્રુત્વા ફિરૂશિનો વ્યરજ્યન્ત, તત્ કિં ભવતા જ્ઞાયતે?
13 ௧௩ அவர் மறுமொழியாக: என் பரமபிதா நடாத நாற்றெல்லாம் வேரோடு பிடுங்கப்படும்.
સ પ્રત્યવદત્, મમ સ્વર્ગસ્થઃ પિતા યં કઞ્ચિદઙ્કુરં નારોપયત્, સ ઉત્પાવ્દ્યતે|
14 ௧௪ அவர்களை விட்டுவிடுங்கள், அவர்கள் குருடர்களுக்கு வழிகாட்டுகிற குருடர்களாக இருக்கிறார்கள்; குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே என்றார்.
તે તિષ્ઠન્તુ, તે અન્ધમનુજાનામ્ અન્ધમાર્ગદર્શકા એવ; યદ્યન્ધોઽન્ધં પન્થાનં દર્શયતિ, તર્હ્યુભૌ ગર્ત્તે પતતઃ|
15 ௧௫ அப்பொழுது, பேதுரு அவரைப் பார்த்து: இந்த உவமையை எங்களுக்கு விளக்கிச்சொல்லவேண்டும் என்றான்.
તદા પિતરસ્તં પ્રત્યવદત્, દૃષ્ટાન્તમિમમસ્માન્ બોધયતુ|
16 ௧௬ அதற்கு இயேசு: நீங்களும் இன்னும் உணர்வில்லாதவர்களாக இருக்கிறீர்களா?
યીશુના પ્રોક્તં, યૂયમદ્ય યાવત્ કિમબોધાઃ સ્થ?
17 ௧௭ வாய்க்குள்ளே போகிறதெல்லாம் வயிற்றுக்குள் சென்று ஆசனவழியாகக் கழிந்துபோகும் என்பதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?
કથામિમાં કિં ન બુધ્યધ્બે? યદાસ્યં પ્રેવિશતિ, તદ્ ઉદરે પતન્ બહિર્નિર્યાતિ,
18 ௧௮ வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்.
કિન્ત્વાસ્યાદ્ યન્નિર્યાતિ, તદ્ અન્તઃકરણાત્ નિર્યાતત્વાત્ મનુજમમેધ્યં કરોતિ|
19 ௧௯ எப்படியென்றால், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், அவதூறுகளும் புறப்பட்டுவரும்.
યતોઽન્તઃકરણાત્ કુચિન્તા બધઃ પારદારિકતા વેશ્યાગમનં ચૈર્ય્યં મિથ્યાસાક્ષ્યમ્ ઈશ્વરનિન્દા ચૈતાનિ સર્વ્વાણિ નિર્ય્યાન્તિ|
20 ௨0 இவைகளே மனிதனைத் தீட்டுப்படுத்தும்; கைகளைக் கழுவாமல் சாப்பிடுகிறது மனிதனைத் தீட்டுப்படுத்தாது என்றார்.
એતાનિ મનુષ્યમપવિત્રી કુર્વ્વન્તિ કિન્ત્વપ્રક્ષાલિતકરેણ ભોજનં મનુજમમેધ્યં ન કરોતિ|
21 ௨௧ பின்பு, இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, தீரு சீதோன் பட்டணங்களின் திசைகளுக்குப் போனார்.
અનન્તરં યીશુસ્તસ્માત્ સ્થાનાત્ પ્રસ્થાય સોરસીદોન્નગરયોઃ સીમામુપતસ્યૌ|
22 ௨௨ அப்பொழுது, அந்தத் திசைகளில் குடியிருக்கிற கானானியப் பெண் ஒருத்தி அவரிடத்தில் வந்து: ஆண்டவரே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும், என் மகள் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லிக் கூப்பிட்டாள்.
