< லூக்கா 6 >

1 பஸ்கா பண்டிகையின் இரண்டாம் நாளைக்குப் பின்வந்த முதலாம் ஓய்வுநாளிலே, இயேசு வயல்வெளியில் நடந்துபோகும்போது, அவருடைய சீடர்கள் கதிர்களைக் கொய்து, கைகளினால் நிமிட்டித்தின்றார்கள்.
အစရဉ္စ ပရွွဏော ဒွိတီယဒိနာတ် ပရံ ပြထမဝိၑြာမဝါရေ ၑသျက္ၐေတြေဏ ယီၑောရ္ဂမနကာလေ တသျ ၑိၐျား ကဏိၑံ ဆိတ္တွာ ကရေၐု မရ္ဒ္ဒယိတွာ ခါဒိတုမာရေဘိရေ၊
2 பரிசேயர்களில் சிலர் அவர்களை நோக்கி: ஓய்வுநாளில் செய்யக்கூடாததை நீங்கள் ஏன் செய்கிறீர்கள் என்று கேட்டார்கள்.
တသ္မာတ် ကိယန္တး ဖိရူၑိနသ္တာနဝဒန် ဝိၑြာမဝါရေ ယတ် ကရ္မ္မ န ကရ္တ္တဝျံ တတ် ကုတး ကုရုထ?
3 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: தாவீதும் அவனோடுகூட இருந்தவர்களும் பசியாக இருந்தபோது செய்ததை நீங்கள் வாசிக்கவில்லையா? அவன் தேவனுடைய வீட்டிற்கு சென்று, ஆசாரியர்கள்தவிர வேறுயாரும் சாப்பிடக்கூடாத தேவசமூகத்தின் அப்பங்களைக் கேட்டு வாங்கி,
ယီၑုး ပြတျုဝါစ ဒါယူဒ် တသျ သင်္ဂိနၑ္စ က္ၐုဓာရ္တ္တား ကိံ စကြုး သ ကထမ် ဤၑွရသျ မန္ဒိရံ ပြဝိၑျ
4 தான் சாப்பிட்டதுமல்லாமல், தன்னோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தானே என்று சொன்னார்.
ယေ ဒရ္ၑနီယား ပူပါ ယာဇကာန် ဝိနာနျသျ ကသျာပျဘောဇနီယာသ္တာနာနီယ သွယံ ဗုဘဇေ သင်္ဂိဘျောပိ ဒဒေါ် တတ် ကိံ ယုၐ္မာဘိး ကဒါပိ နာပါဌိ?
5 மேலும் மனிதகுமாரன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராக இருக்கிறார் என்றார்.
ပၑ္စာတ် သ တာနဝဒတ် မနုဇသုတော ဝိၑြာမဝါရသျာပိ ပြဘု ရ္ဘဝတိ၊
6 வேறொரு ஓய்வுநாளிலே, அவர் ஜெப ஆலயத்திற்குச் சென்று உபதேசித்தார். அங்கே வலது கை சூம்பின ஒரு மனிதன் இருந்தான்.
အနန္တရမ် အနျဝိၑြာမဝါရေ သ ဘဇနဂေဟံ ပြဝိၑျ သမုပဒိၑတိ၊ တဒါ တတ္သ္ထာနေ ၑုၐ္ကဒက္ၐိဏကရ ဧကး ပုမာန် ဥပတသ္ထိဝါန်၊
7 அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவரிடத்தில் குற்றம் கண்டுபிடிக்கும்படி, ஓய்வுநாளில் சுகமாக்குவாரோ என்று அவரை கவனித்துக்கொண்டிருந்தார்கள்.
တသ္မာဒ် အဓျာပကား ဖိရူၑိနၑ္စ တသ္မိန် ဒေါၐမာရောပယိတုံ သ ဝိၑြာမဝါရေ တသျ သွာသ္ထျံ ကရောတိ နဝေတိ ပြတီက္ၐိတုမာရေဘိရေ၊
8 அவர்களுடைய சிந்தனைகளை அவர் அறிந்து, சூம்பின கையையுடைய மனிதனை நோக்கி: நீ எழுந்து நடுவில் நில் என்றார். அவன் எழுந்து நின்றான்.
