< யோவான் 2 >

1 மூன்றாம்நாளில் கலிலேயாவில் உள்ள கானா ஊரில் ஒரு திருமணம் நடந்தது; இயேசுவின் தாயும் அங்கே இருந்தார்கள்.
ⲁ̅ⲁⲩⲱ ϩⲙ̅ⲡⲙⲉϩϣⲟⲙⲛ̅ⲧ ⲛ̅ϩⲟⲟⲩ ⲁⲩϣⲉⲗⲉⲉⲧ ϣⲱⲡⲉ ϩⲛ̅ⲕⲁⲛⲁ ⲛ̅ⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲁⲩⲱ ⲛⲉⲣⲉⲧⲙⲁⲁⲩ ⲛ̅ⲓ̅ⲥ̅ ⲙ̅ⲙⲁⲩ.
2 இயேசுவும் அவருடைய சீடர்களும் அந்த திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்கள்.
ⲃ̅ⲁⲩⲧⲱϩⲙ̅ ⲇⲉ ϩⲱⲱϥ ⲛ̅ⲓ̅ⲥ̅ ⲛⲙ̅ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲉⲧϣⲉⲗⲉⲉⲧ.
3 திராட்சைரசம் குறைவுபட்டபோது, இயேசுவின் தாய் அவரைப் பார்த்து: அவர்களுக்குத் திராட்சைரசம் இல்லை என்றாள்.
ⲅ̅ⲁⲩⲱ ⲛ̅ⲧⲉⲣⲟⲩϣⲱⲱⲧ ⲛ̅ⲏⲣⲡ. ⲡⲉϫⲉⲧⲙⲁⲁⲩ ⲛ̅ⲓ̅ⲥ̅ ⲛⲁϥ. ϫⲉ ⲙ̅ⲙⲛ̅ⲧⲟⲩⲏⲣⲡ̅ ⲙ̅ⲙⲁⲩ.
4 அதற்கு இயேசு: பெண்ணே, எனக்கும் உனக்கும் என்ன, என் நேரம் இன்னும் வரவில்லை என்றார்.
ⲇ̅ⲡⲉϫⲉⲓ̅ⲥ̅ ⲛⲁⲥ. ϫⲉ ⲧⲉⲥϩⲓⲙⲉ ⲉⲣⲉⲟⲩⲉϣⲟⲩ ⲛⲙ̅ⲙⲁⲓ̈ ⲙ̅ⲡⲁⲧⲉⲧⲁⲟⲩⲛⲟⲩ ⲉ͡ⲓ.
5 அவருடைய தாய் வேலைக்காரர்களைப் பார்த்து: அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றாள்.
ⲉ̅ⲡⲉϫⲉⲧⲉϥⲙⲁⲁⲩ ⲛ̅ⲛⲉⲧⲟⲩⲱⲧϩ̅. ϫⲉ ⲡⲉⲧϥ̅ⲛⲁϫⲟⲟϥ ⲛⲏⲧⲛ̅ ⲁⲣⲓϥ.
6 யூதர்கள் தங்களைச் சுத்திகரிக்கும் வழக்கத்தின்படியே, ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் பிடிக்கத்தக்க ஆறு கற்ஜாடிகள் அங்கே வைத்திருந்தது.
ⲋ̅ⲛⲉⲩⲛ̅ⲥⲟ ⲇⲉ ⲛ̅ϩⲩⲇⲣⲓⲁ ⲛ̅ⲱⲛⲉ ⲉⲩⲕⲏ ⲉϩⲣⲁⲉ͡ⲓ ⲙ̅ⲙⲁⲩ ⲕⲁⲧⲁⲡⲧⲃ̅ⲃⲟ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈ ⲉⲣⲉⲧⲟⲩⲉ͡ⲓ ⲧⲟⲩⲉ͡ⲓ ϣⲱⲡ ⲙ̅ⲙⲉⲧⲣⲏⲧⲏⲥ ⲥⲛⲁⲩ ⲏ ϣⲟⲙⲛⲧ̅.
7 இயேசு வேலைக்காரர்களைப் பார்த்து: ஜாடிகளிலே தண்ணீர் நிரப்புங்கள் என்றார்; அவர்கள் அவைகளை நிரப்பினார்கள்.
