< லூக்கா 3 >

1 திபேரியு பேரரசர் அரசாண்ட பதினைந்தாம் வருடத்தில், பொந்தியுபிலாத்து யூதேயா நாட்டிற்கு அதிபதியாகவும், ஏரோது கலிலேயாவிற்கு அதிபதியாகவும், அவன் சகோதரனாகிய பிலிப்பு இத்துரேயா மற்றும் திராகொனித்தி நாட்டிற்கும் அதிபதியாகவும், லிசானியா அபிலேனேக்கு அதிபதியாகவும்,
तिबिरियुस रोम को राज्य को पन्द्रावों साल म जब पुन्तियुस पिलातुस यहूदिया को शासक होतो, अऊर गलील म हेरोदेस, इतूरैया अऊर त्रखोनीतिस म ओको भाऊ फिलिप्पुस, अऊर अबिलेने म लिसानियास, चौथाई को राजा होतो,
2 அன்னாவும் காய்பாவும் பிரதான ஆசாரியர்களாகவும் இருந்தகாலத்தில் வனாந்திரத்திலே சகரியாவின் குமாரனாகிய யோவானுக்கு தேவனுடைய வார்த்தை உண்டானது.
अऊर जब हन्ना अऊर कैफा महायाजक होतो, ऊ समय परमेश्वर को वचन सुनसान जागा म जकर्याह को बेटा यूहन्ना बपतिस्मा देन वालो को जवर पहुंच्यो।
3 அப்பொழுது: “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைப்படுத்துங்கள் என்றும்,
ऊ यरदन को आजु बाजू को पूरो प्रदेश म जाय क, अपनो पापों की माफी लायी मन फिराव को बपतिस्मा को प्रचार करन लग्यो।
4 பள்ளங்களெல்லாம் நிரப்பப்படும், எல்லா மலைகளும் குன்றுகளும் தாழ்த்தப்படும், கோணலானவைகள் நேராகும், கரடானவைகள் சமமாகும் என்றும்,
जसो यशायाह भविष्यवक्ता को कह्यो हुयो वचनों की किताब म लिख्यो हय: “जंगल म एक पुकारन वालो को आवाज आय रह्यो हय कि, ‘प्रभु को रस्ता तैयार करो, ओकी सड़के सीधी बनावो।
5 மாம்சமான எல்லோரும் தேவனுடைய இரட்சிப்பைக் காண்பார்கள் என்றும், வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும்” என்று ஏசாயா தீர்க்கதரிசியின் புத்தகத்தில் எழுதியிருக்கிறபடி,
हर एक घाटी भर दी जायेंन, अऊर हर एक पहाड़ी अऊर टेकरा सवान कर दियो जायेंन; अऊर जो तेड़ो हय सीधो कर दियो जायेंन, अऊर जो उबड़ खाबड़ हय सवान कर दियो जायेंन, अऊर ऊ रस्ता चौड़ो बनेंन।
6 அவன் யோர்தான் நதிக்கு அருகில் உள்ள தேசத்திற்குப்போய், பாவமன்னிப்புக்கென்று மனந்திரும்புதலுக்கான ஞானஸ்நானத்தைக்குறித்துப் பிரசங்கித்தான்.
अऊर हर प्रानी परमेश्वर को उद्धार ख देखेंन।’”
7 அவன், தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்த மக்கள் கூட்டத்தை நோக்கி: “விரியன்பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்திற்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வழிகாட்டினவன் யார்?
जो भीड़ की भीड़ ओको सी बपतिस्मा लेन ख निकल क आवत होती, उन्को सी यूहन्ना कहत होतो, “हे सांप को पिल्ला, तुम्ख कौन जताय दियो कि आवन वालो गुस्सा सी भगो।
8 மனந்திரும்புதலுக்கு தகுந்த கனிகளைக் கொடுங்கள்; ஆபிரகாம் எங்களுடைய தகப்பன் என்று உங்களுக்குள்ளேசொல்லாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினால் ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராக இருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
असी बाते करो जो अपनो पश्चाताप ख दर्शावय, अऊर अपनो अपनो मन म यो मत सोचो कि हमरो बाप अब्राहम आय; कहालीकि मय तुम सी सच कहू हय कि परमेश्वर इन गोटा सी अब्राहम लायी सन्तान पैदा कर सकय हय।
9 இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைக்கப்பட்டிருக்கிறது; எனவே நல்ல கனிகொடுக்காத மரங்களெல்லாம் வெட்டப்பட்டு நெருப்பிலே போடப்படும் என்றான்.
