< யோவான் 3 >

1 யூதர்களுக்குள்ளே அதிகாரியான நிக்கொதேமு என்னப்பட்ட பரிசேயன் ஒருவன் இருந்தான்.
फरीसियां चे नीकुदेमुस नाऐ दा इक माणु था, जड़ा यहूदियां दा धार्मिक अगुवा था, सै इक फरीसी था।
2 அவன் இரவு நேரத்தில் இயேசுவினிடம் வந்து: ரபீ, நீர் தேவனிடத்தில் இருந்து வந்த போதகர் என்று அறிந்திருக்கிறோம், ஏனென்றால், ஒருவனும் தன்னுடனே தேவன் இல்லாவிட்டால் நீர் செய்கிற இப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்யமாட்டான் என்றான்.
उनी राती यीशुऐ बाल आई करी उसयो बोलया, “गुरू जी, असां जाणदे न, की परमेश्वरे तुहांजो सांझो सिखाणे तांई भेजया है, क्योंकि कोई भी इना चमत्कार जो जड़े तू दसदा है, अगर परमेश्वर दा साथ ना हो तां नी दसी सकदा है।”
3 இயேசு அவனுக்கு மறுமொழியாக: ஒருவன் மறுபடியும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைப் பார்க்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
यीशुऐ उसयो जबाब दिता, “मैं तिजो ने सच्च-सच्च बोलदा है, अगर कोई नोऐ सिरे ला नी जम्मे तां सै परमेश्वरे दा राज्य नी दिखी सकदा है।”
4 அதற்கு நிக்கொதேமு: ஒருவன் வயதானபின்பு எப்படிப் பிறப்பான்? அவன் தன் தாயின் கர்ப்பத்தில் இரண்டாம்முறை நுழைந்து பிறக்கக்கூடுமோ என்றான்.
नीकुदेमुसे उसला बोलया, “माणु जालू बुड्डा होई जांदा है तां सै कियां जन्म लेई सकदा है? क्या सै अपणिया माता दे पेटे च दुज्जी बरी जाई करी जन्म लेई सकदा है?”
5 இயேசு மறுமொழியாக: ஒருவன் தண்ணீரினாலும் ஆவியினாலும் பிறக்காவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன்.
यीशुऐ जबाब दिता, मैं तिजो ने सच्च-सच्च बोलदा है, जालू दीकर कोई माणु पांणिऐ कने पबित्र आत्मा ने नी पैदा होऐ तालू दीकर सै परमेश्वरे दे राज्य च प्रवेश नी करी सकदा है।
6 சரீரத்தினால் பிறப்பது சரீரமாக இருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாக இருக்கும்.
माणु अपणे बचयां जो जन्म दिन्दे न। फिरी भी सिर्फ परमेश्वरे दी आत्मा ही तुसां जो परमेश्वरे दी ओलाद दे रुपे च बदली सकदा है।
7 நீங்கள் மறுபடியும் பிறக்க வேண்டும் என்று நான் உனக்குச் சொன்னதைக்குறித்து ஆச்சரியப்படவேண்டாம்;
हेरान मत हो, की मैं तिजो ने बोलया, तिजो दोबारा ला पैदा होणा जरूरी है।
8 காற்றானது தனக்கு விருப்பமான இடத்திலே வீசுகிறது, அதின் சத்தத்தைக் கேட்கிறாய், ஆனாலும் அது இந்த இடத்திலிருந்து வருகிறது என்றும், இந்த இடத்திற்குப் போகிறது என்றும் உனக்குத் தெரியாது; ஆவியினால் பிறந்தவன் எவனோ அவனும் அப்படியே இருக்கிறான் என்றார்.
हवा जिस पासे चांहदी है उस पासे चलदी है, कने तू उदी अबाज सुणदा है, पर ऐ पता नी की सै कुथु ला ओंदी है कने कुस पासे चली जांदी है? जड़ा कोई पबित्र आत्मा ने जमया है सै ऐदिया ही है।
9 அதற்கு நிக்கொதேமு: இவைகள் எப்படி ஆகும் என்றான்.
नीकुदेमुसे उसयो जबाब दिता, “क्या ऐ गल्लां होई सकदियां न?”
