< நியாயாதிபதிகள் 10 >

1 அபிமெலேக்குக்கு இறந்தப் பின்பு, தோதோவின் மகனான பூவாவின் மகன் தோலா என்னும் இசக்கார் கோத்திரத்தான் இஸ்ரவேலை காப்பாற்ற எழும்பினான்; அவன் எப்பிராயீம் மலைத்தேசத்து ஊராகிய சாமீரிலே குடியிருந்தான்.
וַיָּקָם֩ אַחֲרֵ֨י אֲבִימֶ֜לֶךְ לְהוֹשִׁ֣יעַ אֶת־יִשְׂרָאֵ֗ל תּוֹלָ֧ע בֶּן־פּוּאָ֛ה בֶּן־דּוֹד֖וֹ אִ֣ישׁ יִשָּׂשכָ֑ר וְהֽוּא־יֹשֵׁ֥ב בְּשָׁמִ֖יר בְּהַ֥ר אֶפְרָֽיִם׃
2 அவன் இஸ்ரவேலை 23 வருடங்கள் நியாயம் விசாரித்து, பின்பு இறந்து, சாமீரிலே அடக்கம் செய்யப்பட்டான்.
וַיִּשְׁפֹּט֙ אֶת־יִשְׂרָאֵ֔ל עֶשְׂרִ֥ים וְשָׁלֹ֖שׁ שָׁנָ֑ה וַיָּ֖מָת וַיִּקָּבֵ֥ר בְּשָׁמִֽיר׃ פ
3 தோலா இறந்தப் பின்பு, கீலேயாத்தியனான யாவீர் எழும்பி, இஸ்ரவேலை 22 வருடங்கள் நியாயம் விசாரித்தான்.
וַיָּ֣קָם אַחֲרָ֔יו יָאִ֖יר הַגִּלְעָדִ֑י וַיִּשְׁפֹּט֙ אֶת־יִשְׂרָאֵ֔ל עֶשְׂרִ֥ים וּשְׁתַּ֖יִם שָׁנָֽה׃
4 முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது மகன்கள் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்த நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்கள் என்கிற பெயர் இருக்கிறது.
וַֽיְהִי־ל֞וֹ שְׁלֹשִׁ֣ים בָּנִ֗ים רֹֽכְבִים֙ עַל־שְׁלֹשִׁ֣ים עֲיָרִ֔ים וּשְׁלֹשִׁ֥ים עֲיָרִ֖ים לָהֶ֑ם לָהֶ֞ם יִקְרְא֣וּ ׀ חַוֺּ֣ת יָאִ֗יר עַ֚ד הַיּ֣וֹם הַזֶּ֔ה אֲשֶׁ֖ר בְּאֶ֥רֶץ הַגִּלְעָֽד׃
5 யாவீர் இறந்து, காமோன் பட்டணத்தில் அடக்கம் செய்யப்பட்டான்.
וַיָּ֣מָת יָאִ֔יר וַיִּקָּבֵ֖ר בְּקָמֽוֹן׃ פ
6 இஸ்ரவேல் மக்கள், மறுபடியும் யெகோவாவின் பார்வைக்குத் தீமையானவைகளைச் செய்து, யெகோவாவை வணங்காமல் அவரை விட்டுப்போய், பாகால்களையும், அஸ்தரோத்தையும், சீரியாவின் தெய்வங்களையும், சீதோனின் தெய்வங்களையும், மோவாபின் தெய்வங்களையும், அம்மோன் மக்களின் தெய்வங்களையும், பெலிஸ்தர்களின் தெய்வங்களையும் தொழுதுகொண்டார்கள்.
וַיֹּסִ֣פוּ ׀ בְּנֵ֣י יִשְׂרָאֵ֗ל לַעֲשׂ֣וֹת הָרַע֮ בְּעֵינֵ֣י יְהוָה֒ וַיַּעַבְד֣וּ אֶת־הַבְּעָלִ֣ים וְאֶת־הָעַשְׁתָּר֡וֹת וְאֶת־אֱלֹהֵ֣י אֲרָם֩ וְאֶת־אֱלֹהֵ֨י צִיד֜וֹן וְאֵ֣ת ׀ אֱלֹהֵ֣י מוֹאָ֗ב וְאֵת֙ אֱלֹהֵ֣י בְנֵי־עַמּ֔וֹן וְאֵ֖ת אֱלֹהֵ֣י פְלִשְׁתִּ֑ים וַיַּעַזְב֥וּ אֶת־יְהוָ֖ה וְלֹ֥א עֲבָדֽוּהוּ׃
7 அப்பொழுது யெகோவா இஸ்ரவேலின்மேல் கோபமடைந்து, அவர்களைப் பெலிஸ்தர்கள் கையிலும், அம்மோனியர்களின் கையிலும் ஒப்புக்கொடுத்தார்.
