< மத்தேயு 10 >

1 அப்பொழுது, இயேசு தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து, அசுத்தஆவிகளைத் துரத்தவும், எல்லா வியாதிகளையும் எல்லா நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்.
फिरी यीशुए अपने 12 चेले एप्पू कां कुजाए, ते तैन भूतां केरो सैयो कढनेरो ते हर बिमारी ते तकलीफ दूर केरनेरो अधिकार दित्तो।
2 அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களுடைய பெயர்களாவன: முந்தினவன் பேதுரு என்னப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா, செபெதேயுவின் குமாரன் யாக்கோபு, அவன் சகோதரன் யோவான்,
12 प्रेरितां केरां नव्वां इना आन, शमौन ज़ैस जो पतरस ज़ोतन ते तैसेरो ढ्ला अन्द्रियास, जब्देरू मट्ठू याकूब ते कने तैसेरो ढ्ला यूहन्ना,
3 பிலிப்பு, பர்தொலொமேயு, தோமா, வரி வசூலிப்பவனாகிய மத்தேயு, அல்பேயுவின் குமாரன் யாக்கோபு, ததேயு என்னும் மறுபெயருள்ள லெபேயு,
फिलिप्पुस, बरतुल्मै, थोमा, ते मत्ती चुंगी घिन्ने बालो, हलफईरू मट्ठू याकूब, ते तद्दै।
4 கானானியனாகிய சீமோன், அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து என்பவைகளே.
शमौन कनानी, ते यहूदा इस्करियोती ज़ैनी तै ट्लुवेवरो भी थियो।
5 இந்தப் பன்னிரண்டுபேரையும் இயேசு அனுப்பும்போது, அவர்களுக்குக் கட்டளையிட்டுச் சொன்னது என்னவென்றால்: நீங்கள் யூதரல்லாதவர்களுடைய நாடுகளுக்குப் போகாமலும், சமாரியருடைய பட்டணங்களில் பிரவேசிக்காமலும்,
एन 12 यीशुए एन ज़ोइतां भेज़े, “गैर कौमां केरे पासे न गेइयथ, ते कने सामरी लोकां केरे केन्ची नगर मां न गेइयथ।
6 காணாமற்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் குடும்பத்தாரிடத்திற்குப் போங்கள்.
बल्के इस्राएलेरे घरानेरी हेरोरि भैड्डन कां गेइयथ।
7 போகும்போது, பரலோகராஜ்யம் சமீபமாக இருக்கிறது என்று பிரசங்கியுங்கள்.
ते च़लते-च़लते, एन ज़ोंते गेइयथ कि स्वर्गेरू राज़ नेड़े ओरूए।
8 வியாதியுள்ளவர்களைச் சுகமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தப்படுத்துங்கள், மரித்தோரை உயிரோடு எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள்; இலவசமாகப் பெற்றீர்கள், இலவசமாகக் கொடுங்கள்.
बिमारन बज़्झ़ेइयथ, मुड़दन ज़ींते केरथ, कोढ़ी केरू कोढ़ साफ केरथ, ते भूतां केरो सैयो केढथ, तुसन एन सब किछ मुफ्त मैलोरूए ते मुफ्त देइयथ।
9 உங்களுடைய பைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
ते साथी सोन्नू, चाँदी ते पेंइसे न रेखथ।
10 ௧0 வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது, பாதணிகளையாவது, தடியையாவது எடுத்துவைக்கவேண்டாம்; வேலையாள் தன் ஆகாரத்திற்குத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.
ते न बत्तारे लेइ झोलो नेइयथ ते न दूई-दूई लिगड़ां, ते न बूट ते न सोटी, किजोकि मज़दूर अपनि मज़दूरारो हकदार भोते।”
11 ௧௧ எந்தப் பட்டணத்திலாவது கிராமத்திலாவது நீங்கள் பிரவேசிக்கும்போது, அதிலே தகுதியானவன் யாரென்று விசாரித்து, நீங்கள் புறப்படும்வரைக்கும் அவனிடத்தில் தங்கியிருங்கள்.
“ज़ैखन तुस केन्ची नगर या ड्लोव्वें मां गाथ त तुस एरे मैनेरो पतो केरथ, कि कौन अतबारेरे काबल? तैट्ठां ज़ां तगर गानेरो वक्त न एज्जे त तांतगर तैड़ी तैस्से कां रेइयथ।
12 ௧௨ ஒரு வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள்.
ते घरे मां अन्तर गांते बार तैन जो शान्ति देइयथ।”
13 ௧௩ அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.
