< மாற்கு 2 >

1 சில நாட்களுக்குப்பின்பு அவர் மறுபடியும் கப்பர்நகூமுக்குப் போனார்; அவர் வீட்டில் இருக்கிறார் என்று மக்கள் கேள்விப்பட்டு;
И уђе опет у Капернаум после неколико дана; и чу се да је у кући.
2 உடனே அநேக மக்கள் கூடிவந்தார்கள், வாசலுக்குமுன்பு நிற்க இடம் இல்லாமல்போனது; அவர்களுக்கு வசனத்தைப் போதித்தார்.
И одмах скупише се многи тако да не могаху ни пред вратима да се збију; и казиваше им реч.
3 அப்பொழுது நான்குபேர், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்ட ஒருவனைச் சுமந்துகொண்டு அவரிடம் வந்தார்கள்;
И дођоше к Њему с одузетим кога су носили четворо.
4 மக்கள்கூட்டம் அதிகமாக இருந்ததால் இயேசுவின் அருகில் செல்லமுடியாமல், அவர் இருந்த வீட்டின் மேல்கூரையைப் பிரித்து, அந்தப் பக்கவாதக்காரனை படுக்கையோடு இறக்கினார்கள்.
И не могући приближити се к Њему од народа открише кућу где Он беше, и прокопавши спустише одар на коме одузети лежаше.
5 இயேசு அவர்கள் விசுவாசத்தைக் கண்டு, பக்கவாதக்காரனைப் பார்த்து: மகனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
А Исус видевши веру њихову рече узетоме: Синко! Опраштају ти се греси твоји.
6 அங்கே உட்கார்ந்திருந்த வேதபண்டிதர்களில் சிலர்:
А онде сеђаху неки од књижевника и помишљаху у срцима својим:
7 இவன் இப்படித் தேவநிந்தனை சொல்லுகிறது என்ன? தேவன் ஒருவரைத்தவிர பாவங்களை மன்னிப்பவர் யார் என்று தங்களுடைய இருதயங்களில் சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.
Шта овај тако хули на Бога? Ко може опраштати грехе осим једног Бога?
8 அவர்கள் தங்களுடைய மனதில் இப்படிச் சிந்திக்கிறார்கள் என்று இயேசு உடனே தம்முடைய ஆவியில் அறிந்து, அவர்களைப் பார்த்து: நீங்கள் உங்களுடைய இருதயங்களில் இப்படிச் சிந்திக்கிறது என்ன?
И одмах разумевши Исус духом својим да они тако помишљају у себи, рече им: Што тако помишљате у срцима својим?
9 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, அல்லது எழுந்து உன் படுக்கையை எடுத்துக்கொண்டு நட என்று சொல்வதோ, எது எளிது?
Шта је лакше? Рећи узетоме: Опраштају ти се греси, или рећи: Устани и узми одар свој, и ходи?
10 ௧0 பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனைப் பார்த்து:
Но да знате да власт има Син човечји на земљи опраштати грехе, (рече узетоме: )
11 ௧௧ நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Теби говорим: устани и узми одар свој, и иди дома.
12 ௧௨ உடனே, அவன் எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லோருக்கும் முன்பாக தன் வீட்டிற்குப்போனான். அப்பொழுது எல்லோரும் ஆச்சரியப்பட்டு: நாம் இதுவரை இப்படிப்பட்ட சம்பவத்தைப் பார்த்தது இல்லை என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.
И уста одмах, и узевши одар изађе пред свима тако да се сви дивљаху и хваљаху Бога говорећи: Никада тога видели нисмо.
13 ௧௩ அவர் மீண்டும் புறப்பட்டுக் கடல் அருகே போனார்; அப்பொழுது மக்கள் எல்லோரும் அவரிடம் வந்தார்கள்; அவர்களுக்குப் போதனைப்பண்ணினார்.
И изађе опет к мору; и сав народ иђаше к Њему, и учаше их.
14 ௧௪ அப்பொழுது அவர் நடந்துபோகும்போது, அல்பேயுவின் குமாரனாகிய லேவி வரிவசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து: என் பின்னே வாஎன்றார்; அவன் எழுந்து அவருக்குப் பின்னேசென்றான்.
И пролазећи виде Левију Алфејевог где седи на царини, и рече му: Хајде за мном. И уставши оде за Њим.
15 ௧௫ அப்பொழுது, அவனுடைய வீட்டிலே அவர் விருந்து சாப்பிடும்போது, அநேக வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவரோடு வந்திருந்தபடியால், அவர்களும் இயேசுவோடும் அவருடைய சீடர்களோடும் பந்தியில் இருந்தார்கள்.
