< லூக்கா 15 >

1 எல்லா வரி வசூலிப்பவர்களும் பாவிகளும் அவருடைய வசனங்களைக் கேட்கும்படி அவரிடத்தில் வந்துசேர்ந்தார்கள்.
ତଦା କରସଞ୍ଚାଯିନଃ ପାପିନଶ୍ଚ ଲୋକା ଉପଦେଶ୍କଥାଂ ଶ୍ରୋତୁଂ ଯୀଶୋଃ ସମୀପମ୍ ଆଗଚ୍ଛନ୍|
2 அப்பொழுது பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் முறுமுறுத்து: இவர் பாவிகளை ஏற்றுக்கொண்டு அவர்களோடு சாப்பிடுகிறார் என்றார்கள்.
ତତଃ ଫିରୂଶିନ ଉପାଧ୍ୟାଯାଶ୍ଚ ୱିୱଦମାନାଃ କଥଯାମାସୁଃ ଏଷ ମାନୁଷଃ ପାପିଭିଃ ସହ ପ୍ରଣଯଂ କୃତ୍ୱା ତୈଃ ସାର୍ଦ୍ଧଂ ଭୁଂକ୍ତେ|
3 அவர்களுக்கு அவர் சொன்ன உவமையாவது:
ତଦା ସ ତେଭ୍ୟ ଇମାଂ ଦୃଷ୍ଟାନ୍ତକଥାଂ କଥିତୱାନ୍,
4 உங்களில் ஒரு மனிதன் நூறு ஆடுகளை உடையவனாக இருந்து, அவைகளில் ஒன்று காணாமற்போனால், தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் வனாந்திரத்திலேவிட்டு, காணாமற்போன ஆட்டைக் கண்டுபிடிக்கும்வரை தேடித்திரியானோ?
କସ୍ୟଚିତ୍ ଶତମେଷେଷୁ ତିଷ୍ଠତ୍ମୁ ତେଷାମେକଂ ସ ଯଦି ହାରଯତି ତର୍ହି ମଧ୍ୟେପ୍ରାନ୍ତରମ୍ ଏକୋନଶତମେଷାନ୍ ୱିହାଯ ହାରିତମେଷସ୍ୟ ଉଦ୍ଦେଶପ୍ରାପ୍ତିପର୍ୟ୍ୟନତଂ ନ ଗୱେଷଯତି, ଏତାଦୃଶୋ ଲୋକୋ ଯୁଷ୍ମାକଂ ମଧ୍ୟେ କ ଆସ୍ତେ?
5 கண்டுபிடித்தபின்பு, அவன் மகிழ்ச்சியோடு அதைத் தன் தோள்களின்மேல் போட்டுக்கொண்டு,
ତସ୍ୟୋଦ୍ଦେଶଂ ପ୍ରାପ୍ୟ ହୃଷ୍ଟମନାସ୍ତଂ ସ୍କନ୍ଧେ ନିଧାଯ ସ୍ୱସ୍ଥାନମ୍ ଆନୀଯ ବନ୍ଧୁବାନ୍ଧୱସମୀପୱାସିନ ଆହୂଯ ୱକ୍ତି,
6 வீட்டிற்கு வந்து, நண்பர்களையும் அண்டைகுடும்பத்தாரையும் கூட வரவழைத்து: காணாமற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழுங்கள் என்பான் அல்லவா?
ହାରିତଂ ମେଷଂ ପ୍ରାପ୍ତୋହମ୍ ଅତୋ ହେତୋ ର୍ମଯା ସାର୍ଦ୍ଧମ୍ ଆନନ୍ଦତ|
7 அதுபோல, மனந்திரும்ப அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக்குறித்து மகிழ்ச்சி உண்டாகிறதைவிட மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த மகிழ்ச்சி உண்டாயிருக்கும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ତଦ୍ୱଦହଂ ଯୁଷ୍ମାନ୍ ୱଦାମି, ଯେଷାଂ ମନଃପରାୱର୍ତ୍ତନସ୍ୟ ପ୍ରଯୋଜନଂ ନାସ୍ତି, ତାଦୃଶୈକୋନଶତଧାର୍ମ୍ମିକକାରଣାଦ୍ ଯ ଆନନ୍ଦସ୍ତସ୍ମାଦ୍ ଏକସ୍ୟ ମନଃପରିୱର୍ତ୍ତିନଃ ପାପିନଃ କାରଣାତ୍ ସ୍ୱର୍ଗେ ଽଧିକାନନ୍ଦୋ ଜାଯତେ|
8 அன்றியும், ஒரு பெண் பத்து வெள்ளிக்காசுகளை உடையவளாக இருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டுபிடிக்கிறவரைக்கும் அக்கறையோடு தேடாமலிருப்பாளோ?
