< லூக்கா 8 >

1 பின்பு, இயேசு பட்டணங்கள்தோறும் கிராமங்கள்தோறும் பயணம்செய்து, தேவனுடைய ராஜ்யத்திற்குரிய நற்செய்தியைச் சொல்லி பிரசங்கித்து வந்தார். பன்னிரண்டு சீடர்களும் அவரோடு இருந்தார்கள்.
Тунчи Исусо жыля пай фороря и гава, пхэнэлас Радосаво Лав палав Тхагаримос лэ Дэвлэско. Лэса сас дэшудуй
2 பொல்லாத ஆவிகளிலிருந்தும் வியாதிகளிலிருந்தும் விடுவித்து சுகமாக்கப்பட்ட சில பெண்களும், ஏழு பிசாசுகளின் தொல்லையிலிருந்து விடுதலைபெற்ற மகதலேனாள் என்னப்பட்ட மரியாளும்,
и кадя ж сас жувля, савэн Вов састярдя холятирэ духонэндар и насвалимастар: Мария, проакхарди Магдалина, савятар выжыле эхта бэнга,
3 ஏரோதின் மேலாளரான கூசாவின் மனைவியாகிய யோவன்னாளும், சூசன்னாளும், தங்களுடைய ஆஸ்திகளால் அவருக்கு ஊழியம் செய்துகொண்டுவந்த பல பெண்கள் அவரோடு இருந்தார்கள்.
Иоана, ромни лэ Хузастири, саво сас пхурэдэр андо чер Иродоско, Сусана и бут авэр. Кала жувля поможысарэнас Исусости и Лэстирэ сытярнэнди андай кода, со лэндэ сас.
4 எல்லாப் பட்டணங்களிலுமிருந்து மக்கள்கூட்டம் அவரிடத்தில் வந்தவுடன், அவர் உவமையாகச் சொன்னது:
Кав Исусо авэнас мануша андай бут фороря. Сар стидиле бут мануша, Вов роспхэндя лэнди дума:
5 விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கும்போது சில விதைகள் வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைச் சாப்பிட்டுச் சென்றன.
— Мануш выжыля тэ шол ворзо андэ пхув. Кала вов шолас, екх ворзо пэля пашав дром, и мануша пэрнэнца потасадэ, ай чирикля упралимастирэ похале лэс.
6 சில விதைகள் கற்பாறையின்மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்துபோனது.
Авэр, со пэля пэ баруи пхув, подбариля тай зашутиля, колэстар со котэ на сас паи.
7 சில விதைகள் முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூடவளர்ந்து, அதை நெருக்கிப்போட்டது.
Трито пэля андэ чяр, и кодья розбариляпэ тай замардя лэс.
8 சில விதைகள் நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கவேண்டும் என்று சத்தமிட்டுக் கூறினார்.
Авэр пэля пэ лащи пхув, бариля и андя андэ шэл молоря майбут колэстар, со сас шуто. Тунчи Исусо вазгля гласо тай пхэндя: — Кастэ исин кана, кай тэ ашунэл, мэк ашунэл!
9 அப்பொழுது அவருடைய சீடர்கள், இந்த உவமையின் கருத்து என்னவென்று அவரிடத்தில் கேட்டார்கள்.
Лэстирэ сытярнэ пушле Лэстар: — Сар тэ полэ кадья дума?
10 ௧0 அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.
Исусо пхэндя: — Тумэнди дяпэ тэ жанэн гарадо пала Тхагаримос Дэвлэско, ай аврэнди вся ашэлпэ гарадя думаса, кай онэ тэ дикхэн и тэ на удикхэн, тэ ашунэн и тэ на полэн.
11 ௧௧ “அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
Акэ, сар тэ полэ кадья дума: ворзо — када лав Дэвлэско.
12 ௧௨ வழியருகே விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; அவர்கள் விசுவாசித்து இரட்சிக்கப்படாதபடிக்குப் பிசாசானவன் வந்து, அவ்வசனத்தை அவர்கள் இருதயத்திலிருந்து எடுத்துப்போடுகிறான்.
