< நியாயாதிபதிகள் 1 >

1 யோசுவா இறந்தபின்பு இஸ்ரவேல் மக்கள் யெகோவாவை நோக்கி: கானானியர்களை எதிர்த்து யுத்தம்செய்யும்படி, எங்களில் யார் முதலில் எழுந்து புறப்படவேண்டும் என்று கேட்டார்கள்.
Sau khi Giô-suê qua đời, người Ít-ra-ên cầu hỏi Chúa Hằng Hữu: “Xin chỉ dạy chúng con, ai sẽ đi đánh người Ca-na-an trước nhất?”
2 அதற்குக் யெகோவா: யூதா எழுந்து புறப்படட்டும்; இதோ, அந்த தேசத்தை அவனுடைய கையிலே ஒப்புக்கொடுத்தேன் என்றார்.
Chúa Hằng Hữu đáp: “Giu-đa, Ta đã giao đất Ca-na-an vào tay họ.”
3 அப்பொழுது யூதாவின் மனிதர்கள் தங்களுடைய சகோதரர்களாகிய சிமியோனின் மனிதர்களை நோக்கி: நாம் கானானியர்களோடு யுத்தம்செய்ய நீங்கள் என்னுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் எங்களோடு எழுந்துவாருங்கள்; உங்களுடைய சுதந்திரப் பங்குவீதத்தில் நாங்களும் உங்களோடு வருவோம் என்றார்கள்; அப்படியே சிமியோன் கோத்திரத்தார்கள் அவர்களோடு போனார்கள்.
Người Giu-đa nói với anh em mình từ đại tộc Si-mê-ôn: “Xin hãy giúp chúng tôi đánh người Ca-na-an trong phần đất chúng tôi, rồi chúng tôi sẽ giúp anh em đánh chiếm phần đất của anh em.” Người Si-mê-ôn liền theo người Giu-đa.
4 யூதா மனிதர்கள் எழுந்துபோனபோது, யெகோவா கானானியர்களையும், பெரிசியர்களையும் அவர்களுடைய கையிலே ஒப்புக்கொடுத்தார்; அவர்கள் பேசேக்கிலே 10,000 பேரை வெட்டினார்கள்.
Người Giu-đa xuất trận, Chúa Hằng Hữu cho họ chiến thắng người Ca-na-an và người Phê-rết, giết 10.000 người ở Bê-xéc.
5 பேசேக்கிலே அதோனிபேசேக்கைப் பார்த்து, அவனோடு யுத்தம்செய்து, கானானியர்களையும், பெரிசியர்களையும் வெட்டினார்கள்.
Cũng tại Bê-xéc, họ đánh A-đô-ni Bê-xéc, người Ca-na-an, và người Phê-rết.
6 அதோனிபேசேக் ஓடிப்போகும்போது, அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவனுடைய கை கால்களின் பெருவிரல்களை வெட்டிப்போட்டார்கள்.
Vua A-đô-ni Bê-xéc chạy trốn, bị quân Giu-đa đuổi theo bắt được, chặt đứt ngón tay cái và ngón chân cái của vua.
7 அப்பொழுது அதோனிபேசேக்: 70 ராஜாக்கள், கை கால்களின் பெருவிரல்கள் வெட்டப்பட்டவர்களாக என்னுடைய மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிகட்டினார் என்றான். அவனை எருசலேமிற்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் இறந்தான்.
A-đô-ni Bê-xéc nói: “Ta từng chặt ngón cái tay chân của bảy mươi vua, cho họ ăn thức ăn rơi rớt dưới bàn ta, ngày nay ta bị Đức Chúa Trời báo ứng.” Người ta giải vua lên Giê-ru-sa-lem, và vua chết tại đó.
8 யூதாவின் மக்கள் எருசலேமின்மேல் யுத்தம்செய்து, அதைப் பிடித்து, அங்குள்ளவர்களை கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, பட்டணத்தை அக்கினிக்கு இரையாக்கினார்கள்.
Người Giu-đa đánh chiếm Giê-ru-sa-lem, tàn sát dân rồi đốt thành.
9 பின்பு யூதாவின் மக்கள் மலைத்தேசத்திலும், தெற்கிலும், பள்ளத்தாக்குகளிலும் குடியிருக்கிற கானானியர்களோடு யுத்தம்செய்யப் புறப்பட்டுப்போனார்கள்.
