< யோவான் 3 >

1 யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
Na rĩrĩ, kwarĩ na mũndũ wa Afarisai wetagwo Nikodemo, warĩ wa kĩama kĩrĩa gĩathanaga kĩa Ayahudi.
2 அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
Nĩokire kũrĩ Jesũ ũtukũ, akĩmwĩra atĩrĩ, “Rabii, nĩtũũĩ we ũrĩ mũrutani uumĩte kũrĩ Ngai. Nĩgũkorwo gũtirĩ mũndũ ũngĩhota kũringa ciama iria ũringaga Ngai atarĩ hamwe nake.”
3 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Nake Jesũ akĩmwĩra atĩrĩ, “Ngũkwĩra atĩrĩ na ma, gũtirĩ mũndũ ũngĩona ũthamaki wa Ngai atangĩciarwo rĩngĩ.”
4 அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.
Nake Nikodemo akĩmũũria atĩrĩ, “Mũndũ angĩciarwo atĩa arĩ mũkũrũ? Ti-itherũ ndangĩhota gũtoonya nda ya nyina hĩndĩ ya keerĩ nĩguo aciarwo!”
5 இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
Jesũ akĩmũcookeria atĩrĩ, “Ngũkwĩra atĩrĩ na ma, gũtirĩ mũndũ ũngĩtoonya ũthamaki-inĩ wa Ngai atangĩciarwo na maaĩ na Roho.
6 சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும்.
Mwĩrĩ ũciaraga mwĩrĩ, no Roho aciaraga roho.
7 நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;
Ndũkagegio nĩ ũguo ndoiga atĩ, ‘No nginya ũciarwo rĩngĩ.’
8 காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
Rũhuho rũhurutanaga na kũrĩa rũngĩenda. Ũiguaga rũkĩhurutana, no ndũmenyaga kũrĩa rumĩte kana kũrĩa rũrorete. Ũguo noguo gũtariĩ harĩ mũndũ ũrĩa wothe ũciarĩtwo nĩ Roho.”
9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
Nake Nikodemo akĩmũũria atĩrĩ, “Ũndũ ũcio ũngĩhoteka atĩa?”
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?
Nake Jesũ akĩmũũria atĩrĩ, “Wee ũrĩ mũrutani wa Isiraeli na ndũrataũkĩrwo nĩ maũndũ maya?
11 ௧௧ உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை.
Ngũkwĩra atĩrĩ na ma, twaragia ũrĩa tũũĩ, na tũkoimbũra ũrĩa tuonete, no inyuĩ, mũtiĩtĩkagĩra ũira witũ.
12 ௧௨ பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
Ndakwĩra maũndũ ma gũkũ thĩ, waga gwĩtĩkia; ũngĩtĩkia atĩa ingĩkwĩra maũndũ ma na igũrũ?
13 ௧௩ பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
Gũtirĩ mũndũ ũrĩ wathiĩ igũrũ tiga ũrĩa woimire igũrũ, na nĩwe Mũrũ wa Mũndũ.”
14 ௧௪ பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும்,
Na o ta ũrĩa Musa aambararirie nyoka ya gĩcango werũ-inĩ, ũguo no taguo Mũrũ wa Mũndũ akaambarario,
15 ௧௫ தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
nĩguo ũrĩa wothe ũmwĩhokete agĩe na muoyo wa tene na tene. (aiōnios g166)
16 ௧௬ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
“Nĩgũkorwo Ngai nĩendire kĩrĩndĩ, akĩruta Mũrũ wake wa mũmwe, nĩgeetha mũndũ o wothe ũmwĩtĩkĩtie ndakoore, no agĩe na muoyo wa tene na tene. (aiōnios g166)
17 ௧௭ உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
Nĩgũkorwo Ngai ndaatũmire Mũrũwe gũkũ thĩ aciirithie kĩrĩndĩ, no nĩguo kĩrĩndĩ kĩhonoke nĩ ũndũ wake.
18 ௧௮ அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.
Ũrĩa wothe ũmwĩtĩkĩtie ti wa gũciirithio, no ũrĩa wothe ũtamwĩtĩkĩtie ũcio nĩarĩkĩtie gũtuĩrwo ciira, nĩgũkorwo ndehokete rĩĩtwa rĩa Mũrũ wa Ngai wa mũmwe.
19 ௧௯ ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.
