< யோவான் 21 >

1 இவைகளுக்குப் பின்பு இயேசு திபேரியா கடற்கரையிலே மீண்டும் சீடர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தினார்; வெளிப்படுத்தின விபரமாவது:
こうした事ののち,イエスはティベリアスの海で,再び自分を弟子たちに示した。彼はこのやり方で自分を示した。
2 சீமோன்பேதுருவும், திதிமு என்னப்பட்ட தோமாவும், கலிலேயா நாட்டில் உள்ள கானா ஊரைச்சேர்ந்த நாத்தான்வேலும், செபெதேயுவின் மகன்களும், அவருடைய சீடர்களில் வேறு இரண்டுபேரும் கூடியிருக்கும்போது,
シモン・ペトロと,ディディモスと呼ばれるトマス,ガリラヤのカナのナタナエル,それにゼベダイの子たちと弟子たちのうちのもう二人が一緒にいた。
3 சீமோன்பேதுரு மற்றவர்களைப் பார்த்து: மீன்பிடிக்கப் போகிறேன் என்றான். அதற்கு அவர்கள்: நாங்களும் உம்மோடு வருகிறோம் என்றார்கள். அவர்கள் புறப்பட்டுப்போய், உடனே படகில் ஏறினார்கள். அந்த இரவிலே அவர்கள் ஒன்றும் பிடிக்கவில்லை.
シモン・ペトロが彼らに言った,「わたしは漁に行く」。 彼らはペトロに言った,「わたしたちもあなたと共に行こう」。すぐに彼らは出て行き,舟に乗り込んだ。その夜は何も捕れなかった。
4 விடியற்காலமானபோது, இயேசு கரையிலே நின்றார்; அவரை இயேசு என்று சீடர்கள் அறியாமல் இருந்தார்கள்.
しかし,すでに日が昇って来た時,イエスが浜辺に立ったが,弟子たちはそれがイエスだと分からなかった。
5 இயேசு அவர்களைப் பார்த்து: பிள்ளைகளே, சாப்பிடுவதற்கு ஏதாவது உங்களிடம் இருக்கிறதா என்றார். அதற்கு அவர்கள்: ஒன்றும் இல்லை என்றார்கள்.
それでイエスは彼らに言った,「子供たち,何か食べる物があるか」 。 彼らは彼に「ありません」と答えた。
6 அப்பொழுது அவர்: நீங்கள் படகுக்கு வலதுபுறமாக வலையைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அதிகமான மீன்கள் கிடைத்ததினால், வலையை இழுக்க முடியாமல் இருந்தார்கள்.
彼は彼らに言った,「網を舟の右側に降ろしなさい。そうすれば幾らか見つかるだろう」 。 それで彼らはそれを降ろした。すると,多くの魚のために,彼らはそれを引き上げることができなかった。
7 ஆகவே, இயேசுவின்மேல் அன்பாக இருந்த சீடன் பேதுருவைப் பார்த்து: அவர் கர்த்தர் என்றான். அவர் கர்த்தர் என்று சீமோன்பேதுரு கேட்டவுடனே, தான் மேற்சட்டை அணியாதவனாக இருந்ததினால், தன் மேற்சட்டையை அணிந்துகொண்டு கடலிலே குதித்தான்.
それで,イエスが愛していた弟子がペトロに言った,「主だ!」 そこでシモン・ペトロは,主だと聞くと,(裸だったので)自分の上着をまとい,海の中に飛び込んだ。
8 மற்றச் சீடர்கள் கரைக்கு ஏறக்குறைய இருநூறுமுழத் தூரத்தில் இருந்ததினால் படகில் இருந்துகொண்டே மீன்களுள்ள வலையை இழுத்துக்கொண்டு வந்தார்கள்.
