< லூக்கா 23 >

1 அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:
ততঃ সভাস্থাঃ সৰ্ৱ্ৱলোকা উত্থায তং পীলাতসম্মুখং নীৎৱাপ্ৰোদ্য ৱক্তুমাৰেভিৰে,
2 இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள்.
স্ৱমভিষিক্তং ৰাজানং ৱদন্তং কৈমৰৰাজায কৰদানং নিষেধন্তং ৰাজ্যৱিপৰ্য্যযং কুৰ্ত্তুং প্ৰৱৰ্ত্তমানম্ এন প্ৰাপ্তা ৱযং|
3 பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
তদা পীলাতস্তং পৃষ্টৱান্ ৎৱং কিং যিহূদীযানাং ৰাজা? স প্ৰত্যুৱাচ ৎৱং সত্যমুক্তৱান্|
4 அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
তদা পীলাতঃ প্ৰধানযাজকাদিলোকান্ জগাদ্, অহমেতস্য কমপ্যপৰাধং নাপ্তৱান্|
5 அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள்.
ততস্তে পুনঃ সাহমিনো ভূৎৱাৱদন্, এষ গালীল এতৎস্থানপৰ্য্যন্তে সৰ্ৱ্ৱস্মিন্ যিহূদাদেশে সৰ্ৱ্ৱাল্লোকানুপদিশ্য কুপ্ৰৱৃত্তিং গ্ৰাহীতৱান্|
6 கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
তদা পীলাতো গালীলপ্ৰদেশস্য নাম শ্ৰুৎৱা পপ্ৰচ্ছ, কিমযং গালীলীযো লোকঃ?
7 அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
ততঃ স গালীল্প্ৰদেশীযহেৰোদ্ৰাজস্য তদা স্থিতেস্তস্য সমীপে যীশুং প্ৰেষযামাস|
8 ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
তদা হেৰোদ্ যীশুং ৱিলোক্য সন্তুতোষ, যতঃ স তস্য বহুৱৃত্তান্তশ্ৰৱণাৎ তস্য কিঞিচদাশ্চৰ্য্যকৰ্ম্ম পশ্যতি ইত্যাশাং কৃৎৱা বহুকালমাৰভ্য তং দ্ৰষ্টুং প্ৰযাসং কৃতৱান্|
9 அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
তস্মাৎ তং বহুকথাঃ পপ্ৰচ্ছ কিন্তু স তস্য কস্যাপি ৱাক্যস্য প্ৰত্যুত্তৰং নোৱাচ|
10 ௧0 பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவர்மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சுமத்திக்கொண்டே நின்றார்கள்.
১০অথ প্ৰধানযাজকা অধ্যাপকাশ্চ প্ৰোত্তিষ্ঠন্তঃ সাহসেন তমপৱদিতুং প্ৰাৰেভিৰে|
11 ௧௧ அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
১১হেৰোদ্ তস্য সেনাগণশ্চ তমৱজ্ঞায উপহাসৎৱেন ৰাজৱস্ত্ৰং পৰিধাপ্য পুনঃ পীলাতং প্ৰতি তং প্ৰাহিণোৎ|
12 ௧௨ முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள்.
১২পূৰ্ৱ্ৱং হেৰোদ্পীলাতযোঃ পৰস্পৰং ৱৈৰভাৱ আসীৎ কিন্তু তদ্দিনে দ্ৱযো ৰ্মেলনং জাতম্|
13 ௧௩ பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து,
১৩পশ্চাৎ পীলাতঃ প্ৰধানযাজকান্ শাসকান্ লোকাংশ্চ যুগপদাহূয বভাষে,
14 ௧௪ அவர்களைப் பார்த்து: மக்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
১৪ৰাজ্যৱিপৰ্য্যযকাৰকোযম্ ইত্যুক্ত্ৱা মনুষ্যমেনং মম নিকটমানৈষ্ট কিন্তু পশ্যত যুষ্মাকং সমক্ষম্ অস্য ৱিচাৰং কৃৎৱাপি প্ৰোক্তাপৱাদানুৰূপেণাস্য কোপ্যপৰাধঃ সপ্ৰমাণো ন জাতঃ,
15 ௧௫ உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
১৫যূযঞ্চ হেৰোদঃ সন্নিধৌ প্ৰেষিতা মযা তত্ৰাস্য কোপ্যপৰাধস্তেনাপি ন প্ৰাপ্তঃ| পশ্যতানেন ৱধহেতুকং কিমপি নাপৰাদ্ধং|
16 ௧௬ எனவே இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
১৬তস্মাদেনং তাডযিৎৱা ৱিহাস্যামি|
17 ௧௭ பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
১৭তত্ৰোৎসৱে তেষামেকো মোচযিতৱ্যঃ|
18 ௧௮ மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள்.
১৮ইতি হেতোস্তে প্ৰোচ্চৈৰেকদা প্ৰোচুঃ, এনং দূৰীকৃত্য বৰব্বানামানং মোচয|
19 ௧௯ அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
১৯স বৰব্বা নগৰ উপপ্লৱৱধাপৰাধাভ্যাং কাৰাযাং বদ্ধ আসীৎ|
20 ௨0 பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
২০কিন্তু পীলাতো যীশুং মোচযিতুং ৱাঞ্ছন্ পুনস্তানুৱাচ|
21 ௨௧ அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்.
