< லூக்கா 15 >

1 எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
තදා කරසඤ්චායිනඃ පාපිනශ්ච ලෝකා උපදේශ්කථාං ශ්‍රෝතුං යීශෝඃ සමීපම් ආගච්ඡන්|
2 அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
තතඃ ඵිරූශින උපාධ්‍යායාශ්ච විවදමානාඃ කථයාමාසුඃ ඒෂ මානුෂඃ පාපිභිඃ සහ ප්‍රණයං කෘත්වා තෛඃ සාර්ද්ධං භුංක්තේ|
3 அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
තදා ස තේභ්‍ය ඉමාං දෘෂ්ටාන්තකථාං කථිතවාන්,
4 உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
කස්‍යචිත් ශතමේෂේෂු තිෂ්ඨත්මු තේෂාමේකං ස යදි හාරයති තර්හි මධ්‍යේප්‍රාන්තරම් ඒකෝනශතමේෂාන් විහාය හාරිතමේෂස්‍ය උද්දේශප්‍රාප්තිපර‍්‍ය්‍යනතං න ගවේෂයති, ඒතාදෘශෝ ලෝකෝ යුෂ්මාකං මධ්‍යේ ක ආස්තේ?
5 கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
තස්‍යෝද්දේශං ප්‍රාප්‍ය හෘෂ්ටමනාස්තං ස්කන්ධේ නිධාය ස්වස්ථානම් ආනීය බන්ධුබාන්ධවසමීපවාසින ආහූය වක්ති,
6 வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
හාරිතං මේෂං ප්‍රාප්තෝහම් අතෝ හේතෝ ර්මයා සාර්ද්ධම් ආනන්දත|
7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
තද්වදහං යුෂ්මාන් වදාමි, යේෂාං මනඃපරාවර්ත්තනස්‍ය ප්‍රයෝජනං නාස්ති, තාදෘශෛකෝනශතධාර්ම්මිකකාරණාද් ය ආනන්දස්තස්මාද් ඒකස්‍ය මනඃපරිවර්ත්තිනඃ පාපිනඃ කාරණාත් ස්වර්ගේ (අ)ධිකානන්දෝ ජායතේ|
8 அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
අපරඤ්ච දශානාං රූප්‍යඛණ්ඩානාම් ඒකඛණ්ඩේ හාරිතේ ප්‍රදීපං ප්‍රජ්වාල්‍ය ගෘහං සම්මාර්ජ්‍ය තස්‍ය ප්‍රාප්තිං යාවද් යත්නේන න ගවේෂයති, ඒතාදෘශී යෝෂිත් කාස්තේ?
9 கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
ප්‍රාප්තේ සති බන්ධුබාන්ධවසමීපවාසිනීරාහූය කථයති, හාරිතං රූප්‍යඛණ්ඩං ප්‍රාප්තාහං තස්මාදේව මයා සාර්ද්ධම් ආනන්දත|
10 ௧0 அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
තද්වදහං යුෂ්මාන් ව්‍යාහරාමි, ඒකේන පාපිනා මනසි පරිවර්ත්තිතේ, ඊශ්වරස්‍ය දූතානාං මධ්‍යේප්‍යානන්දෝ ජායතේ|
11 ௧௧ பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
අපරඤ්ච ස කථයාමාස, කස්‍යචිද් ද්වෞ පුත්‍රාවාස්තාං,
12 ௧௨ அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
තයෝඃ කනිෂ්ඨඃ පුත්‍රඃ පිත්‍රේ කථයාමාස, හේ පිතස්තව සම්පත්ත්‍යා යමංශං ප්‍රාප්ස්‍යාම්‍යහං විභජ්‍ය තං දේහි, තතඃ පිතා නිජාං සම්පත්තිං විභජ්‍ය තාභ්‍යාං දදෞ|
13 ௧௩ சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
කතිපයාත් කාලාත් පරං ස කනිෂ්ඨපුත්‍රඃ සමස්තං ධනං සංගෘහ්‍ය දූරදේශං ගත්වා දුෂ්ටාචරණේන සර්ව්වාං සම්පත්තිං නාශයාමාස|
14 ௧௪ எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
තස්‍ය සර්ව්වධනේ ව්‍යයං ගතේ තද්දේශේ මහාදුර්භික්‍ෂං බභූව, තතස්තස්‍ය දෛන්‍යදශා භවිතුම් ආරේභේ|
15 ௧௫ அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
තතඃ පරං ස ගත්වා තද්දේශීයං ගෘහස්ථමේකම් ආශ්‍රයත; තතඃ සතං ශූකරව්‍රජං චාරයිතුං ප්‍රාන්තරං ප්‍රේෂයාමාස|
16 ௧௬ அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
කේනාපි තස්මෛ භක්‍ෂ්‍යාදානාත් ස ශූකරඵලවල්කලේන පිචිණ්ඩපූරණාං වවාඤ්ඡ|