וַיִּֽחַר־אַ֥ף יְהוָ֖ה בְּיִשְׂרָאֵ֑ל וַֽיִּמְכְּרֵם֙ בְּיַד־פְּלִשְׁתִּ֔ים וּבְיַ֖ד בְּנֵ֥י עַמּֽוֹן׃
8 அவர்கள் அந்த ஆண்டுமுதல் 18 வருடங்களாக யோர்தான் நதிக்கு அப்பாலே கீலேயாத்திலுள்ள எமோரியர்களின் தேசத்தில் இருக்கிற இஸ்ரவேல் மக்களையெல்லாம் நெருக்கி ஒடுக்கினார்கள்.
וַֽיִּרְעֲצ֤וּ וַיְרֹֽצְצוּ֙ אֶת־בְּנֵ֣י יִשְׂרָאֵ֔ל בַּשָּׁנָ֖ה הַהִ֑יא שְׁמֹנֶ֨ה עֶשְׂרֵ֜ה שָׁנָ֗ה אֶֽת־כָּל־בְּנֵ֤י יִשְׂרָאֵל֙ אֲשֶׁר֙ בְּעֵ֣בֶר הַיַּרְדֵּ֔ן בְּאֶ֥רֶץ הָאֱמֹרִ֖י אֲשֶׁ֥ר בַּגִּלְעָֽד׃
9 அம்மோனியர்கள் யூதாவின்மேலும், பென்யமீன்மேலும், எப்பிராயீம் குடும்பத்தினர்மேலும் யுத்தம்செய்ய யோர்தான் நதியைக் கடந்துவந்தார்கள்; இஸ்ரவேலர்கள் மிகவும் நெருக்கப்பட்டார்கள்.
וַיַּעַבְר֤וּ בְנֵֽי־עַמּוֹן֙ אֶת־הַיַּרְדֵּ֔ן לְהִלָּחֵ֛ם גַּם־בִּיהוּדָ֥ה וּבְבִנְיָמִ֖ין וּבְבֵ֣ית אֶפְרָ֑יִם וַתֵּ֥צֶר לְיִשְׂרָאֵ֖ל מְאֹֽד׃
10 ௧0 அப்பொழுது இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி முறையிட்டு: உமக்கு விரோதமாகப் பாவஞ்செய்தோம்; நாங்கள் எங்களுடைய தேவனைவிட்டு, பாகால்களைத் தொழுதுகொண்டோம் என்றார்கள்.
וַֽיִּזְעֲקוּ֙ בְּנֵ֣י יִשְׂרָאֵ֔ל אֶל־יְהוָ֖ה לֵאמֹ֑ר חָטָ֣אנוּ לָ֔ךְ וְכִ֤י עָזַ֙בְנוּ֙ אֶת־אֱלֹהֵ֔ינוּ וַֽנַּעֲבֹ֖ד אֶת־הַבְּעָלִֽים׃ פ
11 ௧௧ யெகோவா இஸ்ரவேல் மக்களை நோக்கி: எகிப்தியர்களும், எமோரியர்களும், அம்மோனியர்களும், பெலிஸ்தர்களும்,
וַ֥יֹּאמֶר יְהוָ֖ה אֶל־בְּנֵ֣י יִשְׂרָאֵ֑ל הֲלֹ֤א מִמִּצְרַ֙יִם֙ וּמִן־הָ֣אֱמֹרִ֔י וּמִן־בְּנֵ֥י עַמּ֖וֹן וּמִן־פְּלִשְׁתִּֽים ׃
12 ௧௨ சீதோனியர்களும், அமலேக்கியர்களும், மாகோனியர்களும், உங்களை ஒடுக்கும் நேரங்களில், நீங்கள் என்னை நோக்கி முறையிட்டபோது, நான் உங்களை அவர்களுடைய கைக்கு விலக்கி இரட்சிக்கவில்லையா?