И кад сеђаше Исус за трпезом у кући његовој, цариници и грешници многи сеђаху с Њим и с ученицима Његовим: јер их беше много који иђаху за Њим.
16 ௧௬ இயேசு வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சாப்பிடுகிறதை வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் பார்த்து, அவருடைய சீடர்களை நோக்கி: அவர் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து சாப்பிடுவது ஏன் என்று கேட்டார்கள்.
А књижевници и фарисеји видевши Га где једе с цариницима и с грешницима говораху ученицима Његовим: Зашто с цариницима и грешницима једе и пије?
17 ௧௭ இயேசு அதைக்கேட்டு: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவை, சுகமாக இருப்பவர்களுக்கு தேவை இல்லை; நீதிமான்களையல்ல, பாவிகளையே மனம்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.
И чувши Исус рече им: Не требају здрави лекара него болесни. Ја нисам дошао да дозовем праведнике но грешнике на покајање.
18 ௧௮ யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் இயேசுவிடம் வந்து: யோவானுடைய சீடர்களும் பரிசேயர்களுடைய சீடர்களும் உபவாசம்பண்ணுகிறார்களே, ஆனால் உம்முடைய சீடர்கள் உபவாசம்பண்ணாமல் இருப்பது ஏன் என்று கேட்டார்கள்.
И беху ученици Јованови и фарисејски који пошћаху; и дођоше и рекоше Му: Зашто ученици Јованови и фарисејски посте, а твоји ученици не посте?
19 ௧௯ அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் உபவாசம்பண்ணுவார்களா? மணவாளன் தங்களோடு இருக்கும்வரை உபவாசம்பண்ணமாட்டார்களே.
И рече им Исус: Еда ли могу сватови постити док је женик с њима? Докле год имају са собом женика не могу постити.
20 ௨0 மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.
Него ће доћи дани кад ће се отети од њих женик, и тада ће постити, у оне дане.
21 ௨௧ ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு இணைத்து தைக்கமாட்டான், தைத்தால், அதினோடு இணைத்த புதிய ஆடை பழைய ஆடையை அதிகமாகக் கிழிக்கும், கீறலும் அதிகமாகும்.
И нико не пришива нову закрпу на стару хаљину; иначе ће одадрети нова закрпа од старог, и гора ће рупа бити.
22 ௨௨ ஒருவனும் புதிய திராட்சைரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால், புதிய இரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், இரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்; புதிய இரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும் என்றார்.
И нико не сипа ново вино у мехове старе; иначе ново вино продре мехове, и вино се пролије, и мехови пропадну; него ново вино у нове мехове сипати треба.
23 ௨௩ பின்பு, அவர் ஓய்வுநாளில் வயல்வழியாக நடந்துபோனார்; அவருடைய சீடர்கள் அவரோடு நடந்துபோகும்போது, கதிர்களைச் சாப்பிட தொடங்கினார்கள்.
И догоди Му се да су ишли у суботу кроз усеве, и ученици Његови тргаху путем класје.
24 ௨௪ பரிசேயர்கள் அவரைப் பார்த்து: இதோ, ஓய்வுநாளில் செய்யக்கூடாததை இவர்கள் ஏன் செய்கிறார்கள் என்றார்கள்.
И фарисеји говораху Му: Гледај, зашто чине у суботу шта не ваља?
25 ௨௫ அதற்கு அவர்: தாவீதுக்கு உண்டான ஆபத்தில், தானும் தன்னோடு இருந்தவர்களும் பசியாக இருந்தபோது,
А Он рече им: Нисте ли никад читали шта учини Давид кад му би до невоље и огладне с онима што беху с њим?
26 ௨௬ அவன் அபியத்தார் என்னும் பிரதான ஆசாரியன் காலத்தில் செய்ததை நீங்கள் படித்தது இல்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறு ஒருவரும் சாப்பிடக்கூடாத தேவ சமுகத்தின் அப்பங்களைத் தானும் சாப்பிட்டுத் தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்றார்.
Како уђе у Божју кућу пред Авијатаром поглаваром свештеничким и хлебове постављене поједе којих не беше слободно никоме јести осим свештеницима, и даде их онима који беху с њим?
27 ௨௭ பின்பு அவர்களை நோக்கி: மனிதன் ஓய்வுநாளுக்காக உண்டாக்கப்படவில்லை, ஓய்வுநாள் மனிதனுக்காக உண்டாக்கப்பட்டது;
И говораше им: Субота је начињена човека ради, а није човек суботе ради.
28 ௨௮ எனவே மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
Дакле је Господар Син човечји и од суботе.

< மாற்கு 2 >