တဒါ ယီၑုသ္တေၐာံ စိန္တာံ ဝိဒိတွာ တံ ၑုၐ္ကကရံ ပုမာံသံ ပြောဝါစ, တွမုတ္ထာယ မဓျသ္ထာနေ တိၐ္ဌ၊
9 அப்பொழுது இயேசு அவர்களை நோக்கி: நான் உங்களிடம் ஒன்று கேட்கிறேன்; ஓய்வுநாட்களில் நன்மை செய்வதோ, தீமை செய்வதோ? அல்லது ஜீவனைக் காப்பதோ, அழிப்பதோ? எது நியாயம் என்று கேட்டு,
တသ္မာတ် တသ္မိန် ဥတ္ထိတဝတိ ယီၑုသ္တာန် ဝျာဇဟာရ, ယုၐ္မာန် ဣမာံ ကထာံ ပၖစ္ဆာမိ, ဝိၑြာမဝါရေ ဟိတမ် အဟိတံ ဝါ, ပြာဏရက္ၐဏံ ပြာဏနာၑနံ ဝါ, ဧတေၐာံ ကိံ ကရ္မ္မကရဏီယမ်?
10 ௧0 அவர்களெல்லோரையும் சுற்றிப்பார்த்து, அந்த மனிதனை நோக்கி: உன் கையை நீட்டு என்றார். அப்படியே அவன் தன் கையை நீட்டினான், உடனே அவன் கை மறுகையைப்போல குணமானது.
ပၑ္စာတ် စတုရ္ဒိက္ၐု သရွွာန် ဝိလောကျ တံ မာနဝံ ဗဘာၐေ, နိဇကရံ ပြသာရယ; တတသ္တေန တထာ ကၖတ ဣတရကရဝတ် တသျ ဟသ္တး သွသ္ထောဘဝတ်၊
11 ௧௧ அவர்களோ அதிக கோபம் கொண்டு, இயேசுவை என்ன செய்யலாம் என்று ஒருவருக்கொருவர் ஆலோசனைபண்ணினார்கள்.
တသ္မာတ် တေ ပြစဏ္ဍကောပါနွိတာ ယီၑုံ ကိံ ကရိၐျန္တီတိ ပရသ္ပရံ ပြမန္တြိတား၊
12 ௧௨ அந்த நாட்களிலே, அவர் ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறி, இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.
တတး ပရံ သ ပရွွတမာရုဟျေၑွရမုဒ္ဒိၑျ ပြာရ္ထယမာနး ကၖတ္သ္နာံ ရာတြိံ ယာပိတဝါန်၊
13 ௧௩ பொழுதுவிடிந்தபோது, அவர் தம்முடைய சீடர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்துகொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர்கள் என்று பெயரிட்டார்.
အထ ဒိနေ သတိ သ သရွွာန် ၑိၐျာန် အာဟူတဝါန် တေၐာံ မဓျေ
14 ௧௪ அவர்கள் யாரென்றால், பேதுரு என்று தாம் பெயரிட்ட சீமோன், அவனுடைய சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்தொலொமேயு,
ပိတရနာမ္နာ ချာတး ၑိမောန် တသျ ဘြာတာ အာန္ဒြိယၑ္စ ယာကူဗ် ယောဟန် စ ဖိလိပ် ဗရ္ထလမယၑ္စ
15 ௧௫ மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே எனப்பட்ட சீமோன்,
မထိး ထောမာ အာလ္ဖီယသျ ပုတြော ယာကူဗ် ဇွလန္တနာမ္နာ ချာတး ၑိမောန္
16 ௧௬ யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்காரியோத்து என்பவர்களே.
စ ယာကူဗော ဘြာတာ ယိဟူဒါၑ္စ တံ ယး ပရကရေၐု သမရ္ပယိၐျတိ သ ဤၐ္ကရီယောတီယယိဟူဒါၑ္စဲတာန် ဒွါဒၑ ဇနာန် မနောနီတာန် ကၖတွာ သ ဇဂြာဟ တထာ ပြေရိတ ဣတိ တေၐာံ နာမ စကာရ၊
17 ௧௭ பின்பு அவர் அவர்களுடன் இறங்கி, சமமான ஒரு இடத்திலே நின்றார். அங்கே அவருடைய சீடர்கள் அநேகரும், அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்காகவும், தங்களுடைய வியாதிகளிலிருந்து குணமாக்கப்படுவதற்காகவும், யூதேயா மற்றும் எருசலேம் நகரங்களில் இருந்தும், தீரு சீதோன் பட்டணங்கள் இருக்கிற கடலோரத்தில் இருந்தும் அநேக மக்கள் வந்திருந்தார்கள்.