તદા તત્સીમાતઃ કાચિત્ કિનાનીયા યોષિદ્ આગત્ય તમુચ્ચૈરુવાચ, હે પ્રભો દાયૂદઃ સન્તાન, મમૈકા દુહિતાસ્તે સા ભૂતગ્રસ્તા સતી મહાક્લેશં પ્રાપ્નોતિ મમ દયસ્વ|
23 ௨௩ அவளுக்கு மறுமொழியாக அவர் ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. அப்பொழுது அவருடைய சீடர்கள் வந்து: இவள் நம்மைப் பின்தொடர்ந்து கூப்பிடுகிறாளே, இவளை அனுப்பிவிடும் என்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
કિન્તુ યીશુસ્તાં કિમપિ નોક્તવાન્, તતઃ શિષ્યા આગત્ય તં નિવેદયામાસુઃ, એષા યોષિદ્ અસ્માકં પશ્ચાદ્ ઉચ્ચૈરાહૂયાગચ્છતિ, એનાં વિસૃજતુ|
24 ௨௪ அதற்கு அவர்: காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனேதவிர, மற்றவர்களுக்கல்ல என்றார்.
તદા સ પ્રત્યવદત્, ઇસ્રાયેલ્ગોત્રસ્ય હારિતમેષાન્ વિના કસ્યાપ્યન્યસ્ય સમીપં નાહં પ્રેષિતોસ્મિ|
25 ௨௫ அவள் வந்து: ஆண்டவரே, எனக்கு உதவிசெய்யும் என்று அவரைப் பணிந்துகொண்டாள்.
તતઃ સા નારીસમાગત્ય તં પ્રણમ્ય જગાદ, હે પ્રભો મામુપકુરુ|
26 ௨௬ அவர் அவளைப் பார்த்து: பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து, நாய்க்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல என்றார்.
સ ઉક્તવાન્, બાલકાનાં ભક્ષ્યમાદાય સારમેયેભ્યો દાનં નોચિતં|
27 ௨௭ அதற்கு அவள்: உண்மைதான் ஆண்டவரே, ஆனாலும் நாய்க்குட்டிகள் தங்களுடைய எஜமான்களின் மேஜையிலிருந்து விழும் அப்பத்துணிக்கைகளைச் சாப்பிடுமே என்றாள்.
તદા સા બભાષે, હે પ્રભો, તત્ સત્યં, તથાપિ પ્રભો ર્ભઞ્ચાદ્ યદુચ્છિષ્ટં પતતિ, તત્ સારમેયાઃ ખાદન્તિ|
28 ௨௮ இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள்.
તતો યીશુઃ પ્રત્યવદત્, હે યોષિત્, તવ વિશ્વાસો મહાન્ તસ્માત્ તવ મનોભિલષિતં સિદ્ય્યતુ, તેન તસ્યાઃ કન્યા તસ્મિન્નેવ દણ્ડે નિરામયાભવત્|
29 ௨௯ இயேசு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு, கலிலேயாக் கடலருகே வந்து, ஒரு மலையின்மேல் ஏறி, அங்கே உட்கார்ந்தார்.
અનન્તરં યીશસ્તસ્માત્ સ્થાનાત્ પ્રસ્થાય ગાલીલ્સાગરસ્ય સન્નિધિમાગત્ય ધરાધરમારુહ્ય તત્રોપવિવેશ|
30 ௩0 அப்பொழுது, முடவர்கள், குருடர்கள், ஊமையர்கள், ஊனர்கள் முதலிய அநேகரை திரளான மக்கள் இயேசுவினிடத்தில் அழைத்துவந்து, அவர்களை அவர் பாதத்திலே வைத்தார்கள்; அவர்களை அவர் குணப்படுத்தினார்.
પશ્ચાત્ જનનિવહો બહૂન્ ખઞ્ચાન્ધમૂકશુષ્કકરમાનુષાન્ આદાય યીશોઃ સમીપમાગત્ય તચ્ચરણાન્તિકે સ્થાપયામાસુઃ, તતઃ સા તાન્ નિરામયાન્ અકરોત્|
31 ௩௧ ஊமையர் பேசுகிறதையும், ஊனர்கள் குணமடைகிறதையும், கைகால்கள் முடங்கியவர்கள் நடக்கிறதையும், குருடர்கள் பார்க்கிறதையும் மக்கள் கண்டு, ஆச்சரியப்பட்டு, இஸ்ரவேலின் தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
ઇત્થં મૂકા વાક્યં વદન્તિ, શુષ્કકરાઃ સ્વાસ્થ્યમાયાન્તિ, પઙ્ગવો ગચ્છન્તિ, અન્ધા વીક્ષન્તે, ઇતિ વિલોક્ય લોકા વિસ્મયં મન્યમાના ઇસ્રાયેલ ઈશ્વરં ધન્યં બભાષિરે|
32 ௩௨ பின்பு, இயேசு தம்முடைய சீடர்களை அழைத்து: மக்களுக்காக மனதுருகுகிறேன், இவர்கள் என்னிடத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து சாப்பிட ஒன்றுமில்லாதிருக்கிறார்கள்; இவர்களைப் பட்டினியாக அனுப்பிவிட எனக்கு மனதில்லை, வழியிலே சோர்ந்துபோவார்களே என்றார்.