ⲍ̅ⲡⲉϫⲉⲓ̅ⲥ̅ ⲛⲁⲩ. ϫⲉ ⲙⲉϩⲛ̅ϩⲩⲇⲣⲓⲁ ⲙ̅ⲙⲟⲟⲩ. ⲁⲩⲱ ⲁⲩⲙⲁϩⲟⲩ ⲉⲃⲟⲗ ⲉⲣⲱⲟⲩ.
8 அவர் அவர்களைப் பார்த்து: நீங்கள் இப்பொழுது எடுத்து, பந்தி மேற்பார்வைக்காரனிடத்தில் கொண்டுபோங்கள் என்றார்; அவர்கள் கொண்டுபோனார்கள்.
ⲏ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ. ϫⲉ ⲟⲩⲱⲧϩ̅ ⲧⲉⲛⲟⲩ ⲛ̅ⲧⲉⲧⲛ̅ⲉ͡ⲓⲛⲉ ⲙ̅ⲡⲁⲣⲭⲓⲧⲣⲓⲕⲗⲓⲛⲟⲥ. ⲛ̅ⲧⲟⲟⲩ ⲇⲉ ⲁⲩⲉ͡ⲓⲛⲉ.
9 அந்த திராட்சைரசம் எங்கேயிருந்து வந்தது என்று தண்ணீரை நிரப்பின வேலைக்காரர்களுக்குமட்டும் தெரியும் பந்தி மேற்பார்வைகாரனுக்குத் தெரியாததினால், அவன் திராட்சைரசமாக மாறின தண்ணீரை ருசி பார்த்தபோது, மணமகனை அழைத்து:
ⲑ̅ⲛ̅ⲧⲉⲣⲉⲡⲁⲣⲭⲓⲧⲣⲓⲕⲗⲓⲛⲟⲥ ⲇⲉ ⲧⲱⲡⲉ ⲙ̅ⲡⲙⲟⲟⲩ ⲉⲁϥⲣ̅ⲏⲣⲡ̅ ⲁⲩⲱ ⲛⲉϥⲥⲟⲟⲩⲛ ⲁⲛ ⲡⲉ ϫⲉ ⲟⲩⲉⲃⲟⲗ ⲧⲱⲛ ⲡⲉ. ⲛ̅ⲣⲉϥⲟⲩⲱⲧϩ̅ ⲇⲉ ⲛ̅ⲧⲟⲟⲩ ⲉⲛⲧⲁⲩⲙⲉϩⲙ̅ⲙⲟⲟⲩ ⲛⲉⲩⲥⲟⲟⲩⲛ ⲡⲉ. ⲁⲡⲁⲣⲭⲓⲧⲣⲓⲕⲗⲓⲛⲟⲥ ⲙⲟⲩⲧⲉ ⲉⲡⲁⲧϣⲉⲗⲉⲉⲧ
10 ௧0 எந்த மனிதனும் முன்பு நல்ல திராட்சைரசத்தைக் கொடுத்து, மக்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.
ⲓ̅ⲡⲉϫⲁϥ ⲛⲁϥ. ϫⲉ ⲣⲱⲙⲉ ⲛⲓⲙ ⲉϣⲁⲩⲕⲁⲡⲏⲣⲡ̅ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ⲛ̅ϣⲟⲣⲡ̅ ⲁⲩⲱ ⲉⲩϣⲁⲛϯϩⲉ ϣⲁⲩⲕⲁⲡⲉⲧϭⲟϫⲃ̅. ⲛ̅ⲧⲟⲕ ⲇⲉ ⲁⲕⲁⲣⲉϩ ⲉⲡⲏⲣⲡ ⲉⲧⲛⲁⲛⲟⲩϥ ϣⲁϩⲣⲁⲓ̈ ⲉⲧⲉⲛⲟⲩ.
