< லூக்கா 18 >

1 சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
ⲁ̅ⲚⲀϤϪⲰ ⲆⲈ ⲚⲞⲨⲠⲀⲢⲀⲂⲞⲖⲎ ⲚⲰⲞⲨ ⲈⲠϪⲒⲚⲦⲞⲨⲈⲢⲠⲢⲞⲤⲈⲨⲬ ⲈⲤⲐⲈ ⲚⲤⲎⲞⲨ ⲚⲒⲂⲈⲚ ⲞⲨⲞϨ ⲚⲦⲞⲨϢⲦⲈⲘⲈⲢⲈⲚⲔⲀⲔⲒⲚ
2 ஒரு பட்டணத்திலே ஒரு நியாயாதிபதி இருந்தான்; அவன் தேவனுக்குப் பயப்படாதவனும் மனிதர்களை மதிக்காதவனுமாக இருந்தான்.
ⲃ̅ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲈⲞⲨⲞⲚ ⲞⲨⲢⲈϤϮϨⲀⲠ ⲠⲈ ϦⲈⲚⲞⲨⲂⲀⲔⲒ ⲚϤⲈⲢϨⲞϮ ⲀⲚ ϦⲀⲦϨⲎ ⲘⲪⲚⲞⲨϮ ⲞⲨⲞϨ ⲚϤϢⲒⲠⲒ ⲀⲚ ϦⲀⲦϨⲎ ⲚⲚⲒⲢⲰⲘⲒ.
3 அந்தப் பட்டணத்திலே ஒரு விதவையும் இருந்தாள்; அவள் அவனிடத்தில் போய்: எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம்பண்ணினாள்.
ⲅ̅ⲚⲈ ⲞⲨⲞⲚ ⲞⲨⲬⲎⲢⲀ ⲆⲈ ⲠⲈ ϦⲈⲚϮⲂⲀⲔⲒ ⲈⲦⲈⲘⲘⲀⲨ ⲞⲨⲞϨ ⲚⲀⲤⲚⲎⲞⲨ ϨⲀⲢⲞϤ ⲠⲈ ⲈⲤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ϬⲒ ⲘⲠⲀⲘϢⲒϢ ⲚⲈⲘ ⲪⲎ ⲈⲦϬⲒ ⲘⲘⲞⲒ ⲚϪⲞⲚⲤ.
4 வெகுநாட்கள்வரை அவனுக்கு மனதில்லாதிருந்தது. பின்பு அவன்: நான் தேவனுக்குப் பயப்படாமலும் மனிதர்களை மதிக்காமலும் இருந்தும்,
ⲇ̅ⲞⲨⲞϨ ⲚⲀϤⲞⲨⲰϢ ⲀⲚ ⲠⲈ ϢⲀ ⲞⲨⲤⲎⲞⲨ ⲘⲈⲚⲈⲚⲤⲀ ⲚⲀⲒ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦϤ ϪⲈ ⲬⲀⲤ ϪⲈ ⲪⲚⲞⲨϮ ϮⲈⲢϨⲞϮ ⲀⲚ ϦⲀⲦⲈϤϨⲎ ⲞⲨⲞϨ ⲚϮϢⲒⲠⲒ ⲀⲚ ϦⲀⲦϨⲎ ⲚⲚⲒⲢⲰⲘⲒ
5 இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னைத் தொந்தரவுசெய்யாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான் என்றார்.
ⲉ̅ⲈⲐⲂⲈϪⲈ ⲦⲀⲒⲬⲎⲢⲀ ϮϦⲒⲤⲒ ⲚⲎⲒ ϮⲚⲀϬⲒ ⲘⲠⲈⲤⲘϢⲒϢ ϨⲒⲚⲀ ⲚⲦⲈⲤϢⲦⲈⲘⲒ ϢⲀ ⲈⲂⲞⲖ ⲈⲤϮϦⲒⲤⲒ ⲚⲎⲒ.
6 பின்னும் கர்த்தர் அவர்களை நோக்கி: அநீதியுள்ள அந்த நியாயாதிபதி சொன்னதைச் சிந்தித்துப்பாருங்கள்.