10 ௧0 இயேசு அவனைப் பார்த்து: நீ இஸ்ரவேலில் போதகனாக இருந்தும் இவைகளை அறியாமல் இருக்கிறாயா?
ऐ सुणीकरी यीशुऐ उसयो जबाब दिता, तू इस्राएलियां दा इक महान गुरू है, तिजो तां असल च इना गल्लां जो समझणा चाईदा है?
11 ௧௧ உண்மையாகவே உண்மையாகவே நான் உனக்குச் சொல்லுகிறேன், நாங்கள் அறிந்திருக்கிறதைச் சொல்லி, நாங்கள் பார்த்ததைக்குறித்துச் சாட்சி கொடுக்கிறோம்; நீங்களோ எங்களுடைய சாட்சியை ஏற்றுகொள்ளுகிறது இல்லை.
मैं तिजो ने सच्च-सच्च बोलदा है की सांझो जड़ा पता है, सै बोलदे न, पर जिसयो असां दिखदे न उदी गबाई दिन्दे न, कने असां जड़ा बोलदे न उस पर तुसां भरोसा नी करदे न।
12 ௧௨ பூமிக்கடுத்த காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லியும் நீங்கள் விசுவாசிக்கவில்லையே, பரலோக காரியங்களை உங்களுக்குச் சொன்னால் எப்படி விசுவாசிப்பீர்கள்?
जालू मैं तुसां ने धरतिया पर होणे बालियां गल्लां बोलियां, तां तुसां भरोसा नी किता, अगर मैं तुसां जो दस्से की स्वर्गे च क्या होणा है, तां क्या तुसां भरोसा करगे?
13 ௧௩ பரலோகத்தில் இருந்து இறங்கினவரும் பரலோகத்தில் இருக்கிறவருமான மனிதகுமாரனே அல்லாமல் பரலோகத்திற்கு ஏறினவன் ஒருவனும் இல்லை.
कोई स्वर्गे पर नी गिया, “पर सिर्फ मैं, माणुऐ दा पुत्र स्वर्गे ला थल्ले आया है।”
14 ௧௪ பாம்பானது மோசேயினால் வனாந்திரத்திலே உயர்த்தப்பட்டதுபோல மனிதகுமாரனும்,
कने जियां मूसे सुनसान जगा च पितल दे सप्पे जो उपर चढ़ाया, तियां ही जरूरी है की मैं, माणुऐ दे पुत्रे जो भी उपर चड़ाया जाऐ।
15 ௧௫ தன்னை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, உயர்த்தப்பட வேண்டும். (aiōnios g166)
ताकि जड़ा कोई मिंजो पर भरोसा करे उदे च उसयो हमेशा दी जिन्दगी मिल्ले। (aiōnios g166)
16 ௧௬ தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை பெறும்படிக்கு, அவரைக் கொடுத்து, இவ்வளவாய் உலகத்தில் அன்பு செலுத்தினார். (aiōnios g166)
“क्योंकि परमेश्वरे संसारे दे लोकां ने ऐसा प्यार किता की उनी अपणा इकलोता पुत्र देई ता, ताकि जड़ा कोई उस पर भरोसा करे, उदा नाश ना होऐ, पर उसयो हमेशा दी जिन्दगी मिल्ले। (aiōnios g166)
17 ௧௭ உலகத்தை தண்டனைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம்முடைய குமாரனை உலகத்தில் அனுப்பாமல், அவராலே உலகம் இரட்சிக்கப்படுவதற்காகவே அவரை அனுப்பினார்.
क्योंकि परमेश्वरे अपणे पुत्रे जो संसारे दे लोकां पर सजा देंणे तांई नी भेजया है, पर इस तांई भेजया की उदे जरिये संसारे दे लोकां दा उद्धार होऐ।
18 ௧௮ அவரை விசுவாசிக்கிறவன் தண்டனைக்குள்ளாகத் தீர்க்கப்படமாட்டான்; விசுவாசிக்காதவனோ, தேவனுடைய ஒரேபேறான குமாரனுடைய நாமத்தில் விசுவாசம் உள்ளவனாக இல்லாதபடியினால், அவன் தண்டனைத்தீர்ப்புக்கு உட்பட்டிருக்கிறான்.