ଅପରଞ୍ଚ ଦଶାନାଂ ରୂପ୍ୟଖଣ୍ଡାନାମ୍ ଏକଖଣ୍ଡେ ହାରିତେ ପ୍ରଦୀପଂ ପ୍ରଜ୍ୱାଲ୍ୟ ଗୃହଂ ସମ୍ମାର୍ଜ୍ୟ ତସ୍ୟ ପ୍ରାପ୍ତିଂ ଯାୱଦ୍ ଯତ୍ନେନ ନ ଗୱେଷଯତି, ଏତାଦୃଶୀ ଯୋଷିତ୍ କାସ୍ତେ?
9 கண்டுபிடித்தபின்பு, தன் தோழிகளையும் அண்டை வீட்டுக்காரிகளையும் கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக்காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூட மகிழ்ச்சியாக இருங்கள் என்பாள் அல்லவா?
ପ୍ରାପ୍ତେ ସତି ବନ୍ଧୁବାନ୍ଧୱସମୀପୱାସିନୀରାହୂଯ କଥଯତି, ହାରିତଂ ରୂପ୍ୟଖଣ୍ଡଂ ପ୍ରାପ୍ତାହଂ ତସ୍ମାଦେୱ ମଯା ସାର୍ଦ୍ଧମ୍ ଆନନ୍ଦତ|
10 ௧0 அதுபோல மனந்திரும்புகிற ஒரே பாவியினிமித்தம் தேவனுடைய தூதர்களுக்கு முன்பாக மகிழ்ச்சி உண்டாயிருக்கிறது என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ତଦ୍ୱଦହଂ ଯୁଷ୍ମାନ୍ ୱ୍ୟାହରାମି, ଏକେନ ପାପିନା ମନସି ପରିୱର୍ତ୍ତିତେ, ଈଶ୍ୱରସ୍ୟ ଦୂତାନାଂ ମଧ୍ୟେପ୍ୟାନନ୍ଦୋ ଜାଯତେ|
11 ௧௧ பின்னும் அவர் சொன்னது: ஒரு மனிதனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள்.
ଅପରଞ୍ଚ ସ କଥଯାମାସ, କସ୍ୟଚିଦ୍ ଦ୍ୱୌ ପୁତ୍ରାୱାସ୍ତାଂ,
12 ௧௨ அவர்களில் இளையவன் தகப்பனை நோக்கி: தகப்பனே, சொத்தில் எனக்கு வரும் பங்கை எனக்குத் தரவேண்டும் என்றான். அந்தப்படி அவன் அவர்களுக்குத் தன் சொத்தை பங்கிட்டுக்கொடுத்தான்.
ତଯୋଃ କନିଷ୍ଠଃ ପୁତ୍ରଃ ପିତ୍ରେ କଥଯାମାସ, ହେ ପିତସ୍ତୱ ସମ୍ପତ୍ତ୍ୟା ଯମଂଶଂ ପ୍ରାପ୍ସ୍ୟାମ୍ୟହଂ ୱିଭଜ୍ୟ ତଂ ଦେହି, ତତଃ ପିତା ନିଜାଂ ସମ୍ପତ୍ତିଂ ୱିଭଜ୍ୟ ତାଭ୍ୟାଂ ଦଦୌ|
13 ௧௩ சில நாட்களுக்குப்பின்பு, இளையமகன் தன் சொத்தைவிற்று பணத்தை திரட்டிக்கொண்டு, தூரதேசத்திற்குப் புறப்பட்டுப்போய், அங்கே துன்மார்க்கமாக வாழ்ந்து, தன் சொத்தை அழித்துப்போட்டான்.