11 ௧௧ இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரில் செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்; அவருடைய சீடர்கள் அவரிடத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
ⲓ̅ⲁ̅ⲡⲁⲓ̈ ⲡⲉ ⲡϣⲟⲣⲡ̅ ⲙ̅ⲙⲁⲓ̈ⲛ ⲉⲛⲧⲁⲓ̅ⲥ̅ ⲁⲁϥ ϩⲛ̅ⲕⲁⲛⲁ ⲛ̅ⲧⲅⲁⲗⲓⲗⲁⲓⲁ ⲁⲩⲱ ⲁϥⲟⲩⲱⲛϩ̅ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲉϥⲉⲟⲟⲩ ⲁⲩⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲣⲟϥ ⲛ̅ϭⲓⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ·
12 ௧௨ அதன்பின்பு, அவரும் அவருடைய தாயாரும் அவருடைய சகோதரர்களும் அவருடைய சீடர்களும் கப்பர்நகூமுக்குப்போய், அங்கே சிலநாட்கள் தங்கினார்கள்.
ⲓ̅ⲃ̅ⲙⲛ̅ⲛ̅ⲥⲁⲡⲁⲓ̈ ⲁϥⲉ͡ⲓ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲕⲁⲫⲁⲣⲛⲁⲟⲩⲙ ⲛ̅ⲧⲟϥ ⲛⲙ̅ⲧⲉϥⲙⲁⲁⲩ ⲁⲩⲱ ⲛⲉϥⲥⲛⲏⲩ ⲛⲙ̅ⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ⲁⲩⲱ ⲁⲩϭⲱ ⲙ̅ⲙⲁⲩ ⲛ̅ϩⲉⲛⲕⲟⲩⲉ͡ⲓ ⲛ̅ϩⲟⲟⲩ.
13 ௧௩ பின்பு யூதர்களுடைய பஸ்காபண்டிகை நெருங்கியிருந்தது; அப்பொழுது இயேசு எருசலேமுக்குப்போய்,
ⲓ̅ⲅ̅ⲛⲉϥϩⲏⲛ ⲇⲉ ⲉϩⲟⲩⲛ ⲛ̅ϭⲓⲡⲡⲁⲥⲭⲁ ⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈. ⲁⲩⲱ ⲁⲓ̅ⲥ̅ ⲃⲱⲕ ⲉϩⲣⲁⲓ̈ ⲉⲑⲓⲉⲣⲟⲥⲟⲗⲩⲙⲁ
14 ௧௪ தேவாலயத்திலே ஆடுகள், மாடுகள் புறாக்களாகிய இவைகளை விற்கிறவர்களையும், பணம் மாற்றுகிறவர்கள் உட்கார்ந்திருக்கிறதையும் பார்த்து,
ⲓ̅ⲇ̅ⲁϥϩⲉ ⲉⲣⲟⲟⲩ ϩⲙ̅ⲡⲉⲣⲡⲉ ⲉⲩϯ ⲉϩⲉ ⲉⲃⲟⲗ ⲁⲩⲱ ϭⲣⲟⲟⲙⲡⲉ ⲁⲩⲱ ⲛⲉⲧⲣⲁⲡⲉⲍⲓⲧⲏⲥ ⲉⲩϩⲙⲟⲟⲥ.
15 ௧௫ கயிற்றினால் ஒரு சாட்டையை உண்டாக்கி, அவர்கள் அனைவரையும் ஆடுமாடுகளையும், தேவாலயத்திற்கு வெளியே துரத்திவிட்டு, பணம் மாற்றுக்காரர்களுடைய பணங்களைக் கொட்டி, மேசைகளைக் கவிழ்த்துப்போட்டு,
ⲓ̅ⲉ̅ⲁⲩⲱ ⲁϥⲧⲁⲙⲓⲉⲟⲩⲙⲁⲥⲧⲓⲅⲝ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ϩⲉⲛⲛⲟⲩϩ ⲁϥⲛⲉϫⲟⲩⲟⲛ ⲛⲓⲙ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲉⲣⲡⲉ ⲁⲩⲱ ⲛⲉⲥⲟⲟⲩ ⲛⲙ̅ⲛⲉϩⲟⲟⲩ ⲁⲩⲱ ⲁϥⲡⲱϩⲧ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲛ̅ϩⲟⲙⲛⲧ̅ ⲛ̅ⲣ̅ⲣⲉϥϫⲓⲕⲟⲗⲩⲙⲃⲟⲛ ⲁⲩⲱ ⲁϥϣⲟⲣϣⲣ̅ ⲛ̅ⲛⲉⲩⲧⲣⲁⲡⲉⲍⲁ.