ⲋ̅ⲠⲈϪⲈ ⲠϬⲞⲒⲤ ⲆⲈ ϪⲈ ⲤⲰⲦⲈⲘ ϪⲈ ⲞⲨ ⲠⲈⲦⲈ ⲠⲒⲢⲈϤϮϨⲀⲠ ⲚⲦⲈϮⲀⲆⲒⲔⲒⲀ ϪⲰ ⲘⲘⲞϤ.
7 அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் காரியத்தில் நீடிய பொறுமையுள்ளவராக இருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ?
ⲍ̅ⲪⲚⲞⲨϮ ⲆⲈ ϤⲚⲀϬⲒ ⲘⲠⲈⲘϢⲒϢ ⲀⲚ ⲚⲚⲈϤⲤⲰⲦⲠ ⲚⲀⲒ ⲈⲦⲰϢ ⲞⲨⲂⲎϤ ⲘⲠⲒⲈϨⲞⲞⲨ ⲚⲈⲘ ⲠⲒⲈϪⲰⲢϨ ⲞⲨⲞϨ ϤⲰⲞⲨⲚϨⲎⲦ ⲈϪⲰⲞⲨ
8 சீக்கிரத்திலே அவர்களுக்கு நியாயஞ்செய்வார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். ஆனாலும் மனிதகுமாரன் வரும்போது பூமியிலே விசுவாசத்தைக் காண்பாரோ என்றார்.
ⲏ̅ⲤⲈ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ϤⲚⲀϬⲒ ⲘⲠⲞⲨⲘϢⲒϢ ⲚⲬⲰⲖⲈⲘ ⲠⲖⲎⲚ ⲠϢⲎⲢⲒ ⲘⲪⲢⲰⲘⲒ ⲀϤϢⲀⲚⲒ ϨⲀⲢⲀ ϤⲚⲀϪⲈⲘ ⲪⲚⲀϨϮ ϨⲒϪⲈⲚ ⲠⲒⲔⲀϨⲒ.
9 அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாக எண்ணின சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்.
ⲑ̅ⲀϤϪⲞⲤ ⲈⲐⲂⲈ ϨⲀⲚⲞⲨⲞⲚ ⲚⲎ ⲈⲦϪⲰ ⲘⲘⲞⲤ ⲈⲢⲰⲞⲨ ϪⲈ ⲚⲐⲘⲎⲒ ⲚⲈⲞⲨⲞϨ ⲈⲨϢⲞϢϤ ⲚⲚⲒⲔⲈⲤⲰϪⲠ ⲚⲦⲀⲠⲀⲢⲀⲂⲞⲖⲎ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ.
10 ௧0 இரண்டு மனிதர்கள் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் வரி வசூலிப்பவன்.
ⲓ̅ⲀⲢⲰⲘⲒ ⲂϢⲈ ⲚⲰⲞⲨ ⲈϨⲢⲎⲒ ⲈⲠⲒⲈⲢⲪⲈⲒ ⲈⲈⲢⲠⲢⲞⲤⲈⲨⲬⲈⲤⲐⲈ ⲠⲒⲞⲨⲀⲒ ⲚⲈⲞⲨⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲠⲈ ⲠⲒⲔⲈⲞⲨⲀⲒ ⲚⲈⲞⲨⲦⲈⲖⲰⲚⲎⲤ ⲠⲈ.
11 ௧௧ பரிசேயன் நின்று: தேவனே! நான் கொள்ளைக்காரர்கள், அநியாயக்காரர்கள், விபசாரக்காரர்கள் ஆகிய மற்ற மனிதர்களைப்போலவும், இந்த வரி வசூலிப்பவனைப்போலவும் இராததினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன்.
ⲓ̅ⲁ̅ⲠⲒⲪⲀⲢⲒⲤⲈⲞⲤ ⲆⲈ ⲈⲦⲀϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ⲚⲀⲒ ⲚⲀϤⲈⲢⲠⲢⲞⲤⲈⲨⲬⲈⲤⲐⲈ ⲘⲘⲰⲞⲨ ⲚϦⲢⲎⲒ ⲚϦⲎⲦϤ ϪⲈ ⲪⲚⲞⲨϮ ϮϢⲈⲠϨⲘⲞⲦ ⲚⲦⲞⲦⲔ ϪⲈ ϮⲞⲒ ⲀⲚ ⲘⲪⲢⲎϮ ⲘⲠⲤⲰϪⲠ ⲚⲚⲒⲢⲰⲘⲒ ⲚⲢⲈϤϨⲰⲖⲈⲘ ⲚⲢⲈϤϬⲒⲚϪⲞⲚⲤ ⲚⲚⲰⲒⲔ ⲒⲈ ⲘⲪⲢⲎϮ ⲘⲠⲀⲒⲔⲈⲦⲈⲖⲰⲚⲎⲤ.
