< புலம்பல் 3 >

1 ஆண்டவருடைய கோபத்தின் பிரம்பினால் ஏற்பட்ட சிறுமையைக் கண்ட மனிதன் நான்.
אני הגבר ראה עני בשבט עברתו׃
2 அவர் என்னை வெளிச்சத்திலே அல்ல, இருளிலே அழைத்து நடத்திவந்தார்.
אותי נהג וילך חשך ולא אור׃
3 அவர் தமது கையை எனக்கு விரோதமாகவே தினமும் திருப்பினார்.
אך בי ישב יהפך ידו כל היום׃
4 என் சதையையும், என் தோலையும் கடினமாக்கினார்; என் எலும்புகளை நொறுக்கினார்.
בלה בשרי ועורי שבר עצמותי׃
5 அவர் எனக்கு விரோதமாக மதிலைக்கட்டி, கசப்பினாலும் வருத்தத்தினாலும் என்னைச் சூழ்ந்துகொண்டார்.
בנה עלי ויקף ראש ותלאה׃
6 ஆரம்பகாலத்தில் இறந்தவர்களைப்போல என்னை இருளான இடங்களில் கிடக்கச்செய்தார்.
במחשכים הושיבני כמתי עולם׃
7 நான் தப்பிப்போகாமலிருக்க என்னைச்சூழ வேலியடைத்தார்; என் விலங்கை கடினமாக்கினார்.
גדר בעדי ולא אצא הכביד נחשתי׃
8 நான் சத்தமிட்டுக் கூப்பிட்டாலும், என் ஜெபத்திற்கு வழியை அடைத்துப்போட்டார்.
גם כי אזעק ואשוע שתם תפלתי׃
9 வெட்டின கற்களின் சுவரால் என் வழிகளை அடைத்துப்போட்டார், என் பாதைகளைத் தாறுமாறாக்கினார்.
גדר דרכי בגזית נתיבתי עוה׃
10 ௧0 அவர் எனக்காகப் பதுங்கியிருக்கிற கரடியும், மறைவிடங்களில் தங்குகிற சிங்கமுமாயிருக்கிறார்.
דב ארב הוא לי אריה במסתרים׃
11 ௧௧ என்னுடைய வழிகளை அகற்றி, என்னைத் துண்டித்துப்போட்டார்; என்னைப் பயனற்றவனாக்கிவிட்டார்.
דרכי סורר ויפשחני שמני שמם׃
12 ௧௨ தமது வில்லை நாணேற்றி, என்னை அம்புக்கு இலக்காக வைத்தார்.
דרך קשתו ויציבני כמטרא לחץ׃
13 ௧௩ தம்முடைய அம்புகளை வைக்கும் பையின் அம்புகளை என் உள்ளத்தின் ஆழத்தில் படச்செய்தார்.
הביא בכליותי בני אשפתו׃
14 ௧௪ நான் என் மக்கள் அனைவருக்கும் பரியாசமும், தினமும் அவர்களுடைய கின்னரப் பாடலுமானேன்.
הייתי שחק לכל עמי נגינתם כל היום׃
15 ௧௫ கசப்பினால் என்னை நிரப்பி, எட்டியினால் என்னை வெறுப்படையச்செய்தார்.
השביעני במרורים הרוני לענה׃
16 ௧௬ அவர் உணவிலுள்ள சிறுகற்களால் என் பற்களை நொறுக்கி, என்னைச் சாம்பலில் புரளச்செய்தார்.
ויגרס בחצץ שני הכפישני באפר׃
17 ௧௭ என் ஆத்துமாவைச் சமாதானத்திற்குத் தூரமாக்கினார்; சுகத்தை மறந்தேன்.
ותזנח משלום נפשי נשיתי טובה׃
18 ௧௮ என் பெலனும், நான் யெகோவாவுக்குக் காத்திருந்த நம்பிக்கையும் அழிந்துபோனது என்றேன்.
ואמר אבד נצחי ותוחלתי מיהוה׃
19 ௧௯ எட்டியும் பிச்சுமாகிய என் சிறுமையையும் என் தவிப்பையும் நினைத்தருளும்.
זכר עניי ומרודי לענה וראש׃
20 ௨0 என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் உடைந்துபோகிறது.
זכור תזכור ותשיח עלי נפשי׃
21 ௨௧ இதை என் மனதிலே வைத்து நம்பிக்கை கொண்டிருப்பேன்.