Кодва, саво пэля паша дром, исин кола, савэ ашунэн лав, нэ тунчи авэл Бэнг и чёрэл лав андай лэнго води, соб онэ тэ на патян и тэ на фэрисарэнпэ.
13 ௧௩ கற்பாறையின்மேல் விதைக்கப்பட்டவர்கள் கேட்கும்போது, சந்தோஷத்துடனே வசனத்தை ஏற்றுக்கொள்ளுகிறார்கள்; ஆனாலும் தங்களுக்குள்ளே வேர்கொள்ளாதபடியினாலே, கொஞ்சக்காலமட்டும் விசுவாசித்து, சோதனைகாலத்தில் பின்வாங்கிப்போகிறார்கள்.
Ворзо, саво пэля пэ баруи пхув, исин кола, ко радомаса прилэл лав, кала ашунэл лэс. Нэ лэндэ нинай корнё. Сави-то вряма патян, нэ сар авэл зумавимос, онэ отпэрэн.
14 ௧௪ முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக் கேட்கிறவர்களாக இருக்கிறார்கள்; கேட்டவுடனே போய், உலகத்திற்குரிய கவலைகளினாலும் செல்வத்தினாலும் சிற்றின்பங்களினாலும் நெருக்கப்பட்டு, பலன்கொடுக்காமல் இருக்கிறார்கள்.
Ворзо, саво пэля андэ чяр, исин кола мануша, савэ ашунэн лав. Нэ авэн жувимастирэ рындоря, тай лэнди камэлпэ тэ авэн барвалэнца и шукар тэ жувэн. Вся када на дэл тэ барёл лавэсти, и вов на анэл плодо.
15 ௧௫ நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவர்கள் வசனத்தைக்கேட்டு, அதை உண்மையும் நன்மையுமான இருதயத்திலே காத்துப் பொறுமையுடனே பலன்கொடுக்கிறவர்களாக இருக்கிறார்கள்.
Ворзо, саво пэля пэ лащи пхув, — када мануша, савэ ашунэн лав, ритярэн лэс андо лашо и жужо води и анэн плодо, тэрписаримаса андэ вся вряма.
16 ௧௬ ஒருவனும் விளக்கைக் கொளுத்தி, அதை ஒரு பாத்திரத்தினாலே மூடிவைக்கமாட்டான், கட்டிலின்கீழே வைக்கவும் மாட்டான்; உள்ளே நுழைகிறவர்கள் அதின் வெளிச்சத்தைக் காணும்படிக்கு அதை விளக்குத்தண்டின்மேல் வைப்பான்.
Нико на запхабарэл каганцо и на тховэл лэс талай пири или талав пато, а тховэл лэс упрэ пэ вучё тхан. Тунчи, ко зажала, дикхэла удуд.
17 ௧௭ வெளியரங்கமாகாத இரகசியமுமில்லை, அறியப்பட்டு வெளியேவராத மறைபொருளுமில்லை.
Нинай нисо чёрэхано, со на авэла удикхло, и гарадо, со на ужанэна и со на выжала аври.
18 ௧௮ ஆதலால் நீங்கள் கேட்கிற விதத்தைக்குறித்துக் கவனியுங்கள்; உள்ளவனெவனோ அவனுக்குக் கொடுக்கப்படும்; இல்லாதவனெவனோ அவன் தனக்குண்டென்று நினைக்கிறதும் அவனிடத்திலிருந்து எடுத்துக்கொள்ளப்படும்” என்றார்.
Дикхэн, сар тумэ ашунэн. Кастэ исин, колэсти инке авэла дино, а кастэ нинай, колэстар отлэлапэ и кода, со, сар лэсти гындолпэ, лэстэ исин.
19 ௧௯ அப்பொழுது அவருடைய தாயாரும் சகோதரர்களும் அவரிடத்தில் வந்தார்கள் மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தது, ஆதலால் அவர் அருகில் செல்லமுடியாமல் இருந்தது.
Кав Исусо авиле Лэстири дэй и пхрала, и на сас сар тэ поджан, колэстар со паша Лэстэ сас фартэ бут мануша.
