< புலம்பல் 3 >

1 ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.
我はかれの震怒の笞によりて艱難に遭たる人なり
2 அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
かれは我をひきて黑暗をあゆませ光明にゆかしめたまはず
3 அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.
まことに屢々その手をむけて終日われを攻なやまし
4 என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
わが肉と肌膚をおとろへしめ わが骨を摧き
5 அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.
われにむかひて患苦と艱難を築きこれをもて我を圍み
6 ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார்.
われをして長久に死し者のごとく暗き處に住しめ
7 நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கை கடினமாக்கினார்.
我をかこみて出ること能はざらしめわが鏈索を重くしたまへり
8 நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார்.
我さけびて助をもとめしとき彼わが祈禱をふせぎ
9 வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
斫たる石をもてわが道を塞ぎわが途をまげたまへり
10 ௧0 அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
その我に對することは伏て伺がふ熊のごとく潜みかくるる獅子のごとし
11 ௧௧ என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார்.
われに路を離れしめ 我をひきさきて獨くるしましめ
12 ௧௨ தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
弓を張りてわれを矢先の的となし
13 ௧௩ தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார்.
矢筒の矢をもてわが腰を射ぬきたまへり
14 ௧௪ நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன்.
われはわがすべての民のあざけりとなり 終日うたひそしらる
15 ௧௫ கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார்.
かれ我をして苦き物に飽しめ茵蔯を飮しめ
16 ௧௬ அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார்.
小石をもてわが齒を摧き灰をもて我を蒙ひたまへり
17 ௧௭ என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
なんぢわが靈魂をして平和を遠くはなれしめたまへば我は福祉をわすれたり
18 ௧௮ என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.
是において我みづから言り わが氣力うせゆきぬ ヱホバより何を望むべきところ無しと
19 ௧௯ எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
ねがはくは我が艱難と苦楚茵蔯と膽汁とを心に記たまへ
20 ௨0 என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.
わがたましひは今なほ是らの事を想ひてわが衷に鬱ぐ
21 ௨௧ இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.
われこの事を心におもひ起せり この故に望をいだくなり
22 ௨௨ நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
われらの尚ほろびざるはヱホバの仁愛によりその憐憫の盡ざるに因る
23 ௨௩ அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
これは朝ごとに新なり なんぢの誠實はおほいなるかな
24 ௨௪ யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
わが靈魂は言ふ ヱホバはわが分なり このゆゑに我彼を待ち望まん
25 ௨௫ தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர்.
ヱホバはおのれを待ち望む者とおのれを尋ねもとむる人に恩惠をほどこしたまふ
26 ௨௬ யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
ヱホバの救拯をのぞみて靜にこれを待は善し
27 ௨௭ தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது.
人わかき時に軛を負は善し
28 ௨௮ அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக.
ヱホバこれを負せたまふなれば獨坐して默すべし
29 ௨௯ நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக.
口を塵につけよ あるひは望あらん
30 ௩0 தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.
おのれを撃つ者に頬をむけ 充足れるまでに恥辱をうけよ
31 ௩௧ ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
そは主は永久に棄ることを爲たまはざるべければなり
32 ௩௨ அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார்.
かれは患難を與へ給ふといへどもその慈悲おほいなればまた憐憫を加へたまふなり
33 ௩௩ அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.
心より世の人をなやましかつ苦しめ給ふにはあらざるなり
34 ௩௪ ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
世のもろもろの俘囚人を脚の下にふみにじり
35 ௩௫ உன்னதமான தேவனின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
至高者の面の前にて人の理を抂げ
36 ௩௬ மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
人の詞訟を屈むることは主のよろこび給はざるところなり
37 ௩௭ ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
主の命じたまふにあらずば誰か事を述んにその事即ち成んや
38 ௩௮ உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
禍も福もともに至高者の口より出るにあらずや
39 ௩௯ உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
活る人なんぞ怨言べけんや 人おのれの罪の罰せらるるをつぶやくべけんや
40 ௪0 நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்.
我等みづからの行をしらべかつ省みてヱホバに歸るべし
41 ௪௧ நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக.
我ら天にいます神にむかひて手とともに心をも擧べし
42 ௪௨ நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.
われらは罪ををかし我らは叛きたり なんぢこれを赦したまはざりき
43 ௪௩ தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
なんぢ震怒をもてみづから蔽ひ 我らを追攻め殺してあはれまず
44 ௪௪ ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
雲をもてみづから蔽ひ 祈禱をして通ぜざらしめ
45 ௪௫ மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
もろもろの民の中にわれらを塵埃となしたまへり
46 ௪௬ எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
敵は皆われらにむかひて口を張れり
47 ௪௭ பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது.
恐懼と陷阱また暴行と滅亡我らに來れり
48 ௪௮ மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
わが民の女の滅亡によりてわが眼には涙の河ながる
49 ௪௯ யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை,
わが目は斷ず涙をそそぎて止ず
50 ௫0 என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது.
天よりヱホバの臨み見て顧みたまふ時にまで至らん
51 ௫௧ என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது.
わが邑の一切の女等の故によりてわが眼はわが心をいたましむ
52 ௫௨ காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.
故なくして我に敵する者ども鳥を追ごとくにいたく我をおひ
53 ௫௩ படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள்.
わが生命を坑の中にほろぼし わが上に石を投かけ
54 ௫௪ தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன்.
また水わが頭の上に溢る 我みづから言り滅びうせぬと
55 ௫௫ மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.
ヱホバよ われ深き坑の底より汝の名を呼り
56 ௫௬ என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
なんぢ我が聲を聽たまへり わが哀歎と祈求に耳をおほひたまふなかれ
57 ௫௭ நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர்.
わが汝を龥たりし時なんぢは近よりたまひて恐るるなかれと宣へり
58 ௫௮ ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
主よなんぢはわが靈魂の訴を助け伸べ わが生命を贖ひ給へり
59 ௫௯ யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும்.
ヱホバよ なんぢは我がかうむりたる不義を見たまへり 願はくは我に正しき審判を與へたまへ
60 ௬0 அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
なんぢは彼らが我を怨み われを害せんとはかるを凡て見たまへり
61 ௬௧ யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,
ヱホバよなんぢは彼らが我を詈り 我を害せんとはかるを凡て聞たまへり
62 ௬௨ எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
かの立て我に逆らふ者等の言語およびその終日われを攻んとて運らす謀計もまた汝これを聞たまへり
63 ௬௩ அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
ねがはくは彼らの起居をかんがみたまへ 我はかれらに歌ひそしらる
64 ௬௪ யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர்.
ヱホバよ なんぢは彼らが手に爲すところに循がひて報をなし
65 ௬௫ அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
かれらをして心くらからしめたまはん なんぢの呪詛かれらに歸せよ
66 ௬௬ கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.
なんぢは震怒をもてかれらを追ひ ヱホバの天の下よりかれらをほろぼし絶たまはん

< புலம்பல் 3 >