זאת אשיב אל לבי על כן אוחיל׃
22 ௨௨ நாம் அழிந்துபோகாமலிருக்கிறது யெகோவாவுடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
חסדי יהוה כי לא תמנו כי לא כלו רחמיו׃
23 ௨௩ அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
חדשים לבקרים רבה אמונתך׃
24 ௨௪ யெகோவா என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கை கொண்டிருப்பேன்.
חלקי יהוה אמרה נפשי על כן אוחיל לו׃
25 ௨௫ தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும், தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் யெகோவா நல்லவர்.
טוב יהוה לקוו לנפש תדרשנו׃
26 ௨௬ யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது.
טוב ויחיל ודומם לתשועת יהוה׃
27 ௨௭ தன் இளவயதில் நுகத்தைச் சுமக்கிறது மனிதனுக்கு நல்லது.
טוב לגבר כי ישא על בנעוריו׃
28 ௨௮ அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன் தனிமையாயிருந்து மெளனமாயிருப்பானாக.
ישב בדד וידם כי נטל עליו׃
29 ௨௯ நம்பிக்கைக்கு இடமுண்டோ என்று தன் வாய் மண்ணில்படும்படி குப்புறவிழுவானாக.
יתן בעפר פיהו אולי יש תקוה׃
30 ௩0 தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி, அவமானத்தால் நிறைந்திருப்பானாக.
יתן למכהו לחי ישבע בחרפה׃
31 ௩௧ ஆண்டவர் என்றென்றைக்கும் கைவிடமாட்டார்.
כי לא יזנח לעולם אדני׃
32 ௩௨ அவர் வருத்தப்படுத்தினாலும் தமது மிகுந்த கிருபையின்படி மனமிரங்குவார்.
כי אם הוגה ורחם כרב חסדו׃
33 ௩௩ அவர் மனப்பூர்வமாக மனுமக்களைச் சிறுமையாக்கி வருத்தப்படுத்துகிறதில்லை.
כי לא ענה מלבו ויגה בני איש׃
34 ௩௪ ஒருவன் பூமியில் சிறைப்பட்டவர்கள் அனைவரையும் தன் கால்களின்கீழ் நசுக்குகிறதையும்,
לדכא תחת רגליו כל אסירי ארץ׃
35 ௩௫ உன்னதமான தேவனின் சமுகத்தில் மனிதர்களுடைய நியாயத்தைப் புரட்டுகிறதையும்,
להטות משפט גבר נגד פני עליון׃
36 ௩௬ மனிதனை அவனுடைய வழக்கிலே மாறுபாடாக்குகிறதையும், ஆண்டவர் காணாதிருப்பாரோ?
לעות אדם בריבו אדני לא ראה׃
37 ௩௭ ஆண்டவர் கட்டளையிடாமல் இருக்கும்போது, காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?
מי זה אמר ותהי אדני לא צוה׃
38 ௩௮ உன்னதமான தேவனுடைய வாயிலிருந்து தீமையும் நன்மையும் புறப்படுகிறதில்லையோ?
מפי עליון לא תצא הרעות והטוב׃
39 ௩௯ உயிருள்ள மனிதன் முறையிடுவானேன்? அவன் தன்னுடைய பாவத்திற்கு வரும் தண்டனையைக்குறித்து முறையிடுகிறதென்ன?
מה יתאונן אדם חי גבר על חטאו׃
40 ௪0 நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, யெகோவாவிடத்தில் திரும்பக்கடவோம்.
נחפשה דרכינו ונחקרה ונשובה עד יהוה׃
41 ௪௧ நாம் நம்முடைய கைகளோடுங்கூட நம்முடைய இருதயத்தையும் பரலோகத்திலிருக்கிற தேவனிடத்திற்கு ஏறெடுப்போமாக.
נשא לבבנו אל כפים אל אל בשמים׃
42 ௪௨ நாங்கள் துரோகம்செய்து, கலகம்செய்தோம்; ஆகையால் தேவரீர் மன்னிக்காமல் இருந்தீர்.
נחנו פשענו ומרינו אתה לא סלחת׃
43 ௪௩ தேவரீர் கோபத்தால் மூடிக்கொண்டு, எங்களைத் தப்பவிடாமல் பின்தொடர்ந்து கொன்றீர்.