20 ௨0 அப்பொழுது: உம்முடைய தாயாரும் உம்முடைய சகோதரர்களும் உம்மைப் பார்க்கவேண்டுமென்று வெளியே நிற்கிறார்கள் என்று அவருக்கு அறிவித்தார்கள்.
Исусости роспхэндэ: — Дэй Тири и пхрала Тирэ тэрдён аври, камэн тэ дикхэн Тут.
21 ௨௧ அதற்கு அவர்: தேவனுடைய வசனத்தைக்கேட்டு, அதின்படி செய்கிறவர்களே எனக்குத் தாயும் எனக்குச் சகோதரர்களுமாக இருக்கிறார்கள் என்றார்.
Исусо пхэндя лэнди: — Мэрни дэй и пхрала исин кола, ко ашунэл лав Дэвлэско и терэл кадя, сар вов пхэнэл.
22 ௨௨ பின்பு ஒருநாள் அவர் தமது சீடர்களோடு படகில் ஏறி: கடலின் அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார்; அப்படியே புறப்பட்டுப்போனார்கள்.
Екхвар Исусо пхэндя Пэстирэ сытярнэнди: — Пэрэплывисараса пэ авэр риг. Онэ бэшле андо чёвно, отплывисардэ.
23 ௨௩ படகில் பயணம்செய்துகொண்டு இருக்கும்போது இயேசு தூங்கிவிட்டார். அப்பொழுது கடலிலே சுழல் காற்றுண்டானதால், அவர்களுடைய படகு தண்ணீரினால் நிறைந்து ஆபத்து ஏற்பட்டது.
Сар онэ плывисарэнас, Исусо засутя. Вазгляпэ по паи бари балвал, и чёвно ля тэ зашол паеса кадя, со лэнди авэлас бида.
24 ௨௪ அவர்கள் அவரிடத்தில் வந்து, ஐயரே, ஐயரே, சாகப்போகிறோம் என்று அவரை எழுப்பினார்கள்; அவர் எழுந்து, காற்றையும் தண்ணீரின் கொந்தளிப்பையும் அதட்டினார்; உடனே அவைகள் நின்றுபோய், அமைதலுண்டானது.
Сытярнэ поджыле кав Исусо, вазгле Лэс и пхэндэ: — Сытяримари! Сытяримари! Амэ хасавас! Вов просутяпэ и запхэндя балваляти и паести, саво ваздёлас. Вся пэрэашыля, и ашыля тыхо.
25 ௨௫ அவர் அவர்களை நோக்கி: உங்களுடைய விசுவாசம் எங்கே என்றார். அவர்கள் பயந்து ஆச்சரியப்பட்டு: இவர் யாரோ, காற்றுக்கும் கடலுக்கும் கட்டளையிடுகிறார், அவைகளும் இவருக்குக் கீழ்ப்படிகிறதே என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.
— Кай патимос тумаро? — пхэндя Исусо сытярнэнди. Онэ ж пэрэдарайле тай дивосайле, и пушэнас екх екхэстар: — Ко Вов, со и балваляти, и паести припхэнэл, и онэ кандэн Лэс?
26 ௨௬ பின்பு கலிலேயாவிற்கு எதிரான கதரேனருடைய நாட்டைச் சேர்ந்தார்கள்.
Онэ приплывисардэ андэ пхув Гераса, сави сас англай Галилея.
27 ௨௭ அவர் கரையிலிறங்கினபோது, நெடுநாளாகப் பிசாசுகள் பிடித்தவனும், ஆடையணியாதவனும், வீட்டில் தங்காமல் கல்லறைகளிலே தங்கினவனுமாக இருந்த அந்தப் பட்டணத்து மனிதன் ஒருவன் அவருக்கு எதிராகவந்தான்.
Кала Исусо авиля по бэрэго, Лэсти по дром выжыля мануш андав форо, андэр лэстэ сас бут бэнга. Пэр лэстэ дэлмут на сас йида, жувэлас на андо чер, а андэ склэпоря важ мулэ.
28 ௨௮ அவன் இயேசுவைக் கண்டபோது கூக்குரலிட்டு, அவருக்கு முன்பாக விழுந்து: இயேசுவே, உன்னதமான தேவனுடைய குமாரனே, எனக்கும் உமக்கும் என்ன? என்னை வேதனைப்படுத்தாதபடிக்கு உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன் என்று மகா சத்தமாகச் சொன்னான்.