17 ௧௭ அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
ශේෂේ ස මනසි චේතනාං ප්‍රාප්‍ය කථයාමාස, හා මම පිතුඃ සමීපේ කති කති වේතනභුජෝ දාසා යථේෂ්ටං තතෝධිකඤ්ච භක්‍ෂ්‍යං ප්‍රාප්නුවන්ති කින්ත්වහං ක්‍ෂුධා මුමූර්ෂුඃ|
18 ௧௮ நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
අහමුත්ථාය පිතුඃ සමීපං ගත්වා කථාමේතාං වදිෂ්‍යාමි, හේ පිතර් ඊශ්වරස්‍ය තව ච විරුද්ධං පාපමකරවම්
19 ௧௯ இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
තව පුත්‍රඉති විඛ්‍යාතෝ භවිතුං න යෝග්‍යෝස්මි ච, මාං තව වෛතනිකං දාසං කෘත්වා ස්ථාපය|
20 ௨0 எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
පශ්චාත් ස උත්ථාය පිතුඃ සමීපං ජගාම; තතස්තස්‍ය පිතාතිදූරේ තං නිරීක්‍ෂ්‍ය දයාඤ්චක්‍රේ, ධාවිත්වා තස්‍ය කණ්ඨං ගෘහීත්වා තං චුචුම්බ ච|
21 ௨௧ குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
තදා පුත්‍ර උවාච, හේ පිතර් ඊශ්වරස්‍ය තව ච විරුද්ධං පාපමකරවං, තව පුත්‍රඉති විඛ්‍යාතෝ භවිතුං න යෝග්‍යෝස්මි ච|
22 ௨௨ அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
කින්තු තස්‍ය පිතා නිජදාසාන් ආදිදේශ, සර්ව්වෝත්තමවස්ත්‍රාණ්‍යානීය පරිධාපයතෛනං හස්තේ චාඞ්ගුරීයකම් අර්පයත පාදයෝශ්චෝපානහෞ සමර්පයත;
23 ௨௩ கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
පුෂ්ටං ගෝවත්සම් ආනීය මාරයත ච තං භුක්ත්වා වයම් ආනන්දාම|
24 ௨௪ என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
යතෝ මම පුත්‍රෝයම් අම්‍රියත පුනරජීවීද් හාරිතශ්ච ලබ්ධෝභූත් තතස්ත ආනන්දිතුම් ආරේභිරේ|
25 ௨௫ அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
තත්කාලේ තස්‍ය ජ්‍යේෂ්ඨඃ පුත්‍රඃ ක්‍ෂේත්‍ර ආසීත්| අථ ස නිවේශනස්‍ය නිකටං ආගච්ඡන් නෘත්‍යානාං වාද්‍යානාඤ්ච ශබ්දං ශ්‍රුත්වා
26 ௨௬ வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
දාසානාම් ඒකම් ආහූය පප්‍රච්ඡ, කිං කාරණමස්‍ය?
27 ௨௭ அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.
තතඃ සෝවාදීත්, තව භ්‍රාතාගමත්, තව තාතශ්ච තං සුශරීරං ප්‍රාප්‍ය පුෂ්ටං ගෝවත්සං මාරිතවාන්|
28 ௨௮ அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.
තතඃ ස ප්‍රකුප්‍ය නිවේශනාන්තඃ ප්‍රවේෂ්ටුං න සම්මේනේ; තතස්තස්‍ය පිතා බහිරාගත්‍ය තං සාධයාමාස|
29 ௨௯ அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
තතඃ ස පිතරං ප්‍රත්‍යුවාච, පශ්‍ය තව කාඤ්චිදප්‍යාඥාං න විලංඝ්‍ය බහූන් වත්සරාන් අහං ත්වාං සේවේ තථාපි මිත්‍රෛඃ සාර්ද්ධම් උත්සවං කර්ත්තුං කදාපි ඡාගමේකමපි මහ්‍යං නාදදාඃ;
30 ௩0 வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
කින්තු තව යඃ පුත්‍රෝ වේශ්‍යාගමනාදිභිස්තව සම්පත්තිම් අපව්‍යයිතවාන් තස්මින්නාගතමාත්‍රේ තස්‍යෛව නිමිත්තං පුෂ්ටං ගෝවත්සං මාරිතවාන්|
31 ௩௧ அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
තදා තස්‍ය පිතාවෝචත්, හේ පුත්‍ර ත්වං සර්ව්වදා මයා සහාසි තස්මාන් මම යද්‍යදාස්තේ තත්සර්ව්වං තව|
32 ௩௨ உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.
කින්තු තවායං භ්‍රාතා මෘතඃ පුනරජීවීද් හාරිතශ්ච භූත්වා ප්‍රාප්තෝභූත්, ඒතස්මාත් කාරණාද් උත්සවානන්දෞ කර්ත්තුම් උචිතමස්මාකම්|

< லூக்கா 15 >