Sau đó, họ quay xuống phía nam, đánh người Ca-na-an sống trên rừng núi và trong đồng bằng.
10 ௧0 அப்படியே யூதா கோத்திரத்தார்கள் எபிரோனிலே குடியிருக்கிற கானானியர்களுக்கு எதிராகப்போய் சேசாய், அகீமான், தல்மாய் என்பவர்களை வெட்டிப்போட்டார்கள். முன்நாட்களில் அந்த எபிரோனுக்கு கீரியாத் அர்பா என்று பெயர்.
Giu-đa lại đánh người Ca-na-an ở Hếp-rôn (tên cũ là Ki-ri-át A-ra-ba), hạ các thành Sê-sai, A-hi-man, và Thanh-mai.
11 ௧௧ அங்கேயிருந்து தெபீரில் குடியிருப்பவர்களுக்கு எதிராகப் போனார்கள்; முன்நாட்களில் தெபீருக்கு கீரியாத்செப்பேர் என்று பெயர்.
Từ đó, họ tiến đánh Đê-bia (tên cũ là Ki-ri-át Sê-phe).
12 ௧௨ அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை முறியடித்துப் பிடிக்கிறவனுக்கு என்னுடைய மகளாகிய அக்சாளைத் திருமணம் செய்துகொடுப்பேன் என்றான்.
Ca-lép nói: “Tôi sẽ gả con gái tôi là Ạc-sa cho người nào có công đánh chiếm Ki-ri-át Sê-phe.”
13 ௧௩ அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் மகன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; எனவே, தன்னுடைய மகளாகிய அக்சாளை அவனுக்குத் திருமணம் செய்துகொடுத்தான்.
Ốt-ni-ên, con của Kê-na, em Ca-lép, lập công đầu, chiếm thành, và được Ca-lép gả con gái là Ạc-sa cho người làm vợ.
14 ௧௪ அவள் புறப்படும்போது, என்னுடைய தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று ஒத்னியேலினிடத்தில் அனுமதி பெற்றுக்கொண்டு கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான்.
Khi Ạc-sa đã lấy Ốt-ni-ên, nàng có giục chồng xin cha mình một sở ruộng. Lúc sắp lên đường theo chồng, nàng xuống lừa. Thấy thế, Ca-lép hỏi: “Con muốn gì?”
15 ௧௫ அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.
Nàng thưa: “Xin cho con một ân huệ. Vì cha đã cho con vùng đất Nê-ghép khô cằn, xin cha cho con thêm mấy suối nước nữa.” Ca-lép cho nàng các suối nước thượng và hạ.
16 ௧௬ மோசேயின் மாமனாகிய கேனியனின் மக்களும் யூதாவின் மக்களோடு பேரீச்சை மரங்களின் பட்டணத்திலிருந்து ஆராத்திற்குத் தெற்கில் இருக்கிற யூதாவின் வனாந்திரத்திற்கு வந்து, மக்களோடு குடியேறினார்கள்.
Con cháu của ông gia Môi-se, là người Kê-nít, từ thành Cây Chà Là dời đến sống chung với người Giu-đa trong miền đồng hoang Giu-đa, phía nam A-rát.
17 ௧௭ யூதா தன்னுடைய சகோதரனாகிய சிமியோனோடு போனான்; அவர்கள் சேப்பாத்தில் குடியிருக்கிற கானானியர்களை முறியடித்து, அதை அழித்து, அந்தப் பட்டணத்திற்கு ஓர்மா என்று பெயரிட்டார்கள்.
Người Giu-đa đi cùng với người Si-mê-ôn, đánh và tận diệt người Ca-na-an ở Xê-phát. Vì thế thành này được gọi là Họt-ma.
18 ௧௮ யூதா, காசாவையும் அதின் எல்லையையும், அஸ்கலோனையும் அதின் எல்லையையும், எக்ரோனையும் அதின் எல்லையையும் பிடித்தான்.
Người Giu-đa còn chiếm Ga-xa, Ách-ca-lôn, Éc-rôn, và các thôn ấp phụ cận của thành ấy.
