< மத்தேயு 10 >

1 அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
ಅನನ್ತರಂ ಯೀಶು ರ್ದ್ವಾದಶಶಿಷ್ಯಾನ್ ಆಹೂಯಾಮೇಧ್ಯಭೂತಾನ್ ತ್ಯಾಜಯಿತುಂ ಸರ್ವ್ವಪ್ರಕಾರರೋಗಾನ್ ಪೀಡಾಶ್ಚ ಶಮಯಿತುಂ ತೇಭ್ಯಃ ಸಾಮರ್ಥ್ಯಮದಾತ್|
2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
ತೇಷಾಂ ದ್ವಾದಶಪ್ರೇಷ್ಯಾಣಾಂ ನಾಮಾನ್ಯೇತಾನಿ| ಪ್ರಥಮಂ ಶಿಮೋನ್ ಯಂ ಪಿತರಂ ವದನ್ತಿ, ತತಃ ಪರಂ ತಸ್ಯ ಸಹಜ ಆನ್ದ್ರಿಯಃ, ಸಿವದಿಯಸ್ಯ ಪುತ್ರೋ ಯಾಕೂಬ್
3 பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,
ತಸ್ಯ ಸಹಜೋ ಯೋಹನ್; ಫಿಲಿಪ್ ಬರ್ಥಲಮಯ್ ಥೋಮಾಃ ಕರಸಂಗ್ರಾಹೀ ಮಥಿಃ, ಆಲ್ಫೇಯಪುತ್ರೋ ಯಾಕೂಬ್,
4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
ಕಿನಾನೀಯಃ ಶಿಮೋನ್, ಯ ಈಷ್ಕರಿಯೋತೀಯಯಿಹೂದಾಃ ಖ್ರೀಷ್ಟಂ ಪರಕರೇಽರ್ಪಯತ್|
5 இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும்,
ಏತಾನ್ ದ್ವಾದಶಶಿಷ್ಯಾನ್ ಯೀಶುಃ ಪ್ರೇಷಯನ್ ಇತ್ಯಾಜ್ಞಾಪಯತ್, ಯೂಯಮ್ ಅನ್ಯದೇಶೀಯಾನಾಂ ಪದವೀಂ ಶೇಮಿರೋಣೀಯಾನಾಂ ಕಿಮಪಿ ನಗರಞ್ಚ ನ ಪ್ರವಿಶ್ಯೇ
6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள்.
ಇಸ್ರಾಯೇಲ್ಗೋತ್ರಸ್ಯ ಹಾರಿತಾ ಯೇ ಯೇ ಮೇಷಾಸ್ತೇಷಾಮೇವ ಸಮೀಪಂ ಯಾತ|
7 போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
ಗತ್ವಾ ಗತ್ವಾ ಸ್ವರ್ಗಸ್ಯ ರಾಜತ್ವಂ ಸವಿಧಮಭವತ್, ಏತಾಂ ಕಥಾಂ ಪ್ರಚಾರಯತ|
8 வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.
ಆಮಯಗ್ರಸ್ತಾನ್ ಸ್ವಸ್ಥಾನ್ ಕುರುತ, ಕುಷ್ಠಿನಃ ಪರಿಷ್ಕುರುತ, ಮೃತಲೋಕಾನ್ ಜೀವಯತ, ಭೂತಾನ್ ತ್ಯಾಜಯತ, ವಿನಾ ಮೂಲ್ಯಂ ಯೂಯಮ್ ಅಲಭಧ್ವಂ ವಿನೈವ ಮೂಲ್ಯಂ ವಿಶ್ರಾಣಯತ|
9 உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
ಕಿನ್ತು ಸ್ವೇಷಾಂ ಕಟಿಬನ್ಧೇಷು ಸ್ವರ್ಣರೂಪ್ಯತಾಮ್ರಾಣಾಂ ಕಿಮಪಿ ನ ಗೃಹ್ಲೀತ|
10 ௧0 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.