12 ௧௨ வாரத்தில் இரண்டுமுறை உபவாசிக்கிறேன்; என் சம்பாத்தியத்திலெல்லாம் பத்தில் ஒரு பங்கு காணிக்கை செலுத்தி வருகிறேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.
ⲓ̅ⲃ̅ϮⲈⲢⲚⲎⲤⲦⲈⲨⲒⲚ ⲚⲤⲞⲠⲂ ⲔⲀⲦⲀ ⲤⲀⲂⲂⲀⲦⲞⲚ ϮϮ ⲘⲪⲢⲈⲘⲎⲦ ⲚⲈⲚⲬⲀⲒ ⲚⲒⲂⲈⲚ ⲈϮϪⲪⲞ ⲘⲘⲰⲞⲨ.
13 ௧௩ வரி வசூலிப்பவன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாக இரும் என்றான்.
ⲓ̅ⲅ̅ⲠⲒⲦⲈⲖⲰⲚⲎⲤ ⲆⲈ ⲈϤⲞϨⲒ ⲈⲢⲀⲦϤ ϨⲒⲪⲞⲨⲈⲒ ⲚⲀϤⲞⲨⲰϢ ⲀⲚ ⲠⲈ ⲞⲨⲆⲈ ⲈϤⲀⲒ ⲚⲚⲈϤⲂⲀⲖ ⲈⲠϢⲰⲒ ⲈⲦⲪⲈ ⲀⲖⲖⲀ ⲚⲀϤⲔⲰⲖϨ ⲠⲈ ϦⲈⲚⲦⲈϤⲘⲈⲤⲦⲈⲚϨⲎⲦ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲪⲚⲞⲨϮ ⲬⲰ ⲚⲎⲒ ⲈⲂⲞⲖ ϪⲈ ⲀⲚⲞⲔ ⲞⲨⲢⲈϤⲈⲢⲚⲞⲂⲒ.
14 ௧௪ அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாகத் தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஏனென்றால், தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
ⲓ̅ⲇ̅ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲀⲪⲀⲒ ϢⲈ ⲚⲀϤ ⲈⲠⲈⲤⲎⲦ ⲈϤⲐⲘⲀⲒⲎⲞⲨⲦ ⲈϦⲞⲨⲚ ⲈⲠⲈϤⲎⲒ ⲈϨⲞⲦⲈ ⲪⲎ ϪⲈ ⲞⲨⲞⲚ ⲚⲒⲂⲈⲚ ⲈⲐⲚⲀϬⲀⲤϤ ⲤⲈⲚⲀⲐⲈⲂⲒⲞϤ ⲪⲎ ⲆⲈ ⲈⲐⲚⲀⲐⲈⲂⲒⲞϤ ⲤⲈⲚⲀϬⲀⲤϤ.
15 ௧௫ பின்பு குழந்தைகளை அவர் தொடும்படிக்கு அவர்களை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். சீடர்கள் அதைக் கண்டு, கொண்டுவந்தவர்களை அதட்டினார்கள்.
ⲓ̅ⲉ̅ⲚⲀⲨⲒⲚⲒ ⲆⲈ ⲚⲀϤ ⲚϨⲀⲚⲀⲖⲰⲞⲨⲒ ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤϬⲒ ⲚⲈⲘⲰⲞⲨ ⲈⲦⲀⲨⲚⲀⲨ ⲆⲈ ⲚϪⲈⲚⲒⲘⲀⲐⲎⲦⲎⲤ ⲚⲀⲨⲈⲢⲈⲠⲒⲦⲒⲘⲀⲚ ⲚⲰⲞⲨ.
16 ௧௬ இயேசுவோ அவர்களைக் கொண்டுவரும்படி கட்டளையிட்டு: சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள், அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; தேவனுடைய ராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது.