अब टंग्या झाड़ों की जड़ी पर रख्यो हुयो हय, येकोलायी जो जो झाड़ अच्छो फर नहीं लावय, ऊ काट्यो अऊर आगी म झोक्यो जावय हय।”
10 ௧0 அப்பொழுது மக்கள் அவனை நோக்கி: அப்படியானால் நாங்கள் என்னசெய்யவேண்டும் என்று கேட்டார்கள்.
तब लोगों न ओको सी पुच्छ्यो, “त हम का करबो?”
11 ௧௧ அவர்களுக்கு அவன் மறுமொழியாக: இரண்டு மேலாடையை வைத்திருக்கிறவன், ஒன்றும் இல்லாதவனுக்கு அதில் ஒன்றைக் கொடுக்கவேண்டும்; உணவு வைத்திருப்பவனும் அப்படியே செய்யவேண்டும்” என்றான்.
ओन उन्ख उत्तर दियो, “जिन्को जवर दोय कुरता होना, ऊ ओको संग जिन्को जवर नहाय ऊ बाट लेवो अऊर जिन्को जवर भोजन होना, ऊ भी असोच करे।”
12 ௧௨ வரி வசூலிப்பவர்களும் ஞானஸ்நானம் பெறுவதற்கு வந்து, அவனை நோக்கி: “போதகரே, நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள்.
कर लेनवालो भी बपतिस्मा लेन आयो, अऊर ओको सी पुच्छ्यो, “हे गुरु, हम का करबो?”
13 ௧௩ அதற்கு அவன்: “உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதற்குமேல் அதிகமாக ஒன்றும் வாங்காதிருங்கள் என்றான்.
ओन ओको सी कह्यो, “जो तुम्हरो लायी ठहरायो गयो हय, ओको सी जादा मत लेवो।”
14 ௧௪ போர்வீரர்களும் அவனை நோக்கி: “நாங்கள் என்னசெய்யவேண்டும்” என்று கேட்டார்கள். அதற்கு அவன்: “நீங்கள் யாரிடமும் கட்டாயப்படுத்தி பணம் வாங்காமலும், ஒருவன் மேலும் பொய்யாக குற்றஞ்சாட்டாமலும், உங்களுடைய சம்பளமே போதும் என்று இருங்கள்” என்றான்.
कुछ सिपाहियों न भी ओको सी यो पुच्छ्यो, “हम का करबो?” ओन उन्को सी कह्यो, “कोयी सी जबरदस्ती पैसा नहीं लेनो अऊर नहीं झूठो दोष लगावनो, अऊर अपनो रोजी पर सन्तुष्ट रहनो।”
15 ௧௫ யோவானைப்பற்றி: இவன்தான் கிறிஸ்துவோ என்று மக்களெல்லோரும் நினைத்துக்கொண்டு, தங்களுடைய இருதயங்களில் யோசித்துக்கொண்டிருக்கும்போது,
जब लोग आस लगायो हुयो होतो, अऊर सब अपनो अपनो मन म यूहन्ना को बारे म बिचार कर रह्यो होतो कि का योच मसीह त नोहोय,
16 ௧௬ யோவான் எல்லோருக்கும் மறுமொழியாக: “நான் தண்ணீரினால் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கிறேன், என்னைவிட வல்லவர் ஒருவர் வருகிறார், அவருடைய காலணிகளின் வாரை அவிழ்ப்பதற்குக்கூட நான் தகுதியானவன் இல்லை, அவர் பரிசுத்த ஆவியானவராலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்.
त यूहन्ना न उन सब सी कह्यो, “मय त तुम्ख पानी सी बपतिस्मा देऊ हय, पर ऊ आवन वालो हय जो मोरो सी शक्तिमान हय; मय त यो लायक भी नहाय कि ओको चप्पल को बन्ध निकाल सकू। ऊ तुम्ख पवित्र आत्मा अऊर आगी सी बपतिस्मा देयेंन।
17 ௧௭ தூற்றுக்கூடை அவருடைய கையில் இருக்கிறது, அவர் தமது களத்தை நன்றாக சுத்தம்செய்து, தமது கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; பதரையோ அணையாத அக்கினியினால் சுட்டெரிப்பார்” என்றான்.
ओको सूपा, ओको हाथ म हय; अऊर ऊ अपनो खरियान अच्छो तरह सी साफ करेंन; अऊर गहूं ख अपनो ढोला म जमा करेंन; पर भूसी ख वा आगी म जो बुझन कि नहीं जलाय देयेंन।”
18 ௧௮ வேறு அநேக புத்திமதிகளையும் அவன் மக்களுக்குச் சொல்லிப் பிரசங்கித்தான்.