“अगर तैन घर तुश्शे काबल भोलू त शान्ति पुज़ेली, ते अगर तैन घर तुश्शे काबल न भोलू त तुश्शी शान्ति तुसन पुड़ वापस एज्जेली।
14 ௧௪ எவனாவது உங்களை ஏற்றுக்கொள்ளாமலும், உங்களுடைய வார்த்தைகளைக் கேளாமலும்போனால், அந்த வீட்டையாவது பட்டணத்தையாவதுவிட்டுப் புறப்படும்போது, உங்களுடைய கால்களில் படிந்த தூசியை உதறிப்போடுங்கள்.
ज़ै तुसन कबूल न केरे ते तुश्शी गल न मन्ने त तैस घरे या नगर मरां बेइरोवं गांते बार अपने पावां केरि धूड़ तैड़ी झ़ैड़थ।”
15 ௧௫ நியாயத்தீர்ப்புநாளிலே அந்தப் பட்டணத்திற்கு சம்பவிப்பதைவிட சோதோம் கொமோரா பட்டணங்களுக்கு சம்பவிப்பது இலகுவாக இருக்கும் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
“अवं तुसन सेइं सच़ ज़ोताईं कि इन्साफेरे दिहाड़े तैस नगरेरो हाल सदोम ते अमोरा नगरां केरे हाले करां भी जादे बुरो भोलो।”
16 ௧௬ ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகவே, பாம்புகளைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போல வஞ்சகமற்றவர்களுமாக இருங்கள்.
“हेरा, अवं तुसन भैड्डां केरे गिदन मां भेज़ने लोरोईं, एल्हेरेलेइ तुस सप्पां केरे ज़ेरे हुशार ते कबूतरां केरे ज़ेरे सादे बेनथ।
17 ௧௭ மனிதர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருங்கள்; அவர்கள் உங்களை ஆலோசனைச் சங்கங்களுக்கு ஒப்புக்கொடுத்து, தங்களுடைய ஜெப ஆலயங்களில் உங்களைச் சாட்டையினால் அடிப்பார்கள்.
मैनन् करां हुशार रेइयथ तैना तुसन ट्लेइतां सभान मां पैश केरेले ते प्रार्थना घरन मां तुसन कोड़ां केरि मार दुवाले।
18 ௧௮ அவர்களுக்கும் யூதரல்லாதவர்களுக்கும் சாட்சியாக என்னிமித்தம் அதிபதிகளுக்கு முன்பாகவும், ராஜாக்களுக்கு முன்பாகவும் கொண்டுபோகப்படுவீர்கள்.
ते तुसन मेरी वजाई सेइं गवर्नरन ते कने राज़न कां हाज़र केरेले, ताके तुस तैन मां ते गैर कौमन मां मेरे गवाह बन्थ।
19 ௧௯ அவர்கள் உங்களை ஒப்புக்கொடுக்கும்போது: எப்படிப் பேசுவோம் என்றும், என்னத்தைப் பேசுவோம் என்றும் கவலைப்படாமலிருங்கள்; நீங்கள் பேசவேண்டியது அந்தநேரத்தில் உங்களுக்குக் கொடுக்கப்படும்.
पन ज़ैखन तैना ट्लुवेइतां हावाले केरेले, त तुस फिक्र न केरथ, कि अस कुन ज़ोमेले ते केन्च़रे ज़ोमेले, किजोकि ज़ैन किछ ज़ोनू भोलू तैखने अवं तुसन ज़ोइलो।
20 ௨0 பேசுகிறவர்கள் நீங்கள் இல்லை, உங்களுடைய பிதாவின் ஆவியானவரே உங்களிலிருந்து பேசுகிறவர்.
किजोकि ज़ोने बाले तुस नईं, बल्के पवित्र आत्मा भोलो ज़ै तुश्शे स्वर्गेरे बाजी परमेशरेरे तरफां आए।”
21 ௨௧ சகோதரன் தன் சகோதரனையும், தகப்பன் தன் பிள்ளையையும், மரணத்திற்கு ஒப்புக்கொடுப்பார்கள்; பெற்றோருக்கு விரோதமாகப் பிள்ளைகள் எழும்பி அவர்களைக் கொலைசெய்ய ஒப்புக்கொடுப்பார்கள்.
“ढ्ला, ढ्लाए ते बाजी मट्ठे मारनेरे लेइ सोंफेले, ते मट्ठां अपने अम्मा बाजी केरे खलाफ भोइतां तैन माराले।
22 ௨௨ என் நாமத்தினாலே நீங்கள் எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்; இறுதிவரைக்கும் நிலைத்திருப்பவனே இரட்சிக்கப்படுவான்.