တတး ပရံ သ တဲး သဟ ပရွွတာဒဝရုဟျ ဥပတျကာယာံ တသ္ထော် တတသ္တသျ ၑိၐျသင်္ဃော ယိဟူဒါဒေၑာဒ် ယိရူၑာလမၑ္စ သောရး သီဒေါနၑ္စ ဇလဓေ ရောဓသော ဇနနိဟာၑ္စ ဧတျ တသျ ကထာၑြဝဏာရ္ထံ ရောဂမုက္တျရ္ထဉ္စ တသျ သမီပေ တသ္ထုး၊
18 ௧௮ அசுத்தஆவிகளால் வாதிக்கப்பட்டவர்களும் வந்து, ஆரோக்கியமடைந்தார்கள்.
အမေဓျဘူတဂြသ္တာၑ္စ တန္နိကဋမာဂတျ သွာသ္ထျံ ပြာပုး၊
19 ௧௯ அவரிடத்திலிருந்து வல்லமை புறப்பட்டு எல்லோரையும் குணமாக்கினபடியினாலே, மக்கள் எல்லோரும் அவரைத் தொடுவதற்காக முயற்சிசெய்தார்கள்.
သရွွေၐာံ သွာသ္ထျကရဏပြဘာဝသျ ပြကာၑိတတွာတ် သရွွေ လောကာ ဧတျ တံ သ္ပြၐ္ဋုံ ယေတိရေ၊
20 ௨0 அப்பொழுது அவர் தம்முடைய சீடர்களை நோக்கிப்பார்த்து: “தரித்திரர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள்; தேவனுடைய இராஜ்யம் உங்களுடையது.
ပၑ္စာတ် သ ၑိၐျာန် ပြတိ ဒၖၐ္ဋိံ ကုတွာ ဇဂါဒ, ဟေ ဒရိဒြာ ယူယံ ဓနျာ ယတ ဤၑွရီယေ ရာဇျေ ဝေါ'ဓိကာရောသ္တိ၊
21 ௨௧ இப்பொழுது பசியாக இருக்கிற நீங்கள் பாக்கியவான்கள்; திருப்தியடைவீர்கள். இப்பொழுது அழுகிற நீங்கள் பாக்கியவான்கள்; இனி சிரிப்பீர்கள்.
ဟေ အဓုနာ က္ၐုဓိတလောကာ ယူယံ ဓနျာ ယတော ယူယံ တရ္ပ္သျထ; ဟေ ဣဟ ရောဒိနော ဇနာ ယူယံ ဓနျာ ယတော ယူယံ ဟသိၐျထ၊
22 ௨௨ மனிதகுமாரனைப் பின்பற்றுவதால் மக்கள் உங்களைப் பகைத்து, உங்களை நிராகரித்து, உங்களை அவமதித்து, உங்களுடைய பெயரைப் பொல்லாததென்று சொல்லி உங்களைத் தள்ளிவிடும்போது நீங்கள் பாக்கியவான்களாக இருப்பீர்கள்.
ယဒါ လောကာ မနုၐျသူနော ရ္နာမဟေတော ရျုၐ္မာန် ၒတီယိၐျန္တေ ပၖထက် ကၖတွာ နိန္ဒိၐျန္တိ, အဓမာနိဝ ယုၐ္မာန် သွသမီပါဒ် ဒူရီကရိၐျန္တိ စ တဒါ ယူယံ ဓနျား၊
23 ௨௩ “அந்த நாளிலே நீங்கள் சந்தோஷப்பட்டு மகிழ்ந்திருங்கள்; பரலோகத்தில் உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும்; அவர்களுடைய முற்பிதாக்கள் தீர்க்கதரிசிகளுக்கும் அப்படித்தான் செய்தார்கள்.