しかし,ほかの弟子たちは(陸から遠くなく,二百キュビトほどだったので),魚でいっぱいの網を引いて,小舟でやって来た。
9 அவர்கள் கரையிலே வந்திறங்கினபோது, கரிநெருப்புப் போட்டிருக்கிறதையும், அதின்மேல் மீன் வைத்திருக்கிறதையும், அப்பத்தையும் பார்த்தார்கள்.
そこで彼らが陸に上がると,そこに炭火があり,その上に魚とパンがあるのを見た。
10 ௧0 இயேசு அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது பிடித்த மீன்களில் சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றார்.
イエスは彼らに言った,「今捕った魚を少し持って来なさい」 。
11 ௧௧ சீமோன்பேதுரு படகில் ஏறி, நூற்று ஐம்பத்துமூன்று பெரிய மீன்களால் நிறைந்த வலையைக் கரையில் இழுத்தான்; இத்தனை மீன்கள் இருந்தும் வலை கிழியவில்லை.
シモン・ペトロは舟に上がり,百五十三匹の大きな魚でいっぱいの網を陸に引き寄せた。そして,それほど多かったのに,網は裂けていなかった。
12 ௧௨ இயேசு அவர்களைப் பார்த்து: வாருங்கள், சாப்பிடுங்கள் என்றார். அவர் இயேசு என்று சீடர்கள் அறிந்தபடியால் அவர்களில் ஒருவனும்: நீர் யார் என்று கேட்கத் துணியவில்லை.
イエスは彼らに言った,「来て,朝食をとりなさい」 。 弟子たちのうちのだれも,「あなたはどなたですか」とあえて尋ねる者はいなかった。主だと分かっていたからである。
13 ௧௩ அப்பொழுது இயேசு வந்து, அப்பத்தையும் மீனையும் எடுத்து, அவர்களுக்குக் கொடுத்தார்.
それからイエスは来て,パンを取り,彼らにそれを与え,魚も同じようにした。
14 ௧௪ இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு மூன்றாவது முறையாக தம்முடைய சீடர்களுக்கு இவ்வாறு வெளிப்படுத்தினார்.
ところで,イエスが死んだ者たちの中から起こされたのちに弟子たちに示されたのは,これが三度目であった。
15 ௧௫ அவர்கள் சாப்பிட்டபின்பு, இயேசு சீமோன்பேதுருவைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, இவர்களைவிட நீ அதிகமாக என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக என்றார்.
そこで彼らが朝食を食べ終わると,イエスはシモン・ペトロに言った,「ヨナの子シモン,あなたはこれら以上にわたしを愛しているか」 。 彼はイエスに言った,「はい,主よ。わたしがあなたに愛情を抱いていることを,あなたは知っておられます」。 イエスは彼に言った,「わたしの子羊たちを養いなさい」 。
16 ௧௬ இரண்டாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்மேல் அன்பாக இருக்கிறாயா என்றார். அதற்கு அவன்: ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் என்றான். அவர்: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
また二度目にイエスは彼に言った,「ヨナの子シモン,あなたはわたしを愛しているか」 。 彼はイエスに言った,「はい,主よ。わたしがあなたに愛情を抱いていることを,あなたは知っておられます」。 イエスは彼に言った,「わたしの羊たちを世話しなさい」 。
17 ௧௭ மூன்றாவதுமுறை அவர் அவனைப் பார்த்து: யோனாவின் மகனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாவதுமுறை தன்னைக் கேட்டதினாலே, பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.