২১তথাপ্যেনং ক্ৰুশে ৱ্যধ ক্ৰুশে ৱ্যধেতি ৱদন্তস্তে ৰুৰুৱুঃ|
22 ௨௨ அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
২২ততঃ স তৃতীযৱাৰং জগাদ কুতঃ? স কিং কৰ্ম্ম কৃতৱান্? নাহমস্য কমপি ৱধাপৰাধং প্ৰাপ্তঃ কেৱলং তাডযিৎৱামুং ত্যজামি|
23 ௨௩ அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
২৩তথাপি তে পুনৰেনং ক্ৰুশে ৱ্যধ ইত্যুক্ত্ৱা প্ৰোচ্চৈৰ্দৃঢং প্ৰাৰ্থযাঞ্চক্ৰিৰে;
24 ௨௪ அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
২৪ততঃ প্ৰধানযাজকাদীনাং কলৰৱে প্ৰবলে সতি তেষাং প্ৰাৰ্থনাৰূপং কৰ্ত্তুং পীলাত আদিদেশ|
25 ௨௫ கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.
২৫ৰাজদ্ৰোহৱধযোৰপৰাধেন কাৰাস্থং যং জনং তে যযাচিৰে তং মোচযিৎৱা যীশুং তেষামিচ্ছাযাং সমাৰ্পযৎ|
26 ௨௬ அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
২৬অথ তে যীশুং গৃহীৎৱা যান্তি, এতৰ্হি গ্ৰামাদাগতং শিমোননামানং কুৰীণীযং জনং ধৃৎৱা যীশোঃ পশ্চান্নেতুং তস্য স্কন্ধে ক্ৰুশমৰ্পযামাসুঃ|
27 ௨௭ திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
২৭ততো লোকাৰণ্যমধ্যে বহুস্ত্ৰিযো ৰুদত্যো ৱিলপন্ত্যশ্চ যীশোঃ পশ্চাদ্ যযুঃ|
28 ௨௮ இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
২৮কিন্তু স ৱ্যাঘুট্য তা উৱাচ, হে যিৰূশালমো নাৰ্য্যো যুযং মদৰ্থং ন ৰুদিৎৱা স্ৱাৰ্থং স্ৱাপত্যাৰ্থঞ্চ ৰুদিতি;
29 ௨௯ இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
২৯পশ্যত যঃ কদাপি গৰ্ভৱত্যো নাভৱন্ স্তন্যঞ্চ নাপাযযন্ তাদৃশী ৰ্ৱন্ধ্যা যদা ধন্যা ৱক্ষ্যন্তি স কাল আযাতি|
30 ௩0 அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
৩০তদা হে শৈলা অস্মাকমুপৰি পতত, হে উপশৈলা অস্মানাচ্ছাদযত কথামীদৃশীং লোকা ৱক্ষ্যন্তি|
31 ௩௧ பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார்.
৩১যতঃ সতেজসি শাখিনি চেদেতদ্ ঘটতে তৰ্হি শুষ্কশাখিনি কিং ন ঘটিষ্যতে?
32 ௩௨ குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
৩২তদা তে হন্তুং দ্ৱাৱপৰাধিনৌ তেন সাৰ্দ্ধং নিন্যুঃ|
33 ௩௩ கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
৩৩অপৰং শিৰঃকপালনামকস্থানং প্ৰাপ্য তং ক্ৰুশে ৱিৱিধুঃ; তদ্দ্ৱযোৰপৰাধিনোৰেকং তস্য দক্ষিণো তদন্যং ৱামে ক্ৰুশে ৱিৱিধুঃ|
34 ௩௪ அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
৩৪তদা যীশুৰকথযৎ, হে পিতৰেতান্ ক্ষমস্ৱ যত এতে যৎ কৰ্ম্ম কুৰ্ৱ্ৱন্তি তন্ ন ৱিদুঃ; পশ্চাত্তে গুটিকাপাতং কৃৎৱা তস্য ৱস্ত্ৰাণি ৱিভজ্য জগৃহুঃ|
35 ௩௫ மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
৩৫তত্ৰ লোকসংঘস্তিষ্ঠন্ দদৰ্শ; তে তেষাং শাসকাশ্চ তমুপহস্য জগদুঃ, এষ ইতৰান্ ৰক্ষিতৱান্ যদীশ্ৱৰেণাভিৰুচিতো ঽভিষিক্তস্ত্ৰাতা ভৱতি তৰ্হি স্ৱমধুনা ৰক্ষতু|
36 ௩௬ போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
৩৬তদন্যঃ সেনাগণা এত্য তস্মৈ অম্লৰসং দৎৱা পৰিহস্য প্ৰোৱাচ,
37 ௩௭ நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள்.