သွရ္ဂေ ယုၐ္မာကံ ယထေၐ္ဋံ ဖလံ ဘဝိၐျတိ, ဧတဒရ္ထံ တသ္မိန် ဒိနေ ပြောလ္လသတ အာနန္ဒေန နၖတျတ စ, တေၐာံ ပူရွွပုရုၐာၑ္စ ဘဝိၐျဒွါဒိနး ပြတိ တထဲဝ ဝျဝါဟရန်၊
24 ௨௪ செல்வந்தர்களாகிய உங்களுக்கு ஐயோ; உங்களுடைய ஆறுதலை நீங்கள் அடைந்து விட்டீர்கள்.
ကိန္တု ဟာ ဟာ ဓနဝန္တော ယူယံ သုခံ ပြာပ္နုတ၊ ဟန္တ ပရိတၖပ္တာ ယူယံ က္ၐုဓိတာ ဘဝိၐျထ;
25 ௨௫ திருப்தியுள்ளவர்களாக இருக்கிற உங்களுக்கு ஐயோ; நீங்கள் பசியாக இருப்பீர்கள். இப்பொழுது சிரிக்கிற உங்களுக்கு ஐயோ; இனித் துக்கப்பட்டு அழுவீர்கள்.
ဣဟ ဟသန္တော ယူယံ ဝတ ယုၐ္မာဘိး ၑောစိတဝျံ ရောဒိတဝျဉ္စ၊
26 ௨௬ எல்லா மனிதர்களும் உங்களைக்குறித்துப் புகழ்ச்சியாகப் பேசும்போது உங்களுக்கு ஐயோ; அவர்களுடைய முற்பிதாக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளைக்குறித்தும் அப்படித்தான் பேசினார்கள்.
သရွွဲလာကဲ ရျုၐ္မာကံ သုချာတော် ကၖတာယာံ ယုၐ္မာကံ ဒုရ္ဂတိ ရ္ဘဝိၐျတိ ယုၐ္မာကံ ပူရွွပုရုၐာ မၖၐာဘဝိၐျဒွါဒိနး ပြတိ တဒွတ် ကၖတဝန္တး၊
27 ௨௭ “என் வார்த்தைகளைக் கேட்கிற உங்களுக்கு நான் சொல்லுகிறேன்: உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
ဟေ ၑြောတာရော ယုၐ္မဘျမဟံ ကထယာမိ, ယူယံ ၑတြုၐု ပြီယဓွံ ယေ စ ယုၐ္မာန် ဒွိၐန္တိ တေၐာမပိ ဟိတံ ကုရုတ၊
28 ௨௮ உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை அவமதிக்கிறவர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்.
ယေ စ ယုၐ္မာန် ၑပန္တိ တေဘျ အာၑိၐံ ဒတ္တ ယေ စ ယုၐ္မာန် အဝမနျန္တေ တေၐာံ မင်္ဂလံ ပြာရ္ထယဓွံ၊
29 ௨௯ உன்னை ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மறு கன்னத்தையும் காட்டு; உன் மேலாடையை எடுத்துக்கொள்ளுகிறவன் உன் ஆடையையும் எடுத்துக்கொள்ளத் தடைபண்ணாதே.
ယဒိ ကၑ္စိတ် တဝ ကပေါလေ စပေဋာဃာတံ ကရောတိ တရှိ တံ ပြတိ ကပေါလမ် အနျံ ပရာဝရ္တ္တျ သမ္မုခီကုရု ပုနၑ္စ ယဒိ ကၑ္စိတ် တဝ ဂါတြီယဝသ္တြံ ဟရတိ တရှိ တံ ပရိဓေယဝသ္တြမ် အပိ ဂြဟီတုံ မာ ဝါရယ၊
30 ௩0 உன்னிடத்தில் கேட்கிற எவனுக்கும் கொடு; உன்னுடையதை எடுத்துக்கொள்ளுகிறவனிடத்தில் அதைத் திரும்பக் கேட்காதே.
ယသ္တွာံ ယာစတေ တသ္မဲ ဒေဟိ, ယၑ္စ တဝ သမ္ပတ္တိံ ဟရတိ တံ မာ ယာစသွ၊
31 ௩௧ மனிதர்கள் உங்களுக்கு எப்படிச் செய்யவேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அப்படியே நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.
ပရေဘျး သွာန် ပြတိ ယထာစရဏမ် အပေက္ၐဓွေ ပရာန် ပြတိ ယူယမပိ တထာစရတ၊
32 ௩௨ உங்களை நேசிக்கிறவர்களையே நீங்களும் நேசித்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் தங்களை நேசிக்கிறவர்களை நேசிக்கிறார்களே.