16 ௧௬ புறா விற்கிறவர்களைப் பார்த்து: இவைகளை இந்த இடத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோங்கள்; என் பிதாவின் வீட்டை வியாபார வீடாக்காதிருங்கள் என்றார்.
ⲓ̅ⲋ̅ⲡⲉϫⲁϥ ⲛ̅ⲛⲉⲧϯ ⲉⲃⲟⲗ ⲛ̅ⲛⲉϭⲣⲟⲟⲙⲡⲉ. ϫⲉ ϥⲓⲛⲁⲓ̈ ⲉⲃⲟⲗ ϩⲙ̅ⲡⲉⲓ̈ⲙⲁ. ⲙ̅ⲡⲣ̅ⲉ͡ⲓⲣⲉ ⲙ̅ⲡⲏⲉ͡ⲓ ⲙ̅ⲡⲁⲉ͡ⲓⲱⲧ ⲛ̅ⲏⲉ͡ⲓ ⲙ̅ⲙⲁ ⲛ̅ⲉϣⲱⲧ.
17 ௧௭ அப்பொழுது: உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்தியின் வைராக்கியம் தீயைப்போல என்னை எரித்தது என்று எழுதியிருக்கிறதை அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்தார்கள்.
ⲓ̅ⲍ̅ⲁⲩⲣ̅ⲡⲙⲉⲉⲩⲉ ⲛ̅ϭⲓⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ϥⲥⲏϩ ϫⲉ ⲡⲕⲱϩ ⲙ̅ⲡⲉⲕⲏⲉ͡ⲓ ⲛⲁⲟⲩⲟⲙⲛ̅ⲧ.
18 ௧௮ அப்பொழுது யூதர்கள் அவரைப் பார்த்து: நீர் இவைகளைச் செய்கிறீரே, இதற்கு என்ன அடையாளத்தை எங்களுக்குக் காண்பிக்கிறீர் என்று கேட்டார்கள்.
ⲓ̅ⲏ̅ⲁⲛⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈ ϭⲉ ⲟⲩⲱϣⲃ̅ ⲡⲉϫⲁⲩ ⲛⲁϥ. ϫⲉ ⲟⲩ ⲙ̅ⲙⲁⲉⲓⲛ ⲡⲉⲧⲕ̅ⲧⲥⲁⲃⲟ ⲙ̅ⲙⲟⲛ ⲉⲣⲟϥ ϫⲉ ⲕⲉ͡ⲓⲣⲉ ⲛⲛⲁⲓ̈.
19 ௧௯ இயேசு அவர்களுக்குப் மறுமொழியாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள்; மூன்று நாட்களுக்குள்ளே இதை கட்டி எழுப்புவேன் என்றார்.
ⲓ̅ⲑ̅ⲁⲓ̅ⲥ̅ ⲟⲩⲱϣⲃ̅ ⲡⲉϫⲁϥ ⲛⲁⲩ. ϫⲉ ⲃⲱⲗ ⲉⲃⲟⲗ ⲙ̅ⲡⲉⲓ̈ⲣ̅ⲡⲉ ⲁⲩⲱ ϯⲛⲁⲧⲟⲩⲛⲟⲥϥ̅ ⲛ̅ϣⲟⲙⲛ̅ⲧ ⲛ̅ϩⲟⲟⲩ.
20 ௨0 அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருடங்கள் ஆனதே, நீர் இதை மூன்று நாட்களுக்குள்ளே கட்டி எழுப்புவீரோ என்றார்கள்.
ⲕ̅ⲡⲉϫⲁⲩ ϭⲉ ⲛ̅ϭⲓⲛ̅ⲓ̈ⲟⲩⲇⲁⲓ̈. ϫⲉ ⲁⲩⲣ̅ϩⲙⲉⲧⲁⲥⲉ ⲣ̅ⲣⲟⲙⲡⲉ ⲉⲩⲕⲱⲧ ⲙ̅ⲡⲉⲓ̈ⲣ̅ⲡⲉ. ⲁⲩⲱ ⲛ̅ⲧⲟⲕ ⲕⲛⲁⲧⲟⲩⲛⲟⲥϥ̅ ⲛ̅ϣⲟⲙⲛ̅ⲧ ⲛ̅ϩⲟⲟⲩ.