19 ௧௯ யெகோவா யூதாவோடு இருந்ததினால், மலைத்தேசத்தார்களைத் துரத்திவிட்டார்கள்; பள்ளத்தாக்கில் குடியிருப்பவர்களுக்கு இரும்பு ரதங்கள் இருந்தபடியினால், அவர்களைத் துரத்தமுடியாமல்போனது.
Chúa Hằng Hữu giúp người Giu-đa đánh chiếm toàn miền núi rừng. Tuy nhiên, họ không đuổi được dân ở đồng bằng vì dân này có xe sắt.
20 ௨0 மோசே சொன்னபடியே, எபிரோனைக் காலேபுக்குக் கொடுத்தார்கள்; அவன் அதிலிருந்த ஏனாக்கின் மூன்று மகன்களையும் துரத்திவிட்டான்.
Theo lệnh Môi-se đã truyền, Hếp-rôn được giao cho Ca-lép. Ông đánh đuổi ba con trai của A-nác đi.
21 ௨௧ பென்யமீனின் மகன்கள் எருசலேமிலே குடியிருந்த எபூசியர்களையும் துரத்திவிடவில்லை; எனவே, எபூசியர்கள் இந்த நாள்வரை பென்யமீன் மக்களோடு எருசலேமில் குடியிருக்கிறார்கள்.
Người Bên-gia-min không đuổi người Giê-bu ở Giê-ru-sa-lem; nên đến nay, dân này vẫn còn ở đó, sống chung với người Bên-gia-min.
22 ௨௨ யோசேப்பின் குடும்பத்தினரும் பெத்தேலுக்கு எதிராகப் போனார்கள்; யெகோவா அவர்களோடு இருந்தார்.
Nhà Giô-sép cũng tiến đánh Bê-tên và được Chúa Hằng Hữu phù hộ.
23 ௨௩ யோசேப்பின் குடும்பத்தினர் பெத்தேலை வேவுபார்க்க ஆட்களை அனுப்பினார்கள்; முன்னே அந்தப் பட்டணத்திற்கு லூஸ் என்று பெயர்.
Trước khi đánh Bê-tên (tên cũ là Lu-xơ), họ sai người do thám.
24 ௨௪ அந்த வேவுகாரர்கள் பட்டணத்திலிருந்து புறப்பட்டுவருகிற ஒரு மனிதனைக் கண்டு: பட்டணத்திற்குள் நுழையும் வழியை எங்களுக்குக் காண்பி, உனக்குத் தயைசெய்வோம் என்றார்கள்.
Các thám tử gặp một người ở trong thành đi ra, liền điều đình với người này: “Nếu anh chỉ cho chúng tôi lối vào thành, chúng tôi sẽ thương xót cho anh.”
25 ௨௫ அப்படியே பட்டணத்திற்குள் நுழையும் வழியை அவர்களுக்குக் காண்பித்தான்; அப்பொழுது அவர்கள் வந்து, பட்டணத்தில் உள்ளவர்களைக் கூர்மையான பட்டயத்தினால் வெட்டி, அந்த மனிதனையும் அவனுடைய குடும்பத்தையும் விட்டுவிட்டார்கள்.
Người này chỉ cho họ lối vào thành. Giô-sép tiêu diệt dân trong thành, nhưng tha cho cả nhà người kia sống.
26 ௨௬ அப்பொழுது அந்த மனிதன் ஏத்தியர்களின் தேசத்திற்குப் போய், ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு லூஸ் என்று பெயரிட்டான்; அதுதான் இந்த நாள்வரை அதினுடைய பெயர்.
Người ấy đem gia đình chạy qua đất của người Hê-tít, xây lên một thành để ở, đặt tên là Lu-xơ, và cho đến nay, tên thành vẫn không đổi.
27 ௨௭ மனாசே கோத்திரத்தார்கள் பெத்செயான் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தானாக் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், தோரில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், இப்லேயாம் பட்டணத்தார்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும், மெகிதோவில் குடியிருப்பவர்களையும் அதற்கு அடுத்த ஊர்களின் மனிதர்களையும் துரத்திவிடவில்லை; கானானியர்கள் அந்த தேசத்தில்தான் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்.
Đại tộc Ma-na-se không đuổi người trong các thành Bết-sê-an, Tha-a-nác, Đô-rơ, Íp-lê-am, Mê-ghi-đô, và trong các thôn ấp phụ cận của các thành ấy đi, vì người Ca-na-an trong những nơi này quyết ở lại.