ယေ ဇနာ ယုၐ္မာသု ပြီယန္တေ ကေဝလံ တေၐု ပြီယမာဏေၐု ယုၐ္မာကံ ကိံ ဖလံ? ပါပိလောကာ အပိ သွေၐု ပြီယမာဏေၐု ပြီယန္တေ၊
33 ௩௩ உங்களுக்கு நன்மைசெய்கிறவர்களுக்கே நீங்களும் நன்மைசெய்தால், உங்களுக்குப் பலன் என்ன? பாவிகளும் அப்படிச் செய்கிறார்களே.
ယဒိ ဟိတကာရိဏ ဧဝ ဟိတံ ကုရုထ တရှိ ယုၐ္မာကံ ကိံ ဖလံ? ပါပိလောကာ အပိ တထာ ကုရွွန္တိ၊
34 ௩௪ திரும்பக் கொடுப்பார்கள் என்று நம்பி நீங்கள் கடன்கொடுத்தால் உங்களுக்குப் பலன் என்ன? திரும்பத் தங்களுக்குக் கொடுக்கப்படும் என்று பாவிகளும் பாவிகளுக்குக் கடன் கொடுக்கிறார்களே.
ယေဘျ ၒဏပရိၑောဓသျ ပြာပ္တိပြတျာၑာသ္တေ ကေဝလံ တေၐု ၒဏေ သမရ္ပိတေ ယုၐ္မာကံ ကိံ ဖလံ? ပုနး ပြာပ္တျာၑယာ ပါပီလောကာ အပိ ပါပိဇနေၐု ၒဏမ် အရ္ပယန္တိ၊
35 ௩௫ உங்களுடைய பகைவர்களை நேசியுங்கள், நன்மை செய்யுங்கள், பிரதிபலன் எதிர்பார்க்காமல் கடன் கொடுங்கள்; அப்பொழுது உங்களுடைய பலன் அதிகமாக இருக்கும், உன்னதமான தேவனுக்கு நீங்கள் பிள்ளைகளாக இருப்பீர்கள்; அவர் நன்றியறியாதவர்களுக்கும் துரோகிகளுக்கும் நன்மை செய்கிறாரே.
အတော ယူယံ ရိပုၐွပိ ပြီယဓွံ, ပရဟိတံ ကုရုတ စ; ပုနး ပြာပ္တျာၑာံ တျက္တွာ ၒဏမရ္ပယတ, တထာ ကၖတေ ယုၐ္မာကံ မဟာဖလံ ဘဝိၐျတိ, ယူယဉ္စ သရွွပြဓာနသျ သန္တာနာ ဣတိ ချာတိံ ပြာပ္သျထ, ယတော ယုၐ္မာကံ ပိတာ ကၖတဃ္နာနာံ ဒုရွ္ဋတ္တာနာဉ္စ ဟိတမာစရတိ၊
36 ௩௬ எனவே உங்களுடைய பிதா இரக்கமுள்ளவராக இருக்கிறதுபோல, நீங்களும் இரக்கமுள்ளவர்களாக இருங்கள்.
အတ ဧဝ သ ယထာ ဒယာလု ရျူယမပိ တာဒၖၑာ ဒယာလဝေါ ဘဝတ၊
37 ௩௭ மற்றவர்களைக் குற்றவாளிகள் என்று சொல்லாதிருங்கள்; அப்பொழுது நீங்களும் குற்றவாளிகள் என்று சொல்லப்படாமலிருப்பீர்கள்; மற்றவர்களை தண்டனைக்குள்ளாகும்படி தீர்க்காதிருங்கள், அப்பொழுது நீங்களும் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படாமலிருப்பீர்கள்; விடுதலைபண்ணுங்கள், அப்பொழுது நீங்களும் விடுதலைபண்ணப்படுவீர்கள்.