ಅನ್ಯಚ್ಚ ಯಾತ್ರಾಯೈ ಚೇಲಸಮ್ಪುಟಂ ವಾ ದ್ವಿತೀಯವಸನಂ ವಾ ಪಾದುಕೇ ವಾ ಯಷ್ಟಿಃ, ಏತಾನ್ ಮಾ ಗೃಹ್ಲೀತ, ಯತಃ ಕಾರ್ಯ್ಯಕೃತ್ ಭರ್ತ್ತುಂ ಯೋಗ್ಯೋ ಭವತಿ|
11 ௧௧ எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
ಅಪರಂ ಯೂಯಂ ಯತ್ ಪುರಂ ಯಞ್ಚ ಗ್ರಾಮಂ ಪ್ರವಿಶಥ, ತತ್ರ ಯೋ ಜನೋ ಯೋಗ್ಯಪಾತ್ರಂ ತಮವಗತ್ಯ ಯಾನಕಾಲಂ ಯಾವತ್ ತತ್ರ ತಿಷ್ಠತ|
12 ௧௨ ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
ಯದಾ ಯೂಯಂ ತದ್ಗೇಹಂ ಪ್ರವಿಶಥ, ತದಾ ತಮಾಶಿಷಂ ವದತ|
13 ௧௩ அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
ಯದಿ ಸ ಯೋಗ್ಯಪಾತ್ರಂ ಭವತಿ, ತರ್ಹಿ ತತ್ಕಲ್ಯಾಣಂ ತಸ್ಮೈ ಭವಿಷ್ಯತಿ, ನೋಚೇತ್ ಸಾಶೀರ್ಯುಷ್ಮಭ್ಯಮೇವ ಭವಿಷ್ಯತಿ|
14 ௧௪ எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
ಕಿನ್ತು ಯೇ ಜನಾ ಯುಷ್ಮಾಕಮಾತಿಥ್ಯಂ ನ ವಿದಧತಿ ಯುಷ್ಮಾಕಂ ಕಥಾಞ್ಚ ನ ಶೃಣ್ವನ್ತಿ ತೇಷಾಂ ಗೇಹಾತ್ ಪುರಾದ್ವಾ ಪ್ರಸ್ಥಾನಕಾಲೇ ಸ್ವಪದೂಲೀಃ ಪಾತಯತ|
15 ௧௫ நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ಯುಷ್ಮಾನಹಂ ತಥ್ಯಂ ವಚ್ಮಿ ವಿಚಾರದಿನೇ ತತ್ಪುರಸ್ಯ ದಶಾತಃ ಸಿದೋಮಮೋರಾಪುರಯೋರ್ದಶಾ ಸಹ್ಯತರಾ ಭವಿಷ್ಯತಿ|
16 ௧௬ ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.
ಪಶ್ಯತ, ವೃಕಯೂಥಮಧ್ಯೇ ಮೇಷಃ ಯಥಾವಿಸ್ತಥಾ ಯುಷ್ಮಾನ ಪ್ರಹಿಣೋಮಿ, ತಸ್ಮಾದ್ ಯೂಯಮ್ ಅಹಿರಿವ ಸತರ್ಕಾಃ ಕಪೋತಾಇವಾಹಿಂಸಕಾ ಭವತ|
17 ௧௭ மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள்.
ನೃಭ್ಯಃ ಸಾವಧಾನಾ ಭವತ; ಯತಸ್ತೈ ರ್ಯೂಯಂ ರಾಜಸಂಸದಿ ಸಮರ್ಪಿಷ್ಯಧ್ವೇ ತೇಷಾಂ ಭಜನಗೇಹೇ ಪ್ರಹಾರಿಷ್ಯಧ್ವೇ|
18 ௧௮ அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
ಯೂಯಂ ಮನ್ನಾಮಹೇತೋಃ ಶಾಸ್ತೃಣಾಂ ರಾಜ್ಞಾಞ್ಚ ಸಮಕ್ಷಂ ತಾನನ್ಯದೇಶಿನಶ್ಚಾಧಿ ಸಾಕ್ಷಿತ್ವಾರ್ಥಮಾನೇಷ್ಯಧ್ವೇ|
19 ௧௯ அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
ಕಿನ್ತ್ವಿತ್ಥಂ ಸಮರ್ಪಿತಾ ಯೂಯಂ ಕಥಂ ಕಿಮುತ್ತರಂ ವಕ್ಷ್ಯಥ ತತ್ರ ಮಾ ಚಿನ್ತಯತ, ಯತಸ್ತದಾ ಯುಷ್ಮಾಭಿ ರ್ಯದ್ ವಕ್ತವ್ಯಂ ತತ್ ತದ್ದಣ್ಡೇ ಯುಷ್ಮನ್ಮನಃ ಸು ಸಮುಪಸ್ಥಾಸ್ಯತಿ|
20 ௨0 பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
ಯಸ್ಮಾತ್ ತದಾ ಯೋ ವಕ್ಷ್ಯತಿ ಸ ನ ಯೂಯಂ ಕಿನ್ತು ಯುಷ್ಮಾಕಮನ್ತರಸ್ಥಃ ಪಿತ್ರಾತ್ಮಾ|
21 ௨௧ சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