Кала вов удикхля Исусос, вов пэля кай Лэсти пэрнэ и фартэ зацыписайля: — Со Ту мандар камэс, Исусо, Шаво Барэ Дэвлэско? Мангав Тут, на хасар ман!
29 ௨௯ அந்த அசுத்தஆவி அவனைவிட்டுப்போகும்படி இயேசு கட்டளையிட்டபடியினாலே அப்படிச் சொன்னான். அந்த அசுத்தஆவி பலகாலமாக அவனைப் பிடித்திருந்தது; அவன் சங்கிலிகளினாலும் விலங்குகளினாலும் கட்டுண்டு காவல்பண்ணப்பட்டிருந்தும் கட்டுகளை முறித்துப்போட்டுப் பிசாசினால் வனாந்திரங்களுக்குத் துரத்தப்பட்டிருந்தான்.
Исусо припхэндя найжужэ духости тэ выжал андав кадва мануш. Бэнг бут вряма хасарэлас лэс. Лэсти спхандэнас лэпунзэнца васт и пэрнэ, нэ вов росшынэлас лэн, и бэнг затрадэлас лэс андэ мал.
30 ௩0 இயேசு அவனை நோக்கி: உன் பெயர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பெயரைச் சொன்னான்.
Исусо пушля лэс: — Сар тут акхарэн? — Легионо, — пхэндя кодва, колэстар со бут бэнга вжыле андэр лэстэ.
31 ௩௧ தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன. (Abyssos g12)
Онэ линэ тэ мангэнпэ Исусостар тэ на бишалэл лэн андэ бездна. (Abyssos g12)
32 ௩௨ அந்த இடத்தில் அநேகம் பன்றிகள் கூட்டமாக மலையிலே மேய்ந்துகொண்டிருந்தது. அந்தப் பன்றிகளுக்குள் போகும்படி தங்களுக்கு உத்தரவு கொடுக்கவேண்டும் என்று அவரை வேண்டிக்கொண்டன; அவைகளுக்கு உத்தரவு கொடுத்தார்.
Найдур котар по плай пасынаспэ бут балэ, и бэнга мангэнас Исусос, кай онэ тэ вжан андэр лэндэ. Вов пхэндя лэнди: «Жан».
33 ௩௩ அப்படியே பிசாசுகள் அந்த மனிதனைவிட்டு நீங்கி பன்றிகளுக்குள் புகுந்தன; அப்பொழுது அந்தப் பன்றிக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து கடலிலே பாய்ந்து, அமிழ்ந்து மரித்தன.
Кала бэнга выжыле андав мануш и вжыле андэ балэ, и кола всаворэ шутэпэ пай кручя андо паи и тасиле.
34 ௩௪ அவைகளை மேய்த்தவர்கள் சம்பவித்ததைக் கண்டு, ஓடிப்போய், பட்டணத்திலும் சுற்றுப்புறங்களிலும் அறிவித்தார்கள்.
Пасымаря, савэ сас пашай балэ, дикхле, со тердяпэ, прастае и роспхэндэ вся андо форо и андэ гава.
35 ௩௫ அப்பொழுது சம்பவித்ததைப் பார்க்கும்படி மக்கள் புறப்பட்டு, இயேசுவினிடத்தில் வந்து, பிசாசுகள் விட்டுப்போன மனிதன் ஆடை அணிந்து இயேசுவின் பாதத்தருகே உட்கார்ந்து புத்திதெளிந்திருக்கிறதைக் கண்டு, பயந்தார்கள்.
Сжылепэ мануша тэ дикхэн, со тердяпэ. Онэ поджыле кав Исусо и удикхле, со кодва мануш, андэ савэстэ сас бэнга, бэшэл пашай пэрнэ кав Исусо, урявдо и андэ пэсти годи, и авиля пэр лэндэ дар.
36 ௩௬ பிசாசுகள் பிடித்திருந்தவன் சுகமாக்கப்பட்டதைக் கண்டவர்களும் அதை அவர்களுக்கு அறிவித்தார்கள்.