וְצִידוֹנִ֤ים וַֽעֲמָלֵק֙ וּמָע֔וֹן לָחֲצ֖וּ אֶתְכֶ֑ם וַתִּצְעֲק֣וּ אֵלַ֔י וָאוֹשִׁ֥יעָה אֶתְכֶ֖ם מִיָּדָֽם׃
13 ௧௩ அப்படியிருந்தும் நீங்கள் என்னைவிட்டு, அந்நிய தெய்வங்களை ஆராதனை செய்தீர்கள்; ஆகையால் இனி உங்களை இரட்சிக்கமாட்டேன்.
וְאַתֶּם֙ עֲזַבְתֶּ֣ם אוֹתִ֔י וַתַּעַבְד֖וּ אֱלֹהִ֣ים אֲחֵרִ֑ים לָכֵ֥ן לֹֽא־אוֹסִ֖יף לְהוֹשִׁ֥יעַ אֶתְכֶֽם׃
14 ௧௪ நீங்கள் போய், உங்களுக்காகத் தெரிந்துகொண்ட தெய்வங்களை நோக்கி முறையிடுங்கள்; அவைகள் உங்களுடைய ஆபத்தின் காலத்தில் உங்களை இரட்சிக்கட்டும் என்றார்.
לְכ֗וּ וְזַֽעֲקוּ֙ אֶל־הָ֣אֱלֹהִ֔ים אֲשֶׁ֥ר בְּחַרְתֶּ֖ם בָּ֑ם הֵ֛מָּה יוֹשִׁ֥יעוּ לָכֶ֖ם בְּעֵ֥ת צָרַתְכֶֽם׃
15 ௧௫ இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: பாவஞ்செய்தோம், தேவரீர் உம்முடைய பார்வைக்கு நலமானதை எங்களுக்குச் செய்யும்; இன்றைக்குமட்டும் எங்களை இரட்சித்தருளும் என்று சொல்லி,
וַיֹּאמְר֨וּ בְנֵי־יִשְׂרָאֵ֤ל אֶל־יְהוָה֙ חָטָ֔אנוּ עֲשֵׂה־אַתָּ֣ה לָ֔נוּ כְּכָל־הַטּ֖וֹב בְּעֵינֶ֑יךָ אַ֛ךְ הַצִּילֵ֥נוּ נָ֖א הַיּ֥וֹם הַזֶּֽה׃
16 ௧௬ அந்நிய தெய்வங்களைத் தங்கள் நடுவிலிருந்து விலக்கிவிட்டு, யெகோவாவுக்கு ஆராதனை செய்தார்கள்; அப்பொழுது அவர் இஸ்ரவேலின் துயரத்தைப் பார்த்து மனதுருகினார்.
וַיָּסִ֜ירוּ אֶת־אֱלֹהֵ֤י הַנֵּכָר֙ מִקִּרְבָּ֔ם וַיַּעַבְד֖וּ אֶת־יְהוָ֑ה וַתִּקְצַ֥ר נַפְשׁ֖וֹ בַּעֲמַ֥ל יִשְׂרָאֵֽל׃ פ
17 ௧௭ அம்மோனியர்கள் கூட்டங்கூடி, கீலேயாத்திலே முகாமிட்டார்கள்; இஸ்ரவேல் மக்களும் கூடிக்கொண்டு, மிஸ்பாவிலே முகாமிட்டார்கள்.
וַיִּצָּֽעֲקוּ֙ בְּנֵ֣י עַמּ֔וֹן וַֽיַּחֲנ֖וּ בַּגִּלְעָ֑ד וַיֵּאָֽסְפוּ֙ בְּנֵ֣י יִשְׂרָאֵ֔ל וַֽיַּחֲנ֖וּ בַּמִּצְפָּֽה׃
18 ௧௮ அப்பொழுது கீலேயாத்தின் மக்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோனியர்கள்மேல் முதலில் யுத்தம்செய்யப்போகிற மனிதன் யார்? அவனே கீலேயாத்தின் குடியிருப்புகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பான் என்றார்கள்.
וַיֹּאמְר֨וּ הָעָ֜ם שָׂרֵ֤י גִלְעָד֙ אִ֣ישׁ אֶל־רֵעֵ֔הוּ מִ֣י הָאִ֔ישׁ אֲשֶׁ֣ר יָחֵ֔ל לְהִלָּחֵ֖ם בִּבְנֵ֣י עַמּ֑וֹן יִֽהְיֶ֣ה לְרֹ֔אשׁ לְכֹ֖ל יֹשְׁבֵ֥י גִלְעָֽד׃ פ

< நியாயாதிபதிகள் 10 >