Rĩĩrĩ nĩrĩo ituĩro: Ũtheri nĩwokire gũkũ thĩ, no andũ makĩenda nduma gũkĩra ũtheri, nĩ ũndũ ciĩko ciao ciarĩ njũru.
20 ௨0 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
Mũndũ o wothe wĩkaga ũũru nĩathũire ũtheri, na ndangiumĩra ũtheri-inĩ nĩ gwĩtigĩra ciĩko ciake itikoimbũke.
21 ௨௧ சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
No mũndũ ũrĩa wothe wĩkaga maũndũ ma ma nĩoimagĩra ũtheri-inĩ, nĩguo kuonekane kũna atĩ ũguo ekĩte nĩ Ngai ũmũhotithĩtie.”
22 ௨௨ இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
Thuutha wa ũguo, Jesũ na arutwo ake nĩmoimagarire magĩthiĩ bũrũri wa Judea, kũrĩa aikarangire nao, na akabatithanagia.
23 ௨௩ சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
O nake Johana nĩabatithanagĩria Ainoni gũkuhĩ na Salimu, nĩgũkorwo kũu nĩ kwarĩ maaĩ maingĩ, nao andũ nĩmookaga kuo kaingĩ kaingĩ mabatithio.
24 ௨௪ அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
(Hĩndĩ ĩyo Johana ndaakoretwo aikĩtio njeera.)
25 ௨௫ அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது.
Nĩ kwagĩire na ngarari gatagatĩ-inĩ ka arutwo amwe a Johana na Mũyahudi ũmwe ũhoro-inĩ wa mĩtugo yao ya gwĩtheria.
26 ௨௬ அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
Magĩũka kũrĩ Johana makĩmwĩra atĩrĩ, “Rabii, mũndũ ũrĩa mũraarĩ nake mũrĩmo ũrĩa ũngĩ wa Jorodani, ũrĩa wee warutire ũira ũmũkoniĩ-rĩ, nĩarabatithania, nao andũ othe nĩmarathiĩ kũrĩ we.”
27 ௨௭ யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.
Ũhoro-inĩ ũcio Johana agĩcookia atĩrĩ, “Mũndũ ndarĩ ũndũ angĩamũkĩra o tiga ũrĩa aheetwo kuuma igũrũ.
28 ௨௮ நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
Inyuĩ ene no mũheane ũira muuge atĩ nĩndoigire atĩrĩ, ‘Niĩ ti niĩ Kristũ, no ndũmĩtwo njũke mbere yake.’
29 ௨௯ மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது.
Mũhiki nĩ wa mũhikania. No rĩrĩ, mũrata wa mũhikania ũrĩa ũmũrũgamĩrĩire nĩamũthikagĩrĩria, na akaiyũrwo nĩ gĩkeno rĩrĩa aigua mũgambo wa mũhikania. Gĩkeno ta kĩu nĩkĩo ndĩ na kĩo, na rĩu nĩgĩkinyanĩru.
30 ௩0 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
We no nginya akĩrĩrĩrie kũneneha, na niĩ ngĩrĩrĩrie kũnyiiha.
31 ௩௧ உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்.
“Ũrĩa uumĩte igũrũ nĩ mũnene kũrĩ andũ othe; nake ũrĩa uumĩte thĩ nĩ wa gũkũ thĩ, na maũndũ marĩa aragia no ma gũkũ thĩ. Ũrĩa uumĩte igũrũ arĩ igũrũ rĩa andũ arĩa angĩ othe.
32 ௩௨ தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை.
We oimbũraga maũndũ marĩa onete na akaigua no gũtirĩ mũndũ o na ũmwe wĩtĩkagĩra ũira wake.
33 ௩௩ அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான்.
Mũndũ ũrĩa wĩtĩkĩrĩte ũira ũcio nĩahũũrĩte mũhũũri atĩ Ngai nĩ wa ma.
34 ௩௪ தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
Nĩgũkorwo ũrĩa Ngai atũmĩte aragia ciugo cia Ngai nĩ ũndũ Ngai aheanaga Roho hatarĩ gĩthimi.
35 ௩௫ பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
Ithe nĩendete Mũriũ na nĩ aigĩte indo ciothe moko-inĩ make.
36 ௩௬ குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
Ũrĩa wothe wĩtĩkĩtie Mũriũ, arĩ na muoyo wa tene na tene, no ũrĩa wothe ũregete Mũriũ ndakona muoyo, nĩgũkorwo egũtũũra arakarĩirwo nĩ Ngai.” (aiōnios g166)

< யோவான் 3 >