ಸಹಜಃ ಸಹಜಂ ತಾತಃ ಸುತಞ್ಚ ಮೃತೌ ಸಮರ್ಪಯಿಷ್ಯತಿ, ಅಪತ್ಯಾಗಿ ಸ್ವಸ್ವಪಿತ್ರೋ ರ್ವಿಪಕ್ಷೀಭೂಯ ತೌ ಘಾತಯಿಷ್ಯನ್ತಿ|
22 ௨௨ என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
ಮನ್ನಮಹೇತೋಃ ಸರ್ವ್ವೇ ಜನಾ ಯುಷ್ಮಾನ್ ಋತೀಯಿಷ್ಯನ್ತೇ, ಕಿನ್ತು ಯಃ ಶೇಷಂ ಯಾವದ್ ಧೈರ್ಯ್ಯಂ ಘೃತ್ವಾ ಸ್ಥಾಸ್ಯತಿ, ಸ ತ್ರಾಯಿಷ್ಯತೇ|
23 ௨௩ ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ತೈ ರ್ಯದಾ ಯೂಯಮೇಕಪುರೇ ತಾಡಿಷ್ಯಧ್ವೇ, ತದಾ ಯೂಯಮನ್ಯಪುರಂ ಪಲಾಯಧ್ವಂ ಯುಷ್ಮಾನಹಂ ತಥ್ಯಂ ವಚ್ಮಿ ಯಾವನ್ಮನುಜಸುತೋ ನೈತಿ ತಾವದ್ ಇಸ್ರಾಯೇಲ್ದೇಶೀಯಸರ್ವ್ವನಗರಭ್ರಮಣಂ ಸಮಾಪಯಿತುಂ ನ ಶಕ್ಷ್ಯಥ|
24 ௨௪ சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.
ಗುರೋಃ ಶಿಷ್ಯೋ ನ ಮಹಾನ್, ಪ್ರಭೋರ್ದಾಸೋ ನ ಮಹಾನ್|
25 ௨௫ சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
ಯದಿ ಶಿಷ್ಯೋ ನಿಜಗುರೋ ರ್ದಾಸಶ್ಚ ಸ್ವಪ್ರಭೋಃ ಸಮಾನೋ ಭವತಿ ತರ್ಹಿ ತದ್ ಯಥೇಷ್ಟಂ| ಚೇತ್ತೈರ್ಗೃಹಪತಿರ್ಭೂತರಾಜ ಉಚ್ಯತೇ, ತರ್ಹಿ ಪರಿವಾರಾಃ ಕಿಂ ತಥಾ ನ ವಕ್ಷ್ಯನ್ತೇ?
26 ௨௬ அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
ಕಿನ್ತು ತೇಭ್ಯೋ ಯೂಯಂ ಮಾ ಬಿಭೀತ, ಯತೋ ಯನ್ನ ಪ್ರಕಾಶಿಷ್ಯತೇ, ತಾದೃಕ್ ಛಾದಿತಂ ಕಿಮಪಿ ನಾಸ್ತಿ, ಯಚ್ಚ ನ ವ್ಯಞ್ಚಿಷ್ಯತೇ, ತಾದೃಗ್ ಗುಪ್ತಂ ಕಿಮಪಿ ನಾಸ್ತಿ|
27 ௨௭ நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
ಯದಹಂ ಯುಷ್ಮಾನ್ ತಮಸಿ ವಚ್ಮಿ ತದ್ ಯುಷ್ಮಾಭಿರ್ದೀಪ್ತೌ ಕಥ್ಯತಾಂ; ಕರ್ಣಾಭ್ಯಾಂ ಯತ್ ಶ್ರೂಯತೇ ತದ್ ಗೇಹೋಪರಿ ಪ್ರಚಾರ್ಯ್ಯತಾಂ|
28 ௨௮ ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
ಯೇ ಕಾಯಂ ಹನ್ತುಂ ಶಕ್ನುವನ್ತಿ ನಾತ್ಮಾನಂ, ತೇಭ್ಯೋ ಮಾ ಭೈಷ್ಟ; ಯಃ ಕಾಯಾತ್ಮಾನೌ ನಿರಯೇ ನಾಶಯಿತುಂ, ಶಕ್ನೋತಿ, ತತೋ ಬಿಭೀತ| (Geenna g1067)
29 ௨௯ ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.
ದ್ವೌ ಚಟಕೌ ಕಿಮೇಕತಾಮ್ರಮುದ್ರಯಾ ನ ವಿಕ್ರೀಯೇತೇ? ತಥಾಪಿ ಯುಷ್ಮತ್ತಾತಾನುಮತಿಂ ವಿನಾ ತೇಷಾಮೇಕೋಪಿ ಭುವಿ ನ ಪತತಿ|
30 ௩0 உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
ಯುಷ್ಮಚ್ಛಿರಸಾಂ ಸರ್ವ್ವಕಚಾ ಗಣಿತಾಂಃ ಸನ್ತಿ|
31 ௩௧ ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
ಅತೋ ಮಾ ಬಿಭೀತ, ಯೂಯಂ ಬಹುಚಟಕೇಭ್ಯೋ ಬಹುಮೂಲ್ಯಾಃ|
32 ௩௨ மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன்.