मेरे नंव्वेरो वजाई सेइं सब लोक तुसन सेइं बैर केरेले, पन ज़ै आखरी तगर बरदाशत केरेलो तैस्से मुक्ति मैलेली।
23 ௨௩ ஒரு பட்டணத்தில் உங்களைத் துன்பப்படுத்தினால் வேறொரு பட்டணத்திற்கு ஓடிப்போங்கள்; மனிதகுமாரன் வருவதற்குள்ளாக நீங்கள் இஸ்ரவேலருடைய பட்டணங்களையெல்லாம் சுற்றிவரமுடியாதென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ज़ैखन लोक तुसन एक्की नगर मां सताले, त होरि नगर मांजो नेश्शी गेइयथ, अवं तुसन सेइं सच़ ज़ोताईं कि एस करां पेइले तुस इस्राएलेरे सैरी नगरन मां तुश्शू सफर पूरू न भोलू, त अवं मैनेरू मट्ठू एज्जी गालू।”
24 ௨௪ சீடன் தன் போதகனைவிடவும், வேலைக்காரன் தன் எஜமானைவிடவும் மேலானவன் இல்லை.
“चेलो अपने गुरू करां बड्डो न भोए, ते न नौकर अपने मालिके करां।
25 ௨௫ சீடன் தன் போதகனைப்போலவும், வேலைக்காரன் தன் எஜமானைப்போலவும் இருப்பதுபோதும். வீட்டு எஜமானையே பெயெல்செபூல் என்று சொன்னார்களென்றால், அவன் குடும்பத்தினரை இன்னும் அதிகமாகச் சொல்வது அதிக நிச்சயமல்லவா?
चेलेरे लेइ त एन्ने बड़ुए कि तै अपने गुरेरो ज़ेरो भोए, ते नौकरेरे लेइ एन्ने बड़ुए कि तै अपने मालिकेरे बराबर भोए, अगर तैनेईं मालिके जो शैतान ज़ोवं, त तैसेरे घरेबालन जो केत्रू ज़ोनूए!”
26 ௨௬ அவர்களுக்குப் பயப்படாமலிருங்கள்; வெளியாக்கப்படாத மறைபொருளும் இல்லை; அறியப்படாத இரகசியமும் இல்லை.
“तुस तैन करां न डेरथ, किजोकि कोई चीज़ छ़प्पोरी नईं, ज़ै खोल्ली न गाली, ते कोई भेद छ़प्पोरो न रालो, बल्के सारो भेद बांदो भोलो।
27 ௨௭ நான் உங்களுக்கு இருளிலே சொல்லுகிறதை நீங்கள் வெளிச்சத்திலே சொல்லுங்கள்; காதிலே கேட்கிறதை நீங்கள் வீடுகளின்மேல் பிரசித்தம்பண்ணுங்கள்.
ज़ैन किछ अवं तुसन सेइं आंधरे मां ज़ोताईं, तुस तैन दीसां ज़ोइयथ, ते ज़ैन किछ तुश्शे कन्ने पत्र बल्हे सेइं शुनावं गाते, तुस लाए पुड़ गेइतां तैसेरो प्रचार केरथ।
28 ௨௮ ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாக இல்லாமல், சரீரத்தைமட்டும் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள். (Geenna g1067)
तुस तैन करां न डेरथ ज़ैना जानी त मारतन, पन आत्मा न मैरी बटन, परमेशरे करां डरा, ज़ै आत्माई ते जानी दुइने नरके मां नाश केरि बटते। (Geenna g1067)
29 ௨௯ ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆனாலும் உங்களுடைய பிதாவின் விருப்பமில்லாமல், அவைகளில் ஒன்றாவது தரையிலே விழாது.
कुन एक्की सिकेरी दूई च़ड़ोली न बिकन? फिरी भी तुश्शो बाजेरे मेरज़रे बगैर तैन मरां अक भी धेरती पुड़ न झ़ेड़ी बटन।
30 ௩0 உங்களுடைய தலையிலுள்ள முடிகளெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
परमेशर तुश्शे हर गल्लरी फिक्र केरते इड़ी तगर तुश्शे दोग्गेरे बाल भी गन्नोरेन।
31 ௩௧ ஆதலால், பயப்படாமலிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைவிட நீங்கள் விசேஷித்தவர்களாக இருக்கிறீர்கள்.