जड़ा परमेश्वरे दे पुत्रे पर भरोसा करदे न, उस पर सजा दा हुकम नी होंदा, पर जड़े परमेश्वरे दे पुत्रे पर भरोसा नी करदे न, सै दोषी न क्योंकि उनी परमेश्वरे दे इकलोते पुत्रे दे नाऐ पर भरोसा नी किता।
19 ௧௯ ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனிதர்களுடைய செயல்கள் தீமையானவைகளாக இருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைவிட இருளை விரும்புகிறதே அந்த தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமாக இருக்கிறது.
कने सजा दा हुकम देंणे दी बजा ऐ की लौ संसारे च आई है, कने लोकां नेहरे जो लौइ ला जादा प्यार किता क्योंकि उना दे कम्म बुरे थे।
20 ௨0 தீங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் செய்கைகள் சுட்டி காட்டப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.
क्योंकि जड़ा कोई बुराई करदा है, सै लौइ ने बैर रखदा है, कने लौइ च नी ओंदा है, इयां ना हो कि उदे कम्मा पर दोष लगन।
21 ௨௧ சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் செய்கைகள் தேவனுக்குள்ளாக செய்யப்படுகிறது என்று வெளிப்படும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான் என்றார்.
पर जड़ा सचाइया पर चलदा है सै लौइ च ओंदा है, ताकि उदे कम्म प्रगट होन जड़ा परमेश्वरे चांदा की सै करन।”
22 ௨௨ இவைகளுக்குப் பின்பு, இயேசுவும் அவருடைய சீடர்களும் யூதேயா நாட்டிற்கு வந்தார்கள்; அங்கே அவர் அவர்களோடு தங்கியிருந்து, ஞானஸ்நானம் கொடுத்து வந்தார்.
इदे बाद यीशु कने उदे चेले यहूदिया प्रदेश च आये; कने सै ओथु उना सोगी रेईकरी बपतिस्मा देणा लग्गा।
23 ௨௩ சாலிம் ஊருக்கு அருகாமையான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் அதிகமாக இருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானம் கொடுத்து வந்தான்; மக்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.
कने यूहन्ना भी ऐनान ग्रां च जड़ा सामरिया इलाके दे शालेम शेहर दे नेड़े है ओथु बपतिस्मा दिन्दा था। क्योंकि ओथु मता पांणी था, कने लोक आई करी बपतिस्मा लेंदे थे।
24 ௨௪ அக்காலத்தில் யோவான் காவலில் வைக்கப்படவில்லை.
क्योंकि यूहन्ना तालू दीकर जेला च नी पाया था।
25 ௨௫ அப்பொழுது யோவானுடைய சீடர்களில் சிலருக்கும், யூதர்களுக்கும், சுத்திகரிப்பைக்குறித்து வாக்குவாதம் உண்டானது.
ओथु यूहन्ना दे चेलयां दा कुसकी यहूदिये सोगी रिबाजा दे हिसावे ने शुद्धी दे बारे च बेहस होई।
26 ௨௬ அவர்கள் யோவானிடத்தில் வந்து: ரபீ, உம்முடனேகூட யோர்தானுக்கு அக்கரையில் ஒருவர் இருந்தாரே; அவரைக்குறித்து நீரும் சாட்சி கொடுத்தீரே, இதோ, அவர் ஞானஸ்நானம் கொடுக்கிறார், எல்லோரும் அவரிடத்தில் போகிறார்கள் என்றார்கள்.
कने यूहन्ना दे चेलयां उस बाल आई करी उसला बोलया, “गुरू जी, जड़ा माणु यरदन खड्डा दे पारले पासे तेरे सोगी था, जिसदे बारे च तुसां गबाही दिती थी; दिख, सै बपतिस्मा दिन्दा है, कने सब उस बाल ओंदे न।”
27 ௨௭ யோவான் மறுமொழியாக: பரலோகத்தில் இருந்து ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அன்றி, அவன் ஒன்றையும் பெற்றுக் கொள்ளமாட்டான்.
