< மத்தேயு 10 >

1 அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
ישוע קרא אליו את שנים־עשר תלמידיו ונתן להם כוח לגרש רוחות רעות ולרפא כל מיני מחלות.
2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
אלה שמותיהם של שנים־עשר התלמידים: שמעון (הנקרא גם פטרוס), ‎אַנְדְּרֵי (אחיו של שמעון), יעקב (בנו של זבדי), יוחנן (אחיו של יעקב),
3 பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,
פיליפוס, בר־תלמי, תומא, מתתיהו (גובה המכס), יעקב (בן־חלפי), תדי,
4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
שמעון (מחבורת”הקנאים“), ויהודה איש קריות (זה שהסגיר את ישוע).
5 இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும்,
ישוע נתן להם את ההוראות הבאות:”אל תלכו אל הגויים או אל השומרונים,
6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள்.
כי אם אל הצאן התועה של עם ישראל בלבד.
7 போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
לכו וספרו להם שמלכות השמים קרובה.
8 வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.
רפאו את החולים, הקימו את המתים לתחייה, רפאו את המצורעים וגרשו את השדים. אתם קיבלתם הכול חינם אין כסף, לכן אל תדרשו תמורה בעד שירותכם!
9 உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
”אל תיקחו איתכם זהב, כסף או נחושת.
10 ௧0 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.
אל תיקחו תרמיל עם בגדים להחלפה, לא נעלים ואף לא מקל הליכה. האנשים שתעזרו להם ידאגו לכם ויטפלו בכם.
11 ௧௧ எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
בבואכם לעיר או לכפר, חפשו שם בן אדם טוב והישארו בביתו עד שיגיע הזמן ללכת לעיר אחרת.
12 ௧௨ ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
כשתכנסו אל הבית, קודם כל ברכו אותו בשלום.
13 ௧௩ அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
אם זהו ביתם של אנשים טובים, הברכה תתקיים; ואם אין אלה אנשים טובים, הברכה תשוב אליכם.
14 ௧௪ எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
בכל עיר או בית שבהם לא יקבלו אתכם, נערו את אבק המקום מעל רגליכם ולכו לדרככם.
15 ௧௫ நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
אני אומר לכם: אף לסדום ועמורה יהיה קל יותר ביום־הדין מאשר לערים אלה.
16 ௧௬ ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.
”אני שולח אתכם כמו כבשים בין זאבים. לכן היו ערמומיים כנחשים ותמימים כיונים.
17 ௧௭ மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள்.
אולם היזהרו! כי עלולים לאסור ולשפוט אתכם ולהלקות אתכם בשוטים בבתי־הכנסת.
18 ௧௮ அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
כן, יהיה עליכם להישפט לפני מלכים ומושלים בגללי, אולם זאת תהיה לכם הזדמנות לספר להם ולעולם כולו על אודותיי.
19 ௧௯ அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
”כשיאסרו אתכם, אל תדאגו למה שתגידו במשפט, כי אני אשים בפיכם את המילים הנכונות בזמן הנכון,
20 ௨0 பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
וכך לא אתם תדברו, כי אם רוח אביכם שבשמים ידבר בפיכם.
21 ௨௧ சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
”אח יבגוד באחיו ויסגירו למוות; אבות ימסרו את בניהם למוות; ילדים יקומו נגד הוריהם וייגרמו למותם.
22 ௨௨ என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
כולם ישנאו אתכם משום שאתם שייכים לי, אולם כל מי שיחזיק מעמד עד הסוף – ייוושע!
23 ௨௩ ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
”אם רודפים אתכם ומציקים לכם בעיר אחת – ברחו לעיר אחרת. לא תספיקו לעבור בין כל הערים עד שבן־האדם יחזור.
24 ௨௪ சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.
תלמיד איננו גדול ממורו, ועבד אינו מכובד מאדוניו.
25 ௨௫ சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
התלמיד משתתף בגורל מורו, ומה שיקרה לאדון יקרה גם לעבד. ואם לי, האדון, קראו’בעל־זבוב‘(אדון השדים), אין ספק שכך יקראו גם לכם.
26 ௨௬ அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
אולם אל תפחדו מאלה שמאיימים עליכם, כי יבוא הזמן שהאמת תצא לאור, וכולם יוכלו לראות את מזימות הסתר שלהם.
27 ௨௭ நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
”מה שאני אומר לכם בחושך, לכו והכריזו אותו באור היום. ומה שאני לוחש באוזניכם, השמיעו בקול מעל גגות הבתים.
28 ௨௮ ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
”אל תפחדו מאלה היכולים להרוג את גופכם בלבד, אולם אינם מסוגלים לפגוע בנפשכם! עליכם לפחוד רק מאלוהים היכול להשמיד גם את הגוף וגם את הנפש בגיהינום. (Geenna g1067)
29 ௨௯ ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.
אף ציפור דרור (הנמכרת בזול) לא תיפול על הארץ בלי שאביכם שבשמים ידע זאת.
30 ௩0 உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
אלוהים יודע אף את מספר השערות שעל ראשכם!
31 ௩௧ ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
לכן אל תפחדו! אתם יקרים לאלוהים יותר מציפורים רבות.
32 ௩௨ மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன்.
”כל המכיר בי לפני בני־אדם, גם אני אכיר בו לפני אבי שבשמים.
33 ௩௩ மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
אולם אם מישהו טוען שאינו מכיר אותי, גם אני לא אכיר בו לפני אבי שבשמים.
34 ௩௪ பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன்.
”אל תחשבו שבאתי להשכין שלום בארץ! לא שלום, כי אם חרב.
35 ௩௫ எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
באתי להמריד בן באביו ובת באמה, ולגרום לכלה למרוד בחמותה.
36 ௩௬ ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
אויביו הגדולים של האדם יהיו דווקא בני־ביתו.
37 ௩௭ தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
אם אתה אוהב את אביך ואת אמך יותר ממני, אינך ראוי להיות תלמידי. ואם אתה אוהב את בנך או את בתך יותר ממני, אינך ראוי לי.
38 ௩௮ தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
אם אינך מוכן לשאת את צלבך וללכת אחרי, אינך ראוי לי.
39 ௩௯ தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
”מי שרוצה לשמור על חייו – יאבד אותם, ואם יהיה מוכן לוותר על חייו למעני – ימצא אותם.
40 ௪0 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
”מי שמקבל אתכם בשמחה – מקבל אותי. ומי שמקבל אותי – מקבל גם את האלוהים ששלח אותי.
41 ௪௧ தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான்.
אם תקבלו בשמחה נביא, משום שהוא איש אלוהים – תקבלו אותו שכר בשמים שמקבל הנביא. ואם תקבלו אנשים טובים וצדיקים, משום שהם אוהבים את ה׳ – תקבלו אותו השכר שהם מקבלים.
42 ௪௨ சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ואם בתור תלמידי תתנו לילד קטן כוס מים קרים, אני מבטיח לכם שתקבלו שכר משמעותי על כך.“

< மத்தேயு 10 >