28 ௨௮ இஸ்ரவேலர்கள் பலத்தபோது, கானானியர்களை முழுவதும் துரத்திவிடாமல் அவர்களை கட்டாயப்படுத்தி கடினமாக வேலை செய்யவைத்தார்கள்.
Về sau, khi người Ít-ra-ên hùng mạnh hơn, liền bắt người Ca-na-an làm nô dịch, chứ không đuổi họ đi.
29 ௨௯ எப்பிராயீம் கோத்திரத்தார்கள், கேசேரிலே குடியிருந்த கானானியர்களையும் துரத்திவிடவில்லை; ஆகவே, கானானியர்கள் அவர்களோடு குடியிருந்தார்கள்.
Người Ép-ra-im cũng không đuổi người Ca-na-an ở Ghê-xe đi, nên họ ở lại đó, sống chung với người Ép-ra-im.
30 ௩0 செபுலோன் கோத்திரத்தார்கள், கித்ரோனில் குடியிருக்கிறவர்களையும், நாகலோலில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை. ஆகவே, கானானியர்கள், அவர்களோடு குடியிருந்து, கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
Đại tộc Sa-bu-luân không đuổi dân thành Kít-rôn và Na-ha-lô đi, nên người Ca-na-an ở lại làm việc nô dịch.
31 ௩௧ ஆசேர் கோத்திரத்தார்கள், அக்கோவில் குடியிருக்கிறவர்களையும், சீதோனில் குடியிருக்கிறவர்களையும், அக்லாப், அக்சீப், எல்பா, ஆப்பீக், ரேகோப் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடவில்லை.
Đại tộc A-se không đuổi dân thành A-cô, Si-đôn, Ách-láp, Ách-xíp, Hên-ba, A-phéc, và Rê-hốp đi;
32 ௩௨ ஆசேரியர்கள், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; அவர்களை அவர்கள் துரத்திவிடவில்லை.
vậy, người A-se sống chung với người Ca-na-an, thổ dân của các thành ấy.
33 ௩௩ நப்தலி கோத்திரத்தார்கள், பெத்ஷிமேசில் குடியிருக்கிறவர்களையும், பெத்தானாத்தில் குடியிருக்கிறவர்களையும் துரத்திவிடாமல், தேசத்தில் குடியிருக்கிறவர்களாகிய கானானியர்களோடு குடியிருந்தார்கள்; பெத்ஷிமேஸ், பெத்தானாத் பட்டணங்களில் குடியிருக்கிறவர்களும் அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
Người Nép-ta-li không đuổi dân thành Bết-sê-mết và Bết-a-nát đi, nhưng sống chung với dân Ca-na-an là dân bản địa. Tuy nhiên, dân Bết Sê-mết và dân Bết A-nát phải phục dịch bộ tộc Nép-ta-li.
34 ௩௪ எமோரியர்கள் தாண் கோத்திரத்தார்களைப் பள்ளத்தாக்கில் இறங்கவிடாமல், மலைத்தேசத்திற்குப் போகும்படிக் கட்டாயப்படுத்தினார்கள்.
Người Đan không chinh phục được miền đồng bằng, phải dừng lại ở miền núi rừng, vì người A-mô-rít kháng cự.
35 ௩௫ எமோரியர்கள் ஏரேஸ் மலைகளிலும், ஆயலோனிலும், சால்பீமிலும் குடியிருக்கவேண்டும் என்றிருந்தார்கள்; ஆனாலும் யோசேப்பின் குடும்பத்தார்களின் பலம் பெருகினபடியால், அவர்களுக்கு கடினமாக வேலை செய்வதற்குக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.
Người A-mô-rít cố thủ các thành Ha-hê-rết, A-gia-lôn, và Sa-an-bim, nhưng họ bị nhà Giô-sép chế ngự, bắt làm nô lệ.
36 ௩௬ எமோரியர்களின் எல்லை அக்கராபீமுக்குப் போகிற மேடு துவங்கி அதற்கு அப்புறமும் போனது.
Biên giới đất A-mô-rít chạy từ dốc Ạc-ráp-bim, từ Sê-la trở lên.

< நியாயாதிபதிகள் 1 >