< யோவான் 3 >

1 யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
นิกทิมนามา ยิหูทียานามฺ อธิปติ: ผิรูศี กฺษณทายำ
2 அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
ยีเศารภฺยรฺณมฺ อาวฺรชฺย วฺยาหารฺษีตฺ, เห คุโร ภวานฺ อีศฺวราทฺ อาคตฺ เอก อุปเทษฺฏา, เอตทฺ อสฺมาภิรฺชฺญายเต; ยโต ภวตา ยานฺยาศฺจรฺยฺยกรฺมฺมาณิ กฺริยนฺเต ปรเมศฺวรสฺย สาหายฺยํ วินา เกนาปิ ตตฺตตฺกรฺมฺมาณิ กรฺตฺตุํ น ศกฺยนฺเตฯ
3 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
ตทา ยีศุรุตฺตรํ ทตฺตวานฺ ตวาหํ ยถารฺถตรํ วฺยาหรามิ ปุนรฺชนฺมนิ น สติ โกปิ มานว อีศฺวรสฺย ราชฺยํ ทฺรษฺฏุํ น ศกฺโนติฯ
4 அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.
ตโต นิกทีม: ปฺรตฺยโวจตฺ มนุโช วฺฤทฺโธ ภูตฺวา กถํ ชนิษฺยเต? ส กึ ปุน รฺมาตฺฤรฺชฐรํ ปฺรวิศฺย ชนิตุํ ศกฺโนติ?
5 இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
ยีศุรวาทีทฺ ยถารฺถตรมฺ อหํ กถยามิ มนุเช โตยาตฺมภฺยำ ปุน รฺน ชาเต ส อีศฺวรสฺย ราชฺยํ ปฺรเวษฺฏุํ น ศกฺโนติฯ
6 சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும்.
มำสาทฺ ยตฺ ชายเต ตนฺ มำสเมว ตถาตฺมโน โย ชายเต ส อาตฺไมวฯ
7 நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;
ยุษฺมาภิ: ปุน รฺชนิตวฺยํ มไมตสฺยำ กถายามฺ อาศฺจรฺยํ มา มํสฺถา: ฯ
8 காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
สทาคติรฺยำ ทิศมิจฺฉติ ตสฺยาเมว ทิศิ วาติ, ตฺวํ ตสฺย สฺวนํ ศุโณษิ กินฺตุ ส กุต อายาติ กุตฺร ยาติ วา กิมปิ น ชานาสิ ตทฺวาทฺ อาตฺมน: สกาศาตฺ สรฺเวฺวษำ มนุชานำ ชนฺม ภวติฯ
9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
ตทา นิกทีม: ปฺฤษฺฏวานฺ เอตตฺ กถํ ภวิตุํ ศกฺโนติ?
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?
ยีศุ: ปฺรตฺยกฺตวานฺ ตฺวมิสฺราเยโล คุรุรฺภูตฺวาปิ กิเมตำ กถำ น เวตฺสิ?
11 ௧௧ உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை.
ตุภฺยํ ยถารฺถํ กถยามิ, วยํ ยทฺ วิทฺมสฺตทฺ วจฺม: ยํจฺจ ปศฺยามสฺตไสฺยว สากฺษฺยํ ททฺม: กินฺตุ ยุษฺมาภิรสฺมากํ สากฺษิตฺวํ น คฺฤหฺยเตฯ
12 ௧௨ பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
เอตสฺย สํสารสฺย กถายำ กถิตายำ ยทิ ยูยํ น วิศฺวสิถ ตรฺหิ สฺวรฺคียายำ กถายำ กถํ วิศฺวสิษฺยถ?
13 ௧௩ பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
ย: สฺวรฺเค'สฺติ ยํ จ สฺวรฺคาทฺ อวาโรหตฺ ตํ มานวตนยํ วินา โกปิ สฺวรฺคํ นาโรหตฺฯ
14 ௧௪ பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும்,
อปรญฺจ มูสา ยถา ปฺรานฺตเร สรฺปํ โปฺรตฺถาปิตวานฺ มนุษฺยปุโตฺร'ปิ ตไถโวตฺถาปิตวฺย: ;
15 ௧௫ தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
ตสฺมาทฺ ย: กศฺจิตฺ ตสฺมินฺ วิศฺวสิษฺยติ โส'วินาศฺย: สนฺ อนนฺตายุ: ปฺราปฺสฺยติฯ (aiōnios g166)
16 ௧௬ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
อีศฺวร อิตฺถํ ชคททยต ยตฺ สฺวมทฺวิตียํ ตนยํ ปฺราททาตฺ ตโต ย: กศฺจิตฺ ตสฺมินฺ วิศฺวสิษฺยติ โส'วินาศฺย: สนฺ อนนฺตายุ: ปฺราปฺสฺยติฯ (aiōnios g166)
17 ௧௭ உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
อีศฺวโร ชคโต โลกานฺ ทณฺฑยิตุํ สฺวปุตฺรํ น เปฺรษฺย ตานฺ ปริตฺราตุํ เปฺรษิตวานฺฯ
18 ௧௮ அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.
อเตอว ย: กศฺจิตฺ ตสฺมินฺ วิศฺวสิติ ส ทณฺฑาโรฺห น ภวติ กินฺตุ ย: กศฺจิตฺ ตสฺมินฺ น วิศฺวสิติ ส อิทานีเมว ทณฺฑาโรฺห ภวติ, ยต: ส อีศฺวรสฺยาทฺวิตียปุตฺรสฺย นามนิ ปฺรตฺยยํ น กโรติฯ
19 ௧௯ ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.