סכתה באף ותרדפנו הרגת לא חמלת׃
44 ௪௪ ஜெபம் உள்ளே நுழையமுடியாதபடி உம்மை மேகத்தால் மூடிக்கொண்டீர்.
סכותה בענן לך מעבור תפלה׃
45 ௪௫ மக்களுக்குள்ளே எங்களைக் குப்பையும் அருவருப்புமாக்கினீர்.
סחי ומאוס תשימנו בקרב העמים׃
46 ௪௬ எங்கள் பகைவர்கள் எல்லோரும் எங்களுக்கு விரோதமாகத் தங்கள் வாயைத் திறந்தார்கள்.
פצו עלינו פיהם כל איבינו׃
47 ௪௭ பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது.
פחד ופחת היה לנו השאת והשבר׃
48 ௪௮ மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது.
פלגי מים תרד עיני על שבר בת עמי׃
49 ௪௯ யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை,
עיני נגרה ולא תדמה מאין הפגות׃
50 ௫0 என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது.
עד ישקיף וירא יהוה משמים׃
51 ௫௧ என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது.
עיני עוללה לנפשי מכל בנות עירי׃
52 ௫௨ காரணமே இல்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என்னை ஒரு பறவையைப்போல வேட்டையாடினார்கள்.
צוד צדוני כצפור איבי חנם׃
53 ௫௩ படுகுழியிலே என் உயிரை ஒடுக்கி, என்மேல் கல்லைவைத்தார்கள்.
צמתו בבור חיי וידו אבן בי׃
54 ௫௪ தண்ணீர் என் தலைக்குமேல் வந்தது; அழிந்தேன் என்றேன்.
צפו מים על ראשי אמרתי נגזרתי׃
55 ௫௫ மகா ஆழமான குழியிலிருந்து, யெகோவாவே, உம்முடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டேன்.
קראתי שמך יהוה מבור תחתיות׃
56 ௫௬ என் சத்தத்தைக் கேட்டீர்; என் பெருமூச்சுக்கும் என் கூப்பிடுதலுக்கும் உமது செவியை அடைத்துக்கொள்ளாதேயும்.
קולי שמעת אל תעלם אזנך לרוחתי לשועתי׃
57 ௫௭ நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டநாளிலே நீர் கேட்டு: பயப்படாதே என்றீர்.
קרבת ביום אקראך אמרת אל תירא׃
58 ௫௮ ஆண்டவரே, என் ஆத்துமாவின் வழக்கை நடத்தினீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
רבת אדני ריבי נפשי גאלת חיי׃
59 ௫௯ யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும்.
ראיתה יהוה עותתי שפטה משפטי׃
60 ௬0 அவர்களுடைய எல்லா விரோதத்தையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர்.
ראיתה כל נקמתם כל מחשבתם לי׃
61 ௬௧ யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும்,
שמעת חרפתם יהוה כל מחשבתם עלי׃
62 ௬௨ எனக்கு விரோதமாக எழும்பினவர்களின் வாய்ச்சொற்களையும், அவர்கள் நாள்முழுவதும் எனக்கு விரோதமாக யோசிக்கும் யோசனைகளையும் கேட்டீர்.
שפתי קמי והגיונם עלי כל היום׃
63 ௬௩ அவர்கள் உட்கார்ந்திருப்பதையும் அவர்கள் எழுந்திருப்பதையும் நோக்கிப் பாரும்; நான் அவர்களுடைய பாடலாயிருக்கிறேன்.
שבתם וקימתם הביטה אני מנגינתם׃
64 ௬௪ யெகோவாவே, அவர்களுடைய கைகள் செய்த செயல்களுக்குத்தக்கதாக அவர்களுக்குப் பலன் கொடுப்பீர்.
תשיב להם גמול יהוה כמעשה ידיהם׃
65 ௬௫ அவர்களுக்கு மனவேதனையைக் கொடுப்பீர், உம்முடைய சாபம் அவர்கள்மேல் இருக்கும்.
תתן להם מגנת לב תאלתך להם׃
66 ௬௬ கோபமாக அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவுடைய வானங்களின் கீழே அவர்கள் இல்லாதபடி அவர்களை அழித்துவிடுவீர்.
תרדף באף ותשמידם מתחת שמי יהוה׃

< புலம்பல் 3 >