ⲓ̅ⲋ̅ⲒⲎⲤⲞⲨⲤ ⲆⲈ ⲀϤⲘⲞⲨϮ ⲈⲢⲰⲞⲨ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲬⲀ ⲚⲒⲀⲖⲰⲞⲨⲒ ⲚⲦⲞⲨⲒ ϨⲀⲢⲞⲒ ⲞⲨⲞϨ ⲘⲠⲈⲢⲦⲀϨⲚⲞ ⲘⲘⲰⲞⲨ ⲚⲒⲞⲨⲞⲚ ⲄⲀⲢ ⲘⲠⲀⲒⲢⲎϮ ⲐⲰⲞⲨ ⲦⲈ ϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ.
17 ௧௭ எவனாவது சிறு பிள்ளையைப்போல தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அதில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ⲓ̅ⲍ̅ⲀⲘⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲪⲎ ⲈⲐⲚⲀϢⲈⲠ ϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ ⲈⲢⲞϤ ⲀⲚ ⲘⲪⲢⲎϮ ⲘⲠⲀⲒⲀⲖⲞⲨ ⲚⲚⲈϤⲒ ⲈϦⲞⲨⲚ ⲈⲢⲞⲤ.
18 ௧௮ அப்பொழுது தலைவன் ஒருவன் அவரை நோக்கி: நல்ல போதகரே, நித்தியஜீவனை பெற்றுக்கொள்வதற்க்கு நான் என்னசெய்யவேண்டும் என்று கேட்டான். (aiōnios g166)
ⲓ̅ⲏ̅ⲞⲨⲞϨ ⲀϤϢⲈⲚϤ ⲚϪⲈⲞⲨⲀⲢⲬⲰⲚ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲠⲒⲢⲈϤϮⲤⲂⲰ ⲚⲀⲄⲀⲐⲞⲤ ⲞⲨ ⲠⲈϮⲚⲀⲀⲒϤ ⲚⲦⲀⲈⲢⲔⲖⲎⲢⲞⲚⲞⲘⲒⲚ ⲚⲞⲨⲰⲚϦ ⲚⲈⲚⲈϨ (aiōnios g166)
19 ௧௯ அதற்கு இயேசு: நீ என்னை நல்லவன் என்று சொல்லுவானேன்? தேவன் ஒருவர்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே.
ⲓ̅ⲑ̅ⲠⲈϪⲀϤ ⲆⲈ ⲚⲀϤ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ϪⲈ ⲈⲐⲂⲈⲞⲨ ⲔϪⲰ ⲘⲘⲞⲤ ⲈⲢⲞⲒ ϪⲈ ⲠⲒⲀⲄⲀⲐⲞⲤ ⲘⲘⲞⲚ ϨⲖⲒ ⲚⲀⲄⲀⲐⲞⲤ ⲈⲂⲎⲖ ⲈⲪⲚⲞⲨϮ ⲘⲘⲀⲨⲀⲦϤ.
20 ௨0 விபசாரம் செய்யாதிருப்பாயாக, கொலை செய்யாதிருப்பாயாக, களவு செய்யாதிருப்பாயாக, பொய்ச்சாட்சி சொல்லாதிருப்பாயாக, உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்ணுவாயாக என்கிற கட்டளைகளை நீ தெரிந்திருக்கிறாயே என்றார்.
ⲕ̅ⲚⲒⲈⲚⲦⲞⲖⲎ ⲔⲤⲰⲞⲨⲚ ⲘⲘⲰⲞⲨ ⲘⲠⲈⲢⲈⲢⲚⲰⲒⲔ ⲘⲠⲈⲢϦⲰⲦⲈⲂ ⲘⲠⲈⲢϬⲒⲞⲨⲒ ⲘⲠⲈⲢⲈⲢⲘⲈⲐⲢⲈ ⲚⲚⲞⲨϪ ⲘⲀⲦⲀⲒⲈ ⲠⲈⲔⲒⲰⲦ ⲚⲈⲘ ⲦⲈⲔⲘⲀⲨ.
21 ௨௧ அதற்கு அவன்: இவைகளையெல்லாம் என் சிறுவயதுமுதல் கைக்கொண்டிருக்கிறேன் என்றான்.