येकोलायी यूहन्ना बहुत सी चेतावनी दे क लोगों ख सुसमाचार सुनावत होतो कि अपनो रस्ता ख बदले।
19 ௧௯ தேசத்தின் அதிபதியாகிய ஏரோது, அவன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளைத் திருமணம் செய்ததாலும், அவன் செய்த மற்றப் பொல்லாங்குகளுக்காகவும், யோவானாலே கடிந்துகொள்ளப்பட்டபோது,
पर जब यूहन्ना न चौथाई देश को राजा हेरोदेस ख ओको भाऊ फिलिप्पुस कि पत्नी हेरोदियास को बारे म अऊर सब अपराधो को बारे म जो ओन करयो होतो, फटकार लगायी,
20 ௨0 ஏரோது தான் செய்த மற்ற எல்லாப் பொல்லாங்குகளும் போதாதென்று, யோவானைப் பிடித்து சிறையில் அடைத்துவைத்தான்.
त हेरोदेस न उन सब सी बड़ क यो अपराध भी करयो कि यूहन्ना ख जेलखाना म डाल दियो।
21 ௨௧ மக்களெல்லோரும் ஞானஸ்நானம் பெற்றபோது, இயேசுவும் ஞானஸ்நானம் பெற்று, ஜெபம்பண்ணும்போது, வானம் திறக்கப்பட்டது;
जब सब लोगों न बपतिस्मा लियो अऊर यीशु भी बपतिस्मा ले क प्रार्थना कर रह्यो होतो, त आसमान खुल गयो,
22 ௨௨ பரிசுத்த ஆவியானவர் புறாவைப்போல அவர்மேல் இறங்கினார். வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: “நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன்” என்று உரைத்தது.
अऊर पवित्र आत्मा शारीरिक रूप म कबूत्तर को जसो ओको पर उतरयो, अऊर स्वर्ग सी या आकाशवानी भयी: “तय मोरो प्रिय बेटा आय, मय तोरो सी खुश हय।”
23 ௨௩ அப்பொழுது இயேசு ஏறக்குறைய முப்பது வயதுள்ளவராக இருந்தார். அவர் யோசேப்பின் குமாரனென்று எண்ணப்பட்டார். அந்த யோசேப்பு ஏலியின் குமாரன்;
जब यीशु खुद उपदेश करन लग्यो, त लगभग तीस साल की उमर को होतो अऊर जसो समझ्यो जात होतो यूसुफ को बेटा होतो; अऊर ऊ एली को,
24 ௨௪ ஏலி மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்; லேவி மெல்கியின் குமாரன்; மெல்கி யன்னாவின் குமாரன்; யன்னா யோசேப்பின் குமாரன்;
अऊर ऊ मत्तात को टुरा, अऊर ऊ लेवी को टुरा, अऊर ऊ मलकी को टुरा, अऊर ऊ यन्ना को टुरा, अऊर ऊ यूसुफ को टुरा,
25 ௨௫ யோசேப்பு மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா ஆமோசின் குமாரன்; ஆமோஸ் நாகூமின் குமாரன்; நாகூம் எஸ்லியின் குமாரன்; எஸ்லி நங்காயின் குமாரன்.
अऊर ऊ मत्तित्याह को टुरा, अऊर ऊ आमोस को टुरा, अऊर ऊ नहूम को टुरा, अऊर ऊ असल्याह को टुरा, अऊर ऊ नोगह को टुरा,
26 ௨௬ நங்காய் மாகாத்தின் குமாரன்; மாகாத் மத்தத்தியாவின் குமாரன்; மத்தத்தியா சேமேயின் குமாரன்; சேமேய் யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யூதாவின் குமாரன்; யூதா யோவன்னாவின் குமாரன்.
अऊर ऊ मात को टुरा, अऊर ऊ मत्तित्याह को टुरा, अऊर ऊ शिमी को टुरा, अऊर ऊ योसेख को टुरा, अऊर ऊ योदाह को टुरा,
27 ௨௭ யோவன்னா ரேசாவின் குமாரன்; ரேசா செருபாபேலின் குமாரன்; செருபாபேல் சலாத்தியேலின் குமாரன்; சலாத்தியேல் நேரியின் குமாரன்.
अऊर ऊ यूहन्ना को टुरा, अऊर ऊ रेसा को टुरा, अऊर ऊ जरुब्बाबिल को टुरा, अऊर ऊ शालतिएल को टुरा, अऊर ऊ नेरी को टुरा,
28 ௨௮ நேரி மெல்கியின் குமாரன்; மெல்கி அத்தியின் குமாரன்; அத்தி கோசாமின் குமாரன்; கோசாம் எல்மோதாமின் குமாரன்; எல்மோதாம் ஏரின் குமாரன்; ஏர் யோசேயின் குமாரன்.
अऊर ऊ मलकी को टुरा, अऊर ऊ अद्दी को टुरा, अऊर ऊ कोसाम को टुरा, अऊर ऊ इलमोदाम को टुरा, अऊर ऊ एर को टुरा,
29 ௨௯ யோசே எலியேசரின் குமாரன்; எலியேசர் யோரீமின் குமாரன்; யோரீம் மாத்தாத்தின் குமாரன்; மாத்தாத் லேவியின் குமாரன்.