ಯೋ ಮನುಜಸಾಕ್ಷಾನ್ಮಾಮಙ್ಗೀಕುರುತೇ ತಮಹಂ ಸ್ವರ್ಗಸ್ಥತಾತಸಾಕ್ಷಾದಙ್ಗೀಕರಿಷ್ಯೇ|
33 ௩௩ மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
ಪೃಥ್ವ್ಯಾಮಹಂ ಶಾನ್ತಿಂ ದಾತುಮಾಗತಇತಿ ಮಾನುಭವತ, ಶಾನ್ತಿಂ ದಾತುಂ ನ ಕಿನ್ತ್ವಸಿಂ|
34 ௩௪ பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன்.
ಪಿತೃಮಾತೃಶ್ಚಶ್ರೂಭಿಃ ಸಾಕಂ ಸುತಸುತಾಬಧೂ ರ್ವಿರೋಧಯಿತುಞ್ಚಾಗತೇಸ್ಮಿ|
35 ௩௫ எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
ತತಃ ಸ್ವಸ್ವಪರಿವಾರಏವ ನೃಶತ್ರು ರ್ಭವಿತಾ|
36 ௩௬ ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
ಯಃ ಪಿತರಿ ಮಾತರಿ ವಾ ಮತ್ತೋಧಿಕಂ ಪ್ರೀಯತೇ, ಸ ನ ಮದರ್ಹಃ;
37 ௩௭ தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
ಯಶ್ಚ ಸುತೇ ಸುತಾಯಾಂ ವಾ ಮತ್ತೋಧಿಕಂ ಪ್ರೀಯತೇ, ಸೇಪಿ ನ ಮದರ್ಹಃ|
38 ௩௮ தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
ಯಃ ಸ್ವಕ್ರುಶಂ ಗೃಹ್ಲನ್ ಮತ್ಪಶ್ಚಾನ್ನೈತಿ, ಸೇಪಿ ನ ಮದರ್ಹಃ|
39 ௩௯ தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
ಯಃ ಸ್ವಪ್ರಾಣಾನವತಿ, ಸ ತಾನ್ ಹಾರಯಿಷ್ಯತೇ, ಯಸ್ತು ಮತ್ಕೃತೇ ಸ್ವಪ್ರಾಣಾನ್ ಹಾರಯತಿ, ಸ ತಾನವತಿ|
40 ௪0 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
ಯೋ ಯುಷ್ಮಾಕಮಾತಿಥ್ಯಂ ವಿದಧಾತಿ, ಸ ಮಮಾತಿಥ್ಯಂ ವಿದಧಾತಿ, ಯಶ್ಚ ಮಮಾತಿಥ್ಯಂ ವಿದಧಾತಿ, ಸ ಮತ್ಪ್ರೇರಕಸ್ಯಾತಿಥ್ಯಂ ವಿದಧಾತಿ|
41 ௪௧ தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான்.
ಯೋ ಭವಿಷ್ಯದ್ವಾದೀತಿ ಜ್ಞಾತ್ವಾ ತಸ್ಯಾತಿಥ್ಯಂ ವಿಧತ್ತೇ, ಸ ಭವಿಷ್ಯದ್ವಾದಿನಃ ಫಲಂ ಲಪ್ಸ್ಯತೇ, ಯಶ್ಚ ಧಾರ್ಮ್ಮಿಕ ಇತಿ ವಿದಿತ್ವಾ ತಸ್ಯಾತಿಥ್ಯಂ ವಿಧತ್ತೇ ಸ ಧಾರ್ಮ್ಮಿಕಮಾನವಸ್ಯ ಫಲಂ ಪ್ರಾಪ್ಸ್ಯತಿ|
42 ௪௨ சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ಯಶ್ಚ ಕಶ್ಚಿತ್ ಏತೇಷಾಂ ಕ್ಷುದ್ರನರಾಣಾಮ್ ಯಂ ಕಞ್ಚನೈಕಂ ಶಿಷ್ಯ ಇತಿ ವಿದಿತ್ವಾ ಕಂಸೈಕಂ ಶೀತಲಸಲಿಲಂ ತಸ್ಮೈ ದತ್ತೇ, ಯುಷ್ಮಾನಹಂ ತಥ್ಯಂ ವದಾಮಿ, ಸ ಕೇನಾಪಿ ಪ್ರಕಾರೇಣ ಫಲೇನ ನ ವಞ್ಚಿಷ್ಯತೇ|

< மத்தேயு 10 >