ⲕ̅ⲁ̅ⲚⲐⲞϤ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲚⲀⲒ ⲦⲎⲢⲞⲨ ⲀⲒⲀⲢⲈϨ ⲈⲢⲰⲞⲨ ⲒⲤϪⲈⲚ ⲦⲀⲘⲈⲦⲀⲖⲞⲨ.
22 ௨௨ இயேசு அதைக்கேட்டு: இன்னும் உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு, அப்பொழுது பரலோகத்திலே உனக்கு செல்வம் உண்டாயிருக்கும்; பின்பு என்னைப் பின்பற்றிவா என்றார்.
ⲕ̅ⲃ̅ⲈⲦⲀϤⲤⲰⲦⲈⲘ ⲆⲈ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲈϪⲀϤ ⲚⲀϤ ϪⲈ ⲈⲦⲒ ⲔⲈⲞⲨⲀⲒ ⲠⲈ ⲈⲦⲈⲔϢⲀⲦ ⲘⲘⲞϤ ⲚⲬⲀⲒ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲈⲚⲦⲀⲔ ⲘⲎⲒⲦⲞⲨ ⲈⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲤⲞⲢⲞⲨ ⲚⲚⲒϨⲎⲔⲒ ⲞⲨⲞϨ ⲈⲔⲈϪⲪⲞ ⲚⲀⲔ ⲚⲞⲨⲀϨⲞ ϦⲈⲚⲚⲒⲪⲎⲞⲨⲒ ⲞⲨⲞϨ ⲀⲘⲞⲨ ⲘⲞϢⲒ ⲚⲤⲰⲒ
23 ௨௩ அவன் அதிக செல்வந்தனானபடியினால், இதைக் கேட்டபொழுது, மிகுந்த துக்கமடைந்தான்.
ⲕ̅ⲅ̅ⲚⲐⲞϤ ⲆⲈ ⲈⲦⲀϤⲤⲰⲦⲈⲘ ⲀⲠⲈϤϨⲎⲦ ⲘⲔⲀϨ ⲚⲈⲞⲨⲢⲀⲘⲀⲞ ⲄⲀⲢ ⲠⲈ ⲈⲘⲀϢⲰ.
24 ௨௪ அவன் மிகுந்த துக்கமடைந்ததை இயேசு கண்டு: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு அரிதாக இருக்கிறது.
ⲕ̅ⲇ̅ⲈⲦⲀϤⲚⲀⲨ ⲆⲈ ⲈⲢⲞϤ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲠⲰⲤ ⲤⲘⲞⲔϨ ⲚⲦⲈⲚⲎ ⲈⲦⲈ ⲚⲒⲬⲢⲎⲘⲀ ⲚⲦⲰⲞⲨ ⲈⲒ ⲈϦⲞⲨⲚ ⲈϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ.
25 ௨௫ செல்வந்தன் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைவிட, ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது சுலபமாக இருக்கும் என்றார்.
ⲕ̅ⲉ̅ⲤⲘⲞⲦⲈⲚ ⲄⲀⲢ ⲚⲦⲈⲞⲨϬⲀⲘⲞⲨⲖⲒ Ⲓ- ⲈϦⲞⲨⲚ ϨⲒⲦⲈⲚ ⲐⲞⲨⲀⲐⲚⲒ ⲘⲠⲒⲘⲀⲚⲐⲰⲢⲠ ⲈϨⲞⲦⲈ ⲚⲦⲈⲞⲨⲢⲀⲘⲀⲞ ⲒⲈϦⲞⲨⲚ ⲈϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲪⲚⲞⲨϮ.
26 ௨௬ அதைக் கேட்டவர்கள்: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்றார்கள்.
ⲕ̅ⲋ̅ⲠⲈϪⲰⲞⲨ ⲆⲈ ⲚϪⲈⲚⲎ ⲈⲦⲤⲰⲦⲈⲘ ϪⲈ ⲚⲒⲘ ϨⲰϤ ⲈⲦⲈⲞⲨⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲞϤ ⲈⲚⲞϨⲈⲘ.
27 ௨௭ அதற்கு அவர்: மனிதர்களால் கூடாதவைகள் தேவனால் கூடும் என்றார்.