Кола, савэ вся дикхле, роспхэндэ лэнди, сар сас састярдо мануш андэ савэстэ сас бэнга.
37 ௩௭ அப்பொழுது கதரேனருடைய சுற்றுப்புறத்திலுள்ள மக்கள் எல்லோரும் மிகவும் பயமடைந்தபடியினாலே, தங்களைவிட்டுப்போகும்படி அவரை வேண்டிக்கொண்டார்கள். அந்தப்படி அவர் படகில் ஏறி, திரும்பிப்போனார்.
Тунчи всаворэ мануша, савэ жувэнас андэ пхув Гераса, линэ тэ мангэн Исусос тэ ужал лэндар, колэстар со онэ фартэ здарайле. Исусо бэшля андэ чёвно и рисайля палпалэ.
38 ௩௮ பிசாசுகள் நீங்கின மனிதன் அவரோடுகூட இருக்கும்படி உத்தரவு கேட்டான்.
Мануш, савэстар выжыле бэнга, мангля Исусос тэ лэл лэс Пэса. Но Исусо отмэкля лэс и пхэндя:
39 ௩௯ இயேசு அவனை நோக்கி: நீ உன் வீட்டிற்குத் திரும்பிப்போய், தேவன் உனக்குச் செய்தவைகளையெல்லாம் சொல் என்று சொல்லி, அவனை அனுப்பிவிட்டார். அந்தப்படி அவன்போய், இயேசு தனக்குச் செய்தவைகளையெல்லாம் பட்டணத்தில் எங்கும் சொல்லிப் பிரசித்தப்படுத்தினான்.
— Рисав пэстэ черэ и роспхэн, со тердя важ тути Дэл. Кодва жыля, роспхэнэлас пав всаворо форо пала кода, со тердя важ лэсти Исусо.
40 ௪0 இயேசு திரும்பிவந்தபோது மக்களெல்லோரும் அவருக்காகக் காத்திருந்தபடியால் அவரை சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார்கள்.
Кала Исусо рисайля палпалэ, Лэс радомаса прилинэ бут мануша, колэстар со всаворэ ажутярэнас Лэс.
41 ௪௧ அப்பொழுது ஜெப ஆலயத்தலைவனாகிய யவீரு என்னும் பெயருள்ள ஒருவன் இயேசுவின் பாதத்தில் விழுந்து, பன்னிரண்டு வயதுள்ள தன்னுடைய ஒரே மகள் மரணவேதனையில் இருந்தபடியால்,
Тунчи Лэстэ поджыля мануш, савэс акхарэнас Иаиро, саво сас пхурэдэр андэ синагога, и пэля кай Исусостирэ пэрнэ, ля тэ мангэл Лэс, кай тэ авэл лэстэ черэ.
42 ௪௨ தன் வீட்டிற்கு வரும்படி அவரை வேண்டிக்கொண்டான். அவர் போகும்பொழுது மக்கள்கூட்டம் அவரை நெருக்கினார்கள்.
Лэстэ сас екх щей, савяти сас дэшудуй бэрш, и вой мэрэлас. Исусо жыля лэса, и Лэс всаворэ ригэндар стасавэнас мануша.
43 ௪௩ அப்பொழுது பன்னிரண்டு வருடமாக இரத்தப்போக்கினால் அவதிப்பட்டு, தன் சொத்துக்களையெல்லாம் வைத்தியர்களுக்குச் செலவழித்தும், ஒருவனாலும் சுகமாக்கப்படாமலிருந்த ஒரு பெண்,
Машкар лэндэ сас жувли, савятэ дэшудуй бэрш жалас рат. Вой отдя вся, со латэ сас, врачёнэнди, и никастэ на сас зор тэ састярэл ла.
44 ௪௪ அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய ஆடையின் ஓரத்தைத் தொட்டாள்; உடனே அவளுடைய இரத்தப்போக்கு நின்றுபோனது.
Вой поджыля палал кав Исусо и ляпэ кай риг Лэстиря йидатэ. Рат андэ кодья ж вряма пэрэашыля тэ жал.