તદાનીં યીશુઃ સ્વશિષ્યાન્ આહૂય ગદિતવાન્, એતજ્જનનિવહેષુ મમ દયા જાયતે, એતે દિનત્રયં મયા સાકં સન્તિ, એષાં ભક્ષ્યવસ્તુ ચ કઞ્ચિદપિ નાસ્તિ, તસ્માદહમેતાનકૃતાહારાન્ ન વિસ્રક્ષ્યામિ, તથાત્વે વર્ત્મમધ્યે ક્લામ્યેષુઃ|
33 ௩௩ அதற்கு அவருடைய சீடர்கள்: இவ்வளவு திரளான மக்களுக்குத் திருப்தியுண்டாகும்படி தேவையான அப்பங்கள் இந்த வனாந்திரத்திலே நமக்கு எப்படி கிடைக்கும் என்றார்கள்.
તદા શિષ્યા ઊચુઃ, એતસ્મિન્ પ્રાન્તરમધ્ય એતાવતો મર્ત્યાન્ તર્પયિતું વયં કુત્ર પૂપાન્ પ્રાપ્સ્યામઃ?
34 ௩௪ அதற்கு இயேசு: உங்களிடம் எத்தனை அப்பங்கள் உண்டு என்று கேட்டார். அவர்கள்: ஏழு அப்பங்களும் சில சிறு மீன்களும் உண்டு என்றார்கள்.
યીશુરપૃચ્છત્, યુષ્માકં નિકટે કતિ પૂપા આસતે? ત ઊચુઃ, સપ્તપૂપા અલ્પાઃ ક્ષુદ્રમીનાશ્ચ સન્તિ|
35 ௩௫ அப்பொழுது அவர் மக்களைத் தரையில் பந்தியிருக்கக் கட்டளையிட்டு,
તદાનીં સ લોકનિવહં ભૂમાવુપવેષ્ટુમ્ આદિશ્ય
36 ௩௬ அந்த ஏழு அப்பங்களையும் அந்த மீன்களையும் எடுத்து, நன்றிசெலுத்தி, பிட்டுத் தம்முடைய சீடர்களிடத்தில் கொடுத்தார்; சீடர்கள் மக்களுக்குப் பரிமாறினார்கள்.
તાન્ સપ્તપૂપાન્ મીનાંશ્ચ ગૃહ્લન્ ઈશ્વરીયગુણાન્ અનૂદ્ય ભંક્ત્વા શિષ્યેભ્યો દદૌ, શિષ્યા લોકેભ્યો દદુઃ|
37 ௩௭ எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள்; மீதியான அப்பத்துணிக்கைகளை ஏழு கூடைகள்நிறைய எடுத்தார்கள்.
તતઃ સર્વ્વે ભુક્ત્વા તૃપ્તવન્તઃ; તદવશિષ્ટભક્ષ્યેણ સપ્તડલકાન્ પરિપૂર્ય્ય સંજગૃહુઃ|
38 ௩௮ பெண்களும் பிள்ளைகளும்தவிர, சாப்பிட்ட ஆண்கள் நான்காயிரம்பேராக இருந்தார்கள்.
તે ભોક્તારો યોષિતો બાલકાંશ્ચ વિહાય પ્રાયેણ ચતુઃસહસ્રાણિ પુરુષા આસન્|
39 ௩௯ அவர் மக்களை அனுப்பிவிட்டு படகில் ஏறி, மக்தலாவின் எல்லைகளுக்கு வந்தார்.
તતઃ પરં સ જનનિવહં વિસૃજ્ય તરિમારુહ્ય મગ્દલાપ્રદેશં ગતવાન્|

< மத்தேயு 15 >