ⲕ̅ⲍ̅ⲚⲐⲞϤ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲚⲒⲀⲦϪⲞⲘ ⲚⲦⲈⲚ ⲚⲒⲢⲰⲘⲒ ⲞⲨⲞⲚ ϢϪⲞⲘ ⲘⲘⲰⲞⲨ ⲚⲦⲈⲚ ⲪⲚⲞⲨϮ.
28 ௨௮ அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: இதோ, நாங்கள் எல்லாவற்றையும்விட்டு, உம்மைப் பின்பற்றினோமே என்றான்.
ⲕ̅ⲏ̅ⲠⲈϪⲈ ⲠⲈⲦⲢⲞⲤ ⲆⲈ ϪⲈ ϨⲎⲠⲠⲈ ⲀⲚⲞⲚ ⲀⲚⲬⲀ ⲠⲈⲦⲈⲚⲦⲀⲚ ⲀⲚⲘⲞϢⲒ ⲚⲤⲰⲔ.
29 ௨௯ அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தினிமித்தம் வீட்டையாவது, பெற்றோரையாவது, சகோதரர்களையாவது, மனைவியையாவது, பிள்ளைகளையாவது விட்டுவிட்ட எவனும்,
ⲕ̅ⲑ̅ⲚⲐⲞϤ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ⲀⲘⲎⲚ ϮϪⲰ ⲘⲘⲞⲤ ⲚⲰⲦⲈⲚ ϪⲈ ⲘⲘⲞⲚ ϨⲖⲒ ⲈⲀϤⲬⲀ ⲎⲒ ⲚⲤⲰϤ ⲒⲈ ⲞⲨⲤϨⲒⲘⲒ ⲒⲈ ϨⲀⲚⲤⲚⲎⲞⲨ ⲒⲈ ϨⲀⲚⲒⲞϮ ⲒⲈ ϨⲀⲚϢⲎⲢⲒ ⲈⲐⲂⲈ ϮⲘⲈⲦⲞⲨⲢⲞ ⲚⲦⲈⲪϮ
30 ௩0 இம்மையிலே அதிகமானவைகளையும், மறுமையிலே நித்தியஜீவனையும் அடையாமற்போவதில்லையென்று உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். (aiōn g165, aiōnios g166)
ⲗ̅ϪⲈ ϤⲚⲀϬⲒⲦⲞⲨ ⲚⲞⲨⲘⲎϢ ⲚⲔⲰⲂ ϦⲈⲚⲠⲀⲒⲤⲎⲞⲨ ⲞⲨⲞϨ ϦⲈⲚⲠⲒⲈⲚⲈϨ ⲈⲐⲚⲎⲞⲨ ⲞⲨⲰⲚϦ ⲚⲈⲚⲈϨ. (aiōn g165, aiōnios g166)
31 ௩௧ பின்பு அவர் பன்னிருவரையும் தம்மிடத்தில் அழைத்து: இதோ, எருசலேமுக்குப் போகிறோம், மனிதகுமாரனைக்குறித்துத் தீர்க்கதரிசிகளால் எழுதப்பட்டவைகளெல்லாம் நிறைவேறும்.
ⲗ̅ⲁ̅ⲈⲦⲀϤⲒⲚⲒ ⲆⲈ ⲈⲦⲞⲦϤ ⲘⲠⲒⲒⲂ ⲠⲈϪⲀϤ ⲚⲰⲞⲨ ϪⲈ ϨⲎⲠⲠⲈ ⲦⲈⲚⲚⲀϢⲈ ⲈϨⲢⲎⲒ ⲈⲒⲈⲢⲞⲤⲀⲖⲎⲘ ⲞⲨⲞϨ ⲤⲈⲚⲀϪⲰⲔ ⲈⲂⲞⲖ ⲚϨⲰⲂ ⲚⲒⲂⲈⲚ ⲈⲦⲤϦⲎ ⲞⲨⲦ ⲈⲂⲞⲖ ϨⲒⲦⲞⲦⲞⲨ ⲚⲚⲒⲠⲢⲞⲪⲎⲦⲎⲤ ⲈⲐⲂⲈ ⲠϢⲎⲢⲒ ⲘⲪⲢⲰⲘⲒ.
32 ௩௨ எப்படியென்றால், அவர் யூதரல்லாதவரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்பட்டு, பரிகாசமும் நிந்தையும் அடைந்து, துப்பப்படுவார்.