एल्हेरेलेइ डरा न, तुश्शी कदर बेड़ि च़ड़ोलन करां भी बड़ी जादे।”
32 ௩௨ மனிதர்கள் முன்பாக என்னை அறிக்கைசெய்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைசெய்வேன்.
“ज़ैना लोक, मैन्हु केरे सामने मेरो इकरार केरतन कि तैना मेरे चेलेन, त अवं भी अपने स्वर्गेरो बाजी केरे सामने तैन केरो इकरार केरेलो, कि तैना मेरे चेलेन।
33 ௩௩ மனிதர்கள் முன்பாக என்னை மறுதலிக்கிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக மறுதலிப்பேன்.
पन ज़ैना लोक, मैन्हु केरे सामने इन ज़ोने करां डरेले, कि तैना मेरे चेलेन, त अवं भी तैन केरो अपने स्वर्गेरो बाजेरे सामने इन्कार केरेलो, कि एना मेरे चेले नईं।”
34 ௩௪ பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பிரிவினையையே அனுப்பவந்தேன்.
“इन न सैमझ़थ कि अवं धेरती पुड़ एल्हेरेलेइ ओरोईं लोक मेल मिलापे सेइं रान, पन मेरू एजनू लोकन एप्पू मांमेइं लड़नेरी वजा भोइ, मेल मलाप नईं।
35 ௩௫ எப்படியென்றால், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமியாருக்கும் பிரிவினையுண்டாக்க வந்தேன்.
अवं एल्हेरेलेइ ओरोईं कि मट्ठे बाजी करां ते कुइये अम्मा करां ते नुशी शिखी करां अलग केरि।
36 ௩௬ ஒரு மனிதனுக்கு விரோதிகள் அவன் குடும்பத்தாரே.
मैनेरे दुश्मन त तैसेरे अपने घरेरे लोक भोनेन।”
37 ௩௭ தகப்பனையாவது தாயையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை; மகனையாவது மகளையாவது என்னைவிட அதிகமாக நேசிக்கிறவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
ज़ै कोई अम्मा या बाजी मीं करां जादे ट्लारे समझ़ते, तै मेरो चेलो बन्नेरे काबल नईं ते ज़ै कोई मट्ठे या कुइये मीं करां जादे समझ़ते, तै भी मेरो चेलो बन्नेरे काबल नईं।
38 ௩௮ தன் சிலுவையை எடுத்துக்கொண்டு என்னைப் பின்பற்றாதவன் எனக்கு தகுதியானவன் இல்லை.
ज़ै कोई मेरो चेलो भोनेरी वजाई सेइं दुःख झ़ैल्लनेरे लेइ त कने मरनेरे लेइ तियार नईं, त तै भी मेरो चेलो बन्नेरे काबल नईं।
39 ௩௯ தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழந்துபோவான்; என்னிமித்தம் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதைக் காப்பான்.
ज़ै कोई मरने करां बच़नेरे लेइ मेरो इन्कार केरेलो, त तैन हमेशारी ज़िन्दगी न मैलेली। पन ज़ै मीं पुड़ विश्वास केरनेरे वजाई सेइं अपने जान देनेरे लेइ भी तियार भोलो, त तैस हमेशारी ज़िन्दगी मैलेली।
40 ௪0 உங்களை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்.
“ज़ैना तुसन कबूल केरतन, तैना मीं कबूल केरतन, ज़ैना मीं कबूल केरतन, तैना सिर्फ मीं नईं, पन तैना परमेशरे भी कबूल केरतन, ज़ैनी अवं इड़ी भेज़ोरोईं।”
41 ௪௧ தீர்க்கதரிசி என்னும் பெயரினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்குரிய பலனை அடைவான்; நீதிமான் என்னும் பெயரினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்குரிய பலனை அடைவான்.
“ज़ै नेबन, नबी सेमझ़तां कबूल केरेलो, परमेशर तैस नेबी केरे बराबर इनाम देलो, ते ज़ै धेर्मी मैन्हु धर्मी सेमझ़तां कबूल केरते, परमेशर तैस धेर्मी बराबर इनाम देलो।
42 ௪௨ சீடன் என்னும் பெயரினிமித்தம் இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு ஒரு கிண்ணம் தண்ணீர்மட்டும் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனைப் பெறாமல் போகமாட்டான் என்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ज़ै कोई इन निकड़न मरां एक्की मेरो चेलो बुझ़तां सिर्फ अक कटोरो ठंढू पानी पियालो, अवं तुसन सेइं सच़ ज़ोताईं तैस पक्कू इनाम मैलनू आए।”

< மத்தேயு 10 >