21 ௨௧ அவரோ தம்முடைய சரீரமாகிய ஆலயத்தைக்குறித்துச் சொன்னார்.
ⲕ̅ⲁ̅ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲛⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟⲥ ⲉⲧⲃⲉⲡⲉⲣⲡⲉ ⲙ̅ⲡⲉϥⲥⲱⲙⲁ.
22 ௨௨ அவர் இப்படிச் சொன்னதை அவர் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தபின்பு அவருடைய சீடர்கள் நினைவுகூர்ந்து, வேதவாக்கியத்தையும் இயேசு சொன்ன வசனத்தையும் விசுவாசித்தார்கள்.
ⲕ̅ⲃ̅ⲛ̅ⲧⲉⲣⲉϥⲧⲱⲟⲩⲛϥ̅ ϭⲉ ⲉⲃⲟⲗ ϩⲛ̅ⲛⲉⲧⲙⲟⲟⲩⲧ. ⲁⲩⲣ̅ⲡⲙⲉⲉⲩⲉ ⲛ̅ϭⲓⲛⲉϥⲙⲁⲑⲏⲧⲏⲥ ϫⲉ ⲡⲁⲓ̈ ⲡⲉ ⲛⲉϥϫⲱ ⲙ̅ⲙⲟϥ ⲁⲩⲱ ⲁⲩⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲧⲉⲅⲣⲁⲫⲏ ⲛⲙ̅ⲡϣⲁϫⲉ ⲉⲛⲧⲁⲓ̅ⲥ̅ ϫⲟⲟϥ.
23 ௨௩ பஸ்கா பண்டிகையிலே அவர் எருசலேமில் இருக்கும்போது, அவர் செய்த அற்புதங்களை அநேகர் பார்த்து, அவருடைய நாமத்தில் விசுவாசம் வைத்தார்கள்.
ⲕ̅ⲅ̅ⲉϥϣⲟⲟⲡ ⲇⲉ ϩⲣⲁⲓ̈ ϩⲛ̅ⲑⲓⲉⲣⲟⲩⲥⲁⲗⲏⲙ ⲙ̅ⲡϣⲁ ⲙⲡ̅ⲡⲁⲥⲭⲁ. ⲁⲩⲙⲏⲏϣⲉ ⲡⲓⲥⲧⲉⲩⲉ ⲉⲡⲉϥⲣⲁⲛ ⲉⲩⲛⲁⲩ ⲉⲙⲙⲁⲓ̈ⲛ ⲉⲛⲉϥⲉ͡ⲓⲣⲉ ⲙ̅ⲙⲟⲟⲩ.
24 ௨௪ அப்படியிருந்தும், இயேசு எல்லோரையும் அறிந்திருந்தபடியால், அவர்களை நம்பவில்லை.
ⲕ̅ⲇ̅ⲛ̅ⲧⲟϥ ⲇⲉ ⲓ̅ⲥ̅ ⲛⲉϥⲧⲁⲛϩⲟⲩⲧ ⲙ̅ⲙⲟϥ ⲁⲛ ⲛⲙ̅ⲙⲁⲩ ⲉⲧⲃⲉϫⲉ ⲛⲉϥⲥⲟⲟⲩⲛ ⲛ̅ⲟⲩⲟⲛ ⲛⲓⲙ
25 ௨௫ மனிதர்கள் உள்ளத்தில் இருப்பதை அவர் அறிந்திருந்தபடியால், மனிதர்களைக்குறித்து ஒருவரும் அவருக்குச் சாட்சிகொடுக்க அவசியமாக இருக்கவில்லை.
ⲕ̅ⲉ̅ⲁⲩⲱ ⲛϥ̅ⲣ̅ⲭⲣⲓⲁ ⲁⲛ ϫⲉⲕⲁⲥ ⲉⲣⲉⲟⲩⲁ ⲣ̅ⲙⲛ̅ⲧⲣⲉ ⲉⲧⲃⲉⲣⲱⲙⲉ. ⲛ̅ⲧⲟϥ ⲅⲁⲣ ⲛⲉϥⲥⲟⲟⲩⲛ ϫⲉ ⲟⲩ ⲡⲉⲧϩⲙ̅ⲡⲣⲱⲙⲉ·

< யோவான் 2 >