କତିପଯାତ୍ କାଲାତ୍ ପରଂ ସ କନିଷ୍ଠପୁତ୍ରଃ ସମସ୍ତଂ ଧନଂ ସଂଗୃହ୍ୟ ଦୂରଦେଶଂ ଗତ୍ୱା ଦୁଷ୍ଟାଚରଣେନ ସର୍ୱ୍ୱାଂ ସମ୍ପତ୍ତିଂ ନାଶଯାମାସ|
14 ௧௪ எல்லாவற்றையும் அவன் செலவழித்தபின்பு, அந்த தேசத்திலே கொடிய பஞ்சமுண்டானது. அப்பொழுது அவன் வறுமைக்குள்ளானான்,
ତସ୍ୟ ସର୍ୱ୍ୱଧନେ ୱ୍ୟଯଂ ଗତେ ତଦ୍ଦେଶେ ମହାଦୁର୍ଭିକ୍ଷଂ ବଭୂୱ, ତତସ୍ତସ୍ୟ ଦୈନ୍ୟଦଶା ଭୱିତୁମ୍ ଆରେଭେ|
15 ௧௫ அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில்போய் வேலையில் சேர்ந்தான். அந்தக் குடியானவன் அவனைத் தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்பினான்.
ତତଃ ପରଂ ସ ଗତ୍ୱା ତଦ୍ଦେଶୀଯଂ ଗୃହସ୍ଥମେକମ୍ ଆଶ୍ରଯତ; ତତଃ ସତଂ ଶୂକରୱ୍ରଜଂ ଚାରଯିତୁଂ ପ୍ରାନ୍ତରଂ ପ୍ରେଷଯାମାସ|
16 ௧௬ அப்பொழுது பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் பசியைதீர்க்க ஆசையாக இருந்தான், ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை.
କେନାପି ତସ୍ମୈ ଭକ୍ଷ୍ୟାଦାନାତ୍ ସ ଶୂକରଫଲୱଲ୍କଲେନ ପିଚିଣ୍ଡପୂରଣାଂ ୱୱାଞ୍ଛ|
17 ௧௭ அவனுக்குப் புத்தி தெளிந்தபோது, அவன்: என் தகப்பனுடைய வேலைக்காரர்கள் எத்தனையோ பேருக்கு நிறைவான உணவு இருக்கிறது, நானோ பசியினால் சாகிறேன்.
ଶେଷେ ସ ମନସି ଚେତନାଂ ପ୍ରାପ୍ୟ କଥଯାମାସ, ହା ମମ ପିତୁଃ ସମୀପେ କତି କତି ୱେତନଭୁଜୋ ଦାସା ଯଥେଷ୍ଟଂ ତତୋଧିକଞ୍ଚ ଭକ୍ଷ୍ୟଂ ପ୍ରାପ୍ନୁୱନ୍ତି କିନ୍ତ୍ୱହଂ କ୍ଷୁଧା ମୁମୂର୍ଷୁଃ|
18 ௧௮ நான் எழுந்து என் தகப்பனிடத்திற்குப்போய்: தகப்பனே, பரலோகத்திற்கு விரோதமாகவும் உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன்.
ଅହମୁତ୍ଥାଯ ପିତୁଃ ସମୀପଂ ଗତ୍ୱା କଥାମେତାଂ ୱଦିଷ୍ୟାମି, ହେ ପିତର୍ ଈଶ୍ୱରସ୍ୟ ତୱ ଚ ୱିରୁଦ୍ଧଂ ପାପମକରୱମ୍
19 ௧௯ இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன், உம்முடைய வேலைக்காரர்களில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன் என்று சொல்லி;
ତୱ ପୁତ୍ରଇତି ୱିଖ୍ୟାତୋ ଭୱିତୁଂ ନ ଯୋଗ୍ୟୋସ୍ମି ଚ, ମାଂ ତୱ ୱୈତନିକଂ ଦାସଂ କୃତ୍ୱା ସ୍ଥାପଯ|
20 ௨0 எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். அவன் தூரத்தில் வரும்போதே, அவனுடைய தகப்பன் அவனைக் கண்டு, மனதுருகி, ஓடி, அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தம்செய்தான்.