यूहन्ने जबाब दिता, जालू दीकर माणुऐ जो स्वर्गे ला ना दितया जाऐ, उसयो तालू दीकर कुछ नी मिल्ली सकदा।
28 ௨௮ நான் கிறிஸ்துவல்ல, அவருக்கு முன்னாக அனுப்பப்பட்டவன் என்று நான் சொன்னதற்கு நீங்களே சாட்சிகள்.
तुसां अपु मेरे गबाह न की क्या बोलया था, की मैं मसीह नी है, पर उदे पहले भेजया गिया है।
29 ௨௯ மணமகளை உடையவனே மணமகன்; மணமகனுடைய தோழனோ, அருகே நின்று, அவருடைய சொல்லைக் கேட்டு மணமகனுடைய சத்தத்தைக்குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறான்; இந்தச் சந்தோஷம் இப்பொழுது எனக்குச் சம்பூரணமானது.
लाड़ा लाड़िये ने बियाह करी लेंदा है, पर लाड़े दा मित्र सोगी खड़ोई करी उदी सुणदा है, लाड़े दियां गल्लां ने बड़ा खुश होंदा है; तियां ही मेरा दिल खुश होई गिया है।
30 ௩0 அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்.
जरूरी है सै होर जादा खास होई जा कने मैं घट खास होई जां।
31 ௩௧ உன்னதத்திலிருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்; பூமியிலிருந்து உண்டானவன் பூமியின் தன்மை உள்ளவனாக இருந்து, பூமிக்குரிவைகளைப் பேசுகிறான்; பரலோகத்தில் இருந்து வருகிறவர் எல்லோரையும்விட மேலானவர்.
“जड़ा स्वर्गे ला ओंदा है सै सबना ला बडा है, जड़ा धरतिया ला ओंदा है सै धरतिया दा है; कने धरती दियां गल्लां करदा है: जड़ा स्वर्गे ला ओंदा है, सै सबना ला उपर है।
32 ௩௨ தாம் பார்த்தையும், கேட்டதையும் சாட்சியாகச் சொல்லுகிறார்; அவருடைய சாட்சியை ஒருவனும் ஏற்றுக்கொள்ளுகிறது இல்லை.
जड़ा कुछ उनी दिखया, कने सुणाया है, उदी गबाई दिन्दा है; पर बड़े घट लोक उदे संदेश जो मंदे न।
33 ௩௩ அவருடைய சாட்சியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தேவன் சத்தியம் உள்ளவர் என்று முத்திரையிட்டு உறுதிப்படுத்துகிறான்.
पर जिना लोकां उदा संदेश मन्नी लिया उनी इसा गल्ला पर प्रमाण देई दिता की परमेश्वर सच्चा है।
34 ௩௪ தேவனால் அனுப்பப்பட்டவர் தேவனுடைய வார்த்தைகளைப் பேசுகிறார்; தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார்.
क्योंकि जिसयो परमेश्वरे भेजया है सै परमेश्वरे दे बचना दा प्रचार करदे न क्योंकि ऐ सेई है जिसयो परमेश्वरे बिना नापी-तोली करी पबित्र आत्मा दिन्दा है।
35 ௩௫ பிதாவானவர் குமாரனில் அன்பாக இருந்து எல்லாவற்றையும் அவருடைய கையில் ஒப்புக்கொடுத்திருக்கிறார்.
पिता परमेश्वर पुत्रे ने प्यार करदा है, कने उनी सारियां चिंजा उदे हथां च देई दितियां।
36 ௩௬ குமாரனிடத்தில் விசுவாசமாக இருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாக இருக்கிறான்; குமாரனை விசுவாசிக்காதவனோ ஜீவனைப் பார்ப்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும் என்றான். (aiōnios g166)
जड़ा परमेश्वरे दे पुत्रे पर भरोसा रखदा है, हमेशा दी जिन्दगी उदी है; पर जड़ा पुत्रे जो नी मनदा है, उसयो अनन्त जिन्दगी नी मिलणी, पर परमेश्वरे दी सजा उसयो मिलणी है।” (aiōnios g166)

< யோவான் 3 >