အပရဉ္စ ပရာန် ဒေါၐိဏော မာ ကုရုတ တသ္မာဒ် ယူယံ ဒေါၐီကၖတာ န ဘဝိၐျထ; အဒဏ္ဍျာန် မာ ဒဏ္ဍယတ တသ္မာဒ် ယူယမပိ ဒဏ္ဍံ န ပြာပ္သျထ; ပရေၐာံ ဒေါၐာန် က္ၐမဓွံ တသ္မာဒ် ယုၐ္မာကမပိ ဒေါၐား က္ၐမိၐျန္တေ၊
38 ௩௮ கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாக அளந்து, உங்களுடைய மடியிலே போடுவார்கள்; நீங்கள் எந்த அளவினால் அளக்கிறீர்களோ அந்த அளவினால் உங்களுக்கும் அளக்கப்படும் என்றார்.
ဒါနာနိဒတ္တ တသ္မာဒ် ယူယံ ဒါနာနိ ပြာပ္သျထ, ဝရဉ္စ လောကား ပရိမာဏပါတြံ ပြဒလယျ သဉ္စာလျ ပြောဉ္စာလျ ပရိပူရျျ ယုၐ္မာကံ ကြောဍေၐု သမရ္ပယိၐျန္တိ; ယူယံ ယေန ပရိမာဏေန ပရိမာထ တေနဲဝ ပရိမာဏေန ယုၐ္မတ္ကၖတေ ပရိမာသျတေ၊
39 ௩௯ பின்னும் அவர் ஒரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பார்வையற்றவனுக்கு பார்வையற்றவன் வழிகாட்ட முடியுமோ? இருவரும் பள்ளத்தில் விழுவார்கள் அல்லவா?
အထ သ တေဘျော ဒၖၐ္ဋာန္တကထာမကထယတ်, အန္ဓော ဇနး ကိမန္ဓံ ပန္ထာနံ ဒရ္ၑယိတုံ ၑက္နောတိ? တသ္မာဒ် ဥဘာဝပိ ကိံ ဂရ္တ္တေ န ပတိၐျတး?
40 ௪0 சீடன் தன் குருவிற்கு மேலானவன் இல்லை, பயிற்சியில் முழுமையாக தேறினவன் தன் குருவைப்போல இருப்பான்.
ဂုရေား ၑိၐျော န ၑြေၐ္ဌး ကိန္တု ၑိၐျေ သိဒ္ဓေ သတိ သ ဂုရုတုလျော ဘဝိတုံ ၑက္နောတိ၊
41 ௪௧ நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பைப் பார்க்கிறது என்ன?
အပရဉ္စ တွံ သွစက္ၐုၐိ နာသာမ် အဒၖၐ္ဋွာ တဝ ဘြာတုၑ္စက္ၐုၐိ ယတ္တၖဏမသ္တိ တဒေဝ ကုတး ပၑျမိ?
42 ௪௨ அல்லது நீ உன் கண்ணில் இருக்கிற மரத்தைப் பார்க்காமல், உன் சகோதரனை நோக்கி: சகோதரனே, நான் உன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடுகிறேன் என்று நீ சொல்வது எப்படி? மாயக்காரனே! முன்பு உன் கண்ணில் இருக்கிற மரத்தை எடுத்துப்போடு, பின்பு உன் சகோதரன் கண்ணில் இருக்கிற துரும்பை எடுத்துப்போடும் வழியைப் பார்ப்பாய்.
သွစက္ၐုၐိ ယာ နာသာ ဝိဒျတေ တာမ် အဇ္ဉာတွာ, ဘြာတသ္တဝ နေတြာတ် တၖဏံ ဗဟိး ကရောမီတိ ဝါကျံ ဘြာတရံ ကထံ ဝက္တုံ ၑက္နောၐိ? ဟေ ကပဋိန် ပူရွွံ သွနယနာတ် နာသာံ ဗဟိး ကုရု တတော ဘြာတုၑ္စက္ၐုၐသ္တၖဏံ ဗဟိး ကရ္တ္တုံ သုဒၖၐ္ဋိံ ပြာပ္သျသိ၊
43 ௪௩ நல்ல மரமானது கெட்ட கனியைக் கொடுக்காது, கெட்ட மரமானது நல்ல கனியைக் கொடுக்காது.
အနျဉ္စ ဥတ္တမသ္တရုး ကဒါပိ ဖလမနုတ္တမံ န ဖလတိ, အနုတ္တမတရုၑ္စ ဖလမုတ္တမံ န ဖလတိ ကာရဏာဒတး ဖလဲသ္တရဝေါ ဇ္ဉာယန္တေ၊
44 ௪௪ ஒவ்வொரு மரமும் அதின் கனியினால் அறியப்படும்; முட்செடிகளில் அத்திப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை, நெருஞ்சிச்செடியில் திராட்சைப்பழங்களைப் பறிக்கிறதுமில்லை.