ⲗ̅ⲃ̅ⲤⲈⲚⲀⲦⲎⲒϤ ⲄⲀⲢ ⲈⲦⲞⲦⲞⲨ ⲚⲚⲒⲈⲐⲚⲞⲤ ⲞⲨⲞϨ ⲤⲈⲚⲀⲤⲰⲂⲒ ⲘⲘⲞϤ ⲞⲨⲞϨ ⲤⲈⲚⲀϢⲞϢϤ ⲞⲨⲞϨ ⲤⲈⲚⲀϨⲒⲐⲀϤ ⲈⲠⲈϤϨⲞ.
33 ௩௩ அவரை சாட்டையினால் அடித்து, கொலைசெய்வார்கள்; மூன்றாம்நாளிலே அவர் உயிரோடு எழுந்திருப்பார் என்றார்.
ⲗ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲀⲨϢⲀⲚⲈⲢⲘⲀⲤⲦⲒⲄⲄⲞⲒⲚ ⲘⲘⲞϤ ⲤⲈⲚⲀϦⲞⲐⲂⲈϤ ⲞⲨⲞϨ ϤⲚⲀⲦⲰⲚϤ ϦⲈⲚⲠⲒⲘⲀϨⲄ ⲚⲈϨⲞⲞⲨ.
34 ௩௪ இவைகளில் ஒன்றையும் அவர்கள் உணரவில்லை; அவைகளின் பொருள் அவர்களுக்கு மறைவாக இருந்தது, அவர் சொன்னவைகளை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை.
ⲗ̅ⲇ̅ⲞⲨⲞϨ ⲚⲐⲰⲞⲨ ⲘⲠⲞⲨⲔⲀϮ ⲈϨⲖⲒ ⲚⲚⲀⲒ ⲞⲨⲞϨ ⲚⲀϤϨⲎⲠ ⲈⲢⲰⲞⲨ ⲠⲈ ⲚϪⲈⲠⲒⲤⲀϪⲒ ⲞⲨⲞϨ ⲚⲀⲨⲈⲘⲒ ⲀⲚ ⲠⲈ ⲈⲚⲎ ⲈⲚⲀϤϪⲰ ⲘⲘⲰⲞⲨ.
35 ௩௫ பின்பு இயேசு எரிகோவிற்கு சமீபமாக வந்தபோது, ஒரு குருடன் வழியருகே உட்கார்ந்து பிச்சை கேட்டுக்கொண்டிருந்தான்.
ⲗ̅ⲉ̅ⲀⲤϢⲰⲠⲒ ⲆⲈ ⲈⲦⲀϤϦⲰⲚⲦ ⲈⲒⲈⲢⲒⲬⲰ ⲚⲈⲞⲨⲞⲚ ⲞⲨⲂⲈⲖⲖⲈ ⲠⲈ ⲈϤϨⲈⲘⲤⲒ ϦⲀⲦⲈⲚ ⲠⲒⲘⲰⲒⲦ ⲈϤϢⲀⲦⲘⲈⲐⲚⲀⲒ.
36 ௩௬ மக்கள் நடக்கிற சத்தத்தை அவன் கேட்டு, இதென்ன என்று விசாரித்தான்.
ⲗ̅ⲋ̅ⲈⲦⲀϤⲤⲰⲦⲈⲘ ⲆⲈ ⲈⲞⲨⲘⲎϢ ⲈϤⲤⲒⲚⲒⲰⲞⲨ ⲚⲀϤϢⲒⲚⲒ ⲠⲈ ϪⲈ ⲞⲨ ⲠⲈ ⲪⲀⲒ.
37 ௩௭ நசரேயனாகிய இயேசு போகிறார் என்று அவனுக்கு அறிவித்தார்கள். அப்பொழுது அவன்: இயேசுவே, தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று கூப்பிட்டான்.
ⲗ̅ⲍ̅ⲀⲨⲦⲀⲘⲞϤ ⲆⲈ ϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠⲒⲚⲀⲌⲰⲢⲈⲞⲤ ⲤⲒⲚⲒ.
38 ௩௮ முன் நடப்பவர்கள் அவன் பேசாமலிருக்கும்படி அவனை அதட்டினார்கள். அவனோ: இயேசுவே தாவீதின் குமாரனே, எனக்கு இரங்கும் என்று மிகவும் அதிகமாகக் கூப்பிட்டான்.