ପଶ୍ଚାତ୍ ସ ଉତ୍ଥାଯ ପିତୁଃ ସମୀପଂ ଜଗାମ; ତତସ୍ତସ୍ୟ ପିତାତିଦୂରେ ତଂ ନିରୀକ୍ଷ୍ୟ ଦଯାଞ୍ଚକ୍ରେ, ଧାୱିତ୍ୱା ତସ୍ୟ କଣ୍ଠଂ ଗୃହୀତ୍ୱା ତଂ ଚୁଚୁମ୍ବ ଚ|
21 ௨௧ குமாரன் தகப்பனை நோக்கி: தகப்பனே பரலோகத்திற்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவம் செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் தகுதியற்றவன் என்று சொன்னான்.
ତଦା ପୁତ୍ର ଉୱାଚ, ହେ ପିତର୍ ଈଶ୍ୱରସ୍ୟ ତୱ ଚ ୱିରୁଦ୍ଧଂ ପାପମକରୱଂ, ତୱ ପୁତ୍ରଇତି ୱିଖ୍ୟାତୋ ଭୱିତୁଂ ନ ଯୋଗ୍ୟୋସ୍ମି ଚ|
22 ௨௨ அப்பொழுது தகப்பன் தன் வேலைக்காரர்களை நோக்கி: நீங்கள் உயர்ந்த ஆடைகளை கொண்டுவந்து இவனுக்கு உடுத்தி இவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போடுங்கள்.
କିନ୍ତୁ ତସ୍ୟ ପିତା ନିଜଦାସାନ୍ ଆଦିଦେଶ, ସର୍ୱ୍ୱୋତ୍ତମୱସ୍ତ୍ରାଣ୍ୟାନୀଯ ପରିଧାପଯତୈନଂ ହସ୍ତେ ଚାଙ୍ଗୁରୀଯକମ୍ ଅର୍ପଯତ ପାଦଯୋଶ୍ଚୋପାନହୌ ସମର୍ପଯତ;
23 ௨௩ கொழுத்தக் கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள். நாம் விருந்து கொண்டாடுவோம்.
ପୁଷ୍ଟଂ ଗୋୱତ୍ସମ୍ ଆନୀଯ ମାରଯତ ଚ ତଂ ଭୁକ୍ତ୍ୱା ୱଯମ୍ ଆନନ୍ଦାମ|
24 ௨௪ என் குமாரனாகிய இவன் மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான் என்றான். அப்படியே அவர்கள் கொண்டாடத் தொடங்கினார்கள்.
ଯତୋ ମମ ପୁତ୍ରୋଯମ୍ ଅମ୍ରିଯତ ପୁନରଜୀୱୀଦ୍ ହାରିତଶ୍ଚ ଲବ୍ଧୋଭୂତ୍ ତତସ୍ତ ଆନନ୍ଦିତୁମ୍ ଆରେଭିରେ|
25 ௨௫ அவனுடைய மூத்தகுமாரன் வயலில் இருந்தான். அவன் திரும்பி வீட்டிற்கு அருகில் வருகிறபோது, கீதவாத்தியத்தையும் நடனக்களிப்பையும் கேட்டு;
ତତ୍କାଲେ ତସ୍ୟ ଜ୍ୟେଷ୍ଠଃ ପୁତ୍ରଃ କ୍ଷେତ୍ର ଆସୀତ୍| ଅଥ ସ ନିୱେଶନସ୍ୟ ନିକଟଂ ଆଗଚ୍ଛନ୍ ନୃତ୍ୟାନାଂ ୱାଦ୍ୟାନାଞ୍ଚ ଶବ୍ଦଂ ଶ୍ରୁତ୍ୱା
26 ௨௬ வேலைக்காரர்களில் ஒருவனை அழைத்து: இதென்ன என்று விசாரித்தான்.
ଦାସାନାମ୍ ଏକମ୍ ଆହୂଯ ପପ୍ରଚ୍ଛ, କିଂ କାରଣମସ୍ୟ?
27 ௨௭ அதற்கு அவன்: உம்முடைய சகோதரன் வந்தார், அவர் மறுபடியும் சுகத்துடனே உம்முடைய தகப்பனிடத்தில் வந்து சேர்ந்தபடியினாலே அவருக்காகக் கொழுத்தக் கன்றை அடித்திருக்கிறார் என்றான்.