अऊर ऊ यहोशू को टुरा, अऊर ऊ इलाजार को टुरा, अऊर ऊ योरीम को टुरा, अऊर ऊ मत्तात को टुरा, अऊर ऊ लेवी को टुरा,
30 ௩0 லேவி சிமியோனின் குமாரன்; சிமியோன் யூதாவின் குமாரன்; யூதா யோசேப்பின் குமாரன்; யோசேப்பு யோனானின் குமாரன்; யோனாம் எலியாக்கீமின் குமாரன்.
अऊर ऊ शिमोन को टुरा, अऊर ऊ यहूदा को टुरा, अऊर ऊ यूसुफ को टुरा, अऊर ऊ योनान को टुरा, अऊर ऊ इलियाकीम को टुरा,
31 ௩௧ எலியாக்கீம் மெலெயாவின் குமாரன்; மெலெயா மயினானின் குமாரன்; மயினான் மாத்தாத்தாவின் குமாரன்; மாத்தாத்தா நாத்தானின் குமாரன்; நாத்தான் தாவீதின் குமாரன்.
अऊर ऊ मलेआह को टुरा, अऊर ऊ मिन्नाह को टुरा, अऊर ऊ मत्तता को टुरा, अऊर ऊ नातान को टुरा, अऊर ऊ दाऊद को टुरा,
32 ௩௨ தாவீது ஈசாயின் குமாரன்; ஈசாய் ஓபேத்தின் குமாரன்; ஓபேத் போவாஸின் குமாரன்; போவாஸ் சல்மோனின் குமாரன்; சல்மோன் நகசோனின் குமாரன்.
अऊर ऊ यिशै को टुरा, अऊर ऊ ओबेद को टुरा, अऊर ऊ बोअज को टुरा, अऊर ऊ सलमोन को टुरा, अऊर ऊ नहशोन को टुरा,
33 ௩௩ நகசோன் அம்மினதாபின் குமாரன்; அம்மினதாப் ஆராமின் குமாரன்; ஆராம் எஸ்ரோமின் குமாரன்; எஸ்ரோம் பாரேசின் குமாரன்; பாரேஸ் யூதாவின் குமாரன்; யூதா யாக்கோபின் குமாரன்.
अऊर ऊ अम्मीनादाब को टुरा, अऊर ऊ अरनी को टुरा, अऊर ऊ हिस्रोन को टुरा, अऊर ऊ फिरिस को टुरा, अऊर ऊ यहूदा को टुरा,
34 ௩௪ யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.
अऊर ऊ याकूब को टुरा, अऊर ऊ इसहाक को टुरा, अऊर ऊ अब्राहम को टुरा, अऊर ऊ तिरह को टुरा, अऊर ऊ नाहोर को टुरा,
35 ௩௫ நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.
अऊर ऊ सरूग को टुरा, अऊर ऊ रऊ को टुरा, अऊर ऊ फिलिग को टुरा, अऊर ऊ एबिर को टुरा, अऊर ऊ शिलह को टुरा,
36 ௩௬ சாலா காயினானின் குமாரன்; காயினான் அர்ப்பகசாத்தின் குமாரன்; அர்ப்பகசாத் சேமின் குமாரன்; சேம் நோவாவின் குமாரன்; நோவா லாமேக்கின் குமாரன்.
अऊर ऊ केनान को टुरा, अऊर ऊ अरफक्षद को टुरा, अऊर ऊ शेम को टुरा, अऊर ऊ नूह को टुरा, अऊर ऊ लिमिक को टुरा,
37 ௩௭ லாமேக்கு மெத்தூசலாவின் குமாரன்; மெத்தூசலா ஏனோக்கின் குமாரன்; ஏனோக்கு யாரேத்தின் குமாரன்; யாரேத் மகலாலெயேலின் குமாரன்; மகலாலெயேல் கேனானின் குமாரன்; கெய்னான் ஏனோசின் குமாரன்.
अऊर ऊ मथूशिलह को टुरा, अऊर ऊ हनोक को टुरा, अऊर ऊ यिरिद को टुरा, अऊर ऊ महललेल को टुरा, अऊर ऊ केनान को टुरा,
38 ௩௮ ஏனோஸ் சேத்தின் குமாரன்; சேத் ஆதாமின் குமாரன்; ஆதாம் தேவனால் உண்டானவன்.
अऊर ऊ एनोश को टुरा, अऊर ऊ शेत को टुरा, अऊर ऊ आदम को टुरा, अऊर ऊ परमेश्वर को टुरा होतो।

< லூக்கா 3 >