ⲗ̅ⲏ̅ⲞⲨⲞϨ ⲀϤⲰϢ ⲈⲂⲞⲖ ⲈϤϪⲰ ⲘⲘⲞⲤ ϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲠϢⲎⲢⲒ ⲚⲆⲀⲨⲒⲆ ⲚⲀⲒ ⲚⲎⲒ.
39 ௩௯ இயேசு நின்று, அவனைத் தம்மிடத்தில் கொண்டுவரும்படி சொன்னார்.
ⲗ̅ⲑ̅ⲞⲨⲞϨ ⲚⲎ ⲈⲚⲀⲨⲘⲞϢⲒ ⲈⲦϨⲎ ⲚⲀⲨⲈⲢⲈⲠⲒⲦⲒⲘⲀⲚ ⲚⲀϤ ϨⲒⲚⲀ ⲚⲦⲈϤⲬⲀⲢⲰϤ ⲚⲐⲞϤ ⲆⲈ ⲘⲀⲖⲖⲞⲚ ⲚϨⲞⲨⲞ ⲚⲀϤⲰϢ ⲈⲂⲞⲖ ϪⲈ ⲠϢⲎⲢⲒ ⲚⲆⲀⲨⲒⲆ ⲚⲀⲒ ⲚⲎⲒ.
40 ௪0 அவன் அருகில் வந்தபோது, இயேசு அவனை நோக்கி:
ⲙ̅ⲈⲦⲀϤⲞϨⲒ ⲆⲈ ⲈⲢⲀⲦϤ ⲚϪⲈⲒⲎⲤⲞⲨⲤ ⲀϤⲞⲨⲀϨⲤⲀϨⲚⲒ ⲈⲐⲢⲞⲨⲈⲚϤ ϨⲀⲢⲞϤ ⲈⲦⲀϤϦⲰⲚⲦ ⲆⲈ ⲈⲢⲞϤ ⲀϤϢⲈⲚϤ
41 ௪௧ நான் உனக்கு என்னசெய்யவேண்டும் என்றிருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு அவன்: ஆண்டவரே, நான் பார்வையடையவேண்டும் என்றான்.
ⲙ̅ⲁ̅ϪⲈ ⲞⲨ ⲠⲈⲦⲈⲔⲞⲨⲀϢϤ ⲚⲦⲀⲀⲒϤ ⲚⲀⲔ ⲚⲐⲞϤ ⲆⲈ ⲠⲈϪⲀϤ ϪⲈ ⲠⲀϬⲞⲒⲤ ϨⲒⲚⲀ ⲚⲦⲀⲚⲀⲨ ⲘⲂⲞⲖ
42 ௪௨ இயேசு அவனை நோக்கி: நீ பார்வையடைவாயாக, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது என்றார்.
ⲙ̅ⲃ̅ⲞⲨⲞϨ ⲠⲈϪⲈ ⲒⲎⲤⲞⲨⲤ ⲚⲀϤ ϪⲈ ⲀⲚⲀⲨ ⲘⲂⲞⲖ ⲠⲈⲔⲚⲀϨϮ ⲠⲈⲦⲀϤⲚⲀϨⲘⲈⲔ
43 ௪௩ உடனே அவன் பார்வையடைந்து, தேவனை மகிமைப்படுத்திக்கொண்டே, அவருக்குப் பின்னேசென்றான். மக்களெல்லோரும் அதைக் கண்டு, தேவனைப் புகழ்ந்தார்கள்.
ⲙ̅ⲅ̅ⲞⲨⲞϨ ⲤⲀⲦⲞⲦϤ ⲀϤⲚⲀⲨ ⲘⲂⲞⲖ ⲞⲨⲞϨ ⲀϤⲘⲞϢⲒ ⲚⲤⲰϤ ⲈϤϮⲰⲞⲨ ⲘⲪⲚⲞⲨϮ ⲞⲨⲞϨ ⲠⲒⲖⲀⲞⲤ ⲦⲎⲢϤ ⲈⲦⲀⲨⲚⲀⲨ ⲀⲨⲤⲘⲞⲨ ⲈⲪⲚⲞⲨϮ.

< லூக்கா 18 >