ชคโต มเธฺย โชฺยติ: ปฺรากาศต กินฺตุ มนุษฺยาณำ กรฺมฺมณำ ทฺฤษฺฏตฺวาตฺ เต โชฺยติโษปิ ติมิเร ปฺรียนฺเต เอตเทว ทณฺฑสฺย การณำ ภวติฯ
20 ௨0 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
ย: กุกรฺมฺม กโรติ ตสฺยาจารสฺย ทฺฤษฺฏตฺวาตฺ ส โชฺยติรฺฤาตียิตฺวา ตนฺนิกฏํ นายาติ;
21 ௨௧ சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
กินฺตุ ย: สตฺกรฺมฺม กโรติ ตสฺย สรฺวฺวาณิ กรฺมฺมาณีศฺวเรณ กฺฤตานีติ สถา ปฺรกาศเต ตทภิปฺราเยณ ส โชฺยติษ: สนฺนิธิมฺ อายาติฯ
22 ௨௨ இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
ตต: ปรมฺ ยีศุ: ศิไษฺย: สารฺทฺธํ ยิหูทียเทศํ คตฺวา ตตฺร สฺถิตฺวา มชฺชยิตุมฺ อารภตฯ
23 ௨௩ சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
ตทา ศาลมฺ นครสฺย สมีปสฺถายินิ ไอนนฺ คฺราเม พหุตรโตยสฺถิเตสฺตตฺร โยหนฺ อมชฺชยตฺ ตถา จ โลกา อาคตฺย เตน มชฺชิตา อภวนฺฯ
24 ௨௪ அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
ตทา โยหนฺ การายำ น พทฺธ: ฯ
25 ௨௫ அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது.
อปรญฺจ ศาจกรฺมฺมณิ โยหาน: ศิไษฺย: สห ยิหูทียโลกานำ วิวาเท ชาเต, เต โยหน: สํนฺนิธึ คตฺวากถยนฺ,
26 ௨௬ அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
เห คุโร ยรฺทฺทนนทฺยา: ปาเร ภวตา สารฺทฺธํ ย อาสีตฺ ยสฺมึศฺจ ภวานฺ สากฺษฺยํ ปฺรททาตฺ ปศฺยตุ โสปิ มชฺชยติ สรฺเวฺว ตสฺย สมีปํ ยานฺติ จฯ
27 ௨௭ யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.
ตทา โยหนฺ ปฺรตฺยโวจทฺ อีศฺวเรณ น ทตฺเต โกปิ มนุช: กิมปิ ปฺราปฺตุํ น ศกฺโนติฯ
28 ௨௮ நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
อหํ อภิษิกฺโต น ภวามิ กินฺตุ ตทเคฺร เปฺรษิโตสฺมิ ยามิมำ กถำ กถิตวานาหํ ตตฺร ยูยํ สรฺเวฺว สากฺษิณ: สฺถฯ
29 ௨௯ மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது.
โย ชน: กนฺยำ ลภเต ส เอว วร: กินฺตุ วรสฺย สนฺนิเธา ทณฺฑายมานํ ตสฺย ยนฺมิตฺรํ เตน วรสฺย ศพฺเท ศฺรุเต'ตีวาหฺลาทฺยเต มมาปิ ตทฺวทฺ อานนฺทสิทฺธิรฺชาตาฯ
30 ௩0 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
เตน กฺรมโศ วรฺทฺธิตวฺยํ กินฺตุ มยา หฺสิตวฺยํฯ
31 ௩௧ உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்.
ย อูรฺธฺวาทาคจฺฉตฺ ส สรฺเวฺวษำ มุโขฺย ยศฺจ สํสาราทฺ อุทปทฺยต ส สำสาริก: สํสารียำ กถาญฺจ กถยติ ยสฺตุ สฺวรฺคาทาคจฺฉตฺ ส สรฺเวฺวษำ มุขฺย: ฯ
32 ௩௨ தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை.
ส ยทปศฺยทศฺฤโณจฺจ ตสฺมินฺเนว สากฺษฺยํ ททาติ ตถาปิ ปฺรายศ: กศฺจิตฺ ตสฺย สากฺษฺยํ น คฺฤหฺลาติ;
33 ௩௩ அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான்.
กินฺตุ โย คฺฤหฺลาติ ส อีศฺวรสฺย สตฺยวาทิตฺวํ มุทฺรางฺคิตํ กโรติฯ
34 ௩௪ தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
อีศฺวเรณ ย: เปฺรริต: เสอว อีศฺวรียกถำ กถยติ ยต อีศฺวร อาตฺมานํ ตไสฺม อปริมิตมฺ อททาตฺฯ
35 ௩௫ பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
ปิตา ปุเตฺร เสฺนหํ กฺฤตฺวา ตสฺย หเสฺต สรฺวฺวาณิ สมรฺปิตวานฺฯ
36 ௩௬ குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
ย: กศฺจิตฺ ปุเตฺร วิศฺวสิติ ส เอวานนฺตมฺ ปรมายุ: ปฺราปฺโนติ กินฺตุ ย: กศฺจิตฺ ปุเตฺร น วิศฺวสิติ ส ปรมายุโษ ทรฺศนํ น ปฺราปฺโนติ กินฺตฺวีศฺวรสฺย โกปภาชนํ ภูตฺวา ติษฺฐติฯ (aiōnios g166)

< யோவான் 3 >