ကဏ္ဋကိပါဒပါတ် ကောပိ ဥဍုမ္ဗရဖလာနိ န ပါတယတိ တထာ ၑၖဂါလကောလိဝၖက္ၐာဒပိ ကောပိ ဒြာက္ၐာဖလံ န ပါတယတိ၊
45 ௪௫ நல்ல மனிதன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக்காட்டுகிறான்; பொல்லாத மனிதன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்; இருதயத்தின் நிறைவினால் அவனவனுடைய வாய் பேசும்.
တဒွတ် သာဓုလောကော'န္တးကရဏရူပါတ် သုဘာဏ္ဍာဂါရာဒ် ဥတ္တမာနိ ဒြဝျာဏိ ဗဟိး ကရောတိ, ဒုၐ္ဋော လောကၑ္စာန္တးကရဏရူပါတ် ကုဘာဏ္ဍာဂါရာတ် ကုတ္သိတာနိ ဒြဝျာဏိ နိရ္ဂမယတိ ယတော'န္တးကရဏာနာံ ပူရ္ဏဘာဝါနုရူပါဏိ ဝစာံသိ မုခါန္နိရ္ဂစ္ဆန္တိ၊
46 ௪௬ என்னை ஆண்டவரே! ஆண்டவரே! என்று நீங்கள் சொல்லியும், நான் சொல்லுகிறபடி நீங்கள் செய்யாமல் போகிறதென்ன?
အပရဉ္စ မမာဇ္ဉာနုရူပံ နာစရိတွာ ကုတော မာံ ပြဘော ပြဘော ဣတိ ဝဒထ?
47 ௪௭ என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக்கேட்டு, அதின்படி செய்கிறவன் யாருக்கு ஒப்பாக இருக்கிறான் என்று உங்களுக்குச் சொல்லுவேன்.
ယး ကၑ္စိန် မမ နိကဋမ် အာဂတျ မမ ကထာ နိၑမျ တဒနုရူပံ ကရ္မ္မ ကရောတိ သ ကသျ သဒၖၑော ဘဝတိ တဒဟံ ယုၐ္မာန် ဇ္ဉာပယာမိ၊
48 ௪௮ ஆழமாகத் தோண்டி, கற்பாறையின்மேல் அஸ்திபாரம்போட்டு, வீடுகட்டுகிற மனிதனுக்கு ஒப்பாக இருக்கிறான்; பெருவெள்ளம் வந்து, நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதியும், அதை அசைக்க முடியாமல்போனது; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
ယော ဇနော ဂဘီရံ ခနိတွာ ပါၐာဏသ္ထလေ ဘိတ္တိံ နိရ္မ္မာယ သွဂၖဟံ ရစယတိ တေန သဟ တသျောပမာ ဘဝတိ; ယတ အာပ္လာဝိဇလမေတျ တသျ မူလေ ဝေဂေန ဝဟဒပိ တဒ္ဂေဟံ လာဍယိတုံ န ၑက္နောတိ ယတသ္တသျ ဘိတ္တိး ပါၐာဏောပရိ တိၐ္ဌတိ၊
49 ௪௯ என் வார்த்தைகளைக் கேட்டும் அதின்படி செய்யாதவன் எவனோ, அவன் அஸ்திபாரமில்லாமல் மண்ணின்மேல் வீடுகட்டினவனுக்கு ஒப்பாக இருக்கிறான்; நீரோட்டம் அந்த வீட்டின்மேல் மோதினவுடனே அது விழுந்து முழுவதும் அழிந்துபோனது” என்றார்.
ကိန္တု ယး ကၑ္စိန် မမ ကထား ၑြုတွာ တဒနုရူပံ နာစရတိ သ ဘိတ္တိံ ဝိနာ မၖဒုပရိ ဂၖဟနိရ္မ္မာတြာ သမာနော ဘဝတိ; ယတ အာပ္လာဝိဇလမာဂတျ ဝေဂေန ယဒါ ဝဟတိ တဒါ တဒ္ဂၖဟံ ပတတိ တသျ မဟတ် ပတနံ ဇာယတေ၊

< லூக்கா 6 >