三度目にイエスは彼に言った,「ヨナの子シモン,あなたはわたしに愛情を抱いているか」 。 ペトロは,イエスが三度目に「あなたはわたしに愛情を抱いているか」 と尋ねたことで悲しんだ。彼はイエスに言った,「主よ,あなたはすべてのことを知っておられます。わたしがあなたに愛情を抱いていることを,あなたは知っておられます」。 イエスは彼に言った,「わたしの羊たちを養いなさい。
18 ௧௮ நீ சிறுவயதுள்ளவனாக இருந்தபோது நீயே ஆடை அணிந்துகொண்டு, உனக்கு இஷ்டமான இடங்களிலே நடந்து திரிந்தாய்; நீ முதிர்வயதுள்ளவனாக ஆகும்போது உன் கரங்களை நீட்டுவாய்; வேறொருவன் உனக்கு ஆடையை அணிவித்து, உனக்கு இஷ்டமில்லாத இடத்திற்கு உன்னைக் கொண்டுபோவான் என்று உண்மையாகவே உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
本当にはっきりとあなたに言う。あなたは若かったとき,自分で服を着て,自分の望む所を歩いた。だが年を取ると,あなたは両手を広げ,ほかの人があなたに服を着せ,自分が行くのを望まない所に連れて行くだろう」 。
19 ௧௯ இந்தவிதமான மரணத்தினாலே அவன் தேவனை மகிமைப்படுத்தப்போகிறான் என்பதைக் குறிக்கும்படியாக இப்படிச் சொன்னார். அவர் இதைச் சொல்லியபின்பு, அவனைப் பார்த்து: என்னைப் பின்பற்றிவா என்றார்.
ところで,彼がこのことを言ったのは,ペトロがどんな死に方で神の栄光を現わすことになるかを示すためであった。このことを言ってから,彼は言った,「わたしに従いなさい」 。
20 ௨0 பேதுரு திரும்பிப்பார்த்து, இயேசுவிற்கு அன்பாக இருந்தவனும், இரவு உணவு சாப்பிடும்போது அவர் மார்பிலே சாய்ந்து: ஆண்டவரே, உம்மைக் காட்டிக்கொடுக்கிறவன் யார் என்று கேட்ட சீடன் பின்னால் வருகிறதைப் பார்த்தான்.
それからペトロは振り向いて,一人の弟子が付いて来るのを見た。これは,イエスが心から愛していた弟子で,夕食の際にイエスの胸にもたれて,「主よ,だれがあなたを売り渡そうとしているのですか」と尋ねた者でもあった。
21 ௨௧ அவனைப் பார்த்து, பேதுரு இயேசுவிடம்: ஆண்டவரே, இவன் காரியம் என்ன என்றான்.
彼を見て,ペトロはイエスに言った,「主よ,この人についてはどうですか」。
22 ௨௨ அதற்கு இயேசு: நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால், உனக்கென்ன, நீ என்னைப் பின்பற்றிவா என்றார்.
イエスは彼に言った,「わたしが来るまで彼がとどまることをわたしが望むとしても,それがあなたにとって何なのか。あなたはわたしに従いなさい」 。
23 ௨௩ ஆகவே, அந்தச் சீடன் மரிப்பதில்லை என்கிற பேச்சு சகோதரர்களுக்குள்ளே பரவியது. ஆனாலும், அவன் மரிப்பதில்லை என்று இயேசு சொல்லாமல், நான் வரும்வரைக்கும் இவன் இருக்க எனக்கு விருப்பமானால் உனக்கென்ன என்று சொன்னார்.
それで,この弟子は死なないというこの言葉が兄弟たちの間に広まった。しかしイエスは,彼は死なないと言ったのではなく,「わたしが来るまで彼がとどまることをわたしが望むとしても,それがあなたにとって何なのか」 と言ったのである。
24 ௨௪ அந்தச் சீடனே இவைகளைக்குறித்து சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி உண்மை என்று அறிந்திருக்கிறோம்.
この者が,これらの事について証言し,これらの事を書いた弟子である。わたしたちは,彼の証言が真実だということを知っている。
25 ௨௫ இயேசு செய்த வேறு அநேக காரியங்களும் உண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புத்தகங்கள் உலகம் கொள்ளாது என்று நினைக்கிறேன். ஆமென்.
イエスが行なった事柄はほかにもたくさんあるが,それらが全部書かれるとすれば,世界そのものでさえも,その書かれる書物を収めることはできないだろうと,わたしは思う。

< யோவான் 21 >