45 ௪௫ அப்பொழுது இயேசு: என்னைத் தொட்டது யார் என்று கேட்டார். எங்களுக்குத் தெரியாதென்று எல்லோரும் சொன்னபோது, பேதுருவும் அவனுடனேகூட இருந்தவர்களும்: ஐயரே, மக்கள்கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்கிக்கொண்டிருக்கிறார்களே, என்னைத் தொட்டது யார் என்று எப்படிக் கேட்கிறீர் என்றார்கள்.
— Ко Мандэ ляпэ? — пушля Исусо. Нико на прижандёлас. Пэтро пхэндя: — Сытяримари, паша Тутэ бут мануша и стасавэн всаворэ ригэндар!
46 ௪௬ அதற்கு இயேசு: என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்; ஆதலால் ஒருவர் என்னைத் தொட்டதுண்டு என்றார்.
Исусо пхэндя: — Варико Мандэ ляпэ. Мэ полем, со Мандар выжыля зор.
47 ௪௭ அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.
Тунчи кадья жувли поля, со вой на гарадёла, тиносайля, поджыля и пэля англав Исусо. Англай всаворэ мануша роспхэндя, состар вой Лэстэ ляпэ, и сар вой састярдяпэ.
48 ௪௮ அவர் அவளைப் பார்த்து: மகளே, திடன்கொள், உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடு போ என்றார்.
Тунчи Исусо пхэндя лати: — Щей Мэрни! Тиро патимос фэрисардя тут. Жа лэ мироса.
49 ௪௯ அவர் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும்போது, ஜெப ஆலயத்தலைவனுடைய வீட்டிலிருந்து ஒருவன் வந்து, அவனை நோக்கி: உம்முடைய மகள் மரித்துப்போனாள், போதகரை வருத்தப்படுத்தவேண்டாம் என்றான்.
Кала Исусо инкэ на допхэндя када, авиля мануш андав чер пхурэдэр синагогако. — Щей тири муля, — пхэндя вов, — на залэ будэр Сытяримарес.
50 ௫0 இயேசு அதைக்கேட்டு: பயப்படாதே; விசுவாசமுள்ளவனாக இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள் என்றார்.
Ашундя када, Исусо пхэндя Иаирости: — На дара, качи патя, и щей тири авэла фэрисарди.
51 ௫௧ அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும்தவிர வேறொருவரையும் உள்ளே வர அனுமதிக்காமல்,
Сар Вов зажыля андо чер, на дя никасти тэ зажан Лэса, качи о Пэтро, Иоано, Иаково, дад и дэй щиёратирэ.
52 ௫௨ எல்லோரும் அழுது அவளைக்குறித்துத் துக்கப்படுகிறதைக் கண்டு: அழாதேயுங்கள், அவள் மரித்துப்போகவில்லை, தூங்கிக்கொண்டு இருக்கிறாள் என்றார்.
Всаворэ ровэнас и грыжонаспэ пала щиёры. — Пэрэашэн тэ ровэн, — пхэндя Исусо. — Вой на муля, а совэл.
53 ௫௩ அவள் மரித்துப்போனாளென்று அவர்களுக்கு தெரிந்ததினால், அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
Онэ линэ тэ асан Лэстар, колэстар со жанэнас: вой муля.
54 ௫௪ எல்லோரையும் அவர் வெளியே அனுப்பிவிட்டு, அவளுடைய கையைப் பிடித்து: பிள்ளையே எழுந்திரு என்றார்.
Исусо ля ла палав васт и пхэндя: — Бэята, вщи!
55 ௫௫ அப்பொழுது அவள் உயிர் திரும்பவந்தது; உடனே அவள் எழுந்திருந்தாள்; அவளுக்கு ஆகாரம் கொடுங்கள் என்றார்.
Духо щиёрако рисайля латэ, и андэ кодья вряма вой вщиля. Исусо пхэндя тэ дэн лати тэ хас.
56 ௫௬ அவளுடைய தாயும் தகப்பனும் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார்.
О дад и дэй латирэ дивосайле. Исусо пхэндя лэнди, никасти тэ на роспхэнэн пала када, со тердяпэ.

< லூக்கா 8 >