৩৭চেত্ত্ৱং যিহূদীযানাং ৰাজাসি তৰ্হি স্ৱং ৰক্ষ|
38 ௩௮ இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
৩৮যিহূদীযানাং ৰাজেতি ৱাক্যং যূনানীযৰোমীযেব্ৰীযাক্ষৰৈ ৰ্লিখিতং তচ্ছিৰস ঊৰ্দ্ধ্ৱেঽস্থাপ্যত|
39 ௩௯ அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான்.
৩৯তদোভযপাৰ্শ্ৱযো ৰ্ৱিদ্ধৌ যাৱপৰাধিনৌ তযোৰেকস্তং ৱিনিন্দ্য বভাষে, চেত্ত্ৱম্ অভিষিক্তোসি তৰ্হি স্ৱমাৱাঞ্চ ৰক্ষ|
40 ௪0 மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
৪০কিন্ত্ৱন্যস্তং তৰ্জযিৎৱাৱদৎ, ঈশ্ৱৰাত্তৱ কিঞ্চিদপি ভযং নাস্তি কিং? ৎৱমপি সমানদণ্ডোসি,
41 ௪௧ நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
৪১যোগ্যপাত্ৰে আৱাং স্ৱস্ৱকৰ্ম্মণাং সমুচিতফলং প্ৰাপ্নুৱঃ কিন্ত্ৱনেন কিমপি নাপৰাদ্ধং|
42 ௪௨ இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
৪২অথ স যীশুং জগাদ হে প্ৰভে ভৱান্ স্ৱৰাজ্যপ্ৰৱেশকালে মাং স্মৰতু|
43 ௪௩ இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
৪৩তদা যীশুঃ কথিতৱান্ ৎৱাং যথাৰ্থং ৱদামি ৎৱমদ্যৈৱ মযা সাৰ্দ্ধং পৰলোকস্য সুখস্থানং প্ৰাপ্স্যসি|
44 ௪௪ அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது.
৪৪অপৰঞ্চ দ্ৱিতীযযামাৎ তৃতীযযামপৰ্য্যন্তং ৰৱেস্তেজসোন্তৰ্হিতৎৱাৎ সৰ্ৱ্ৱদেশোঽন্ধকাৰেণাৱৃতো
45 ௪௫ சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
৪৫মন্দিৰস্য যৱনিকা চ ছিদ্যমানা দ্ৱিধা বভূৱ|
46 ௪௬ இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
৪৬ততো যীশুৰুচ্চৈৰুৱাচ, হে পিত ৰ্মমাত্মানং তৱ কৰে সমৰ্পযে, ইত্যুক্ত্ৱা স প্ৰাণান্ জহৌ|
47 ௪௭ நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
৪৭তদৈতা ঘটনা দৃষ্ট্ৱা শতসেনাপতিৰীশ্ৱৰং ধন্যমুক্ত্ৱা কথিতৱান্ অযং নিতান্তং সাধুমনুষ্য আসীৎ|
48 ௪௮ இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
৪৮অথ যাৱন্তো লোকা দ্ৰষ্টুম্ আগতাস্তে তা ঘটনা দৃষ্ট্ৱা ৱক্ষঃসু কৰাঘাতং কৃৎৱা ৱ্যাচুট্য গতাঃ|
49 ௪௯ அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
৪৯যীশো ৰ্জ্ঞাতযো যা যা যোষিতশ্চ গালীলস্তেন সাৰ্দ্ধমাযাতাস্তা অপি দূৰে স্থিৎৱা তৎ সৰ্ৱ্ৱং দদৃশুঃ|
50 ௫0 யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான்.
৫০তদা যিহূদীযানাং মন্ত্ৰণাং ক্ৰিযাঞ্চাসম্মন্যমান ঈশ্ৱৰস্য ৰাজৎৱম্ অপেক্ষমাণো
51 ௫௧ அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான்.
৫১যিহূদিদেশীযো ঽৰিমথীযনগৰীযো যূষফ্নামা মন্ত্ৰী ভদ্ৰো ধাৰ্ম্মিকশ্চ পুমান্
52 ௫௨ அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
৫২পীলাতান্তিকং গৎৱা যীশো ৰ্দেহং যযাচে|
53 ௫௩ அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
৫৩পশ্চাদ্ ৱপুৰৱৰোহ্য ৱাসসা সংৱেষ্ট্য যত্ৰ কোপি মানুষো নাস্থাপ্যত তস্মিন্ শৈলে স্ৱাতে শ্মশানে তদস্থাপযৎ|
54 ௫௪ அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது.
৫৪তদ্দিনমাযোজনীযং দিনং ৱিশ্ৰামৱাৰশ্চ সমীপঃ|
55 ௫௫ கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
৫৫অপৰং যীশুনা সাৰ্দ্ধং গালীল আগতা যোষিতঃ পশ্চাদিৎৱা শ্মশানে তত্ৰ যথা ৱপুঃ স্থাপিতং তচ্চ দৃষ্ট্ৱা
56 ௫௬ திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.
৫৬ৱ্যাঘুট্য সুগন্ধিদ্ৰৱ্যতৈলানি কৃৎৱা ৱিধিৱদ্ ৱিশ্ৰামৱাৰে ৱিশ্ৰামং চক্ৰুঃ|

< லூக்கா 23 >