ତତଃ ସୋୱାଦୀତ୍, ତୱ ଭ୍ରାତାଗମତ୍, ତୱ ତାତଶ୍ଚ ତଂ ସୁଶରୀରଂ ପ୍ରାପ୍ୟ ପୁଷ୍ଟଂ ଗୋୱତ୍ସଂ ମାରିତୱାନ୍|
28 ௨௮ அப்பொழுது அவன் கோபமடைந்து உள்ளே போக விருப்பமில்லாதிருந்தான். தகப்பனோ வெளியே வந்து அவனை வருந்தி அழைத்தான்.
ତତଃ ସ ପ୍ରକୁପ୍ୟ ନିୱେଶନାନ୍ତଃ ପ୍ରୱେଷ୍ଟୁଂ ନ ସମ୍ମେନେ; ତତସ୍ତସ୍ୟ ପିତା ବହିରାଗତ୍ୟ ତଂ ସାଧଯାମାସ|
29 ௨௯ அவன் தகப்பனுக்கு மறுமொழியாக: இதோ, இத்தனை வருடகாலமாக நான் உமக்கு வேலைச்செய்து, எப்பொழுதுமே எல்லாவற்றிலும் உம்முடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிந்திருந்தும், என் நண்பர்களோடு நான் மகிழ்ச்சியாக இருக்கும்படி நீர் ஒருபோதும் எனக்கு ஒரு ஆட்டுக்குட்டியையாவது கொடுக்கவில்லை.
ତତଃ ସ ପିତରଂ ପ୍ରତ୍ୟୁୱାଚ, ପଶ୍ୟ ତୱ କାଞ୍ଚିଦପ୍ୟାଜ୍ଞାଂ ନ ୱିଲଂଘ୍ୟ ବହୂନ୍ ୱତ୍ସରାନ୍ ଅହଂ ତ୍ୱାଂ ସେୱେ ତଥାପି ମିତ୍ରୈଃ ସାର୍ଦ୍ଧମ୍ ଉତ୍ସୱଂ କର୍ତ୍ତୁଂ କଦାପି ଛାଗମେକମପି ମହ୍ୟଂ ନାଦଦାଃ;
30 ௩0 வேசிகளிடத்தில் உம்முடைய சொத்துக்களை அழித்துப்போட்ட உம்முடைய குமாரனாகிய இவன் வந்தவுடனே கொழுத்தக் கன்றை இவனுக்காக அடிப்பித்தீரே என்றான்.
କିନ୍ତୁ ତୱ ଯଃ ପୁତ୍ରୋ ୱେଶ୍ୟାଗମନାଦିଭିସ୍ତୱ ସମ୍ପତ୍ତିମ୍ ଅପୱ୍ୟଯିତୱାନ୍ ତସ୍ମିନ୍ନାଗତମାତ୍ରେ ତସ୍ୟୈୱ ନିମିତ୍ତଂ ପୁଷ୍ଟଂ ଗୋୱତ୍ସଂ ମାରିତୱାନ୍|
31 ௩௧ அதற்குத் தகப்பன்: மகனே, நீ எப்போதும் என்னோடு இருக்கிறாய், எனக்குள்ளதெல்லாம் உன்னுடையதாக இருக்கிறது.
ତଦା ତସ୍ୟ ପିତାୱୋଚତ୍, ହେ ପୁତ୍ର ତ୍ୱଂ ସର୍ୱ୍ୱଦା ମଯା ସହାସି ତସ୍ମାନ୍ ମମ ଯଦ୍ୟଦାସ୍ତେ ତତ୍ସର୍ୱ୍ୱଂ ତୱ|
32 ௩௨ உன் சகோதரனாகிய இவனோ மரித்தான், திரும்பவும் உயிர்த்தான்; காணாமற்போனான், திரும்பவும் காணப்பட்டான்; ஆனபடியினாலே, நாம் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கவேண்டுமே என்று சொன்னான் என்றார்.
କିନ୍ତୁ ତୱାଯଂ ଭ୍ରାତା ମୃତଃ ପୁନରଜୀୱୀଦ୍ ହାରିତଶ୍ଚ ଭୂତ୍ୱା ପ୍ରାପ୍ତୋଭୂତ୍, ଏତସ୍ମାତ୍ କାରଣାଦ୍ ଉତ୍ସୱାନନ୍ଦୌ କର୍ତ୍ତୁମ୍ ଉଚିତମସ୍ମାକମ୍|

< லூக்கா 15 >